18

siruppiddy

அக்டோபர் 29, 2015

மேலும் மஹிந்தவின் ஒரு நிலத்தின்கீழ் மாளிகை கண்டுபிடிப்பு!!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி தெனியாய, நாதகல தோட்டத்தில் 
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அங்கு நிர்மாணிப்பு பணிகள் 2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல், மணல், சீமெந்து ஆகிய பொருட்களை இந்த நிலக்கீழ் மாளிகை நிர்மாணிப்பதற்காக தெனியாய, நாதகல தோட்டத்திற்கு மகநெகும திட்டத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாதகல தோட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவு முறை சகோதரியான விசித்ரா ஷிலாதரி ராஜபக்ச பெயரில் விலைக்கு பெற்றுகொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் நிலப்பகுதி 400 ஏக்கராகும்.
இந்த தோட்டத்திற்கு செல்வதற்காக கொங்க்ரீடினால் நிர்மாணிக்கப்பட்ட பாதை இருந்த போதிலும் புதிய பாதை ஒன்று தெனியாய, 
நாதகல தோட்ட மாளிகைக்கு செல்வதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி மூன்று 
ஊடகவியலாளர்கள் மாளிகை நிர்மாணிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சென்ற சந்தர்ப்பத்தில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குறித்த மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பம் வரையில் நிலக்கீழ் மாளிகையின் இரண்டு மாடிகளின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது.
4 மாடிகள் கொண்ட இந்த மாளிகையில் அதி நவீன தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் செய்துள்ள நிலையில் , இந்த நிலக்கீழ் மாளிகையின் கடைசி பகுதியில் ஆடம்பர வீடொன்றிற்கான சுரங்கப்பாதைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 180 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக இங்கு சேவையில் ஈடுபட்டிருந்த பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த மேசன்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து வசதிகளையும் கொண்ட மாளிகையில் மேலதிகமான ஹெலிகாப்டர் இறங்கும் முற்றம் நிர்மாணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்,
இந்த நிர்மாணிப்பு தொடர்பில் 2009ஆம் ஆண்டு பத்திரிகைகளில் செய்தி வெளியாகியதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் இறங்கும் முற்றத்தை தவிர ஏனைய அனைத்து பிற கட்டுமான செயல்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி 
வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



அக்டோபர் 25, 2015

மைத்திரி இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய காட்சி

இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிக்கிக் கொண்ட சம்பவம்
 இடம்பெற்றுள்ளது.
களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், ஜனாதிபதியின் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாகனத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்துச் சென்றனர்.
பின்னர் சேற்றில் சிக்கிய வாகனத்தை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டெடுத்தனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 24, 2015

பாலச்சந்திரன் ,சரணடைய வந்தவர்கள், கொலைகளுக்கு உயர்மட்ட உத்தரவே காரணம்!!!

