18

siruppiddy

மே 18, 2019

ஒரே நாளில் வரலாற்றில் முதன்முறையாக 762 பேருக்கு விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைகைதிகளை விடுதலைசெய்ய தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி
 மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிகடை சிறைசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 
வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையில்
 55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் 50கைதிகள்,பல்லன் சேன சிறைச்சாலையில் 53 கைதிகள் என்ற அடிப்படையில் 
சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக
 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிறைச்சாலை வரலாற்றிலே இம்முறை தான் அதிகமான சிறைகைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மே 13, 2019

ஊரடங்குச் சட்டம் வடமேல் மாகாணம் முழுவதும் அமுலில்

மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வகையில் வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் 
குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
 பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டே இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>