18

siruppiddy

அக்டோபர் 27, 2014

கைதுசெய்யப்பட்ட நபரின் விடயத்தில் ஐ.நா தலையிட வேண்டும்

ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 57 வயதுடைய சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தலையீடு செய்து சாட்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கிளிநொச்சி, சிவபுரம், இராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஷ்ணராஜா ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிசாரினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
குறித்த கைது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சி, சிவபுரம், இராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஷ்ணராஜா யுத்தத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ஒரு நபராவார். இவருடைய பிள்ளைகளில் பெண் பிள்ளை ஒருவர் இறுதி யுத்தத்தின்போது ஷெல் வீச்சுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
அவ்வாறான நிலையில் அவர் விசாரணைக்குழுவிற்கு முன்னால் சாட்சியமளிக்கும் தகமையைக் கொண்டிருக்கின்றார்.
அத்தகையை ஒருவரை சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தமைக்காக எவ்வாறு கைதுசெய்யமுடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை இதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அந்தக்குழு விரிவுபடுத்தப்பட்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
எனவே இவ்வாறான குழுக்களை அமைத்து அதற்காக சாட்சியங்களைப் பெற்றுவரும் அரசு சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதை தடுப்பது ஏன்? ஏன்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித்த விடயத்தில் தலையீடு செய்து கைதுசெய்யப்பட்ட பொதுமகனை உடன் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரின் கைது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடமும் தாங்கள் தகவல் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், இதன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் இவ்விடயத்தில் விரைந்து செயற்பட்டு கைதுசெய்யப்பட்ட நபரை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவதுடன், சாட்சியங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 25, 2014

வீடொன்றில் தோட்டக்களுடன் துப்பாக்கி மீட்பு


தெஹிவளை கவுடான பிரதேசத்தில் தோட்டக்களுடன் துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த துப்பாக்கியும் தோட்டக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

அக்டோபர் 21, 2014

பாகம்-2 யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில் தலைவர் பிரபாகரன் தளபதிகளுடன் நடந்த சந்திப்பு பற்றி, கசிந்த ஓர் சுவாரசியமான தகல்..!!-