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை. உயர்மட்டத்தில் இருந்து 
பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அவ்வாறு நடைபெற்றது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் 
தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பற்றி சிலர் அர்த்தமற்றவகையில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இதன் பின்னணி என்னவென்பது புரியாமலேயே அவர்கள் உளறுகின்றனர். உண்மை என்னவெனத் தெரிந்திருந்தும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக போலிப் பிரசாரங்களைப் பரப்புகின்றனர். முன்னாள் அரசு 
சிறந்த இராஜதந்திர, 
வெளியுறவுக்கொள்கையைப் பேணவில்லை. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையை எதிர்த்து நின்ற முன்னாள் அரசுக்கு சார்பாக 12 நாடுகளே குரல்கொடுத்தன. ஏனைய உறுப்பு நாடுகள் இலங்கைமீது கடும் அதிருப்தியில் இருந்தன. இதனால், சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 8 ஆம் திகதி இலங்கையில் ஜனநாயகப் புரட்சி ஏற்பட்டது. புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டது. இதன் பெறுபேறாக குறுகிய காலத்துக்குள் எம்மால் சர்வதேசத்தின்
 நன்மதிப்பைப் பெறமுடிந்தது. அத்துடன் அமெரிக்காவின் யோசனையை இலங்கையின் யோசனையாக மாற்றினோம். இலங்கையின் முன்னாள் அரசால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப் புநாடுகளுக்கிடையே பிளவு 
ஏற்பட்டன. 
எனினும், தற்போது நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளும் தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 20ஆவது யோசனை மிக முக்கியமானதாகும். இதைப்பற்றி எவரும் 
கதைக்கவில்லை.
இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி, அவர்களின் இணக்கப்பாட்டுடனேயே நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும், தொழில்நுட்ப உதவி, ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, எதைச் செய்வதாக இருந்தாலும் அது 
இலங்கையின் 
அனுமதியுடனேயே அது இடம்பெறவேண்டும் என்பது இதன் ஊடாகத் தெளிவாக புலனாகின்றது. இந்த விடயம் இங்குள்ள பிள்ளே அணிக்கு (உதயகம்மன்பில தரப்பு) விளங்குவதில்லை. ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டது இலங்கையின் நடவடிக்கையாகும். வேறு நாட்டவர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எமக்குக் 
கிடையாது.
ஆகவே, இலங்கைக்கே உரிய பாணியில்தான் உள்ளகப் பொறிமுறை நிறுவப்படும். கலப்பு நீதிமன்றம் பற்றி பேசப்படுகிறது. அவ்வாறு எந்தவொரு யோசனையும் இதில் இல்லை. கம்போடியா நாட்டில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதற்கான நீதிபதிகளை ஐ.நா. செயலாளர் நாயகம்தான் அமைத்தார். இங்கு அப்படியொன்றும் நடைபெறாது. 
எந்த நாட்டவர்கள் 
வந்தாலும் அரசமைப்பின் பிரகாரமே நகர்வுகள் இடம்பெறும் என்பதை மீளவும் கூறிக்கொள்கின்றேன். பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பாரதுரமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை தொடர்பில் 
தனிவிவாதம் நடத்தினால்கூட பரவாயில்லை. ஐ.நா. அறிக்கையிகூட பெயர்விவரம் வெளியாகவில்லை. ஆனால், பரணமக குழுவில் அது நடந்துள்ளது. உள்ளகப் பொறிமுறையை நிறுவுவதற்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாகத்தான் சர்வகட்சி மாநாடு நடைபெற்றுள்ளது.
உள்ளக விசாரணைக்கு நாம் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தோம். இதற்கு மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். காணாமல்போனவர்களுக்கான தனிப்பணியகம், கருணைச்சபை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு 
உட்பட நான்கு 
நிறுவனங்கள் அமைக்கப்படும். இதில் காணாமல்போனோர் பணியகம் எதிர்காலத்திலும் இயங்கக்கூடிய வகையில் அமையும். அதேவேளை, இலங்கையின் நீதிக்கப்பட்டமைப்பு குறித்தும் பேசப்பட்டது. 1971 ஆம் ஆண்டு 1987 ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் இலங்கையின் நீதிக்கட்டமைப்பு பலமாகத்தான் இருந்தது.
எனினும், முன்னைய அரசுதான் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அதன் கம்பீரத்தையும் சுயாதீனத்தையும் இல்லாது செய்தது. பிரதம நீதியரசராக சரத் என் சில்வாவை நியமித்ததால் நிலைமை மேலும் மோசமடைந்தது. நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்க அப்பதவியில் 
இருந்து நீக்கப்பட்டு, மெதமுலனவில் பாத்திரம் கழுவியவருக்கு நீதியரசர் பதவி வழங்கப்பட்டது. இதனால், நீதித்துறை மீது இருந்த நம்பிக்கை கீழ்மட்டத்துக்கு வந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் நீதித்துறையை நேர்வழியில் பயணிக்கவிட்டிருக்கின்றோம்.
சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதித்துறை முழுமையாக பலமடைய காலமெடுக்கும். எனவே, உள்ளகப் பொறிமுறை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம். முன்னர் இலங்கை இராணுவத்துக்கு உலகில் பெரும் கௌரவமிருந்தது. அது பின்னர் சீர்குலைக்கப்பட்டது. ஒரு சிலரின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த 
இராணுவக்கட்டமைப்புக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இராணுவத்தின் நன்மதிப்பை மீளக் கட்டியெழுப்பவேண்டும். இதற்காக விசாரணை அவசியம். ஆயிரம் பேரின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கு ஒருவரைத் தண்டிப்பது தவறு கிடையாது.
இராணுவம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டது. நேற்று (நேற்றுமுன்தினம்) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் சர்வதேச விசாரணைக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார் என்பதையும் இவ்விடயத்தில் கூற 
விரும்புகின்றேன். சனல் 4 ஊடகம் போர்க்குற்ற ஆவணங்களை வெளியிட்டபோது, அதன் ஊடகவியலாளரை விமர்சித்தீர்கள். அவர் இலங்கை வந்தபோது கீழ்த்தரமான முறையில் நடத்துகொண்டீர்கள். ஆனால், பரணகம ஆணைக்குழு சனல் 4 வீடியோவை நிராகரிக்கவில்லை. அது பற்றி நீதிமன்ற விசாரணை அவசியம் எனக் கூறியுள்ளது” – என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 22, 2015

. போர்க்குற்றத்தில் இலங்கை ராணுவம்ஈடுபட்டது உண்மை தான்?

இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின்போது இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான் என்பது இலங்கை நடத்திய உள்நாட்டு விசாரணை குழுவின் அறிக்கையில் 
தெரியவந்துள்ளது.
இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே என்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகளும் உண்மைதான் என்றும் இது தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட
 ஜனாதிபதி ஆணைக்
 குழுவான மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவால் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை தற்போதைய அதிபர் சிறிசேனவிடம் கொடுத்தது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் இக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 178 பக்கங்களைக் கொண்ட இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களும் பரிந்துரைகளும்: இலங்கை இறுதி யுத்தத்தின் போதான போர்க் குற்றங்களை மட்டுமின்றி 37 ஆண்டுகால போரின் போது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். - இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மைதான்.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். - மூத்த ராணுவ தளபதிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும். - போர்க் குற்றங்கள் தொடர்பாக இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை. அதில் தமிழர்கள் படுகொலை
 செய்யப்படும் காட்சிகள் உண்மையானவை. இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு தனிப் பிரிவு அமைக்க வேண்டும். வெள்ளைக் கொடி ஏந்தி வந்த விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைந்த போது அவர்களை சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் குறித்து நீதி 
விசாரணை நடத்த வேண்டும்.
இலங்கை ராணுவத்தின் விசாரணைகள் நம்பகமானதாக இருக்காது. சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட குழு விசாரிக்க வேண்டும். இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்தால் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டு காணமல் போனோர் குறித்து தனி விசாரணை நடத்த வேண்டும்.
  இறுதிப் போரின் போது கடைசி 12 மணிநேரத்தில் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்ததற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக
 வைத்திருந்தனர்.
இவர்கள் இலங்கை ராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்களில் பலியாகினர்.  ஐ.நா. அறிக்கை கூறுவதைப் போல 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை. இனப்படுகொலை செய்யும் நோக்கத்தில் இலங்கை ராணுவம் திட்டமிட்டு தாக்குதல்
 நடத்தவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 20, 2015

கோரக்கன்கட்டு மயானத்தில்தமிழினியின் புகழுடல் விதைப்பு!!!

விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை முன்னாள் பொறுப்பாளர் தமிழினியின் இறுதி நிகழ்வுகள் இன்று பரந்தன் சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. பெருமளவான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இறுதி வணக்கம் 
செலுத்தினர்.
முன்னதாக அவரது இல்லத்தில் எழுத்தாளர் வெற்றிச்செல்வி தலைமையில் வணக்கக்கூட்டம் இடம்பெற்றது.இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு முதலமைச்சர் சார்பாக அமைச்சர் ஐங்கரநேசன், முன்னாள் போராளியும் எழுத்தாளருமான தமிழ்க்கவி கல்வி அமைச்சர் குருகுலராசா, 
முன்னாள் 
பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் வணக்க உரைகளை ஆற்றினர்.
பின்னர், பிற்பகல் 2 மணியளவில் பரந்தன் - முல்லை வீதியில் 
தமிழினியின் 
புகழுடல், அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது. 












அக்டோபர் 19, 2015

பூதவுடல் தமிழினியின் இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது! [ நிழல் படங்கள் இணைப்பு]

தாயகத்தில் இன்று புற்றுநோய் காரணமாக சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி
விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரான தமிழினி என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, தமது 43ஆவது வயதில் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இயற்கையெய்தினார்.
நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அன்னார், மஹரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.
தற்போது பரந்தனிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில், பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழினி கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக சேர்ந்தார். பின்னர், தன்னுடைய சிறப்பான செயற்பாடுகளால் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவு தலைவராக பொறுப்பை எடுத்து மகளிர் அரசியல் பிரிவை வழிநடத்தி வந்தார்.
இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த தமிழினி படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சிக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.
புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்டதையடுத்து, தமிழினி அவருடைய தாயாராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்படைக்கப்பட்டார்.
புனர்வாழ்வு நடவடிக்கையின்போது அவர் பல இன்னல்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனையடுத்து தொடர்ந்தும் நோய்வாய்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 18, 2015

முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி மரணம் !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்) சுகவீனம் காரணமாக சாவடைந்தார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்து கொண்ட தமிழினி, தனது கவனிக்கத்தக்க பங்களிப்புக்களின் ஊடாக மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளரானார்.
2009 இறுதிப்போரின் பின்னர் முள்வேலி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழினி 2013ஆம் ஆண்டில் வவுனியாவில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவரது உடல் நிலை மோசமாகியதையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் கிளிநொச்சி பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 14, 2015

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் முதல்–மந்திரி கோரிக்கை


இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி 
கைது செய்து
 சிறையில் அடைத்தது. 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் தங்களுக்கு இலங்கை அதிபர் மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், இதனை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன், அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர், ‘இலங்கையில் உள்ள பல சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள 200–க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக 
விடுவிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் 
சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள். ஆனால் 
இதுவரை அவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

அக்டோபர் 12, 2015

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போதே விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை குறித்து, ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினர் பிள்ளையானிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.

இதேவேளை, அண்மைய விசாரணைகளின் பிரகாரம் ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுமானது, முன்னாள் இராணுவ கேர்ணல் ஒருவரால் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதாகவும், பிள்ளையான் அதனை சரண் என்பவருக்கு கைமாற்றியதாகவும் செய்திகள் வெளியாகிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


அக்டோபர் 11, 2015

யாருடையது காலியில் பிடிபட்ட ஆயுத கப்பல் ?

எல்லைக்குள், சிறிலங்கா கொடியுடன் சென்று கொண்டிருந்த ஆயுதங்களுடன் கூடிய எவன்கார்ட் எனப்படும் கப்பலை கடற்படையினர் தடுத்து வைத்து விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர்.
கடந்த செவ்வாயன்று இந்த கப்பல் முற்றுகையிடப்பட்டதாகவும்அங்கு அனுப்பப்பட்டுள்ள கடற்படையின் விஷேட விசாரணைக் குழுவொன்று விசாரணைகளை செய்து வருவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக சில்வா தெரிவித்தார்.
இந்த கப்பலில் 810 ஆயுதங்கள் இருந்ததாகவும் முதற்கட்டமாக, கப்பலில் உள்ள ஆயுதங்கள் தொடர்பான பதிவுகள் முறையாகப் பேணப்பட்டுள்ளதா, அவற்றுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதன்பின்னரேயே மேலதிக தகவல்களை வெளிப்படுத்த முடியும் எனவும் கடற்படை
 தெரிவித்துள்ளது..
கப்பல் மாலுமயினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சில குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 10, 2015

எதிர்வரும் வாரம் அரசாங்கத்தின் 20 அமைச்சர், உறுப்பினர்கள் கைதகலாம் ?

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கிட்டத்தட்ட 20 அமைச்சர்கள், உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு நபர் கொலை, போதைபொருள், எத்தனோல் வியாபாரம், உர மானியம் சுரண்டல், விவசாயிகளின் நஷ்டஈடு பணத்தை சுரண்டல், அரசாங்க நிதியை சுரண்டல் ஆகிய குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அவர்களுக்குள் உள்ளடக்கப்படுவார்கள்.
இதுவரையிலும் அதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அதிகமானோர் தற்போதை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.
ஜனக பண்டார தென்னகோன் 1999ஆம் ஆண்டுல் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டிற்கே அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இச் சம்பவத்தினால் மனமுடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினர் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
எனினும் பெரிய அளவிலான குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையினால் தான் அதற்கு தலையிட முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் 2002 - 2004 ஆண்டுகளில் மேற்கொண்டவைகள் தொடர்பிலான குற்றச் 
சாட்டுகளுக்கு கைது செய்யப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படுதல் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் திட்டமெனவும், பொலிஸாரை ஐக்கிய 
தேசிய கட்சி செயற்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை கடந்த 09 மாதங்களாக விளக்கமறியலில் தடுத்து வைத்திருப்பது 
சிக்கலான விடயமெனவும், கொலை குற்றச் சாட்டுக்கு 6 மாதங்களுக்கு அதிகமாக தடுத்து வைத்திருக்க முடியாதென இவ் உறுப்பினர் குழு சுட்டிக்காட்டியுள்ளனர்.
எப்படியிருப்பினும் ஜனக பண்டாரவை கைது செய்வதற்கு முன்னர் இது குறித்து ஜனாதிபதி அறிந்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

அக்டோபர் 08, 2015

வரலாற்று முக்கியத்துவ1983ம் ஆண்டு தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள்???

