18

siruppiddy

ஏப்ரல் 30, 2015

மரண தண்டனையின் பின்னணியில் பரபரப்புத் தகவல்?

அவுஸ்திரேலிய பொலிஸாரின் துப்பறியும் தகவல் இந்தோனேசியாவிற்கு கிடைந்ததே மயூரன்- அன்ட்ரூசான் உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் காரணமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலிய மத்திய பொலிஸார், தமது நாட்டில் அவர்களது குற்றச் செயலைத் தடுத்து நிறுத்தாமல் விட்டதுடன், அவர்கள் இந்தோனேசியாவிற்குச் சென்ற பின்னர் அந்நாடு மரண தண்டனையை வழங்குகிறது என்று தெரிந்தும் அந்நாட்டுக்கு இவர்கள் பற்றி தகவல்களை வழங்கியிருந்தது.
மயூரன்- சான் உட்பட ஏனையவர்களின் மரணத்தில் புதைந்துள்ள வெளிவராத பல தகவல்கள் தொடர்பில் லங்காசிறி வானொலியின் விசேட செவ்வியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரான பாலா விக்னேஸ்வரன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 29, 2015

தொலைபேசியில் பசிலய் விடுதலை செய்யுமாறு அச்சுறுத்தல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு தொலைபேசி ஊடாக இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர் இது குறித்து பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகதி லக்மினி அபேநாயக்கவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 26ம் திகதி 4.25 மற்றும் 4.30 மணிகளில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டு கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெசில் ராஜபக்சவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கடுமையான வார்த்தைகளினால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி அழைப்புக்கள் பற்றிய விபரங்களை திரட்டி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொரளை பொலிஸ் நிலையம் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நேற்று பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது

யாழ்.மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்ககூறியது யார்?: விமலை மடக்கிய ரணில்!
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்கவிடாமல தடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளிற்கு உத்தரவிட்டது யார் என விமல் வீரவன்சவை பார்த்து கேட்டு, அவரை வாயடைக்க வைத்துள்ளார் ரணில். 
நேற்று பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது.
நேற்று எம்.பிக்களின் சிறப்புரிமை தொடர்பான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது உரையாற்றிய விமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களை வேட்டையாட பொலிஸ் அதிகாரியொருவரை நியமித்து, அவருக்கு அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவி தரலாமென அரசு வாக்களித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ரணில், “கிடைக்கும் முறைப்பாடுகளிற்கு அமைவாகவே விசாரணைகள் நடக்கின்றன. சில முறைப்பாடுகள் தவறென கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி எம்.பிக்களை வேட்டையாட வேண்டிய தெவை எமக்கில்லை.
ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மக்களை மைத்திரிக்கு வாக்களிக்க விடாது தடுக்குமாறும், அப்படி தடுத்தால் பதவி உயர்வுதருவதாகவும் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு வாக்களித்தது யார்? நானா?” என விமல் வீரவன்சவை பார்த்து கேட்டார்.  இதற்கு பதிலளிக்க முடியாமல் அசடுவழிந்தபடி விமல் உட்கார்ந்திருந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 28, 2015

வான் கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கை!

வெள்ளை வான் கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்பு செயற்பட்டாளர்கள் கடத்தி காணாமல் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாதுகாப்பு துறைசார் பிரதானிகள் மூவர் பற்றிய இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இந்த அறிக்கை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், முப்படையினர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இந்த பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
வெள்ளை வான் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவு பிரதானிகளில் மூன்று பேரில் இருவர் ஒய்வு பெற்றுக் கொண்டுள்ளனர்.
இராணுவ மேஜர் ஒருவர் தொடர்பிலும் தனியான அறிக்கையொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 27, 2015

யோசித ராஜபக்ச சிராந்தி ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவையும், மகன் யோசித ராஜபக்சவையும், அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிராந்தி ராஜபக்சவுக்கு எதிராகவும், யோசித ராஜபக்சவுக்கு எதிராகவும், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஏற்கனவே  விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், அடுத்த சில நாட்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் 
விவாதிக்கப்படவுள்ள, 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ள நிலையில், இவர்களைக் கைது செய்வதன் மூலம், 19வது திருத்தத்தை நிறைவேற்றாமல் தடுக்க ஐதேக முனைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 26, 2015

பணியாளர்கள் மக்களிற்கே விசுவாசமாக இருக்கவேண்டும்!!!