  நமக்கு தகவல் கொடுத்தவர் தொடர்ந்து பேசவிடாமல் விடுதலைப் புலிகளின் தளபதி ஜெயம் கையைப் பிடித்து தடுப்பதை கவனித்த பிரபாகரன், “அவரை தடுக்க வேண்டாம்” என்றார். “நீங்கள் சொன்ன விஷயத்தை வேறு சிலரும் சொன்னார்கள். ஆனால், நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் ஒற்றுமைதான் முக்கியம். எமக்கு சர்வதேசத்தின் உதவி தேவை. அப்படியொரு உதவி கிடைக்கும் என்பதற்கு சமிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தத்தமது இஷ்டத்துக்கு ஓட முடியாது. சில நாட்கள் காத்திருக்க வேண்டும்” என்றார். “நீங்கள் சொல்வது சரி. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்த பதட்டமான நேரத்தில் நமது மக்களுக்கே நாம் தண்டனை கொடுப்பது எமக்கு எதிராகவே திரும்ப சந்தர்ப்பம் உண்டு” என்று நமக்கு தகவல் கொடுத்தவர் தெரிவித்ததற்கு
பிரபாகரன், “அப்படியா?” என்றதுடன் நிறுத்திக் கொண்டார். அதன்பின் ஜெயத்திடம் சில தளபதிகளின பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்தப் பகுதியில் உள்ளார்கள் என்று கேட்டார். பிரபாகரன் பெயர் குறிப்பிட்டு கேட்டவர்களில் இருவர், ஓரிரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருந்தனர். “அந்த முக்கியமான இருவர் உயிரிழந்ததை பிரபாகரன் தெரிந்து கொள்ளாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது” என்றார் எமக்கு தகவல் தெரிவித்தவர். தொடர்ந்து அவர் கூறுகையில், “இது நடந்த தினங்களில் இயக்கத்துக்கு ஏராளமான அழிவுகள். தினமும் அழிவு செய்திகளாகவே வந்துகொண்டு இருந்தன. தீபன் போன்ற முக்கிய தளபதிகளே உயிரிழந்திருந்தனர். ஒரு நிலைக்குமேல், யார் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் வந்தாலும் யாரும் அதிர்ச்சியடைவதோ, கவலை கொள்வதோ, ஓரிரு
நிமிடங்கள்தான். மறு நிமிடம் வேறு பிரச்னை வந்து சேர்ந்துவிடும். இதனால், பிரபாகரனுக்கு அந்த இருவரும் கொல்லப்பட்டது தெரியாதுகூட போயிருக்கலாம்” என்றார். “அன்றைய தினத்தில் பிரபாகரன், அமெரிக்கர்கள் உதவி செய்வார்கள் என்பதையே பெரிதும் நம்பியிருந்தார். அவருக்கு அப்படியொரு நம்பிக்கையை யாரோ கொடுத்திருக்கிறார்கள்
. அந்த நபர், அல்லது நபர்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையே, அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் இருந்திருக்கிறார். நடேசன் ஊடாகவே இந்த தொடர்புகள் நடந்திருக்கின்றன” என்றார் எமக்கு தகவல்
கொடுத்தவர். “நீங்கள் அவரை சந்தித்தபோது, பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் இருந்தனரா? அவர்கள் பற்றி அவர் ஏதாவது தெரிவித்தாரா?” “இல்லை. தமது குடும்பத்தினர் பற்றி அவர் பேசவே இல்லை. அது அவருடைய வழக்கமும் இல்லை. நான் கேட்கவும் இல்லை” “
யுத்தம் தோல்வியில் முடிகிறது என்பதை உணர்ந்திருந்தாரா? அல்லது தொடர்ந்து யுத்தம் புரிந்து ஜெயிக்க முடியும் என்று நினைத்திருந்தாரா?” “யுத்த நிலைமை புலிகள் இயக்கத்துக்கு மிகவும் பாதகமாகவே இருப்பதை நன்றாகவே தெரிந்து கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு மட்டுமென்ன, அங்கிருந்த (முள்ளிவாய்க்காலில்) தளபதிகள், முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அது நன்றாக தெரிந்திருந்தது
. எனக்கு தெரிந்து யாருக்கும் இனி யுத்தம் புரிந்து ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை, இருக்கவில்லை. பிரபாகரன் முதல்,
முக்கிய தளபதிகள் வரை, ‘வெளியே இருந்து உதவி வர போகிறது. எந்த நிமிடமும் அந்த அதிசயம் நடைபெறலாம்’ என நம்பிய நிலையிலேயே இருந்தனர். ஆனால், அப்படியொரு அதிசயம் இறுதிவரை நடக்கவேயில்லை” “இந்தியாவில் இருந்து உதவி வரும் என்று பிரபாகரன் நம்பினாரா?” “அது எனக்கு தெரியாது. நான் கடைசியாக பிரபாகரனை சந்தித்தபோது அவர் இந்தியா பற்றி ஏதும் பேசவில்லை. அமெரிக்கா உதவுவது பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்.
 அதை (அமெரிக்க உதவி வரும் என்பதை) அவர் பெரிதும் நம்பியது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. திரும்ப திரும்ப அதை சொன்னார்” “இதில் என்ன ஆச்சரியம்?” “அது பிரபாகரனின் இயல்பு கிடையாது. ஒரு விஷயம் நடக்கும் என அவர் முழுமையாக நம்பினாலும், அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். ‘இப்படி
நடக்கலாம்’ என்று கோடி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்வார். அது நடந்து முடிந்தபின், “பார்த்தாயா நான் சொன்னேன்” என்று சொல்வதுடன் சரி. அதுதான் அவரது இயல்பு.” “அப்படிப்பட்டவர் அமெரிக்க உதவி வரும் என அடிக்கடி வெளிப்படையாக கூறிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?” “ஒரே காரணம்தான். அந்த நேரத்தில் இயக்கம் தப்புவதற்கு வேறு எந்த வழியும் இருக்கவில்லை. எல்லா வழிகளும் அடைபட்டு போய் விட்டன. அப்போது தென்பட்ட ஒரே வழி, ‘அமெரிக்கா உதவும்’ என்பதுதான். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அனைவருக்கும் கிடைத்த ஒரேயொரு மரத்துண்டு அதுதான். அந்த நேரத்தில் பிரபாகரன் உட்பட அனைவரும்
 தமக்கு தாமே தைரியம் கொடுப்பதற்கு, அமெரிக்க உதவி வரும் என்று வாயை திறந்து சொல்லிக்கொண்டு இருந்தார்கள்
. நானும் அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருந்தேன். நாம் எமது வாயால் செல்வதை, எமது காதால் கேட்கும்போது, ஒருவித தைரியம் பிறக்கும் என்ற நிலை” என்றார் அந்த முக்கியஸ்தர். “சரி. புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு, இலங்கை அரசுக்கு உதவியது அமெரிக்கா என்பது பிரபாகரனுக்கு தெரிந்திருந்ததா? விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக அமெரிக்கா, லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ. தலைமையகத்தில் ஒரு பிரிவே இருந்தது அவருக்கு தெரிந்திருந்ததா? அதன் பின்னரும், அமெரிக்கா உதவும் என யுத்தத்தின் இறுதி நாட்களில் நம்பினாரா?” “
அந்த விஷயங்கள் அவருக்கு தெரிந்திருந்ததா என்று எனக்கு தெரியாது” “சரி. அந்த சம்பவங்கள் நடந்தபோதும் நீங்கள் வன்னியில் இருந்தீர்கள். யுத்தத்தின் இறுதி நாட்களிலும் வன்னியில் இருந்தீர்கள். பிரபாகரன் உட்பட புலிகள்
இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலருடன் நெருக்கமாக இருந்தீர்கள். உங்களுக்கு அந்த விஷயம் தெரியுமா? அதாவது, புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதில் அமெரிக்கா (சி.ஐ.ஏ.) செய்த உதவிகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்ததா?” “இல்லை. தெரியாது. அது இந்திய உளவுத்துறை ‘ரா’ செய்த வேலை என்ற நம்பிக்கையே நான் உட்பட புலிகளின் மற்ற தளபதிகளுக்கும் இருந்தது. யுத்தம் முடிந்து சில ஆண்டுகளின்பின் உங்கள் இணையதளத்தின்மூலம் இதில் இருந்த அமெரிக்க தொடர்பை தெரிந்து கொண்டேன்” “சரி. அமெரிக்க உதவி வரும் என்று பிரபாகரனுக்கு நடேசன் மூலம் நம்பிக்கை கொடுத்திருந்தது யார் என்பது உங்களுக்கு தெரியுமா?” “தெரியாது. அப்படியான விஷயங்களை பிரபாகரன் வெளியே சொல்வதில்லை.” “நடேசனிடம் கேட்டீர்களா?” “எனக்கும் அவருக்கும் இடையே பெரிய
நெருக்கம் கிடையாது” “யுத்தத்தின் இறுதி நாட்களில், அமெரிக்க உதவி வரும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் இருந்ததாக சொல்கிறீர்கள். பொதுமக்களை விடுங்கள். புலிகள் இயக்கத்தில் நீங்கள் முக்கிய பிரமுகராக இருந்துள்ளீர்கள். மற்ற தளபதிகளுடன் அடிக்கடி பேசியிருப்பீர்கள். அப்போது, அமெரிக்க உதவி வரும் என்று பிரபாகரனுக்கு நம்பிக்கை ஊட்டிய நபர் யார் என்று மற்ற தளபதிகளில் யாராவது சொல்லியிருப்பார்களே..” “யாரோ அமெரிக்காவில் உள்ள தமிழரின் ஏற்பாடு என்று சொன்னார்கள். அவர் யாரென்று யாரும் சொன்னதில்லை” “சரி. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்த, அங்குள்ள பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஒருவர் பற்றி யாராவது பேசினார்களா?” “கலிபோர்னியா என்றால்…” “அந்த மாநிலத்தின் பிரதான நகரங்கள், லாஸ் ஏஞ்சலஸ், சான்
 பிரான்சிஸ்கோ, சியாடில்” “யாரையும் கேள்விப்பட்டதில்லை” “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கலிபோர்னியாவில் இருந்தது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழ்செல்வனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய நபர் இவர். ஒரு விதத்தில் சொன்னால், தமிழ்செல்வனால் பாதிக்கப்பட்டு, தனது உடல் பாகத்தையே இழந்த நபர் இவர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


                             
 