1983ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் சந்தோசம் மாஸ்டரும் ஒருவர்.
அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.
1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், 
ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார்.
தமிழர்க்கு என்று ஒரு தமிழ்த்தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். மொழி,இனம் காக்கின்ற தலைவனின் வழி நின்று வாழ்வோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எமது போராட்ட வரலாற்றையும் போராட்ட அதிசயங்களையும் அறிவதற்கு….
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


அமெரிக்கா தலைவர் பிரபாகரனிடம் பல லட்சம் கோடி பேரம் பேசியதாம்???

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடன் 36 இலட்சம் கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளது அமெரிக்கா.ஏன்? எதற்காக…காணொளி இணைப்பு ?
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 07, 2015

மோதல் உக்கிரம்ரணிலுக்கும், மங்களவிர்க்கும் இடையில் !


சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றியுள்ளமையை அண்மைக்கால செயற்பாடுகள் எடுத்துக்காட்டுவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே பிரதமரின் ஜப்பானிய விஜயத்தின்போது மங்கள சமரவீர பங்கேற்கவில்லை.
மங்கள சமரவீர தலைமையிலான வெளியுறவு சேவை பிரதமரின் கட்டளைகளுக்கு செவிமடுக்காமையே இதற்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு முதல் தடவையாக சென்று திரும்பிய பின்னர் அவரின் விஜயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியுறவு அமைச்சு கையளித்தது.
இந்த அறிக்கை க.பொ.த சாதாரணதரத்தில் பயிலும் ஒருவர் எழுதுவதைக் காட்டிலும் மோசமாக இருந்ததாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியிருந்தார்.
எதிர்காலத்தில் இந்த நிலைமை இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமது வெளிநாட்டு விஜயத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சில் இருந்து யாரும் பங்கேற்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இதன்படியே அவரின் ஜப்பான் விஜயத்தின் போது வெளியுறவு அமைச்சில் இருந்து யாரும் அழைத்துச்செல்லப்படவில்லை.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் ஜெனீவா வதிவிடப்பிரதிநிதி
 ரவிநா்த ஆரியசிங்க 30வது ஜெனீவா அமர்வின்போது அங்கு நடக்கும் தகவல்களை இலங்கையில் உள்ள இருவருக்கு இரகசிய தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
ஆரியசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் மற்றும் தயான் ஜெயதிலக்க ஆகியோரின் நெருங்கிய நண்பராவார்.
இந்தநிலையில் கடந்த மாதங்களில் மங்களவுடனும் சிறந்த உறவை அவர் கொண்டிருந்தார்.
இதனைதவிர மங்கள சமரவீரவுக்கு வெளியுறவு அமைச்சுக்கு மேலதிக தொலைத்தொடர்புகள் அமைச்சு வழங்கப்படுவதாக இருந்தபோதும் பின்னர் அது மறுக்கப்பட்டது.
இந்த காரணங்களே ரணிலுக்கும் அவருக்கும் முரண்பாடுகளை வளர்த்துள்ளன என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கையில் வெளிவிவகார அமைச்சு இல்லை 
என்பதை உணர்ந்தே தான் செயற்படுவதாக ஜப்பான் சென்று திரும்பிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிட்டு நோக்கத்தக்கது.
அத்துடன், வெளிவிவகார அமைச்சின் சேவை திருத்தி 
அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளமையானது, பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான உறவின் சிக்கலை மேலும் தெளிவுபடுத்துகின்றமையை அவதானிக்க
 முடிகின்றது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 06, 2015

பயங்கர நிலையிலிருந்து நாடு விடுபட்டுள்ளது பிரதமர் ரணில்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த, ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு பாரிய சிக்கலில் இருந்து விடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வௌியிடும்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் பாரதூரமான எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் தீர்வு காண்பதற்கு இணங்கியுள்ளோம். இவற்றையும் ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

இதேநேரம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தொடர்ந்து இருந்திருந்தால் கடுமையான விளைவுகளை நாடு சந்தித்திருக்கும் என்றார்.