யாழ்.மாவட்டத்தினில் முன்னர் இருந்த நிர்வாகத்தில் இடம்பெற்ற ஊழல்களையும் புதிய அரச அதிபர் சரி செய்ய வேண்டும். இதனூடாக யாழ்ப்பாணத்தில் சிறந்த நிர்வாகம் ஒன்றினையே நாம் அரச அதிபர் ஊடாக எதிர்பார்க்கின்றோம்.   நாங்கள்  கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழில் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன்.
பொருளாதார அமைச்சின் கீழ் 
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்,   இன்றைய இந்த நிகழ்விற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 
 கிராம மக்கள்  கலந்து கொள்ளக் கூடாது என முன்னாள்  அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா மற்றும்  அவருடன் இயங்கியவர்கள் பத்திரிகை செய்தியை கொடுத்துள்ளனர்
ஆனால் நீங்கள்  அரச உத்தியோகத்தர்களே. எனவே மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் , அரசுக்கு கடமைப்பட்டவர்கள், அரசு கூறும் வேலைகளை நீங்கள்  செய்ய வேண்டும்.
   சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கட்சிக்கு வேலை செய்பவர்கள் அல்லர். ஆனாலும் இங்கு கட்சிக்கு வேலை செய்வதனையே நாங்கள் பார்க்கின்றோம். கட்சிக்கு வேலை செய்யாது மக்களுக்கு சேவை செய்யுங்கள் .   மக்களாகிய எங்களது வரிப்பணத்தில் தான்  நீங்கள் சம்பளம் பெறுகின்றீர்கள் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் . நீங்கள்  அந்த வரிப்பணத்திற்கு துரோகம் செய்வது என்பது தமிழ் 
 மக்களுக்கு செய்யும்  துரோகமாகும்.
எதிர்வரும்காலத்திலாவது உத்தியோகத்தர்கள் போல நடந்து கொள்ளுங்கள். மேலும் தற்போது ஆட்சி மாறியுள்ளது.  கொழும்பில் பல்வேறு பட்ட ஊழல் செயற்பாடுகள் இடம்பெற்றதாக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டு வருகின்றன.   ஆனால் வடக்கு மாகாணத்தில்
 என்ன நடக்கின்றது? இங்குள்ள ஊழல்கள் குறித்து யார் பேசுகின்றனர்? இ.போ.ச வின்  வடக்கு மாகாணத்திற்கு என பொறுப்பான ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.   அவருக்கு மேல் அதிகரித்த ஊழல் குற்றச்சாட்டுக்கள். இலங்கையில் உள்ள 12 போக்குவரத்து பிராந்தியங்கள் இருக்கின்றன. அதில் 11 பிராந்திய தலைவர்களையும்  மாற்றிவிட்டனர்.
  ஆனால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் மாற்றவில்லை.  அதற்கு அமைச்சர் ரிசாட் பதியுதினே காரணம்.    எனினும்  அவரது ஊழல் என்பது பல இலட்சங்கள். இருப்பினும் குறிப்பிட்டவரை மாற்றுவதற்கு அமைச்சருக்கும் முடியவில்லை. போக்குவரத்து சபையின்  தலைவருக்கும் முடியாதுள்ளது.    இருப்பினும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அண்மையில் குறித்த உத்தியோகத்தர் மாற்றப்பட்டார்.
ஆனாலும் அவருக்கு முக்கிய பதவி ஒன்று வழங்க வேண்டும்  என்பதற்காக வடக்கு மாகாண போக்குவரத்து சாலை இரண்டாக பிரிக்கப்பட்டது.   தமிழ் மக்கள்  மாத்திரம் ஊழல் எல்லாத்தையும் ஏற்றுக் கொள்ள முடியுமா? தமிழ் மக்களுக்கு என்ன தலைவிதியா? தமிழ்  மக்களுக்கு சரியான நிர்வாகம் கிடைக்க வேண்டாமா? இங்கு வருபவர்கள்
 கொள்ளையடித்துச் செல்ல முடியுமா?   இவை எதுவும் எதிர்வரும் காலத்தில் நடைபெறக்கூடாது . 
இதேவேளை கடந்த காலத்தில் பல ஊழல் சம்பவங்கள்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. எனவே புதிய அரச அதிபரின் நிர்வாகத்தில் இவை நடைபெறக் கூடாதெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 22, 2015

பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும் - கோத்தாபய !!!

