18

siruppiddy

செப்டம்பர் 28, 2014

மோடி கூட்டமைப்புடன் பேசிய விடயங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு கூறியுள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசிய விடயங்களை சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அறியப்படுத்தியதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
நரேந்திரமோடிக்கும், மகிந்தராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு நியுயோர்க்கில் வைத்து நடைபெற்றிருந்தது. 
இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு தம்மை சந்தித்து முன்வைத்த விடயங்களை ஜனாதிபதியிடம் நரேந்திர மோடி கூறியுள்ளார். 
அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாக அரசியல் தீர்வினை காண்பதற்கு தாம் நடவடிக்கை எடுத்துவருதாகவும், இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் சிறிலங்காவின் ஜனாதிபதி, நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.
நரேந்திரமோடியும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டிருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனினும் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தினால் இன்னும் ஊடக அறிக்கைகள் எவையும் வெளியிடப்படவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 26, 2014

பெண்ணொருவர் நீதிவேண்டி , ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கை!  தனது தொழில் நியமனத்தில் காட்டப்படும் பாரபட்சம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு, தனக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி – பெண்ணொருவர் ஜனதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் கடமையாற்றும் எஸ்.நபீஸதுல் மிஸ்றியா எனும் பெண்ணொருவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார்.

தனக்கு வழங்க வேண்டிய நியமனத்தினை, தன்னை விடவும் குறைந்த தகைமையுடைய ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, குறித்த பெண் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் மேற்படி பெண் 14 வருடங்களுக்கும் மேலாக சமயாசமய அடிப்படையில் நூலக உதவியாளராக கடடிமையாற்றி வருகின்றார். இந்நிலையில், தன்னை விட அனுபவமும் தொழில் தகைமையும் குறைந்த நபரொருவருக்கு – தான் வகித்து வரும் பதவியை நிரந்தரமாக வழங்குவதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படுவதாகவும் தனது கடிதத்தில் விபரித்துள்ளார்.

எனவே, மேற்படி பாரபட்சமான நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி – குறித்த பதவியை தனக்கு நிரந்தரமாக வழங்குமாறு – ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் – சம்பந்தப்பட்ட பெண் வேண்டியுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிருவாகத்தின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக குறித்த பெண் – சமயாசமய அடிப்படையில் நூலக உதவியாளருக்கான கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்.

நூலக உதவியாளருக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும்போது, இந்தப் பெண்ணுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென பிரதேச சபையினரால் பல்வேறு தடவைகளில் உறுதி மொழிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, தகைமையுடையவர்களிடமிருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணங்கள் கோரப்பட்டிருந்தன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிலவும் மின் தொழிலாளி, நூலக பரிசாரகர் (உதவியாளர்), களத் தொழிலாளி மற்றும் சுகாதாரத் தொழிலாளிகளுக்கான பதவிகளுக்கு நிரந்தமாக ஆட்களை நியமிக்கும் வகையில் மேற்படி விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நூலக பரிசாரகர்களுக்கான (உதவியாளர்) 02 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதற்கிணங்க, பாலமுனை நூலகத்தில் சமயாசமய அடிப்படையில் 14 வருடங்களுக்கும் மேலாக நூலக உதவியாளராய் கடமையாற்றிவரும் மேற்படி எஸ்.நபீஸதுல் மிஸ்றியா என்பவரும் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதியன்று அட்டாளைச்சேனை பிரதேசசபைக் காரியாலயத்தில் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப் பரீட்டை நடைபெற்றது.
தற்போது – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிலவும் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கான இரண்டு வெற்றிடங்களுக்கும் நிரந்தரமாக ஆட்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
ஆயினும், நூலக உதவியாளர் பதவி வழங்கப்படவுள்ளோருக்கான பட்டியலில் தனது பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மிஸ்றியா தெரிவிக்கின்றார். இந்த நிலையில், மிஸ்றியாவை விட – தகைமையிலும், தொழில் அனுபவத்திலும் குறைந்த நபரொருவருக்கு நூலக உதவியாளர் பதவியினை வழங்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மிஸ்றியா குற்றம்சாட்டுகின்றார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி பெண் தொழிலாழியான மிஸ்றியா – தனக்கு நீதி கோரி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆறு பிள்ளைகளின் தாயாரான மேற்படி பெண், தற்போது சமயாசமய அடிப்படையில் நூலக உதவியாளராகக் கடமையாற்றும் வருமானத்தின் மூலமே, அவருடைய குடும்பத்தினைக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிழக்கு மாகாணசபையில் முக்கிய பதவியொன்றிலுள்ள நபரொருவரின் உறவு முறையானவரை – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு நியமிப்பதற்காகவே – மேற்படி மிஸ்றியா எனும் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிலவும் நூலக பரிசாரகர் (உதவியாளர்) பதவிக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்கும் நடவடிக்கையில், கிழக்கு மாகாணசபையின் மேற்படி முக்கிய பதவியிலுள்ள நபர் – தனது விருப்பு வெறுப்புக்கேற்ப ஆதிக்கம் செலுத்துவதால், இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கும் – ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதிகளை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அனுப்பி வைத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 25, 2014