நாடு பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

எனினும் இந்த அரசாங்கத்தினால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

நாடு தற்பொழுது பயங்கர நிலையிலிருந்து விடுபட்டிருப்பதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது எமது நாடு. நாம் ஒருபோதும் நாட்டைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்றார்.

அடுத்த கட்டமாக நாங்கள் முயற்சிப்பது என்னவென்றால், ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக காணப்படக்கூடிய அவப்பெயர் கொண்ட நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே எமது இப்போதைய தேவை என்றார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அக்டோபர் 04, 2015

சொந்த மக்கள் மீது குற்றங்களை புரிந்துள்ளது! ஐ.நா மனித உரிமை பேரவை மதிப்பீடு

இரண்டாம் உலகப்போரின் பின்னர் இலங்கையானது தமிழர், சிங்களவரென்று அல்லாமல் தனது சொந்த மக்கள் மீது கொடிய குற்றங்களை புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தமை அவற்றுள் உச்சமானதாகும்.
இவை சரியாக கணக்கிட முடியாதுள்ளன. 146,679 தனி நபர்கள், 90,000 போர்க்கால விதவைகள், ஆகக் குறைந்தது 25,000 அநாதைப் பிள்ளைகள், சேதமாக்கப்பட்ட 160,000 வீடுகள் என்பன ஐ.நா.வின் 
மதிப்பீடாகும்.
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடமான 18,000 சதுர கிலோமீற்றரில் 7,000 சதுர கிலோமீற்றர் படைத்தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.வினால் நியமிக்கப்பட்ட 3 அங்கத்தவர் கொண்ட நிலைக்குழு மரண எண்ணிக்கையை 40,000 எனக் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐ.நா.வின் மீளாய்வு நிலைக்குழுவின் சார்ள்ஸ் பெற்றீ குறைந்த மதிப்பீடாக 70,000ஐக் குறிப்பிட்டுள்ளார். 6 வருடத்துக்கு முன்னே யுத்தம் நிறைவடைந்த போதும் உலகில் ஆகக்கூடிய படைத்தரப்பு நிலைகொண்டுள்ள வலயமாக இலங்கையின் வடக்குப் பகுதி விளங்குகின்றது.
இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோரைச் சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற வேண்டியுள்ளது. இனங்காணப்படாத இரகசிய மையங்களில் எந்தப் பாவமுமறியாத பல தமிழர்கள் வாடி அல்லலுறுகின்றனர்.
ஏதாவது ஒரு நாட்டுக்கேனும் இத் தமிழர்கள் அரசியல் தனிச்சிறப்புடையவர்கள் இல்லாமையினால் இந்தச் சரிபார்க்கப்பட்ட உண்மைகளும் எண்ணிக்கைகளும் உலகின் மனச்சாட்சியை உலுக்கவில்லை.
பல மனித உரிமைகள் அதன் மீது திணிக்கப்பட்ட நீதிநெறி அழுத்தங்கள் காரணமாக 2009ற்குப் பின்னர் ஐ.நா.வே தமிழர்களுக்கும் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் குடிமக்களுக்குமான ஒரேயொரு ஆறுதலும் தேறுதலும் உறவுமாக இருக்கின்றது.
ஏதுமறியாத குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. இலங்கையிலும் சரி, சிரியாவிலும் சரி மக்கள் உபாதைக்குள்ளாகும் போது ஐ.நா. அரிதாகவே அதில் சம்பந்தப்படுகின்றது. அங்கத்துவ நாடுகளின் இறையாண்மையை ஊறுபடுத்த அது விரும்பவில்லை.
மனித உரிமைகளும் தேசங்களினால் மக்கள் மீது சுமத்தப்படும் துன்பவருத்தங்களும் தேச இறையாண்மையின் உள்ளீட்டு எல்லைகளுக்குள் அடங்குகின்றனவா?
இலங்கையின் வட பகுதியில் வாழும் தமிழர்கள் மீது 99 சதவீதமான சிங்களவர்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்ட இராணுவத்தினூடாக தேசத்தின் பாதுகாப்பின் பெயரால் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து 
விடப்பட்டது.