பாகம்-1 யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில்தலைவர் பிரபாகரன், தளபதி ஜெயத்துடன் நடந்த சந்திப்பு பற்றி கசிந்த ஓர் சுவாரசியமான தகல்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் தரப்பில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய தகவல்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகின்றன. 2009-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பத்தில் இருந்து சிறிய பகுதியான முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கம் முடங்கிய நிலையில், இலங்கை ராணுவம் அவர்களை முற்றுகையிட்டிருந்தது. மே 2-வது வாரத்தில், அந்த முற்றுகையை உடைத்துக் கொண்டு பிரபாகரனை வெளியே கொண்டுசெல்ல சில முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளில், மே மாதம் 11-ம் தேதி இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு குழு வெற்றிகரமாக ராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியே சென்றது. ஆனால், அந்தக் குழுவில் பிரபாகரன் இல்லை. அந்த வழியில் பிரபாகரனை அழைத்துச் செல்வது சாத்தியமா என்பதை பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட முன்னோடி குழு அது. சுமார் 30 பேரடிங்கிய அந்தக் குழு முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியே சென்றபின், அதில் இருந்த சிலர் மீண்டும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு திரும்பி வந்தனர் –
 அதே பாதையில் பிரபாகரனையும், வேறு சிலரையும் அழைத்துச் செல்வதற்காக. ஆனால், 11-ம் தேதி இரவு நடந்த இந்த ஊடுருவலை தெரிந்து கொண்ட இலங்கை ராணுவம், அந்த லூப்-ஹோலை சரிசெய்து பாதுகாப்பை பலப்படுத்தி விட்டது. இலங்கை ராணுவத்தின் 59-வது படைப்பிரிவு நிறுத்தப்பட்டு இருந்த இடத்திலேயே இந்த சம்பவம் நடந்தது. முதல் குழுவில் சென்று திரும்பிய ஆட்கள், மீண்டும் 12-ம் தேதி இரவு பிரபாகரனையும் வேறு சிலரையும் அழைத்துக் கொண்டு 59-வது படைப்பிரிவு முற்றுகையிட்டிருந்த இடத்தை அடைந்த போது, இவர்களால் தப்பிச் செல்ல
 முடியவில்லை. சுமார் ஒன்றரை மணி நேர முயற்சியின் பின் மீண்டும் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் மறைவிடத்துக்கு திரும்பினர். அப்போது அந்தக் குழுவில் சென்றிருந்த புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், அதன்பின் ராணுவத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்.
 அவருடன் பேசிய போது, இறுதி யுத்தத்தின் இறுதி நாள் ஒன்றில், பிரபாகரனை மீண்டும் அவர் சந்தித்தது பற்றி அறிய முடிந்தது. ‘இறுதி நாள் ஒன்றில்’ என்று நாம் குறிப்பிடுவதன் காரணம், மீண்டும் பிரபாகரனை சந்தித்த தேதியை அவரால் சரியாக ஞாபகப்படுத்தி கூற முடியவில்லை. மிகவும் பதட்டமும் பரபரப்புமாக இருந்த அந்த இறுதி நாட்களில் சூரியன் உதிக்கும்போது அன்று என்ன தேதி என்பது பலருக்கு தெரியாமல் இருந்தது என்றார்
அவர். அவர் கூறிய தகவல்களில் நடந்த சம்பவங்களை வைத்து பார்த்தால், இவர் மே மாதம் 14-ம் தேதி, அல்லது 15-ம் தேதி பிரபாகரனை சந்தித்து இருக்கலாம். எமக்கு தகவல் தெரிவித்தவர், விடுதலைப் புலிகளின் தளபதி ஜெயம் (உயிரிழந்து விட்டார்) தலைமையில் இருந்த குழுவினருடன் இருந்தார். இவர்கள் இருந்த பகுதிக்கு மதியம் 3 மணியளவில் திடீரென நாலைந்து பேருடன் பிரபாகரன் வந்தார். மிகவும் சோர்வடைந்த முகத்துடன் வந்த பிரபாகரன், ஜெயத்துடன் சுமார் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது ஜெயம், “நீங்கள் இங்கே நிற்காதீர்கள். இங்கிருந்து போய் விடுங்கள் ராணுவத்தின் ஸ்னைப்பர் அணியினர் உங்கள்மீது குறி வைக்கலாம்” என்று சொன்னார். அதன்பின் மேலும் ஓரிரு நிமிடங்கள் அங்கே நின்றிருந்த பிரபாகரன், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன்பின், இரவு 7 மணிக்கு பிரபாகரனிடம் இருந்து ஒரு ஆள் வந்தார். ஜெயத்தையும், எமக்கு தற்போது தகவல் தெரிவித்தவரையும்
 பிரபாகரன் அழைத்துவர சொன்னதாக சொன்னார். இருவரும் சென்றனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரனுக்காக தற்காலிகமாக ஒரு இருப்பிடம் தயார் செய்யப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் பாதுகாப்பு பலமாகவே இருந்தது. உள்ளே பிரபாகரன் இருந்த நிலை இவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு ஒரு மருத்துவர் செலைன் (Saline) ஏற்றிக் கொண்டு இருந்தார். மருத்துவ ரீதியாக சில காம்பிளிகேஷன்கள் இருந்த பிரபாகரனுக்கு இரவு பகல் ஓயாத சிந்தனை காரணமாக லேசாக மயக்கம் ஏற்பட்டதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார். செலைன் மூலம் ஏற்றப்பட்டு கொண்டிருந்த நிலையில், படுத்திருந்தபடியே இவர்களுடன் சுமார் 15 நிமிடங்கள் பேசினார் பிரபாகரன். வெளியே என்ன நடக்கிறது என விசாரித்தார். அப்போது ஒருவர் வந்து பிரபாகரனை சந்திக்க ஜவான் (விடுதலைப் புலிகளின்
‘புலிகளின் குரல்’ பெறுப்பாளராக இருந்தவர்) வந்திருப்பதாக சொன்னார். “இப்போது வேண்டாம்” என சைகையாலேயே பதில் கூறினார் பிரபாகரன். “அமெரிக்க அதிகாரிகளுடன் நடேசன் (விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்) தொடர்பில் இருக்கிறார். அமெரிக்கா தலையிடும் போல இருக்கிறது. நடேசனிடம் இருந்து நல்ல தகவலை எதிர்பார்க்கிறேன்” என்றார் பிரபாகரன். அதன்பின் ஜெயத்திடம் ஆயுதங்கள் பற்றி விசாரித்தார். கையிருப்பில் அதிகளவு ஆயுதங்கள் இல்லை என தெரிவித்த ஜெயம், இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்றார். இதைக் கேட்டவுடன் பிரபாகரன் ஆச்சரியப்படும் விதமாக சிரித்தார். “கழுதையிடம் ஆயுதங்களுக்கு சொல்லுவோமா?” என சிரிப்புடன் கேட்டார். அவர் ‘கழுதை’ என்று சொன்னது,
ஒருவரின் பட்டப்பெயர். விடுதலைப் புலிகளின் ஆயுத சப்ளைக்கு ஒருகாலத்தில் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதனை (கே.பி.) சில சமயங்களில் ‘கழுதை’ என்று குறிப்பிடுவார் பிரபாகரன். (கழுதை சுமை ஏற்றி வருவது போல, ஆயுதங்களை கொண்டு வருவார் என்பதற்காக) இதைக் கேட்டு மற்றவர்களும் சிரித்தார்கள். ஆனாலும், அங்கே ஒரு கனமான இறுக்கம் நிலவியது. எப்போதும் துடிதுடிப்புடன் காணப்படும் பிரபாகரன், மிகவும் சோர்ந்த நிலையிலேயே காணப்பட்டார். அவரது குரல்கூட மிக பலவீனமான விதத்திலேயே இருந்தது. இந்த நிலையில் எமக்கு தற்போது தகவல் தெரிவித்தவர் தயங்கியபடி, “இங்குள்ள மக்கள் மத்தியில் சலசலப்பு இருக்கிறது. ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்ல பலரும் முயற்சிக்கிறார்கள். அதை தடுப்பது சரி. ஆனால், தப்பிச் செல்ல முயல்பவர்களுக்கு தண்டனை கொடுக்கிறோம். அது சரியல்ல. மக்கள் எம்மை வெறுக்க தொடங்குவார்கள்” என்றார். இவரை தொடர்ந்து பேச விடாதபடி கையால் பிடித்து தடுத்தார் ஜெயம்…. (அடுத்த பாகம்-2 இல் நிறைவுபெறும்).