கிணறு ஒன்றில் எறிகணை குண்டுகள் மீட்பு

பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து 120 மில்லிமீற்றர் ரக எறிகணைகள் 23, புதன்கிழமை (24) மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.
பாழடைந்த கிணற்றை துப்பரவு செய்யும் போது குண்டுகள் இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர்கள், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதற்கிணங்க இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று எறிகணைகளை மீட்டதாக பொலிஸார் கூறினர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 23, 2014

வெள்ளவத்தையில்! சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர்

 ,பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று காலை சிறீலங்கா  வந்தடைந்துள்ளதாக சிங்கள அரச புலனாய்வுத்துறை  தெரிவித்துவருகிறது.
மேற்குறித்த சனல்- 4  பணிப்பாளரான ஜோன் ஸ்டெவார்ட் பிரான்ஸிஸ், கொழும்பு, வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளதாகவும் விடுமுறையைக் கழிப்பதற்கு, அவரது மனைவியுடன் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது மனைவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த இவர் பாதுகாப்பு காரணங்களுக்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

                                        

செப்டம்பர் 22, 2014

உயிர் தப்பியுள்ளா ஊடகவியலாளர் மீது கொலை முயற்சி!!

வன்னியின் சுதந்திர ஊடகவியலாளரான சின்னராசா சிவேந்திரன் நேற்றிரவு கொலை முயற்சி தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இலங்கை பாதுகாப்பு தரப்பினைச் சேர்ந்தவர்களென நம்பப்படும் தாக்குதலாளிகள் அவரை ஏ-9 வீதியினால் பயணித்த வாகனமொன்றுள் தள்ளி வீழ்த்தி கொலை செய்ய முற்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சின்னராசா சிவேந்திரன் (வயது 33) வழமை போலவே கிளிநொச்சியில் கரடிப்போக்கு சந்தியிலுள்ள தான் பணியாற்றும் ஊடக நிறுவனங்களுள் ஒன்றினது பிரதேச அலுவலகத்திற்கு செய்திகளை வழங்கிய பின்னர் வழமை போலவே பரந்தனிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அவ்வேளை அவரது துவிச்சக்கர வண்டியினை வழிமறித்து இரு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.
தம்மை முதலில் சி.ஜ.டி என அறிமுகப்படுத்திக்கொண்ட இந்நபர்கள் தமது முகத்தை அடையாளம் தெரியாத வகையில் இருட்டினுள் மறைத்துக்கொண்டுள்ளனர். அவர் மீது சகட்டு மேனிக்கு தாக்குதல்களை நடத்திய நபர்கள் அவர் மயக்கமுற்றிருந்த நிலையில் அவரை தூக்கி வீதியில் பயணித்த வாகனமொன்றின் சில்லினுள் வீசியுள்ளனர்.எனினும் சுதாகரித்துக்கொண்டு வாகனத்தை திருப்பி மோதாது சென்றுள்ளனர்.
இந்நிலையில் சுதாகரித்துக்கொண்ட சிவேந்திரன் அவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு தப்பித்து அருகாகவுள்ள உணவகமொன்றை நோக்கி தப்பி சென்றுள்ளார். எனினும் தாக்குதலாளிகள் அவரை துரத்தி சென்றுள்ளனர். எனினும் அவர்களை பதிலுக்கு தாக்கிவிட்டு சிவேந்திரன் செல்ல பொதுமக்கள் திரண்டதையடுத்து தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர்.
சின்னராசா சிவேந்திரன் வன்னியில் நீண்டகாலமாக ஊடகவியலாளராக செயற்பட்டுவருவதுடன் ஒரு ஆசிரியராகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 21, 2014