2009ன் பின் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாவது தீர்மானத்தின் மூலம் உலகின் வரலாற்றுப் பயங்கரவாதத்தை ஒழித்த முதல் நாடு இலங்கை என மேம்படுத்தப்பட்டது.
இந்தியாவினதும் அமெரிக்காவினதும் அக்கறையைத் தன்பால் ஈர்த்த தீவுத் தேசத்தில் சீனாவின் பாரிய பிரசன்னம் போர்க்குற்றம், மனித நேயத்திற்கெதிரான குற்றங்கள் என்பவற்றை காரணம் காட்டி அமெரிக்கா இலங்கையினுள் நுழைய வழிவகுத்தது. அதுமட்டுமன்றி, ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது.
2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்கம் மீதான அதனது சொந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த மென்மையான தீர்மானங்கள் 2012, 2013ல் வழிவகுத்தன.
2014ல் அதனுடன் இணங்கி நடக்காமல் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றுக்கு அதிகாரமளிக்கப்பட்டது.
புதிய ஜனாதிபதியின் சீர்திருத்தங்களுக்கு வழிவிடுமுகமாக 2015 மார்ச் இல் வெளியிடப்பட வேண்டிய அறிக்கை 6 மாதங்கள் பிற்போடப்பட்டது. அடிப்படையில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
செப்டெம்பர் 16ல் அறிக்கை வெளிவந்த போதும்
 ஆணைக்குழு
 இலங்கையில் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. இலங்கை சார்பாக சர்வதேச நெருக்கடி குழுமத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை பின்வரும் விசாரணையை உள்ளடக்குகின்றது.
இலங்கை பல தசாப்த காலமாக தோல்வி கண்ட பல விசாரணைகளையும் மனித உரிமை மீறல் வழக்குத் தொடுப்புக்களையும் கண்டுள்ளது. இதில் அரசினருக்கு எதிரான குறைவான வழக்குகள் தொடுத்தல்களே நிறைவேற்றப்பட்டன.
மூத்த தளபதி ஒருவரேனும் போர்க்குற்றத்திற்காக விசாரணைக்குள்ளாக்கப்படவில்லை. படைத்தரப்பு குறிப்பிட்ட அளவில் தன்னாட்சி அதிகாரத்திற்கு அனுமதிக்கின்றது.
தமிழர் பகுதிகளில் சாட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ராஜபக்ச சகாப்தத்திலான உயர்மட்ட விசாரணைகள் படைத்தரப்பின் உயர் அதிகாரிகளின் தடைகளுக்குள்ளாகின்றன என சொல்லப்படுகின்றது.
பாராளுமன்றத்தினால் பெப்ரவரியில் அனுமதியளிக்கப்பட்ட சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரைப் பாதுகாத்தல் சார்பான சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பொலிஸ் ஈடுபாடு அற்றதும் வெளிநாடுகளில் உறையும் சாட்சிகளதும் அத்தாட்சிப்படுத்தலுக்குமான வழிவகை செய்யும் ஏற்பாடு இதில் இல்லாது காணப்படுகின்றது.
இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித நேயத்துக்கெதிரான குற்றங்கள் என்பன சார்பானதே ஐ.நா.வின் இலங்கை மீதான விசாரணை. இலங்கை சர்வதேசச் சட்டங்களைப் பாரதூரமாக மீறியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் அது இழைத்த கோரக் குற்றங்களை விசாரிக்கக் காத்திரமானவையாக
 இல்லாமையானாலும்
 ஐ.நா.வின் சட்டதிட்டங்களில் ஒப்பமிட்ட நாடாக இருப்பதனாலும் ஒரு சர்வதேசப் பொறிமுறையின் மூலமே விசாரிக்கப்படல் வேண்டும்.
எங்கேனும் மனித நேயத்திற்கெதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் என்ற பதம் வரைவுத் தீர்மானத்தில் பாவிக்கப்படவில்லை.
இலங்கையை அமெரிக்கா குஷிப்படுத்த விரும்புவதால் பாவிக்கப்பட்ட மொழிப் பிரயோகம் இலங்கையின் மனதை அமெரிக்கா புண்படுத்த விரும்பவில்லையென்பதை அறிக்கையின் வார்த்தைப் பிரயோகம் எடுத்துக் காட்டுகின்றது.
முகப்புரையில் வரவேற்கிறோம் என்ற பதம் 7 முறை வருகின்றது. செயற்பாட்டுப் பந்தியில் இது 10 முறை வருகின்றது. அத்துடன் உற்சாகப்படுத்துகிறோம் என்ற வார்த்தை 6 முறை பாவிக்கப்படுகின்றது.
