18

siruppiddy

நவம்பர் 30, 2015

கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பரிசோதனை?

ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அவர்களின் விஜயத்தின் ஒரு கட்டமாக திருகோணமலை கடற்படை முகாமிலும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்
கொண்டிருந்தனர்.
இதன்போது முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் ரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.அத்துடன் குறித்த சித்திரவதைக் கூடங்களில் இருந்து மனித எலும்புக் கூடுகளும் 
கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிசார் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்ததுடன், எலும்புக்கூடுகளையும் தமது பொறுப்பில் எடுத்திருந்தனர்.
தற்போது குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு, கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலுமபுக்கூடுகள் தொடர்பில் ரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை நடத்த கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 27, 2015

இன்று உலகெங்கும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு! (காணொளி இணைப்பு )

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு உள்ளிட்டஉலகில் தமிழர் வாழும் இடங்களில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழர் உரிமைக்காக போராடி மடிந்தவர்களை நினைவுகூருவதற்காக,
 மாவீரர் நாள் 
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு 
வரப்பட்ட பின்னர், தமிழர் தாயகப் பிரதேசத்தில் மாவீரர் நாள் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கமும் மாவீரர் தின அனுஷ்டானங்களுக்கு தடை விதித்துள்ளது. எனினும் தடைகளையும் மீறி சில தரப்பினரால் இந்த மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டு
 வருகின்றன.
 இன்றைய தினமும் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டிக்குமாறு வடக்கில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, மாவீரர் தின நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்
 தெரிவிக்கின்றன
. ஒவ்வொரு வருடமும் புலம் பெயர் நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வருடம் அதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
 ஒளிதரும் தீபங்கள் கார்த்திகை தீபங்கள்( காணொளி இணைப்பு )
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





நவம்பர் 26, 2015

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவர் பிரபாகரனுக்கு குவிகின்ற?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் 
வீசப்பட்டுள்ளன.
”தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 61 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்“என அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரம், விஸ்வமடு, சுண்டிக்குளம் மற்றும் கிளிநொச்சி ஊடான A9 வீதியில் வீசப்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தையொட்டி வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவிலான இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் 
வீசப்பட்டுள்ளன.
இறுதிக்கட்ட போர் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் பிரதேசங்களில் அதிகளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் அதனையும் மீறி பொதுமக்கள் சிலர் அந்தப் பிரதேசங்களில் அஞ்சலி செலுத்தி வருவதாகவும்  தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
தலைவர் பிரபாகரனுக்குஇந்த இணையங்களின்  பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 24, 2015

கந்தசாமி கோயில் பற்றி பாதுகாப்பு தரப்பு குற்றச்சாட்டு மறுக்கும் கோயில்களின் பணிப்பாளர்.

கனடாவில் அமைந்துள்ள முன்னணி இந்துக்கோயிலான கந்தசாமி கோயில், விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கனடாவின் நெசனல் போஸ்ட் தகவலின்படி கனேடிய எல்லைப் பாதுகாப்பு சேவை நிறுவனம் இது தொடர்பில் பிராந்திய நீதிமன்றம் ஒன்றில் அறிக்கையை அளித்துள்ளது.
கிழக்கு எல்லை டொரன்டோவில் அமைந்துள்ள இந்த கோயில், கனடாவில் பயங்கரவாத தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பு என்று கூறப்படும் உலக தமிழர் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அகதியான கோயிலின் குரு ஒருவர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்று தேசிய பாதுகாப்பு சோதனை பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தபோதே இந்த கோயில் விடயமும் வெளியானது.
குறித்த குரு, கனடாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவு அமைப்பான உலக தமிழர் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் பணியாற்றுவதாக இதன்போது தேசிய பாதுகாப்பு பிரிவினர் மன்றில் அறிவித்தனர்.
இதேவேளை தேசிய பாதுகாப்பு பிரிவினரின் இந்த கூற்றை மறுத்துள்ள ஸ்காப்ரோ கோயில்களின் பணிப்பாளர் தனபாலசிங்கம் கனகசபாபதி, கந்தசுவாமி கோயில் விடுதலைப்புலிகளின் கோயில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக்கோயிலுக்கு எவரும் வந்து பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். இது அரசியலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள உலக தமிழர் இயக்கத்தின் உறுப்பினர்களும் இங்கு வந்து வழிபாடுகளில் ஈடுபடலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்போது அவர்களை அங்கு வரவேண்டாம் என்று கூறமுடியாது என்றும் தனபாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கோயிலின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக மாற்றுத் தரப்பினர் மேற்கொள்ளும் பிரசாரமாகவும் இது இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன் இந்த ஆலயத்திற்கு பல அரசியல் தலைவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்,
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