உங்களை நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்”

 வன்னிக்குள் வீதி புனரைமப்புக்காகத் தறிப்பதற்குக் காத்திருக்கும் பாலை மரத்துடனான நேர்காணல்.
வணக்கம் பாலையே,
வணக்கம் என் வாழ்வில் முதல் தடவையாக மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றன. (மரத்தின் கிளைகள் சம நேரத்தில் ஆறுதலாக அசைகின்றன).
உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர முடியுமா?
நான் பாலை. இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன் நிலவிய சங்க காலம் எனும் பண்பாட்டு ஆக்க காலத்தில் எனக்குப் பெயர் கிடைத்ததாகக் என் பாட்டனார் சொல்லித் தந்திருக்கின்றார். அதாவது, அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தாம் வாழ்ந்த ஐவகை நிலத்திற்கும் அது கொண்டிருக்கும் சூழல் மற்றும் அவர்களின் தொழில் அடிப்படையில் மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலை எனப் பெயரிட்டனர். அதில் முல்லைக்கும் குறிஞ்சிக்கும் இடையில் என் பாலை நிலம் இருந்திருக்கின்றது. அது வரண்ட நிலமாக இருக்கும். அங்கே தான் எங்கள் பரம்பரை ஆரம்பமானது. எனவே, அந்த நிலத்தின் பெயர் என் பெயரும் ஆனது. உங்களைப் போல நாம் தனி அடையாளங்களை விரும்புவதில்லை. அதனால் தான் என் பாட்டனாரின் பெயரும் பாலை. எனது பெயரும் பாலை.
ஆம், நீங்கள் நன்றாக வளர்ந்திருக்கின்றீர்கள். பிரமிப்பாயிருக்கின்றது. உங்களிடம் இருக்கின்ற சிறப்பென்று எதனைக் குறிப்பிடுவீர்கள்?
நல்ல வினா. கட்டாயம் தேடலுல்லோர் நலனுக்காக பதிலளித்தே ஆக வேண்டும். எங்கள் இனத்தவர் அனைவரும் கிட்டத்தட்ட 40-80 அடி உயரம் வரை வளர்வோம். எமது கால்பகுதியின் (அடி மரத்தை தொட்டுக் காட்டுகின்றார்) சுற்றுவட்டம் 1-4 மீற்றர்கள் வரை கொழுக்கும்.
ஆனால், நீங்கள் குறிப்பிடுவதை விட சிறு பாலைகளையும் நான் பார்த்திருக்கின்றேனே?
ஹா…ஹா… (சிரிக்கின்றனார்). உண்மைதான். நீங்கள் பார்த்திருப்பது உவர் நிலப்பரப்பில் வாழும் பாலைகளை. அங்கு கிடைக்கும் நீர்த்தன்மைக்கு ஏற்ப அந்த நிலத்தில் வதியும் அனைத்துமே பறட்டை என்கிற அழகு சுந்தரமாகத்தான் வளரும். ஏன் நீங்கள் ‘தக்கனப் பிழைத்தல்’ பற்றி படித்தில்லயா நண்பரே? ஆகவே, நாங்களும் அங்கு கட்டையாக இருப்போம்.
உங்களில் எத்தனை வகையான பிரிவுகள் உண்டு எனச் சொல்வீர்களா?
நாம் பிரதானமாக 5 வகையினராகப் பிரிந்துள்ளோம்.
1.உலக்கைப் பாலை.
2.குடசப்பாலை
3.வெட்பாலை
4.முசுக்கைப் பாலை
5.ஏழிலைப் பாலை
இவை ஒவ்வொன்றும் வளரும் சூழல், அதன் தன்மை மற்றும் தனித்துவங்களால் தம்மை தனிவகை என அடையாளப்படுத்திக் கொண்டன.
உங்களைச் சந்தித்த நபர்களைப் பற்றி குறிப்பிட முடியுமா?