நாட்டைக் காப்பாற்றுவதற்கு, சிறிலங்கா அதிபர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
“மைத்திரிபால சிறிசேன அதிபராக ஆறு ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் அதனைத் தொடர வேண்டும்.
ஆனால், அவர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, மகிந்த ராஜபக்சவை பி்ரதமராக நியமிக்க முடியும்.
அவர்கள் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம், இலக்குகளை வெல்லும் உறுதி கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும்.
மகிந்த ராஜபக்சவை இலங்கையர்கள் 
விரும்புகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் அவருக்கு 5.8 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஒரு பக்கத்தில் பிரதமராக இருந்து ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை நடத்துகிறார். இன்னொரு பக்கத்தில், சந்திரிகா குமாரதங்க, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் அரசாங்கத்துக்குள் அதிகாரம் செலுத்துகின்றனர்.
எனினும், அரசாங்கம் செயற்படு நிலையில் இல்லை என்று மக்கள் உணர்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட எல்லா அபிவிருத்தித் திட்டங்களும் முடங்கிப் போயுள்ளன.
அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், கட்டுமானத்துறையில் பணியாற்றிய ஒரு இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து போயுள்ளனர்.
இதேநிலையை நீடிக்க அனுமதித்தால்,  ஒட்டுமொத்த பொருளாதாரமுமே சரிந்துவிடும். அது மிகவும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நான் மட்டும் வெற்றி கொள்ளவில்லை. முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்யாதவாறு கொழும்புக்கு ஒரு புதிய முகத்தைக் கொடுத்தேன்.
தானே போரை வெற்றி கொண்டதாக சரத் பொன்சேகா இந்தியாவில் தெரிவித்தார். ஆனால், அவர் இராணுவத்தில் 30 ஆண்டுகள் இருந்தார். ஆனால் அப்போது போரை வெற்றிகொள்ளத் தவறியிருந்தார்.
நாங்கள் (ராஜபக்ச சகோதரர்கள்) பதவிக்கு வந்த பின்னரே, போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.  அதற்கும் கூட 3 ஆண்டுகள் தேவைப்பட்டது.
சந்திரிகா குமாரதுங்க தானே 75 வீதமான போரை வெற்றி கொண்டதாக கூறியிருந்தார். ஆனால் அவரது பதவிக் காலத்தில், எந்த பிரதான வெற்றிகளும் அடையப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 21, 2015

விசாரனக்கு மகிந்தவை அழைக்கக்வேண்டாம் ஆதரவு தெரிவித்து உறுப்பினர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைக்கக்கூடாதென வலியுறுத்தி, மகிந்த ஆதரவு அணி நடத்தி வரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக, மகிந்தவிற்கு ஆதரவாக 114 உறுப்பினர்களின் கையெழுத்திட்டு கடிதமொன்றை கொடுத்துள்ளனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 20, 2015

ஜனாதிபதிக்கும் சகோதரர்களுக்கும் எதிரான விசாரணை வாரம்???'

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 24-ம் திகதி வெள்ளிக்கிழமையும் அவருடைய சகோதரரான முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ 22-ம் திகதி புதன்கிழமையும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக் குழுவுக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்திகள் கூறுகின்றன. 
இதே நேரம் மஹிந்தவின் மற்றுமொரு சகோதரனான பசில் ராஜபக்ஷ 21-ம் திகதி அமெரிக்காவில் இருந்து இலங்கை வரவுள்ளார். நீதிமன்ற அழைப்பாணைக்கு ஏற்ப இலங்கைக்கு வந்தவுடன் இரகசிய பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுக்கவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தொலைதொடர்பு கட்டுப்பாட்டு கொமிஷன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் இலஞ்ச ஆணைக் குழுவில் வாக்குமூலம் கொடுக்கவுள்ளார். 
அடுத்த வாரம் கடந்த அரசாங்கத்தின் பிரபலங்கள் ஏழு பேர் வரை விசாரிக்கப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம் என்று அரசாங்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 18, 2015

பான்கிமூனுக்கு 19வது திருத்தத்தில் வரவேற்பு!!!