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 20, 2014

மக்ளுக்கான தன்னிலைத் தீர்வுரிமை

தமிழ் மக்ளுக்கான இன்றைய தேவையான தனியரசையும் அதன் சாத்தியப்பாடுகள்,இடையூறுகள் என கொஞ்சம் அகலப்பார்வையுடன் அலசிப்பார்ப்போம் ஓர் முழமையான தேசிய இனமான நாம் நவீன தேசமாக வளர எமது சொந்தத் தேசிய அரசை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
தேசிய அரசு இன்றி மொழி,இலக்கியம்,ஏனைய இதர துறைகளிலிருந்து வளர்ச்சி அடையமுடியாது மாறாக சொந்த மக்களாலேயே புறக்கணித்து ஒதுக்கப்படும் நிலையே காணப்படும் இதுவே இன்றைய தம்ழரின் நிலை இதில் மாறுபாடான கருத்துக்கள் இருக்கமுடியாது.

ஈழத்தில் தமிழ், சிங்கள இன முரண்பாடு என்பது பன்நெடுங்காலமாக காணப்படும் ஒன்றாகும் இன முரண்பாட்டுக்கான மாபெரும் விதை பௌத்தம் அல்ல பெத்தம் வளர்த்த மாபெரும் துறவிகள் . இது பல பேருக்கு எவ்வாறு என்பது புரியாமல் போகலாம் பௌத்தம் பிறந்தது பாரத தேசத்தில் கௌதம புத்தர் சித்தாத்தராக இருந்த வேளை அவா ஓர் இந்து. அதன் பின்பு அசோகன் தன் சத்துருக்களாக எண்ணி உறவினர்,சகோதரர் எனறு பாராமல் கொன்று குவித்து தாயாதிச் சண்டையில் பெரும் போர்களின் பின் சக்கரவர்த்தியாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்அவர் கொடுத்த இராஜதந்திரத் தாக்குதலே பௌத்த மதம் இதன் மூலம் அரசன் எவ் வழியோ குடிகளும் அவ் வழி என சுக்குநூறாய் பிளந்து கிடந்ந பாரதம் ஒன்றிணைக்கப்பட்டது. துன ஆட்சி அதிகார எல்லை எல்லாவற்றுக்குமே பௌத்தம்
அனுப்பப்படடது.பௌத்த மதம் மாறிய எல்லா நாடுகளும் அசோகச் சக்கரவர்த்தியின் நட்பு நாடுகளாகின நட்பு நாடுகள் மேல் யார் கை வைத்தாலும் அசோகனின் மேல் கை வைத்ததாகப் போய் விடும் இதனாலயே பாண்டிய மன்னனுக்குப் பயந்து தேவநம்பியதீசன் பெத்தனானான்.இது ஓர் அரசியல் சாணக்கியம் அசோகனின் காலத்துக்கு பின் சக்கரவர்த்தி ஸ்தானம் ஆட்டம் கண்டது உறங்கு நிலையில் இருந்த இந்துக்கள் விழித்து கொண்டனர் அடக்கி ஆழப்பட்ட அவர்கள் விழிப்புணர்ச்சிசை மக்களிடம் மேற்கொண்டனர் இன்னொரு புறம் பௌத்தம் தீவிர சைவ,வைஷ்ணவ பற்றாளர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. விகாரைகள் சூறையாடப்பட்டன பௌத்ததுறவிகள் கழுவேற்றப்பட்டனர் இதனால்
நாளடைவில் பௌத்தம் பாரதத்தில் நலிவடைந்து காணாமல் போயிற்று பெரும்பாலான துறவிகள் உயிர் காக்க இலங்கை உட்பட பல நாடுகளுக்கு தப்பிச் சென்றனர் இது பௌத்தத்தின் வரலாற்று பக்கங்கள் இதை நாம் நாளடைவில் மறந்து விடுகிறோம் ஆனால் அவர்கள் மறக்கவில்லை தற்போதைய சூழ்நிலையில் இங்கு துறவிகள் எவ்வாறு அரசியல் செய்கின்றனரோ அதே போல் அன்று காணப்பட்ட நிலை பாரதத்தில் பொறுக்க முடியாமல் அழிக்கப் பட்டது இதில் தென்னிந்தியா பெரும் பங்கு வகித்தது அப்பர்,சம்மந்தர் போன்ற தமிழ் நாயன்மார்கள் பௌத்தம்இசமணம் ஆகிய மதங்களுக்கு எதிராக பெரும் பிரச்சாரம் செய்தார்கள். மன்னர்கள் மனம்மாறி மீண்டும் இந்து சமயத்திற்குத் திரும்பினார்கள்.