ஆம். என் தந்தையர் காலத்தில் சில விஞ்ஞானிகள் அவரைச் சந்தித்ததாகச் சொல்வர். அவர்கள் எங்கள் இனத்திற்கு Manilkara hexandra என்ற புதுப் பெயரை (இரசாயனப் பெயரைக் குறிப்பிடுகின்றார்) சூட்டினராம். ஆனால், அது எம் மத்தியிலோ, உங்கள் மத்தியிலோ எடுபடவில்லை என்றே குறிப்பிட வேண்டும். கடைசி வரைக்கும் அது ஆய்வு கூடங்களுக்கு மட்டும் பயன்படும் பெயராயிற்று. அதற்குப் பிறகு பலர் என்னைத் தொட்டுத் தடவியிருக்கின்றனர். தறிப்பதற்காக வலம் பார்த்திருக்கின்றனர். பலர் மழைக்கும் வெயிலுக்கும் போருக்கும் தங்கிப் போயிருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கானோர் என் மீது ஏறி அட்டகாசம் புரிந்து என்னை துன்பப்படுத்தி என் பிள்ளைகளைப் பறித்துச் சாப்பிட்டு இன்பம் அடைந்திருக்கின்றனர். நான் லட்சக்கணக்கான என் பிள்ளைகளை உங்களுக்கு சாப்பிட தந்துவிட்டு உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
உங்கள் பிள்ளைகளைப் பற்றி சொல்லுங்களேன்?
எங்களிலும் ஆண்-பெண் பேதமிருக்கின்றது. நான் பெண். ஆண்கள் காய்ப்பதில்லை. நாங்கள் தான் காய்களைப் பிரசவிப்போம். கிட்டத்தட்ட 2-4 சென்றி மீற்றர்களில் எம் காய்களின் அளவிருக்கும். மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பூப்பூத்து, மே – யூன் மாதங்களில் கனிகளைத் தருவோம். அது எமது பரம்பரை விருத்தியைப் பேணுவதற்கானதாக இருக்கும். அந்தக் கனிக்குள் ஒரே ஒரு விதையிருக்கும். அது விதையாகி விழும் நிலத்தில் முளைக்க வாய்ப்பிருந்தால் முளைத்து எம் வம்சம் பெருக்கும். எனவே தான் அதனை என் பிள்ளை என்கின்றேன். என் பிள்ளைகள் சாப்பிடப்படும்போது நல்ல இனிப்பாக இருப்பார்களாம். சாப்பிடுபவர்கள் எமக்குக் கீழ் இருந்து கதைக்கும் போது சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பிள்ளைகளின் இள இரத்தம் பால் நிறமானவை. ஒட்டும் தன்மை கொண்டது. சாப்பிடும்போது உதடுகள் ஒட்டிக்கொள்ளும். என்ன செய்ய? எம்மை அழிப்பவர்க்கு எம்மால் காட்டக் கூடிய ஒரே ஒரு எதிர்ப்பு அது மட்டும்தான்.
நீங்கள் உலகத்தில் எங்கெல்லாம் பரந்து வாழ்கின்றீர்கள்?
இப்பொழுது நீங்கள் பார்ப்பது போல இந்த நாட்டின் (இலங்கையை குறிப்பிடுகின்றார்) வடக்கு – கிழக்கு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் அதிகமாக எம் இனத்தவர்கள் வாழ்கின்றனர். இதைவிட இந்தியா குறிப்பாகத் தமிழகம், வங்காளதேசம், தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றோம். இப்படிப் பல நாடுகளில் வாழ்ந்தாலும் நாம் வெள்ளைக்காரர் வருகைக்குப் பின்னர் நாம் ஒருநாளும் சந்தோசமாக இருந்ததில்லை.
ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்?
பிரித்தானியர்கள் எனப்பட்ட வெள்ளைக் காரர்கள் இலங்கைக்கு வர முதல் இங்கு வாழ்ந்த மக்கள் எமக்கு நன்மையே புரிந்தனர். எம்மை வெட்டவில்லை. நாம் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருந்தோம். திடீரென இந்த நாட்டுக்குள் நுழைந்த வெள்ளையர்கள் எமது பலத்தைக் கண்டுபிடித்து எம்மை பாலம் கட்டப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அந்தக் காலத்தில் அவர்களால் அமைக்கப்பட்ட