18

siruppiddy

அக்டோபர் 27, 2016

பிரபாகரன்கள் தமிழீழத்தில் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்!!!

தமிழீழத்தில் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்… ” தனி நாடு கிடைக்கும் வரை ”?
தகப்பனார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை , தாயார் பார்வதியம்மாள் , அண்னன் மனோகரன் , அக்கா ஜெகதீஸ்வரி , மற்றும் அக்கா வினோதினி ஆகியோரோடு வல்வெட்டித்துறை வீட்டில் இருந்த துரைக்கு அந்தச் செய்தி கோபத்தை உண்டுபண்ணியது , கண்கள் சிவந்து கைகள் துடித்து கோபத்தின் உச்சத்திற்கே சென்று தனது குரலை உயர்த்திக் கத்தினான் அந்த துறை என்கிற சிறுவன் …. கண்கள் சிவக்க அந்தச் சிறுவன் துரை கேட்டது 
என்ன தெரியுமா ???? …..
அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை ???? …… என்று கண்கள் சிவக்கக் கத்தினான் அந்தச் சிறுவன் துரை …..
அந்தச் சிறுவன் துரை யார் என்று தெரியுமா ???
பிரபாகரன் ( வீட்டில் அனைவரும் செல்லமாக துரை என்றுதான் அழைப்பார்கள் 
தமிழர்களைத் தேடித் தேடிக் கொன்றனர் வெறி பிடித்த சிங்களக் காடைகள் ….. அப்போது பணதூர என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு இந்து அர்ச்சகரின் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய சிங்களர்களை பற்றிக் கேள்விப்பட்ட அந்த சிறுவன் பிரபாகரன் கேட்டதுதான் …..
” அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை ” என்று ………
கேட்டதோடு நிற்க வில்லை அந்தச் சிறுவன் பிரபாகரன் …. செயலிலும் காட்டினான் …. தமிழ் இன எதிரிகளை பந்தாடினான் … புலியாய்ப் பாய்தான் …. முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்குப் பிறகு …. புலிகளின் ஆயுதங்கள் தற்காலிகமாக மௌனித்திருக்கும் வேளையில் ….. ,,
சென்றவாரம் ….
தமிழ் மாணவர்களுக்கும் , சிங்கள மாணவர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் …. இத்துணை அடக்கு முறைகளையும் மீறி …. சிங்களக் காடைகளின் கை ஓங்கியிருக்கும் இன்றைய நாளிலும் …. பொங்கி எழுந்த எமது தமிழ் மாணவர்களின் தான் மான உணர்ச்சியை நினைக்கும் போது …. ஈழம் மலரும் காலம் மிக விரைவில் என்றே தோன்றுகிறது ….. தமிழ் மாணவன் கையில் கம்புடன் நிற்கும் காட்ச்சி மூன்று விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது ….
1. சிங்களன் அடக்கு முறை இன்னும் தொடர்கிறது
2. என்னதான் அடக்க நினைத்தாலும் தமிழன் பொங்கி எழுவான்
3. தமிழீழமே தீர்வு
தமிழ் மாணவர்களும் , சிங்கள மாணவர்களும் மோதிக்கொண்ட அந்த சம்பவம் …. மேர்ச் சொன்ன மூன்று விஷயங்களையும் நமக்கு மட்டுமல்ல …. சர்வதேசத்திற்கும் உணர்த்துகிறது ….. தமிழ் மாணவன் ஒருவன் …. கையில் கம்புடன் ஆக்ரோஷமாக நிற்கும் அந்தக் காட்ச்சியை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் …. அந்தத் தமிழ் மாணவன் கையில் கம்புடன் எச்சரிக்கை விடுப்பது சிங்களனுக்கு மட்டுமல்ல …. 
சர்வதேசத்திற்கும்தான் 
தமிழீழத்தில் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள் ….. .. ” தனி நாடு கிடைக்கும் வரை ” ஆமா  அந்தத் தமிழ் மாணவன் கையில் இருப்பது …. கம்புதானா ?? எனக்கென்னவோ துப்பாக்கி போல தெரிகிறது !!!!! எங்கே ….. இப்போது மீண்டும் ஒருமுறை நன்றாகப் பாருங்கள் …….. ,, இப்போது சொல்லுங்கள் ….. அந்தத் தமிழ் மாணவன் கையில் இருப்பது …… கம்பா ???? …………. துப்பாக்கியா ????? …
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


அக்டோபர் 20, 2016

இணையதளங்களை கண்டித்து யாழில் சட்டதரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு¨!