செயற்பாட்டு பந்தி 5ல், விடுதலைப் புலிகளால் செய்யப்பட்ட துஷ்பிரயோகம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
6வது பந்தியின் மூலம் மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகம் என்பவற்றையும் சர்வதேசச் சட்ட மீறுகைகளும் விசாரிக்க விசேட வழக்குரைஞர்களுடனான நீதிமுறைப் பொறிமுறையொன்றின் உருவாக்கத்தைத் தீர்மானம் வரவேற்கின்றது.
நடைமுறைப்படுத்துவதற்கான காலவரையறை குறித்துத் தீர்மானம் குறிப்பிடவில்லை. முன்னைய பாதுகாப்பு அமைச்சர் என்ற கோதாவில் குற்றஞ்சுமத்தப்பட்ட போதிலும் ஜனாதிபதி சிறிசேன சட்டவிதி விலக்கை அனுபவிப்பதால் யாரால் அவர் மீது வழக்குத்
 தொடரமுடியும்?
விடுதலைப் புலிகள் தேச ரீதியானவர்கள் இல்லையென்பதால் அவர்களை இலங்கை அரசாங்கத்துடன் சமமாக வைக்கப்படலாகாது.
இருப்பினும், அவர்களுக்கு சர்வதேசச் சட்டங்களை மதிக்கும் நேர்மையான கடப்பாடுண்டு. அவர்களால் சர்வதேச உடன்படிக்கைகள் செய்யப்படாமையை அவர்கள் உள்ளூர் சட்டங்களுக்கமையவே விசாரிக்கப்படல் வேண்டும்.
அத்துடன் 18,000 விடுதலைப் புலிகள் தண்டனைக்கோ அல்லது புனர்வாழ்வுக்கோ உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
தண்டனையிலிருந்து காப்பளித்தல், கூட்டு புதைவிடங்கள், காணாமற்போதல், சித்திரவதை, கற்பழிப்பு, கொலை, வெள்ளை வேன் கடத்தல்கள் என்பவற்றுக்கு மத்தியில் சாட்சிகளைப் பாதுகாத்தலுக்கான சர்வதேச உத்தரவாதம் சார்பான தீர்மானம் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.
தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட போதும் படை விலக்கல் நடைபெறாது என அரசாங்கம் உறுதியாகக் குறிப்பிடுகின்றது.
இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட 67,000 ஏக்கர் நி
லப்பரப்பில் 1,000 ஏக்கரே கடந்த 8 மாதகாலப்பகுதியில் மீளளிக்கப்பட்டுள்ளது.
குடி மக்களுக்குச் சொந்தமான சகல காணிகளையும் விடுவிப்பது சம்பந்தமாகவோ அல்லது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது சார்பாகவோ எவ்வித உறுதிமொழியும் இல்லை.
விசாரணைக் காலம் 1983ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு மீளளிப்புக்கள் கிடைக்குமா?, அவர்கள் கணிக்கப்படுவார்களா?
வாக்களிப்பில்லாத பொது இசைவுக்கான ஒன்றே இத்தீர்மானம்.18 மாத காலப்பகுதியையும் இக்குழப்பத்திலிருந்து சுலபமாக வெளியேறக்கூடிய தந்திரத்தையும் தருவதால் அடுத்த தீர்மானம் குறித்து இலங்கையில் எதிர்பார்ப்புண்டு.
அவர்களுக்கு இது குறுகிய காலந்தான் என்பதால் தேசங்களும் அரசாங்கங்களும் காத்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்திருக்கச் செய்யலாமா?
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






அக்டோபர் 02, 2015

ரவீனா யோசனையை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்குகிறார்`?

மனித உரிமைகள் ஆணையகத்தின் நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை அமுலாக்கும் பணிகளில், இலங்கையுடன் மனித உரிமைகள் ஆணையகம் விரிவாக ஒத்துழைத்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையகத்தின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை, இலங்கைக்கான வரலாற்று ரீதியான வாய்ப்பாக அமையும்.

இந்த பிரேரணையின் ஊடாக நிலையான அமைதியை ஏற்படுத்தவும், நீதியை பெற்றுக் கொள்ளவும் இலங்கை தமது சொந்த பாதையில் பயணிப்பதற்கான சர்வதேசத்தின் ஒத்துழைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுலாக்க வேண்டும்.

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என் அவர் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>