இதே சம காலத்தில் இலங்கையில் பல இராட்ச்சியங்கள் காணப்பட்டன. சிங்களம் எனபதே அக் காலத்தில் காணப்படவில்லை. சிங்களம் இந்த இடர்பாடுகளின் பின்திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மொழி அதில் பல திராவிட மொழிகளின் கலப்பும் சமஸ்கிரதமும் காணப்படுகின்றது. மொழி உருவாக்கப் பட முன்பே இஙகு இன குரோதத்தை விதைக்ககூடிய விதத்தில் பாரத இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டு தம் வரலாற்றை மகா வம்சம் எனும் நூலாக மகா நாமதேரரால் எழுதப்பட்டு பின் வந்த அரசர் காலங்களில் பின்னிணைப்புகளையும் கொண்டமைந்து காணப்படுகிறது. இதில் பல உறுதியான ஆதாரங்கள் காணப்படுகின்றன. சில பல சந்தர்ப்பங்களை
இராமாயன,மகாபாரத, மற்றும் ஜம்பெரும் காப்பியங்களின் தளுவல்கள் காணப்படுகின்றன இதற்கு காரணம் கதாநாயக அந்தஸ்தை பெற்று கொடுப்பதும் நியாயப்படுத்துவதுமேயாகும்.தமிழி மக்கள் தமக்கென வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கத் தவறியிருக்கின்றனர் இதற்கு காரணம் இவர்களின் அரசுகள் அடிக்கடி எதிரிகளால் ஆளப்பட்டதே ஆகும். பல தமிழ் மன்னர்களும் மக்களும் சிங்கள மயப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன இதை இந்திய பார்ப்பனர்கள் போல் இங்கு தேரர்கள் வழிநடத்தினர்.
 மகாவம்சத்தின் சாரம் சிங்களவனாக பிறந்தால் உன் எதிரி தமிழன். உனக்காகவே புத்தரால் தேர்தெடுக்கப்பட்ட நாடு இது. என்பதாக அமைகின்றது கதாநாயகனாக துட்டகைமுனுவை முன் நிறுத்துகிறது காரணம் எல்லாளன் எனும் தமிழ் மன்னனை வென்று துட்டகைமுனு இலங்கையை ஆழ்கிறான் எல்லாளன் ஓர் சோழப் பரம்பரை அவன் கொடி புலிக்கொடி. சிங்களவர்கள் தமிழரை புலியாக எண்ணி அழிக்க முனையும் குரோதம் இன்று ஏற்பட்டதல்ல.
 வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிக்கும் வரை பல அரசுகளை சில சிற்றரசுகளும் காணப்பட்டது அவர்கள் தம் நிர்வாக திறனுக்காகவும் உள் நாட்டு கிளர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் இன முரண்பாட்டை ஓர் ஆயுதமாக பயன்படுத்தினர் அதனால் அவர்களுக்கு தேவைப்பட்டது ஒன்று பட்ட இலங்கைக்குள் முரண்பாடுகள். சுரண்டலை கை விட்டு வெளியேர வேண்டிய நிர்ப்பந்தம் இரண்டாம் உலக போரினால் ஏற்பட்டது அதனால் மணமுவந்து அவர்கள் கொடுத்த இலவச இணைப்பு இலங்கையின் சுதந்திரம். அது நாட்டின் பூர்வீக குடிகளை அவர்களின் இருப்பை கேள்விக் குறியாக்கிச் சென்றது. பின்பு கண்டறிந்த தமிழ் பெரியோர்களின் தாராண்;மையாலும் சிலரின் பதவி மோகத்தினால் ஏற்பட்ட துரோகங்களாலும் தமிழரின் துன்ப வாழ்வு தொட்கதையானது.
 தற்போது ஓங்கி ஒலிக்கும் சுயநிர்ணயம்,சுயநிர்ணயஉரிமை எனும் பதங்கள் வௌ;வேறு பொருளுடையன என கணடறிந்தோரால் சுட்டிக்காட்டப் படுகின்றது இதற்கான தமிழ் பதம் ‘தன்னிலை தீர்வுரிமை” என்பதே சரியானதாகும் தன்னிலை தீர்வுரிமை எனபது ‘தனித்து எமது தேசிய அரசை அமைத்துக் கொள்வது அல்லது அதே உரிமையுடன் பிற தேசங்களுடன் இணைந்து ஒன்றிய அரசை அமைத்துக் கொள்வதாகும்”
ஆண்டாண்டு காலமாய் எமது ஒற்றுமை இன்மையின் மூலமேஒடுக்கப் படும் ஓர் இனமாக தமிழ் தேசம் அடையாளப் படுத்தப் படுகின்றது எனவே இங்கு தன்னிலைதீர்வுரிமையின் அடிப்படையில் நாம் தனித்தோ அல்லது இணைந்தோ அரசமைத்துக் கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகும். சிங்கள தேசம் ஏகாதிபத்தியவாதிகளாய் எம் தேசத்தினை கைப்பற்றி எமது அரசுரிமையை மறுத்து தனிச் சிங்கள அரசை நிறுவ முயல்கிறது அதை நடைமுறைப் படுத்தியும் வருகிறது.
 தமிழராய் இருந்து தமிழ் பேசும் சமூகமாய் மாற்றம் பெற்றுக் காணப்படும் முஸ்லீம் சமூகம் பற்றி வாதபிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் முஸ்லீம் சமூகம் தமிழ் சமூகத்துடன் இணைய வேண்டுமெனகுரல் கொடுத்த வண்ணமுள்ளனர் இது ஓர் தற்காலிக அரசியல் நிலைப்பாடாகவே ஆக முடியும் ஒரே விடயம் பல தடைவ புரியப்படாமல் இருப்பது தான் விந்தை முஸ்லீம்கள் என்றுமே தமிழ் சமூகத்துடன் ஒன்றினைக்கப் பட முடியாதவர்கள். எனவே தமிழத் தேசம் மாற்று வழியை தேட வேண்டியது காலத்தின் தேவை. புலனற்ற விடயத்தில் தொடர்ந்து பயணிப்பது கானல் நீராகவே அமையும்.
 இலங்கையில் முஸ்லீம் சமூகம் 600 வருடங்களுக்குட்பட்ட வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கிறது அடிப்படையிலேயே வியாபார மனோபாவத்தைக் கொண்டு அவர்கள் சமுதாயத்தில் நிலைபெற்றிருக்கின்றனர். அவர்களில் பெரும் பங்கு அதன் அடிப்படையில் வாழ்வியலாக்கப்படுகின்றது. அவர்கள் விரைந்து சூழலுக்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்கின்றனா. இந்து சமயக் கொள்கைகளில் இருந்து புறப்பட்ட பௌத்தமும் அதன் பின் தோன்றிய கிறிஸ்தவமும்   இறுதியில் தோன்றி நிலை பெற்றதே இஸ்லாமிய மதம். ஆனால் இலங்கை மக்களின் இந்து பௌத்த கலாச்சார விழுமியங்களுக்கு புறம்பான பல விடயங்களை இஸ்லாம் அடிப்படைவாதமாகக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இஸ்லாமியக் கொள்கைகளில் சிறந்த நல்ல விடயங்களும் அடங்கிக் காணப்படுகிறது. அவை மதிக்கப்படவும் பாராட்டப்படவும் வேண்டியவை.
 அவர்கள் இலங்கைக்கு எந்த நோக்கத்திற்காக வந்தார்களோ அதை இன்னும் திறம்படக் கையாளுகின்றனர் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாக இன்னும் மாற்றம் பெறவில்லை. இங்கு மாத்திரமே அவர்கள் தம்மை முஸ்லீம்கள் என தனித்து அடையாளப்படுத்துகின்றனர் மொழி
அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை தேவைப்படின் அவர்கள்
 தமது மொழி உருது அல்லது அரபு என கூறப்பின்நிற்பதில்லை. ஏந்தச் சமூகம் அவர்களை அரவணைத்ததோ,வாழவைத்ததோ தம் மத்தியில் குடிப்பரம்பலை ஏற்படுத்தியதோ அந்தச் சமூகத்துடன் இணைந்து வாழத் தயாரில்லை முஸ்லீம் சமூகம். காரணம் தமிழர் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதே. இது பூர்வகுடிகளான தமிழர் நிலையை கேள்விக்குட்படுத்தியதோடு பல வரலாற்றுத் தவறுகள் நேரவும் வழிசமைத்தன. தற்போதைய நிலையில்
 முஸ்லீம்கள் தமிழ் மொழியில் இருந்து மொழி மாற்றம் பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது. இவை தமிழர்,முஸ்லீம் இனங்கள் இணைந்து ஓர் சமூகமாகச் செயற்படும் செயல்திறனை இல்லாமல் செய்கின்றன. ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை இனங்களாகக் காணப்படும் நாம் ஒடுக்கும் வல்லாதிக்கத்துக்கு எதிராக ஒன்றுபடும் திறனற்றிருப்பதால் தனி வழி செல்வதே சாலச்சிறந்ததாகும். ஓர் இனத்தின் எழுச்சி மற்றைய இனத்தை எழுச்சியுற வைக்க முடியாது என்பது எம் அனுபவத்தின் உண்மை எனவே’தன் குழந்தையை அவளே பெற வேண்டும்” எனும் முது மொழிக்கேற்ப தமிழினம் செற்பட வேண்டும்.