யாழ், நீதி மன்றத்தின் முன்பாக நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட இணையதளங்களை கண்டித்து சட்டதரணிகள்பணிப்பகிஸ்கரிப்பில்
 ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு சற்று முன்னர் யாழ், மாவட்ட சட்டதரணிகள் குழுவின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மை காலமாக நீதிபதிகள் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் இது நீதிபதிகளை அவமதிக்கும் செயற்பாடுகள் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் கூறியுள்ளனர்.
மேலும், இன்றைய தினம் யாழ் நீதி மன்றிற்கு வருகை தந்த பொது மக்கள் மீண்டும் வீடு திரும்பி வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



அக்டோபர் 17, 2016

அதிர்ச்சி தகவல்! இலங்கையின் விஷ ஊசி முகாம் சிக்கியது?

முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு மேற்குப் புறமாக ஒன்றரைக் கிலோமீற்றர் துாரத்தில் இலங்கை விமானப்படையினரின் அதி நவீன விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விமான தளத்திற்கு இரவில் விமானங்கள் வந்து போவதாகவும் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த விமானதளம் உள்ள காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்குச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த வயதான சிலர் அங்கு விடுதலைப்புலி உறுப்பினர்கள் நிர்வாண நிலையில் சங்கிலிகளில் கட்டி வேலை வாங்கப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்களைத்
 தெரிவித்துள்ளனர்.
புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரையும் யோகி மற்றும் பாலகுமாரன் ஆகியோரையும் தாம் மிகக் கேவலமான நிலையில் கண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அப்பகுதிக்கு தேன் எடுப்பதற்குச் சென்ற சில தனி நபர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வயல் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் பாதை
 மாறி குறித்த 
இராணுவ மர்மப் பிரதேசத்திற்குள் சென்ற போது அவற்றை இராணுவம் சுட்டுக் கொன்றதுடன் மாட்டு உரிமையாளர் இராணுவத்தால் முகாமுக்கு அழைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவமும் 
இடம் பெற்றுள்ளது.
இது குறித்த யாருக்காவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக குறித்த உரிமையாளர் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த மாட்டு உரிமையாளர் தனது அடி காயங்களுக்கு நாட்டு மருத்துவரை அணுகிய பின்னரே அவரது மாடுகள் பல இராணுவத்தால் சுடப்பட்டு இறந்த விடயம் வெளியாகியுள்ளது.
இராணுவத்தின் 59வது கட்டளைப் பீடம் அமைந்துள்ள குறித்த பகுதி சுமார் 25 சதுர கிலோ மீற்றர்கள் உள்ளடக்கியதாகவும் அடர்ந்த காட்டுப்பகுதியுடன் கூடியதாகவும் காணப்படுகின்றது.
இக் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவி தேன் எடுப்பதற்குச் செல்லும் சிலர் இராணுவத்தால் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரணைமடுக் குளத்திறு அருகில் 1.3 கி.லோ மீற்றர் நீளமான விமானதளம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதை விட அந்தத் தளத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் துாரத்தில் குறித்த நவீன விமான நிலையம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் 
மர்மமாகவே உள்ளது.
குறித்த விமான தளத்திற்கு நள்ளிரவு வேளைகளில் பல விமானங்கள் வந்து செல்வதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை குறித்த முகாம்களில்தான் பல முன்னாள் புலி உறுப்பினர் விச ஊசி போட்டு கொல்லப்படுவதாகவும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

அக்டோபர் 03, 2016

தலைவர் பிரபாகரன் எதிர் வரும் ஜனவரியில் வெளி வருவாராம் ?

  ஆனந்த அதிர்ச்சி செய்தி..!   இது கனவா, நிஜமா..! உண்மையா..வந்துடுவாரா தலைவர்..அப்போ எல்லோரும் சொன்ன மாதிரி அவர் போரில் இறக்கவே இல்லையா, பொட்டு அம்மான் எங்கே இருக்கிறார்..? அண்ணி  மதிவதனி எங்கே இருக்கிறார்? கடந்த இரண்டு நாட்களாக இதுதான் 
எங்கு பார்த்தாலும் பேச்சு.
ஆமாம் லண்டனிலில்   இருந்து புலிகள் அமைப்பு இந்த ஆனந்த அதிர்ச்சியை வெளியிட்டார்கள். உலகில் நிறைந்திருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள்.
எமது தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறாரா..?இது ஒன்றே போதும் என்று கதறி இருக்கிறார்கள்.
லண்டன் செய்தி சொல்வது போல் தலைவர் இருப்பது உண்மை என்றால் ஈழக்கனவு எட்டும்தூரத்தில் என்பதில் சந்தேகமே இல்லை…??!!வா தலைவா வா…!வா தலைவா வா…!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>