தொங்குப் பாலங்களுக்கு வைரமான எமது தேகம் தேவைப்பட்டது. எம்மோடு எம் சகோதர இனமான முதிரைகளையும் பயன்படுத்தினர். என் பாட்டனார்கள் பல லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். எம் சிறப்பைப் பார்த்து வெள்ளைக்கார அதிகாரிகள் எம்மை  செல்லப் பெயரிட்டு அழைத்தனர். அவர்களால் தொடக்கி வைத்த அழிவுப் பயணம் இன்றும் எம் உயிருக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றது.
இப்போது எந்த வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றீர்கள்?
நம் இருப்பு மனிதர்களுக்கு மிக அவசியம் எனப் பல்வேறு விஞ்ஞான விளக்கங்களுடன் மனித மாணவர்களுக்குப் பாடசாலைகளில் கற்பிக்கப் படுகின்றது. ஆனால், அவர்கள் நம்மை அழிப்பதை மட்டும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. பெருகிக்கொண்டே போகும் தேவைகளுக்காக எம்மை துரத்தி துரத்தி வெட்டுகின்றனர். இப்போது பாருங்கள், இந்த வீதியில் நின்றிருந்த எத்தனை ஆயிரம் எம்மவர்கள் தறிக்கபட்டு தெற்குப் பக்கமாக இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். நானும் இன்னும் சில நாட்களில் தறிக்கப்பட்டுவிடுவேன். இந்த வீதியின் கரையில் நான் நிற்பதால் என்னை அடியோடு கிளப்புவதற்கான திட்டம் போட்டாயிற்று. சில வேளைகளில் நான் முதலும் கடைசியுமாய் உங்களுக்கு வழங்கிய நேர்காணல் வெளிவர முன்பே நான் படுகொலை செய்யப்பட்டு விடுவேன். எனக்காக மரணம் முறிகண்டிப் பிள்ளையாரைக் கடந்து மிக அருகில் வந்து விட்டது. எல்லா மனிதர்களையும் காக்கும் முறிகண்டியானால் கூட என்னை காப்பாற்ற முடியாது என்பதுதான் விந்தை.
கடைசியாக ஒரு கேள்வி, வழமையானது தான். உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் ஒன்றைக் குறிப்பிடுங்களேன்?
இரண்டு சம்பங்களை என் மரணத்தின் பின்பும் மறக்க முடியாது. கடுமையான எரிப்பந்தங்கள் வானிலிருந்து விழுந்து கொண்டிருந்த நாளில் மனிதன் ஒருவன் என் பாதுகாப்பில் பதுங்கிக் கிடந்தான். அவனை நோக்கி வரும் எரிப்பந்தங்களை நான் தாங்கி அவனைக் காப்பாற்றினேன். ஆயினும், அவனின் அவசரம் அவனைக் எரிப்பந்தின் தாக்குதலுக்கு உட்படுத்தியது. மோசமாக் காயப்பட்டான். என் மடியில் கிடந்து அழுது அரற்றினான். என்னால் என்ன செய்ய முடியும். அவன் துடிதுடித்து மரணித்தான்.
பின்னொரு நாள், என்னில் என் பிள்ளைகளை ஆசையாய் சாப்பிட்ட பாடசாலை சிறுவன் ஒருவன் தவறி கீழே விழுந்தான். வலிதாங்காது துடித்தான்; கதறினான். பல மனிதர்கள் வந்து வேடிக்கைப் பார்த்தனர். காப்பாற்றினால் சட்டச் சிக்கல் வருமாம். அம்புலன்ஸ் வரும் வரைக்கும் அனைவரும் காத்திருந்தனர். அம்புலன்ஸ் வர அவனின் உயிரும் என் மடியிலேயே பிரிந்தது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் நான் மனிதர்களுக்காக கண்ணீர் வடித்திருக்கின்றேன். அதனை எப்போதும் மறக்க முடியாது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 19, 2014

