18

siruppiddy

ஆகஸ்ட் 11, 2018

மட்டக்களப்பு மாநகரசபைக்கு யாழ் மாநகர முதல்வர் விஜயம்

யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மட்டக்களப்பு மாநகரசபைக்கு  (10.08.2018) விஜயம் மேற்கொண்டதுடன் மாநகரசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டிருந்தார்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் எனப் பலரும் கலந்து 
கொண்டிருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள், அமைவுகள், மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், யாழ் மாநகரசைபயின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 09, 2018

நாட்டில் முடங்கிப் போன ரயில் சேவைகள் களத்தில் இறங்கிய ராணுவம்

ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு அமைச்சர் மங்கள சமரவீர மகிழ்ச்சியான செய்தியை 
அந்த வகையில் ரயில்வே ஊழியர்களின் பணிப் 
பகிஷ்கரிப்பு நிறைவடையும் வரையில் ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டை அல்லது பருவச் சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில்
 இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்கள் நேற்று பிற்பகல் திடீரென வேலை நிறுத்தத்தை மேற்கொண்டதன் காரணமாக இலங்கை முழுவதும் பாரிய நெருக்கடி ஏற்பட்டது.பல ரயில் நிலையங்களில் மோதல்களும், 
போராட்டங்களும் ஏற்பட்டன.
இதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்ட இடங்களில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டிருந்தனர்.மேலும், ஓய்வு பெற்றுள்ள புகையிரத சாரதிகளை இன்று காலை பணிக்கு வருமாறு புகையிரத பொதுமுகாமையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன், கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களின் நன்மை கருதி விசேட பஸ் போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. இதனை இராணும் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அனைத்து அரச பேருந்து பணியாளர்களது விடுமுறைகளும் இரத்துச்
 செய்யப்பட்டுள்ளன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>