18

siruppiddy

ஜூலை 21, 2016

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.2016

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.16.  
யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட    
அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின். பத்ஒன்பதாவது ஆண்டு நினைவஞ்சலி
.19.07.2016.இன்று அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவிகின்றோம் 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஜூலை 11, 2016

இராணுவத்துடன் கூடவே விகாரைகளும் வெளியேறட்டும்!

வடபகுதியில் 2018 இல் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கிறார். அது நடக்குமானால் விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டமானது பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர்க்காலப்பகுதிக்கு முன்பு எந்தவொரு இடத்திலும் சிங்கள பௌத்த அடையாளங்கள் இருந்ததில்லை. தற்போது இராணுவத்தினரால் ஒன்பது விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் இது இன்னமும் அதிகரிக்கலாம். நல்லிணக்கம் என்று சத்தமாக கூவிக் கொண்டு மதத்திணிப்புகள் செய்வது பொருத்தமற்றது. கொக்கிளாயில் பௌத்தர்கள் இல்லை. சிறீ சம்போதி மகா விகாரை தனியார் காணியில் முளைத்துள்ளது.
நாயாறு நீராவி ஏற்றத்தில் பிள்ளையாரை தூக்கி விட்டு விகாரையுடன் புத்தரைஅமர்த்தியுள்ளனர். மாங்குளத்தில் விகாரை, மண்ணாகண்டலில் விகாரை, ஏன்? தனிச் சைவக் கிராமம் வட்டுவாகலில் விகாரை, ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத்திணைக்களக் காணியில் விகாரை இதனால் நீர்ப்பாசனத்திணைக்களமும் அகதியாகி
 இருக்கின்றது.
இப்படியாக எம்மவர்களின் காணிகளில் அடாத்தான முறையில் விகாரைகளை அமைத்துக்கொண்டு நல்லிணக்கம் பேசுகிறார்கள். 2018 இல் வடபகுதியில் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கின்றார்.
இன நல்லிணக்கத்திற்கு அல்லது ஐ.நாவுக்கு பயந்து இது நடக்குமானால் விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும் தமிழ்ப் பகுதிகளில் விகாரைகள் இருக்க முடியாது என்றும் 
அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஜூலை 07, 2016

தலைநிமிர வைக்கத் தலைவர் ஒருவரால்தான் முடியும்!

புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு யாழ் மாவட்டத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத நீதிபதி ஒருவர் குறிப்பிட்டார். இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கடந்த வருடம்  கருத்துத் தெரிவித்துள்ளார்.
இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.
வன்னியில் சிங்களப்படைகள் முன்னெடுத்த இராணுவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழீழ நடைமுறை அரசினை சிறப்புடன் முன்னெடுத்த விதமும் காவல்துறை நீதித்துறையினை கையாண்ட திறணும் வியக்க வைப்பதாக தெரிவித்த அவர் தற்போதைய யாழ்ப்பாணத்தை எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை எனும் போதுதான் வன்னியில் போர் சூழல் இறுக்கமாக நிலவிவந்த காலகட்டங்களில் எல்லாம் காவல் மற்றும் நீதித் துறைகளை சிறப்பாக கையாண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அரசாண்டவிதம் பிரமிப்பூட்டுவதாக இருப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய கலாச்சார சீர்கேடுகள் சமூகச்சிதைவுகள் கொலைக் கலாச்சாரங்கள் என்பன மிக வேகமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதியில் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை தற்போது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களாலோ சிறிலங்கா அரச நிர்வாகத்தினாலோ தடுத்துநிறுத்த முடியாது எனவும் மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வந்தால்தான் சீர்படுத்த முடியும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
வன்னியில் இருந்து கொண்டு தமிழீழ நடைமுறை அரசை முன்னெடுத்து வந்திருந்தாலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதிகள் அனைத்திலும் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய ஆளுகையின் வீச்சு இருந்தது. ஆனால் முன்னர் அது யாராலும் இனம்காணப்படாது இருந்துவந்தது. தற்போதுதான் தெரிகிறது தலைவர் பிரபாகரன் அவர்களது ஆற்றலின் வலிமை.
இவ்வாறு நீதியினை வழங்கும் உயர்பீடத்தில் இருப்பவர்கள் முதல் சாதாரண குடிசைவாசிகள் வரை தலைவர் பிரபாகரன் அவர்களது வரவினை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அடிபட்டு நொந்துபோய் எல்லாவற்றையும் இழந்த பின்பும் தேசத்தின் இன்றைய இழிநிலை கண்டு மனம்பொறுக்காத மானம் உணர்வுள்ளவர்களது புலம்பல் இதுவாகத்தான் இருக்கின்றது.
“என்னதான் இருந்தாலும் பெடியள்(புலிகள்) இருக்கேக்கை உந்தச் சேட்டையள் எல்லாம் இல்லாமல் தான் இருந்தது. செல்லடிச்சாலும் கிபிரடிச்சாலும் எங்கட மண்ணிலை சுதந்திரமா நாங்கள் இருந்த வாழ்க்கை சொர்க்கம் தான்..
திரும்பவும் பெடியள்(புலிகள்) வந்தால்தான் எல்லாத்திற்கும் ஒரு முடிவுகிடைக்கும்.. இந்த அக்கிரமங்களை எல்லாம் போக்கி தமிழனை தலைநிமிர வைக்க தலைவர் ஒருவரால்தான் 
முடியும்.”
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஜூலை 05, 2016

உடுப்பிட்டியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

யாழ் வல்லை- உடுப்பிட்டி வீ தியில் தோட்ட காணி ஒன்றின் கிணற் றில் இருந்து ஒரு தொகைவெடி பொருட்களை பொலிஸ் வி சேட அதிரடிப்படையினர் இன்றைய தினம் மாலைமீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மே லும் 
தெரியவருவதாவது,
வல்லை, உடுப்பிட்டிவீதியில் உள்ள தோட் டக் காணியில் இருந்த கிணற்றை தோட்டத்தின. உரிமையாளர்துப்பு ரவு செய்ய முற்பட்ட போது கிணற்றில் வெடிபொருட்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு$
 தகவல்கொடுக்கப்பட் டு 
நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் மாலை பொலுஸார் குறித்தகிணற்றை சோதனையிட் டபோது அதில் 11 மோட்டார் எறிகணைகள், 25 மோட்டார் பரா எறிகணைகள் மற்றும் 69 கைக் குண்டுகளை மீட்டுள்ளனர்..
மீட்கப்பட்ட வெடி பொருட் கள்நாளை அழிக்கப்படவுள்ளதா க விசேட அதிரடிப்படையினர் கூ றியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>