அழுத்தங்களைச் சமாளிக்க சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை

தமிழ் நாட்டின் அழுத்தங்களை சமாளிப்பதற்காக, இறுதி நேரத்தில் தமிழ் நாட்டு மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றை சிறிலங்கா அரசாங்கத்துடன் பாரதீயே ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது.
கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாரதீயே ஜனதா கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் சிறிலங்கா வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் தமிழ் நாட்டுக்கு பொறுப்பாக இருக்கும் முரளிதர் ராவோ  ஒருவர்.
இதற்கு எதிராக தமிழ் நாட்டில் தற்போது எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனை சமாளிப்பதற்காக இறுதி நேரத்தில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சருக்கும், முரளிதரராவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி அதனை இந்தியாவில் பிரபல்யப்படுத்தி வருகிறது.
இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செப்டம்பர் 14, 2014

போராடுவோம் ,திரு வேல்முருகன் அவர்களின் ஐநா பேரணிக்கான அழைப்பு!!

 தாயகத்திலும் , தமிழகத்திலும் , புலத்திலும் ஒன்றிணைந்து போராடுவோம் .விடுதலைப் போராட்டத்துக்கு மாவீரர்களை கொடுத்த தமிழ் உறவுகளே , குடும்பம் குடும்பமாக ஐநா பேரணியில் பெரும்திரளாக கலந்து கொள்ளுங்கள் . எமக்கான தேசத்தை நாம் பெறுவதுக்கு தொடர்ந்து போராடுவோம் என ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 10, 2014

போராடுங்கள்!நாங்கள் துணையிருப்போம்! மனோ கணேசன்

 'தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு, கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் கூட்டிணைக்கும் பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இரண்டாவது, 1960 களில் தந்தை செல்வா காலத்தில் தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்ட வரலாற்றை மீண்டும் இன்று எழுதுங்கள்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

வடக்கு, கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும்  ஒரு நேர்கோட்டில் கொண்டு வாருங்கள். இந்த தரப்புகளை அரவணைத்து கூட்டிணைக்கும் தோழமை பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இந்த பொறிமுறை உள்நாட்டிலே கட்டாயமாக தேர்தல் கூட்டமைப்பாக  அமைந்திட வேண்டும் என்பது இல்லை.  அப்படி இருக்க கூடாது என்பதும் இல்லை. தேர்தல்களின் போது அவசியப்படுமானால் நாம் கூட்டாக முடிவுகள் எடுக்கலாம். 
ஆனால், இங்கே நான், தேர்தல் இலக்குகளுக்கு அப்பாற்பட்ட கூட்டிணைவு ஒன்றையே பிரேரிக்கின்றேன். முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியதை போல், பல்வேறு சிறு நிறுவனங்களை கூட்டிணைத்து பெரிய ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது போன்றதாகும் இந்த யோசனை. இந்த இணைவு, சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. இனவாதத்துக்கு எதிரானது. சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து கூறும் இணைவாகும்.

இரண்டாவது, இங்கே விடுதலை புலிகளின் போராட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன.  புலிகளின் சரிகளையும் பிழைகளையும் பற்றி பேசப்பட்டன. ஒரு விடயத்தை  நாம் மனதில் கொள்ள வேண்டும். இன்று உலகம், சர்வதேச சமூகம், ஐ.நா. சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது புலிகளின் போராட்டமே.  

போராடாமல் உலகம் எம்மை திரும்பி பார்க்காது. இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்துங்கள் என்று நாம் அமெரிக்காவையும் இந்தியாவையும் ஐ.நாவையும் கோருன்றோம். நாம் இங்கே தொடர்ச்சியாக போராடினால், அந்த போராட்டமே,  அமெரிக்காவையும் இந்தியாவையும் ஐ.நாவையும் செயற்படுத்தும் அழுத்தமாக மாறும். போராட்டம் என்றால் ஆயுதபோராட்டத்தை நான் இங்கே கூறவரவில்லை.

ஜனநாயக அறவழி போராட்டங்களை ஆரம்பியுங்கள் என்றே கூறுகின்றேன். 1960 களில் தந்தை செல்வா தலைமையில், தமிழரசுக் கட்சி முன்னெடுத்த அறவழி போராட்டங்களை திட்டமிட்டு மீண்டும் ஆரம்பியுங்கள். உலகம் எம்மை திரும்பி பார்க்கும். இலங்கை அரசுக்கு புரியும் பாஷையும் அதுதான்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளே, காத்திரமான  இந்த இரண்டு பணிகளையும்  உங்கள் தலைமையின் கீழ் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னெடுக்க வேண்டும். அதற்கு நாம் தோழமை கட்சி என்ற