ஈழ விடுதலைப் போரினால் தோற்றம் பெற்ற இயக்கங்களின் எண்ணிக்கை முப்பதுகளிற்கு அதிகம் அவற்றில் பல அரச வங்கிகளையும் தனியார்,பொதுச் சொத்துக்களையும் கொள்ளையிட்டு நாட்டை விட்டு வெளியேறின சுக போகங்களுக்காக. நிலைத்து நின்ற ஒரு சில இயக்கங்களும் துரோகங்களின் மூலமும் சகோதர யுத்தத்தாலும் அழிந்தன சில சிங்கள இனவாத அரசுடன் ஐக்கியமாகின இதன் மூலம் தமிழரின் போர்ப் பலம் சிதைக்கப்பட்டது. இவற்றில் எதையுமே உருப்படியாகச் செய்யாத இயக்கங்களும் இருக்கின்றன. அரச துதிபாடிகளாதக இருந்து கொண்டு தமிழ் மக்களை கொள்ளையிடல் கடத்தல் கப்பம் என மேலும் மேலும் துன்பத்திற்குள் தள்ளிவிடுகின்றனா.; இறுதி வரை தமிழர் விடிவிற்காய் போராடி அதற்காக அன்னிய சக்திகளின் பேருதுவியில் தமிழர் புல்லுருவிகளின் காட்டிக் கொடுப்புடன் சிங்கள இனவாத அரசினால் தமிழர் பெருவீரம் முள்ளிவாய்காலில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறது.
 மீண்டும் தலமைத்துவ வெற்றிடத்துக்குள் தமிழர் தள்ளிவிடப்பட்டுள்ளனர் இதனை சாக்காகப் பயன்படுத்திப ல குழுக்களாக மீண்டும் சகோதர யுத்தத்துக்கு தயாராகி வருகின்றனர் ஒரு சில மேதாபிகள். சுpங்கள அரசாங்கத்தின் ஊடுருவல் மூலம் புலம் பெயர் தமிழர் ஒன்றிணைவை பிரிவினையின் மூலம் அழிக்கும் அல்லது தலைமைததுவ ஒருங்கிணைவை தடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப் பட்டு வருகிறது. எனவே தற்போதைய தேவை கொள்கை கோட்பாடுகளுடன் கூடிய தளம்பல் நிலையற்ற இராஜதந்திர முதிர்ச்சியை பேனக்கூடிய தமிழர் தேசிய விடுதலையில் வேட்கை கொண்ட ஓர் தலைமைத்துவம்.
தமிழர் பிரதிநிதிகளாக வடகிழக்கில் மட்டும் முடங்கி விடாது இலங்கை முழுதும் ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றுபட வேணடியது மிக முக்கியமானதாகும் இதற்குத் தற்போதும் ஒரு சில கட்சிகள் தயாராகவே இருக்கின்றன. அல்லாது முரன்பட்டு அரச துதிபாடும் கட்சிகள் இருப்பின் அவர்கள் செல்வாக்கு செலுத்தும் பிரதேசங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளை முன நிறுத்த வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப் படாத எந்தவொரு தமிழ் கட்சியோ தனிநபரோ தேர்தலில் வெற்றியீட்டாத ஓர் நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இப்படியான ஒரு சூழ்நிலையில் தமிழர் தரப்பு தேர்தலைச் சந்திக்குமெனில்
 அது தான் தமிழ் மக்களுக்கான ஓர் உயரிய அங்கிகாரமும் வரவேற்பை பெறுவதுமாகவும் அமையும். அது தன்நிச்வையாகவே தமிழரை எதிர்கட்சி வரிசையில் உட்காத்துவதோடு ஒன்று பட்ட ஓர் இலங்கைக்குள் தேசிய அரசை அமைப்பதற்கான முதற் படியாக அமையும் தமிழர் குடிப்பரம்பலை மட்டுப்படுத்தி விகிதாசார முறைமையில் தமிழரை அடிமைப்படுத்தும் நோக்கில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ள படுகின்றன. பரவலாக திரை மறைவில் எம்மவர்களும் இதற்கு உடந்தையாக்கப் டுகின்றனர் இளஞர்கள் நாட்டை விட்டு புலம் பெயர வைப்பதும், காணாமல்போதல், சிறையிடுதல் கட்டுப்பாடுகளுக்குள் இரானுவ பிரசன்னத்தின் மூலம் மக்களை முடக்கி வைத்தல்,பொருளாதார மூலங்களை இராணுவம் கைப்பற்றி மக்களை நழிவடைய செய்தல் காணி அபகரிப்பு எனவும் குடும்பகட்டுப்பாடு முறை மூலம் இனப்பெருக்க விகிதத்தை குறைத்தல் என பல வழிகளிலும் இனவெறி அரசு தமிழ் மக்களின் இனப்பரம்பலை அழித்தும் நில அபகரிப்பின் மூலமும் தமிழர் தேசம் விழுங்கப்பட்டு கொண்டிருக்கிறது.
 கோசங்களை விடுத்து திட்டமிட்ட சீறிய நடவடிக்கைகளை தமிழ் தலைமைகள் முன்னெடுக்க வேண்டும் போரில் பிடியில் இருந்து உடுத்த உடையுடன் உயிர் தப்பி வந்த மக்களின் மேல் அரச, தனியார் வங்கிகள,நிதிநிறுவனங்கள் என்பன பெரும் விளம்பரத்தின் மூலம் கடன் சுமையை ஏற்றி அவர்களை உள்ளதையும் இழக்கசசெய்திருக்கின்றனர். தமிழர் பிரதேசங்களில் ஏராளமான சிங்கள மொழி உத்தியோகத்தர்களை நியமித்து அவர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி அழித்து சிங்களவர்களுக்கு வேலை வாய்ப்பு வளங்கப்படுகிறது இதன் மூலம் தமது சொந்த நிலத்தில் தமக்கான வேலைவாய்ப்பை பெற முடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றது. அதிகார பீடத்தை தமிழர்களுக்கு வளங்க சிங்களம் எப்போதும் தயாராக இல்லை சிங்கள மொழி திணிப்பு சீராக நடைபெறுகின்றது கலாச்சாரம் சீரழிக்க படுகின்றது புராதான முது சொத்துக்கள் சூரையாடப் படுகின்றன இவை எல்லாவற்றுக்கெதிராகவும் நிறுவன மயப்படுத்தப்பட்ட எதி;ர்ப்;பியங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழர் பகுதி;யில் தாய்மொழியின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் குறுகிய காலத்தில் இன கலப்பின் மூலம் தமிழர் பூர்வீக நிலங்கள் மட்டுமல்ல தமிழே கரைபடிந்து காணாமல் போய் விடும்.
 தலைவர்கள் எதிரிகளை விமர்சிப்பதை விடுத்து தமிழர் வரலாற்றை பேச வேண்டும் பேசாது விடுவதால் ஏற்படும் பெரும் தவறே இன்றைய எமது நிலை அதிகப்படியான மக்களுக்கு கடந்த கால வரலாறுகள் தெரிந்திருக்கவில்லை என்பது நிஜம் எதற்காக போராட்டம் ஆரம்பமானது மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போர் ஏன் என்பது சரியாக இலங்கை வாழ் தமிழ் மக்களாள் புரிந்து கொள்ளப் படவேயில்லை இது ஓர் வரலாற்று குறைபாடே இராவணனை கூட சிங்களவர் உரிமை கோறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். விஜயன் பாரதத்தில் இருந்து புலம் பெயர்ந்து குவேனியை மணந்து குவேனியின் நாட்டை ஆட்சி செய்தான் என்பதை பலர் அரியவில்லை. சித்தாத்தரும்,விஜயனும் ஓர் இந்துக்கள் அடிப்படையில் பௌத்த மதமும் துறவிகளும் இந்தியாவில் இருந்து இறக்குமதி  செய்யப்பட்டவர்கள் என்பதை தமிழரும் சிங்களவரும் உணரும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்று இனப் பிரச்சனை காணாமல் போயவிடும் நவீனயுகத்தில் அரியாமையில் திளைக்கும் மக்களை விழிப்படைய செய்வதும் அதற்கெதிராக அணிதிரட்ட வேண்டியதும் மக்கள் தலைவர்களின் கடமை.