 இலங்கை அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக
 அரசு இதுவரையில் தகவல்களை வெளியிடவில்லை. எனவே, அது தொடர்பில் விவரங்கள் வெளியான பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்றும் 
அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ - மூன், பாதுகாப்பு சபைக்கு முன்வைத்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு விசாரணையில் கூட்டமைப்புக்கு நம்பிக்கை
 இல்லை என்றும், சர்வதேச விசாரணையே தேவை என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் சுரேஷ் எம்.பி. மேலும் கூறினார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 16, 2015

ஒரே ஒருமுறை மாத்திரமே நெருங்க முடிந்தது -தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை -கேணல் ஹரிகரன்!!!

தனக்குத் தெரிந்தவரையில், இந்திய அமைதிப்படையினரால், ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே தப்பிவிட்டதாகவும், இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக
 இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய இந்திய வெளிவிவகார இணை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன்தினம் ராய்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியது குறித்து கருத்து வெளியிட்ட போதே, கேணல் ஹரிகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அமைதிப்படையை சிறிலங்காவுக்கு 
எடுத்த முடிவு கொள்கை ரீதியான உயர்மட்டத் தவறு என்று குறிப்பிட்டிருந்த ஜெனரல் வி.கே.சிங், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அமைதிப்படையினருக்கு பலமுறை சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், ஒவ்வொரு முறையும் பிரபாகரனை பத்திரமாகத் தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள, இந்திய அமைதிப்படையின் புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியான கேணல் ஹரிகரன்,
“இந்திய அமைதிப்படையின் இராணுவக் குறிக்கோள்கள் தெளிவாக இருக்கவில்லை.
எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு முறைதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இந்தியப் படையினர் நெருங்கினர். அப்போது பிரபாகரன் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இந்திய- சிறிலங்கா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் அதிக அளவு உயிரிழப்புக்களை சந்தித்தது.
நகர்ப்புறங்களில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை அமைதிப்படை கட்டுப்படுத்தினாலும், காடுகளுக்குச் சென்று பதுங்கிய விடுதலைப் புலிகள் கெரில்லா போர் முறையை கையாண்டு இந்திய அமைதிப்படைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தனர்.
இந்திய அமைதிப்படை எத்தகைய அரசியல் குறிக்கோள்களை நிறைவேற்றப் போகிறது என்ற தெளிவில்லாத சூழல் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 14, 2015

புத்தாண்டு அழைப்பு இராணுவ சூழல் அற்ற வாழ்வே வேண்டும்!!!

மலரும் புத்தாண்டில் எம்மை சுதந்திரம் அற்ற மனிதக்கூட்டமாக செயற்படவைத்து எம்மைச்சுற்றி இராணுவச்சூழலைத் தொடர்ந்து வைத்திருப்பதை இனியாவது நீக்கவேண்டும் அழைப்பு விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். 
யாழ்.இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடத்திய புத்தாண்டு இசை நிகழ்வு நேற்று நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
புதிய வசந்தம் ஒன்று மலர வேண்டுமானால் தேவையற்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு  எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் அடிமைத்தனங்கள் நீக்கப்படவேண்டும்.'' என்று அவர் குறிப்பிட்டார்.   "இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் போது எமது பாரம்பரியத்தை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. 
நடனங்கள் வேறுமனே கை, கால்களை ஆட்டும் ஒரு நிகழ்வாக அல்லாது அவற்றை பற்றிய உள்ளாற்றலையும் ,உயர்ந்த கருத்துக்களையும் எடுத்தியம்பி எம்மை அவை சம்பந்தமாக அறிவுடையவர்களாக ஆக்குவது இந்த நடன முறைகள் பல காலத்திற்கு அழியாது இருக்க உதவி புரியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
யாழிலிலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரிகள் முன்னிலையினிலேயே முதலமைச்சர் இராணுவ பிரசன்ன விவகாரத்தை போட்டுடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 09, 2015