 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 09, 2014

ஆறு வாரத்துக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்

 இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் ஆறு வாரத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த நிபந்தனையை விதித்துள்ளார். அப்படியான பேச்சுவார்த்தையின் போது ஒரு சர்வதேச பிரசன்னமும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, ´´பல அரசாங்கங்களுடனும் 60 வருடங்களாகப் பேசியிருக்கின்றோம். இனிமேல் பேசுவதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. பேசப்பட்டவையெல்லாம் எழுத்தில் இருக்கின்றன. ஆகவே நீண்ட காலம் பேச்சுக்களை நடத்தவேண்டிய அவசியமில்லை. சுருக்கமாகப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பேச்சுக்கள் நடத்துகின்றோம் என்று உலகத்திற்குக் காட்டுவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் எமக்கு அவசியமில்லை. ஆக்கபூர்வமாகப் பேச வேண்டும். எமது நிலைப்பாட்டின்படி, ஆறு வாரத்திற்குள் பேச்சுக்களை நடத்தி தீர்வு காண வேண்டும்´´ என்றார்.
பத்து வருடங்களாகப் பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி, அனைத்துக் கட்சிகளையும் கூட்டிப் பேசி நிபுணர்களையும் அழைத்துப் பேசியிருக்கின்றார், அப்போது அவர் முற்போக்கான கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்றும் கூறிய சம்பந்தன், அதன் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளின் போது என்ன நடந்திருக்கின்றது என்பதை தமிழ் மக்களும் உலகமும் அறிந்து கொள்வதற்காக, பேச்சுவார்த்தைகளின் போது ஒரு சர்வதேச பிரசன்னம் இருக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
´´அரசாங்கம் சில சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தத் தொடர்புகளின் மூலம், அவ்விதமான கருத்துக்கள் அரசாங்கத்துடன் பரிமாறப்பட்டிருக்கின்றன. எனவே, பேச்சுவார்த்தைகளில் ஒரு சர்வதேச பிரசன்னம் இருக்க வேண்டியது அவசியமாகும்´´ என்று அவர் கூறியுள்ளார்.
அறுபது வருடங்களாப் பேசியும் தீர்வு காண முடியாத பிரச்சினைக்கு ஆறு வாரத்தினுள் பேசி தீர்வு காண முடியும் என்று நம்பலாமா என கேட்டதற்கு, அங்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் அங்கே தெளிவாக இருக்கின்றன. விரும்பினால் இரண்டு பகுதியும் ஆறு வாரத்திற்குள் பேசி முடிக்கலாம் என்றார்.
அதேவேளை குறிப்பிட்ட ஒரு காலக் கெடுவுக்குள் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியதற்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் பேசிய இலங்கை அரசாங்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ´´அரசாங்கத்தை எவரும் பயமுறுத்தி அடிபணிய வைக்க முடியாது, இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாகவே பேச்சுக்கள் நடத்தப்படும், தனியே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ள கருத்து குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்டபோது, அவருடைய கூற்று அர்த்தமற்றது என்று நிராகரித்தார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 08, 2014

மாநாட்டில் சிறீலங்காவுக்கு மற்றொரு சவால்!!

இன்று ஆரம்பித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கம் மற்றுமொரு பாரிய சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவின் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பல அறிக்கை படுத்தவுள்ளன.
ஏற்கனவே இந்த முறை சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான வாய்மூல அறிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் புதிதாக சிறிலங்காவில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகளால் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் சமர்ப்பிக்கவுள்ளன.
காணாமல் போதல், காணாமல்போதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருத்தல், காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு தீர்க்கமாக செயற்படாமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள், இதன் கீழ் முன்வைக்கப்படவுள்ளன.
ஏற்கனவே சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் இது தொடர்பான தங்களின் ஆதாரங்களையும், அறிக்கைகளையும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிறிலங்காவில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள், போர்க்குற்ற சாட்சிகள் அச்சுறுத்தப்படுதல் போன்ற விடயங்கள் குறித்தும் அறிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 05, 2014

சரத் பொன்சேகா சாட்சியமளிக்கத் தயார் !!

 
வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு நான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை -
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார்.
தான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறிய சரத் பொன்சேகா, வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு தான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான விசாரணையோன்றுக்கு முகம் கொடுக்க நான் தயங்க மாட்டேனென்று கூறிய அவர், இலங்கை இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று நிருபிக்க தான் தயாரென்றும் தெரிவித்தார்.