சிங்கள இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து அதற்காக அகிம்சை வழியில் போராடி சிறை சென்றார்கள் என கடந்த இரு தசாப்தங்களில் எந்தவொரு தமிழ் முஸ்லீம் தலைவர்களையும் காணவில்லை அப்படி ஒரு நிலை ஏற்படுமிடத்து அரசாங்கத்துடன் சமர போக்கை கையாளவே விரும்புகின்றனர். அகிம்சை என்பதும் ஓர் ஆயுதம் தான் அது உரத்து குரல் கொடுப்பதும் பின் ஏகாதிபத்தியத்துக்குள் ஐக்கியமாவதும் அல்ல. ஆனால் எம் தலைவர்கள் இதையே ஓர் இராஜதந்திரமாக காண்பிக்க முயல்கின்றனா. மக்களை ஏமாற்றுவதிலேயே இவர்களின் ஆயுள் முடிந்து விடுகின்றது     மக்கள் மீண்டும் மீண்டும 
சூனியத்துக்குள்ளேயே தள்ளிவிடபட படுகின்றனர்.
இங்கு வேறு பல விடயங்கள் என்னால் தவறவிடப் பட்டிருக்கலாம் அவற்றை ஆராய இந்த பந்தி மிக நீண்டதாக அமைந்து விடலாம் எனவே ஓரளவேனும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு தமிழர் தேசிய விடுதலையை விரைவு படுத்த பல் தேசிய அரசில் இருந்து பிரிந்து சென்று தனியரசை அமைத்தல் அல்லது அதே உரிமையுடன் சமத்துவ அடிப்படையில் பிறதேசிய இனங்களுடன் கூட்டரசில் நீடித்தல் எமது உரிமையாகும் இதை அடையக் கூடிய திறன்,பலம்,இராஜதந்திரம்,உளவுறன் கொண்ட மக்களையும் வழிநடத்தக்கூடிய தலைமைத்துவத்தையும் ஏற்படுத்தி கொள்வதே எம் முன்னே உள்ள ஒரே தெரிவு அதன் பின்பு தான் ஏனையவை எல்லாமே.
 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 19, 2014

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு மகிந்த தகுதி இல்லை -

 மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்த பின்னர் 18ம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
அவுஸ்திரேலிய சட்டநிபுணர் ஒருவருடன் இலங்கையின் சட்டநிபுணர்கள் கொழும்பில் நேற்று சனிக்கிழமை மாலை நடத்திய கலந்தாய்விலேயே இந்தக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டின் முற்பகுதியிலோ அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள்ளோ நடத்தப்படக்கூடும் என்ற ஊகங்கள் அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் வெளிப்பட்டுவருகின்றன.
தனது இரண்டாம் தவணைப் பதவிக்காலம் முடியும் முன்னமே, முன்கூட்டியே அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் பரபரப்புடன் நடந்துவருவதாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், அரசியலமைப்புச் சட்டப்படி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தவணைக்கும் போட்டியிட முடியாது என்கின்ற சர்ச்சையை நாட்டின் சட்ட வல்லுநர்கள் எழுப்பிவருகின்றனர்.
ஆனால், அரசியலமைப்புக்கு மஹிந்த அரசாங்கம் கொண்டுவந்த 18-ம் திருத்தத்தின் மூலம் அந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டது என்று அரசாங்க தரப்பினர் கூறிவருகின்றனர்.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் தடவை பதவிப்பிரமாணம் செய்துகொண்ட சந்தர்ப்பத்திலேயே மூன்றாம் தடவையும் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்று அவருக்கு முதல் தடவை பதவிப்பிரமாணம் செய்துவைத்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அண்மையில் கூறியிருந்தார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட, அவுஸ்திரேலிய சட்டவல்லுநரும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சூரி ரத்னபாலவை அழைத்திருந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இந்த சட்ட ரீதியான குழப்பத்துக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டிருக்கின்றது.
இந்தக் கலந்தாய்வில் இலங்கையின் முக்கிய சட்டத்துறை, அரசியலமைப்பு நிபுணர்கள் பலரும் இன்று கலந்துகொண்டிருந்தனர்.
´(எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஒருவர் ஜனாதிபதி பதவி வகிக்கக்கூடியவாறு கொண்டுவரப்பட்ட) அரசியலமைப்பின் 18-ம் திருத்தம் கடந்த காலத்துக்கு பின்நோக்கி ஆளும் தன்மை கொண்டது அல்ல என்று பேராசிரியர் சூரி ரத்னபால சுட்டிக்காட்டினார்´ என்றார்.
´இலங்கையின் பொருள்விளக்கச் சட்டத்தின் பிரகாரமும் அரசியலமைப்புடன் தொடர்புடைய சட்டங்களை பின்நோக்கி, கடந்த காலத்தையும் ஆளும் விதத்தில் கொண்டுவர முடியாது என்றும் பேராசிரியர் விளக்கமளித்தார்´ என்றும் கூறினார் உபுல் ஜயசூரிய.
பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்ன, பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவி டாக்டர் தீபிகா உடகம, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் டாக்டர் காமினா குணரத்ன உள்ளிட்ட இலங்கையின் சட்டநிபுணர்களும் அவுஸ்திரேலிய சட்டநிபுணர் சூரி ரத்நாயக்கவின் சட்ட விளக்கத்தையே இந்த கலந்தாய்வில் ஆமோதித்துள்ளனர்.
அதிகபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக ஆட்சியில் இருப்பதற்கு மட்டுமே மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்பது தான் பிரபல சட்டநிபுணர்களின் கருத்து.
இந்தக் கலந்தாய்வில் மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையும் போட்டியிட முடியும் என்பதற்கான விளக்கங்களை எந்தவொரு சட்டநிபுணரும் தெளிவாக முன்வைக்கவில்லை என்றும் உபுல் ஜயசூரிய பிபிசியிடம் கூறினார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்பட இருக்கின்றதா, அதில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கான சட்டரீதியான வாய்ப்புகள் உருவாகுமா என்பது இலங்கை அரசாங்கத் தரப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையப் போகின்றது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 14, 2014

