18

siruppiddy

ஜனவரி 31, 2018

வடக்கு முதல்வர் குழந்தைகள்” முறையாக வளர்க்கப்பட வேண்டும்

அன்றைய மக்கள் படிப்பறிவில் வளர்ச்சி அடையாத நிலையிலும் தமது பிள்ளைகள் கல்வி அறிவில் உயர்ந்து ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டும், 
உண்மை பேசுபவர்களாக இருக்க வேண்டும் என எண்ணியதாலே அன்றைய குழந்தைகள் சிறப்பாக வளர்ந்தனர். இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். பொது நூலக மண்டபத்தில் சாந்திகம் "சிறுவர் உளநலம்"நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் தெரிவித்ததாவது,
அந்தக் காலத்தில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் தாய்மாரினால் தொடர்ந்து அவதானிக்கப்பட்டது. ஒரு சிறிய பென்சில் கூடுதலாக அவரின் புத்தகப் பையில் காணப்பட்டால் அது பற்றி விசாரிப்பார்கள் அதனால் பிள்ளைகள் உண்மை பேசுகின்ற பழக்கத்தைச் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொண்டார்கள்.
மற்றவர்கள் பொருட்கள் மீது ஆசை
 வைப்பதைத் தவிர்த்துக் கொண்டார்கள். அக் காலத் தாய்மார்களுக்கு உளவளம் உடலியக்கத் திறன்கள், உறவாடல் திறன்கள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் சமூக திறன்களை விருத்தி செய்யக்கூடிய அறம் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார்கள அதனால் அவர்களின் குழந்தை வளர்ப்பு சிறப்பாக அமைந்திருந்தது.
இன்று குடும்பப் பின்னணிகள் வெகுவாக மாறி விட்டன. தாய் தந்தை இருவரும் சேர்ந்து உழைக்கின்ற குடும்ப 
அமைப்பு உருவாகி விட்டது. மாலையில் உழைத்துச் சோர்வடைந்த நிலையில் வீட்டுக்குத் திரும்பும் பெற்றோருக்கு தமது பிள்ளைகளுடன் பேச நேரம் கிடைப்பதில்லை. இன்றைய குழந்தைகளோ தாயின் அன்பிற்காக ஏங்குகின்றார்கள்.
இதனால் குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணனி, இணையத்தளங்களுடனும் 
கழிக்கின்றார்கள். பிறப்பிலிருந்தே இலத்திரனியல் சாதனங்களுடனும் உணர்வற்ற இயந்திரங்களுடனும் பொழுதைக் கழிக்கின்ற குழந்தைகள் இயல்பாகவே ஏனையவர்களுடன் பழகுகின்ற தன்மை, அன்பைப் பரிமாறுகின்ற தன்மை ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி தனியராக வளரத் தொடங்குகின்றார்கள் இன்று அன்பு கிடைப்பதில்லை. கண்டிப்புக்கும் இடமில்லாமல்
 போய்விட்டது.
ஆசிரியர்கள் காட்டுகின்ற அன்பானது பிள்ளைகளைப் பாடசாலைக்கு இழுத்து வருவதற்கு ஒரு உந்து சக்தியாக விளங்க வேண்டும். எனவே இக் குழந்தைகள் முறையாக வளர்க்கப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக 
- என்றார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜனவரி 24, 2018

மீனவர்களிடையே முல்லையில் பதற்றம்


முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.  அரசியல் நோக்கங்களுக்காக தெற்கில் இருந்து 300 மீனவர்கள் அழைத்து வரப்பட்டு 
அப்பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அநீதியானது என, அப்பிரதேசத்திலுள்ள தமிழ் மீனவர்கள் 
குற்றம் சுமத்தியுள்ளனர்.
தெற்கு மீனவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க தேவையான நிலங்களைப் பெற, நிளஅளவைத் திணைக்களத்தினர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த போதே, அங்கு பாரம்பரியமாக வசித்து வரும் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து இரு தரப்பு மீனவர்களிடையேயும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பின்னர், நிலம் அளவிடும் நடவடிகைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் தலையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>