அமெரிக்கா ஜெனிவா தீர்மான விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மீது அதிருப்தி!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்கள் திருப்தி அளிக்கவில்லை
 என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இன்னமும் அடிப்படை பொறிமுறைமை ஒன்றை உருவாக்கவில்லை என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 10 மாதங்களாக இந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர 
வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 22, 2015

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க உதவும் 3 முக்கிய வழிகள்.

சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், அந்த தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார்.
பாக்தாத், பெய்ரூட், சினாய் மற்றும் பாரீஸ் நகரங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களின் விளைவாக சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளது சர்வதேச நாடுகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
பாரீஸில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பிறகு, ‘ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஓர் அணியில் சேர்ந்து போரிட வேண்டும்’ என பிரான்ஸ் அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நேற்று ஐரோப்பிய கவுன்சில் ஒருமனதாக ஏற்றுள்ளது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு அழிவு பாதையை ஏற்படுத்தியுள்ளது என கூறினால் 
அது மிகையாகாது.
ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க பல்வேறு நாடுகள் பல திட்டங்களை வகுத்து வரும் நிலையில், பிரித்தானிய கடற்படையின் முன்னாள் தலைவரான லோர்ட் வெஸ்ட் என்பவர், ‘ஐ.எஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை’ வெளியிட்டுள்ளார்.
1. பிரித்தானிய அரசு வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும்.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா நாடுகளின் ராணுவம் பலமாக தாக்குதலை நடத்திவரும் நிலையில், அவர்களுடன் இணைந்து பிரித்தானிய ராணுவமும் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்த 
வேண்டும்.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள பெரும்பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தாலும் கூட, ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பலம் குறைவாகவே
 உள்ளது.
ஈராக்கில் பிரித்தானிய ராணுவம் 350 ஐ.எஸ் தீவிரவாதிகளை ஏற்கனவே அழித்துள்ள நிலையில், இனிவரும் நாட்களிலும் தனது வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தினால், ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை கூண்டோட அழிக்கலாம்.
அதே போல், வான்வெளி தாக்குதலில் சிரியாவில் இதுவரை ரஷ்ய ராணுவம் 800 இலக்குகளில் இருந்த சுமார் 600 ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துள்ளது. பிரான்ஸ் ராணுவம் விதிவிலக்கிலாமல் ஐ.எஸ் தீவிரவாதிகளை கதிகலங்கடித்து வருகிறது. எனவே, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரித்தானிய உள்ளிட்ட கூட்டணி நாடுகள் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்துவது அவசியமாகும்.
2.மோசூல் நகரை கைப்பற்ற வேண்டும்
கூட்டணி நாடுகளின் அடுத்த திட்டமாக ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மோசூல் நகரை கைப்பற்ற அதிரடி தாக்குதலை நடத்த வேண்டும்.
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முனைப்புடன் போராடி வரும் குர்து இனத்தை சேர்ந்த உள்நாட்டு போராளிகளின் தாக்குதல்களும் ஐ.எஸ் தீவிரவாதிகளை மேலும் பலவீனமாக்கும்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமை புலனாய்வு அலுவலகத்தை ஈராக்கில் உள்ள மோசூல் நகரில் Aljamhouri என்ற மருத்துவமனை பெயரில் நடத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது.
மேலும் எஸ் தீவிரவாதிகளின் முக்கிய செயல்பாட்டு தளம் என்பதால், அதனை பாதுகாக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் சுமார் 10 ஆயிரம் பேர் வரை நிலை நிறுத்தலாம்.
இந்த நகரை மீட்க கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்தினால் பெரும்பாலான தீவிரவாதிகளை ஒடுக்கிவிடலாம்.
அதே சமயம், சிரிய அதிபரான ஆசாத்த்தின் ஒப்புதலுடன் அவருடைய ராணுவத்தையும் ஐ.எஸ் தீவிரவாத தாக்குதலில் ஈடுப்படுத்தினால், சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் மேலும் 
வலுப்பெறும்.
முக்கியமாக, சிரியாவில் தாக்குதல் நடத்தும்போது அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்க நேரிடும் என்பதனால், அதனை ஒரு இடற்பாடாக கொண்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் இருந்து பின்வாங்க கூடாது.
3. ராக்கா நகரை கைப்பற்ற வேண்டும்
ஐ.எஸ் தீவிரவாதிகள் உருவாக்கியுள்ள புதிய இஸ்லாமிய அரசின் தலைநகரமாக விளங்குவது சிரியாவில் உள்ள ராக்கா நகரமாகும். இங்கு தான் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பலம் அதிகமாக 
காணப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமை செயலகம் இங்கு அமைந்துள்ளதுடன், இந்நகரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நகரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல், பல்வேறு நாடுகளை சேர்ந்த வாலிபர்களை தீவிரவாதிகளாக மாற்றி தாக்குதகளுக்கு தயார் படுத்தும் பயிற்சிகளும் இந்த நகரிலேயே அதிகமாக நடைபெற்று வருகிறது.
எனவே, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டணி நாடுகளின் தாக்குதலை ராக்கா நகரில் தீவிரப்படுத்துவதன் மூலம் அந்த அமைப்பின் அட்டூழியங்களை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஒரு வாய்ப்பாக அமையும் என பிரித்தானிய கடற்படையின் முன்னாள் தலைவரான லோர்ட் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>




இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>

நவம்பர் 19, 2015

ஒரு தமிழ் பெயர் கூடகொழும்பில் இல்லாமல் அழிப்போம்!

அரசியல் கைதிகள்  என்று கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்திருப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ராவணா பலய பொளத்த அமைப்பு  தெரிவித்துள்ளது.
அத்துடன் கருணா,கே.பி  உட்பட  அனைவைரையும் கைது செய்யவேண்டும் என்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் சாதாரணமானவர்கள் எனவும் கரும்புலிகள் என அறியப்படும் தற்கொலையாளிகள் எனவும்
 தெரிவிக்கும்
 இவ் அமைப்பு எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கேள்வியெழுப்பி ஜனாதிபதி செயலகம் வரைசென்று அங்கு கூடியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அங்கு  கருத்து தெரிவித்த ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சதாதிஸ்ஸ நயினாதீவின் பெயர் மாற்றப்பட்டால் கொழும்பில் ஒரு தமிழ் பெயர் கூட இல்லாமல் 
அழிப்போம். என சூளரைத்த்தோடு 
 அரசியல் கைதிகளின் விடுதலையானது  கோட்டாபய மற்றும் மஹிந்த போன்றவர்களின் உயிருக்கு  ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



நவம்பர் 17, 2015

ஐரோப்பிய ஒன்றியம்இலங்கைக்கு பாராட்டு

ஐீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது.

மேலும் இலங்கையின் புதிய அரசாங்கம் ஊழலை ஒழிக்க, மனித உரிமையை பாதுகாக்க, நீதியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை தாம் பாராட்டுவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியமை, வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் நிர்வாகத்தை மீண்டும் ஸ்தாபித்தமை, அரசியல் கைதிகளை விடுவித்தமை மற்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்கும் மதிப்பளிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை பெற்றுக் கொடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமது ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 14, 2015

இன்று மட்டக்களப்பில் ஐ.நா செயற்குழு!!!

 பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பில் விசாரணை நடத்தவுள்ளனர். 
கடந்த 9ம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த குழு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. 
ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் விசாரணைகளை நடத்தி இருந்த நிலையில், இன்று மட்டக்களப்பு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையில் இந்த குழு விசாரணைக்காக வரும் போது, காணாமல் போனோரின் உறவினர்கள் வாயில் கறுப்புத்துணியை கட்டி மௌனப் போராட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் 
கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 13, 2015

ஐந்தாவது நாளாகத் தொடர்ந்த உண்ணாவிரதம் கைதிகள் வைத்தியசாலையில்!

தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் அரசியல் கைதிகள் வரும் நாட்களில் மருத்துவ உதவிகளையும் புறக்கணிக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்துள்ளனர். அத்துடன் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் 19பேரின் உடல் நிலை முற்றாக பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தமது விடுதலை தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் இடைநிறுத்தியிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கைதிகள் ஆரம்பித்திருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தமது விடுதலை தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுக்கவல்ல அதிகாரத்தை கொண்டவராக காணப்படுகின்றார். ஆகவே அவர் 
தனது நிலைப்பாட்டை
 பகிரங்கமாக அறிவித்து விடுதலைக்கான உத்தரவாதமளிக்க வேண்டும். அதுவரையில் எந்தவொரு காரணத்திற்காகவும் எமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை. எதிர்வரும் நாட்களில் மருத்துவ உதவிகளையும் முற்றாக புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக உறவினர்கள் ஊடாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 19 பேரின் உடல் நிலை மோசமடைந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கே.இளங்கோ, குகநாதன், லோகநாதன், கோர்த்தனன், காந்தலேயன், பவானந்தன், தனயுகன், சிவராமன், கிருபாநந்தன், ஜெயலால்சில்வா, செந்தூரன், பார்த்தீபன், செபஸ்டியன், 
மனோகரன், 
ராஜா, ஆகிய 15பேரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கோபிநாத், டைட்டஸ், நிஷாந்தன், விஷால் ஆகிய நால்வருமே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களாவர்.
இதேவேளை உண்ணாவிரதமிருக்கும் ஏனைய அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் சிறைச்சாலை வைத்தியர்கள் உண்ணாவிரதமிருக்கும்
 அரசியல் கைதிகளின் உடல் நிலை தொடர்பாக தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
அதேவேளை நாம் தொடந்து உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையில் தமது கோரிக்கைகள் குறித்து இதுவரையில் எவ்விதமான உறுதிமொழிகளும் அளிக்கப்படாமை கவலையளிக்கின்றதாக தமிழ் அரசியல் கைதிகள் தமது உறவினர்கள் ஊடாக தெரிவித்துள்ளனர். பொதுமன்னிப்பளிப்பதே இறுதியான தீாவாக அமையும் என்பதை வலியுத்தும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டுமென கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 12, 2015

விடுவிக்கா படவிருந்த இருந்த அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்குள்

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் நேற்று  புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் எடுக்க யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
குறித்த கைதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட நிலையில் நேற்று பிற்பகல், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில்
 விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டாலும் பிணை நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படாததால் மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 11, 2015

இன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம்?

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம் 
தீர்மானித்துள்ளது.
அதன்படி முதல் கட்டமாக .11.11.2015.இன்று 31 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களை பிணையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது
சிறைகளில் உள்ள தமிழ் சிறைக் கைதிகள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்வதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 31 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
அடுத்த கட்டமாக மேலும் 32 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இது தொடர்பாக நீதியமைச்சு மற்றும் சட்டடமா அதிபர் திணைக்களம் உட்பட அரச நிறுவனங்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்தைகளின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட சிலரை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 07, 2015

நாளை முதல் தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில்..!

சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் மஹேந்திரன் தெரிவித்தார்.
எமது இணையத்தள்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன்படி, கொழும்பு - மகஸின் சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் முதற்கட்டமாக நாளை காலை முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
 அதனை தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு தொகுதி அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க 
அரசாங்கம் 
தீர்மானித்துள்ள போதிலும், அதனை தமிழ் அரசியல் கைதிகள் நிராகரித்துள்ளதாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
பிணை வழங்குவதற்கு பதிலாக பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே இந்த கைதிகளின் கோரிக்கையாக அமைந்துள்ளது.
இதன்பிரகாரமே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் 219 தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பொலிஸாரின் வதை முகாம்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கம்பஹா, கொட்டஹதெனிய பொலிஸாரினால் வெடிபெஹெத்வத்த என்ற இடத்தில் மேற்கொள்ளப்படும் வதை முகாம் ஒன்று குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த முகாமிலேயே சேயா சிறுமியின் சந்தேகநபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இளம் ஊடகவியலாளர் சம்மேளனம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. கொட்டஹதெனிய மக்களின் கோரிக்கைக்கு இணங்கவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டஹதெனிய பொலிஸ் நிலையத்தில் இருந்து மூன்று கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள இந்த முகாமில் சேயா கொலை தொடர்பில் சந்தேகிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட 17வயது மாணவர் உட்பட்ட 12பேர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்கள்,  நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டில் 
தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 04, 2015

மஹிந்த அணியினரிடம் பிரதமர் கேள்வி???

மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட "இரத்த வெள்ளம்" போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதன்போது சபைக்குள் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் எதிர்ப்பு கோஷங்களுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

இச் சந்தர்ப்பத்தின் போதே எழுந்த பிரதமர் ரணில்விக்கிரம சிங்க "மாணவர்களை கொல்லப் பார்க்கின்றீர்களா ? ரத்துபஸ்வல மூதூர் மாணவர்களின் படுகொலைகள் உங்களுக்கு போதாதா, இன்னும் உங்களுக்கு இரத்த வெள்ளம் ஓட வேண்டுமா? ஏன் சடலங்களை தேடி ஓடுகின்றீர்கள் ?

மாணவர்களை மோசமாகத் தாக்கும் அளவிற்கு பொலிஸாருக்கு பயிற்சி கொடுத்தது யார்? இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதாக அப்போது எம்மைக் குற்றம் சாட்டிய நீங்கள் இன்று இராணுவத்தை குற்றம் சாட்டுகின்றீர்களே உங்களுக்கு வெட்கம் 
இல்லையா?" என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



நவம்பர் 03, 2015

இனவாதிகளுக்கு பயந்து முடிவெடுக்கத் தயங்குகிறது அரசாங்கம்!!!

விமல் வீரவன்ச, உதய கமன்பில மற்றும் குணதாச அமரசேகர போன்ற சிங்கள இனவாதிகளுக்குப் பயந்தே தமிழ் அரசியல் கைதிகளை வி்டுவிக்க அரசாங்கம் தயக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வொன்றை வழங்குவதென்ற உறுதிமொழியை ஜனாதிபதியும், பிரதமரும் காப்பாற்ற வேண்டும். இதனைக் காப்பாற்றத் தவறும் பட்ச த்தில் கைதிகளுடன் இணைந்து போராட்டத்துக்கு இறங்க 
வேண்டி ஏற்படும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 90 வீதமானவர்கள் விசாரணைகளின் போது வழங்கிய குற்றஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே அவர்களுக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் இளைஞர்களுக்காக ஆஜராகும் சட்டத்தரணி என்ற ரீதியில் கூறுகிறேன், இவர்கள் எதுவித அடிப்படையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சிறந்ததொரு உதாரணமாக சேயா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கொண்டையாவைக் கொள்ள முடியும்.
கொண்டையா என்ற நபரிடம் பலவந்தமாகப் பெற்றுக்கொண்ட ஒப்புதலின் அடிப்படையில் பொலிஸார் நடந்து கொண்டமை தெளிவாகியது. இதுபோலவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 90 வீதமானவர்கள் காணப்படுகின்றனர்.
ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தனர். கைதிகளைப் பார்க்கச் சென்றிருந்தபோது நான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த உறுதிமொழியை கைதிகளிடம் கூறியிருந்தோம். தாம் வழங்கிய உறுதி மொழியை அவர் நிறைவேற்ற
 வேண்டும்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்களுக்குப் பொதுமன்னிப்புக் கொடுத்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள் கின்றோம். ஜே.வி.பி கலவரத்தின்போது கைதுசெய்யப்பட்ட பலர் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டனர். அவர்களில் தண்டனை வழங்கப்பட்டவர்களும்
 இருந்தனர்.
2002ஆம் ஆண்டு காலப் பகுதியில் சட்டமா அதிபராக கமலசபேசன் இருந்தபோது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்ப டையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் களை விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப் பட்டது. அப்போது பாதுகாப்பு அமைச்சராக திலக் மாரப்பன பதவி வகித்திருந்தார். அவர் மீண்டும் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருக்கும் நிலையில் ஏன் மீண்டும் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் 
கேள்வியெழுப்பினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவம்பர் 02, 2015