எனவே சர்வதேச விசாரணைக் குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று அரசாங்கம் கூறியுள்ள கருத்தை தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயக்கம் காட்டி வருவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சரத் பொன்சேகா, குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் மாத்திரமே இவ்வாறு தயக்கம் கட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் கருத்துக்களை தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் தான் அதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த விசாரணையின் போது சாட்சியங்களை வழங்கும் நபர்கள் அதற்கான பிரதிபலன்களை முகம் கொடுக்க நேரிடுமென அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூட அண்மையில் இவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 04, 2014

அரசியல் சாயம் பூசவேண்டாம் வெளிநாட்டு உதவிகளுக்கு

பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் பொழுது அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று காக்கைதீவில் அமெரிக்க உதவியுடன் ஏலவிற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு உரையாற்றும் போது:
அமெரிக்க அரசு எமக்கு பல வழிகளிலும் பல வருடங்களாக உதவிகளைச் செய்து வருகின்றனர். நான் அரசியலுக்கு வர முன்னரே அவர்களோடு சேர்ந்து பல செயற்றிட்டங்களில் பங்குபற்றியிருந்தேன்.சட்டத்தரணிகள், நீதிபதிகள் மற்றும் வேறு பலருக்கு சட்டம் சம்பந்தமான  பயிற்சிகளும் வழங்க அவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தேன்.
ஆனால் அவர்கள் இங்கு வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பிலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள். எமக்கு பல விதமான தேவைகள் உள்ளன. அவற்றை நல்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து பலர் முன் வந்துள்ளனர். இவ்வாறு வழங்குகின்ற போது வடக்கிற்கு மட்டும் வழங்குகின்றார்கள் ஏன் தென்பகுதிக்கு வழங்குகின்றார்கள் இல்லை என விமர்சனங்கள் ஏற்படுவது மனதிற்கு வேதனையளிக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் நன்மை தேவை மற்றவர்களுக்கு அல்ல. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் பொழுது அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என்று அரசுடன் சம்பந்தப்பட்ட சிலருக்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 01, 2014

மஹிந்தவை கட்டுப்படுத்த முடியும் என பிரபாகரன் கருதினார்–


 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டுப்படுத்த முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கருதினார் என முன்னாள் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துரித கதியில் ஈழத்தை எட்டுவதற்கு தேவையான சூழலை அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், பிரபாகரன் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஜனாதிபதியினால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளில், தமக்கு சாதக நிலைமை ஏற்படும் என புலிகள் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குறித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தப்புக் கணக்கே அவர்களின் பாரிய பின்னடைவிற்கான ஏதுவாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கக் கூடாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வடக்கு மக்கள் வாக்களிப்பில் பங்கேற்காமையே, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தோல்வியை சந்திக்க ஏதுவாக அமைந்தது என ஐக்கிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

வன்னி கிழக்கு முன்னரங்கப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் சிவிலியன் இழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்க மேற்குலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும், இதனால் இழப்புக்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாரியளவில் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்க தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னி கிழக்கு முன்னரங்கப் பகுதிகளில் இலங்கை அரச படையினர் பின்பற்றிய யுத்த தந்திரோபாயங்கள் பாரியளவில் இழப்புக்களை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேற்கு பகுதியில் ஒரு விதமான யுத்த தந்திரோபாயம் பின்பற்றப்பட்டதாகவும், கிழக்கு பகுதியில் வேறும் ஓர் தந்திரோபாயம் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கிளிநொச்சியிலிருந்து வெளியேறியிருக்கக் கூடாது எனவும் அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றியிருக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னிக் கிழக்கு முன்னரங்கப் பகுதியில் யுத்த சூன்ய வலயம் அறிவிப்பது குறித்து புலிகளுடன் அரசாங்கம் எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை எனவும், இவ்வாறு தன்னிச்சையாக அரசாங்கம் யுத்த சூன்ய வலயம் பற்றி அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் யுத்த சூன்ய வலயத்தை புலிகள் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் மற்றுமொரு யுத்த சூன்ய வலயத்தை அரசாங்கம் எதன் அடிப்படையில் அறிவித்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்க இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வைத்தியசாலைகள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது படையினர் நடத்திய தாக்குதல்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்hளர்.

ஆளில்லா உளவு விமானங்களின் மூலம் கள நிலவரங்களை அறிந்து கொண்டே படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்.