18

siruppiddy

மே 21, 2018

வவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எரிபொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மக்களை பசியில் தள்ளும் அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும்,
 மக்கள் அதிகாரங்களை நிலை நிறுத்த அனைத்து மக்களையும் இன, மத, பேதமின்றி இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணையுமாறு சமூக வழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மே 18, 2018

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் பல்கலை மாணவர் உந்துருளிப் பேரணி

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எழுச்சி மிக்கதாக்கும் வகையில்
 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நோக்கிய உந்துருளிப் பேரணி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தி லிருந்து புறப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் உந்துருகளோடு கலந்து கொண்டனர். ஏனைய பல மாணவர்களும், பொதுமக்களும் பஸ்களில் முள்ளிவாய்க்கால் நோக்கிப் 
பயணமாகியுள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள பொது நிகழ்வில் இந்தப் பேரணி கலந்து கொள்ளும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மே 17, 2018

உறவுகளுக்கு உணர்வூட்டி துளிர் பெறும் மே 18: கண்ணீரை காணிக்கையாக்கிய நாள்

மே 18 ஆம் திகதி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நாளை அனுஷ்டிக்கப்பட இருக்கும் நிலையில், கண்ணீரை காணிக்கையாக்கி உயிரிழந்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் துயரமான
 நாள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் உன்னத உறவுகள் சார்பாக தெரிவித்திருக்கும் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் போராட்ட குணமும் கூடவே உணர்வுகளையும் வெளிப்படுத்துபவர்களாக,
 ஒருமித்த உணர்வோடு உணர்வுகளுக்கு மதிப்பளித்து உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும், 
உரிமைக்காக பிரதிநிதித்துவம் பெற்றுக்கொண்டவர்கள் மீது உறவுகளின் உணர்வலைகள் மீது தான் சார்ந்த நலன் வெளிப்பாடுகளை தூய ஆத்மாக்களின் அஞ்சலி நிகழ்வில் வெளிப்படுத்த இடமளிக்க முடியாது என்பதே அனைத்து தரப்பினருடைய எண்ணமும் விருப்பமுமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது எனவும் 
தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக உணர்வுபூர்வமான முறையில் ஒன்று சேரும் அஞ்சலி நிகழ்வில் இதுவரை காலமும் எந்த விதமான செயலூக்கமும் இல்லாமல், தமது நலன்களுக்காக வலுவிழந்த செயற்பாடுகள் ஊடாக இவ்வாறான அரசியல் சாயங்களை பூச முயல வேண்டாம் எனவும், சிந்திய குருதி மண்ணோடு கலந்து உருக்களை மட்டுமல்ல மனங்களையும் சிதைத்து ஆறாத மனதோடு ஊசலாடும் வாழ்க்கையை வாழும் மக்கள் மீது சித்திரங்களை மீண்டும் வரையலாம் என கனவு காணாதீர்கள்.
இத்தலைமுறையினரான நாம் வெளிப்படுத்துவது உணர்வு பூர்வமான போராட்ட வெளிப்படுத்தல்களே எனவும், உறங்கும் நம் உறவுகளுக்காக கண்ணீரை காணிக்கையாக்கி உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும், எமது பூர்வ பந்த ஆத்ம திருப்திக்காகவும் செயற்படுவோம் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மே 16, 2018

ஆரம்பம் முள்ளிவாய்க்கால் நினைவு தின தீப ஊர்திப் பேரணி

முள்ளிவாய்க்கால் நினைவு தின தீப ஊர்தி பேரணி யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று ஆரம்பமானது.யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து ஆரம்பமான நினைவு தின தீப ஊர்தி பேரணி தென்மராட்சியை இன்று சென்றடைந்தது.
இன்று முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்து பயணிக்கவுள்ள இந்த தீப ஊர்தி பேரணி வட மாகாணத்தின் அனைத்து
 மாவட்டங்களினூடாகவும் பயணித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ள பகுதியைச் சென்றடையவுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>