நிறைவேற்று அதிகாரத்திற்கும் ஈழக்கோரிக்கைக்கும் என்ன தொடர்பு?

 தனித்தமிழீழ கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று மஹிந்தராஜபக்சவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ராஜபக்ச அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு தாம் தயார் எனவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதாகவும் கூறினார்
இது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிடும் போது ஈழக் கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்று அதிகாரம் தொடர்பான நெருக்கடியைக் குறைப்பதற்குக் ராஜபக்ச கருதுகின்றார் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரையும் ,சிங்களவர்களையும் ஏமாற்றும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச கூற்று முறையற்றது .ஜனநாயகத்துக்கு எதிராகவும் அச்சுறுத்தல் மிகுந்ததாகவும் நிறைவேற்று அதிகாரம் செயல்படும் என்றும் இது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் பிரச்சினையான ஒன்றாகும், சிங்கள மக்களே தெளிவு பெறவேண்டியவர்களாக உள்ளனர் என்று தெரிவித்தார்
மேலும் ராஜபக்ச அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் மத்தியிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக பௌத்த மதத்தலைவர்கள், எதிர்க்கட்சிகள் ,இடதுசாரி அமைப்புக்கள், போன்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதும் தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிடுவதானது வேடிக்கையாக இருக்கின்றது.  இந்தஅறிக்கையின் உண்மையான நிலை  தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை திசை திருப்புவதற்கான முயற்சியாகும் உண்மையில் ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என தெரிவித்தார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 12, 2014

ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறையை ரத்து செய்கிறேன் ஈழக் கோரிக்கையை கைவிடுங்கள்,

 ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு தொகுதியினரும் தமிழீழ கோரிக்கையை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
‘ஈழக் கோரிக்கையை குறித்த தரப்பினர் கைவிட்டால் நானும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தத் தயார்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தனி நாடு ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழ் மக்கள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் வெளிநாடு சென்று இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 09, 2014

தொடர்ந்தும் இலங்கையில் சித்திரவதைகள் - ப்ரீடம் ப்ரம் டோச்சர்

 பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை  ( ப்ரீடம் ப்ரம் டோச்சர் )  என்ற அமைப்பு இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அமைப்பின் தலைவர் ஜூலியட் கொஹென் ஜெனீவா மனித உரிமைகள் குழுவின் அமர்வில் நேற்று பங்கேற்றபோது இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் கரிசனை கொள்ளாது இருந்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இலங்கையில் தொடரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் என்பன தொடர்பில் இலங்கை அரசாங்கம் மறுப்பை வெளியிட்டு வருகிறது.
எனினும் அதற்கான ஆதாரங்களை தாம் மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக கொஹேன் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற நெருப்பால் சுட்ட 73 வீத சம்பவங்களும் 60 வீத பாலியல் வன்முறைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்ற கூறப்படுவோர் மீது தொடர்ந்தும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகள் அவசியம் என்று கொஹென் கேட்டுக்கொண்டார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 05, 2014

சிறையில் கொல்லப்பட்ட தில்ருக்ஷனின் வழக்கை விசாரிக்க அனுமதி

இலங்கையில் 2012-ம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட மரியதாஸ் தில்ருக்ஷன் எனும் கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கை ஏற்கக்கூடாது என்று அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரித்தது.
மரியதாஸ் தில்ருக்ஷனின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை விசாரிப்பதற்கு, பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது.
மனு அழைக்கப்பட்ட போது ஆட்சேபனைகளை முன்வைத்த அரசதரப்பு வழக்குரைஞர், சிறைச்சாலை கலவரத்தை முறியடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதே குறித்த கைதி உயிரிழந்ததாக கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது எந்தவொரு கைதியும் இலக்கு வைத்துத் தாக்கப்படவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் சட்டத்திற்கு அப்பால் சென்று தமது அதிகாரத்தைப் பிரயோகிக்கவில்லை என்றும் அரசதரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
எனவே, இந்த மரணம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற முடியாது என்றும் அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசதரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், இந்த வாதத்தை மறுத்துரைத்த மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர், அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் சட்டத்துக்கு அப்பால் சென்று தங்களின் அதிகாரத்தைப் பிரயோகித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த, அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் வழக்குரைஞர் நாமல் ராஜபக்ஷ, இந்த சிறை மோதலின்போது பொலிஸ் அதிரடிப் படையினர் பயன்படுத்தப்பட்டதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
கலவரம் ஒன்றை முறியடிக்க முன்னர் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் எதுவும் இதன்போது பின்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
குறித்த கைதி, சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் முடிவுக்கு வந்த பின்னர் கொல்லப்பட்டதாகவே தமக்கு தகவல் கிடைத்துள்ளதென்றும் வழக்குரைஞர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
மனுதாரர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தொடர்ந்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்தனர்.
இதன்படி, வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 5-ம் திகதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம், இந்த மனு தொடர்பான விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிமலரூபன் வழக்கு தள்ளுபடி
இதேவேளை, இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட கணேசன் நிமலருபன் என்ற கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவொன்றை விசாரணையின்றி தள்ளுபடி செய்வதற்கு உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்மானித்தது.
இந்தத் தீர்ப்பை வழங்கிய தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், கலவரமொன்றை அடக்கும்போது இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதன்போது மனித உரிமைகள் மீறப்பட மாட்டாது என்றும் தலைமை நீதியரசர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 01, 2014

தனது கடும் நிலைப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியுள்ளது

 இலங்கை தொடர்பான தனது கடும் நிலைப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக தான் உணர்ந்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது இதனை தான் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோன் கெரியுடனும், இந்திய பிரமருடனும் மேற்கொண்ட பேச்சுக்கள் பயனள்ளதாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் பேசவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மாத்திரம் முன்வைத்தார். தான் ஏன் விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கைகளை நிராகரித்தார் என்பதையும் தெளிவுபடுத்தினார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு விரோதமாக செயற்படாது என மோடி தெரிவித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>