ஜூன் இறுதியில் போர்க் குற்ற விசாரணை பற்றிகூறுகிறேன் என்கிறார் ஜனாதிபதி

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டு சம்பந்தமான விசாரணைகள் குறித்து ஜூன் மாத இறுதியில் விபரங்களை அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, போர் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்பட உள்ள உள்நாட்டு விசாரணைகளுக்கான முனைப்புகளை ஒரு மாதத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.
உள்நாட்டு விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திடம் பேசியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க போவதாக மைத்திரிபால சிறிசேன தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், நிறைவேற்று அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்திருப்பது நாட்டுக்கு பாரிய பிரச்சினை எனவும் அந்த அதிகாரங்கள் பகிர்ந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் சீனாவுடன் கொண்டிருந்த அதிக நெருக்கம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, எவரையும் பகைத்து கொள்ள போவதில்லை எனவும் சகல உலக நாடுகளுடன் நட்புறவை பேண போவதாகவும் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 07, 2015

ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று தற்போது நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்றையதினம் தீர்வு காணப்படுமா? இல்லை தொடர்ந்து பேசப்படுமா? என்பது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 04, 2015

செய்திகளை கசியவிடாது தடுக்க ஊடகங்களுக்கு லஞ்சம்!

 சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான விமர்சன செய்திகளை ஊடகங்களில் கசியவிடாது தடுக்க விசேட திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பான செய்திகளை கசியவிடாது தடுக்க பிரதான ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சிலருக்கு திட்டத்தின் உரிமை நிறுவனம் லஞ்சம் வழங்கியுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர்களுடன் சீன தூதரகத்தில் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் பலவற்றின் பிரதிநிதிகளுக்கு 10 நாள் சீன விஜயத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டமை திட்டத்தின் ஒரு பகுதி என சூழலியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த பயணத்தை ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் தெரிவு இரகசியமாக இடம்பெற்றுள்ளது.
இந்த செய்திபடியே பிரதான ஊடகங்கள் சில சீன துறைமுக நகரத் திட்டம் குறித்த செய்திகள் மீது கூடிய கவனம் செலுத்தாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மீள்குடியமர்வு கண்துடைப்பு! மக்கள் போர்க்கொடி!!

நாலுபுறமும் இராணுவம் சூழ்ந்துள்ள நிலையினில் மக்களை குடியேற்றுவதென்பது கண்துடைப்பே.அதிலும் அவ்வாறான குடிறேற்றலிற்கு தாம் உதவப்போவதில்லையென உதவி அமைப்புக்கள் அறிவித்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு போர்க்கொடி தூக்கியுள்ளது.
ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகள் அரைகுறை விடுவிப்புடன் கைவிடப்பட்டுள்ளது.அதனை கைவிட்டு இப்போது புதிய இடங்களை விடுவிப்பது பற்றி பேசப்படுகின்றது.விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் குடியிருப்புக்கள் விடுவிக்கப்படவில்லை.வெறும் தோட்டக்காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளது.இதற்கப்பால் மக்கள் குடியிருப்பு காணிகளை ஊடறுத்து புதிய வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய நிலையினில் அரசு கூறுகின்ற புதிய இடங்கள் விடுவிப்பு நம்பிக்கையினை தரவில்லையென அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று வசாவிளான் மத்தியமகாவித்தியாலத்தினில் விடுவிக்கப்படாத நிலப்பகுதிகள் பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடி ஆராய்ந்திருந்தன.
இதனிடையேறு சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டு அதில் மக்களின் மீள்குடிய மர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும். ,வ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு  மேலதிகமாக 8 கிராம சேவையா ளர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது. வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பிலான விசேட கலந்துரையாடல், தெல்லிப்பழை பிரதேச செயலகத் தில் நேற்றுக் காலை, அரச அதிபர் தலைமையில் நடத்தப்பட்டிருந்தது.
ஏற்கனவே முதல் கட்டமாக 430 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. வளலாயில் 233 ஏக்கர், வயாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு இணைந்து 197 ஏக்கர் நிலப் பரப்பு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக வளலாயில் மேலும் 195 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன் காங்கேசன்துறை தெற்கு (ஜே/235), பளைவீமன்காமம் வடக்கு (ஜே/236), பளைவீமன் காமம் தெற்கு (ஜே/237), கட்டுவன் (ஜே/238), தென்மயிலை (ஜே/240), வறுத்தலைவிளான் (ஜே/241), மயிலிட்டி வடக்கு (ஜே/246), தையிட்டி தெற்கு (ஜே/250) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே பகுதியளவில் அடுத்த கட்டமாக விடு விக்கப்படவுள்ளன.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>