இந்தியா கருணாவால் கலங்குகின்றது !!!

ஆயுதக் குழுக்கள் மீது இலங்கை அரசு கைதுளை ஆரம்பித்துள்ள நிலையில் முன்னால் கிழக்கு முதல்வர் கைதாகியுள்ளார் கருணாவின் எதிர்காலம்….??
கருணாவைக் கைது செய்வதில்
 இந்தியாவின் 
நிலைப்பாடு..! கருணா கைதானால் யாருக்கு ஆபத்து..? இலங்கை அரசியலின் நிலைப்பாட்டின் எதிர்காலம் எப்படி அமையும்..? என்பது பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சட்டவாளரும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் .
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



நவம்பர் 01, 2015

எப்படி எல்லாம் புலிகளுக்கு பயந்திருக்கிறார் மகிந்தர் தெரியுமா ? தப்பிச் செல்ல !bidu

 விடுதலைப் புலிகளின் பெயரைக் கேட்டு எப்படி எல்லாம் பயந்து நடுங்கி இருக்கிறார் மகிந்த மற்றும் கோட்டபாய என்ற விபரங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பித்துள்ளது. அமெரிக்க நேவி சீல் பாணியில் ஒருவேளை விடுதலைப் புலிகள் விமானத்தில்
 இருந்து குதித்து
 அலரிமாளிகையை கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்தால் , அப்போது புலிகளின் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்று நினைத்த மகிந்த சில வேலைகளைச் செய்து வைத்திருந்துள்ளார். முதலாவதாக புலிகளின் விமானக் குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க சுரங்க மாளிகை ஒன்றை அமைத்துள்ளார்கள். அது போதாது என்று அங்கே இருந்து துறைமுகம் வரை செல்ல சுரக்கப் பாதை ஒன்றையும் அமைக்க திட்டம் தீடியுள்ளார்கள் என்ற தகவல் கொழும்பில் இருந்து கசிந்துள்ளது.
குறித்த சுரங்கப் பாதை ஏற்கனவே தோண்டப்பட்டது என்றும் , பின்னர் அது அவசரமாக மூடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. தற்போது மைத்திரி தங்கியுள்ள அலரி மாளிகையில் இருந்து துறைமுகம் வரை செல்ல வசதியாக ஒரு சுரங்கப் பாதை உள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது
. அதன் உள் 
கதவுகள் மூடியவண்ணம் உள்ளதாம். ஏன் என்றால் அதன் உட்புறத்தை பிற்காலத்தில் மகிந்த & கோவினர் மூடிவிட்டார்கள். விடுதலைப் புலிகள் தம்மை எப்படி எல்லாம் தாக்குவார்கள் என்று இவர்கள் நினைத்து , கனவில் கூட ஒழுங்காக நித்திரை கொண்டு
 இருக்கமாட்டார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>