18

siruppiddy

ஜனவரி 29, 2019

வரப்போகும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.அடுத்து இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் திகதி தொடர்பில் ஜனாதிபதி
 இன்றைய தினம் அறிவித்துள்ளார்.எதிர்வரும் 
மே மாதம் 31மே் 
திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.அமைச்சரவைக்கு ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக 
குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி யோசனை சமர்ப்பித்து இது தொடர்பான அறிவிப்பை அமைச்சரவைக்கு விடுத்துள்ளார்.இதேவேளை மாகாண சபைத் தேர்தலை எந்த முறையின் நடத்துவது என்பது தொடர்பில்
 முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை புதிய அல்லது பழைய முறைமையின் கீழ் நடந்த நாடாளுமன்றம் அங்கீகாரம் 
வழங்குமாயின் உரிய முறைக்கு அமைய தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 
தெரிவித்துள்ளார்.

போராட்டத்தினால் ஏ-9 வீதியூடான போக்குவரத்துக்கள் திடீர் முடக்கம்…

வவுனியா நகரப் பகுதியில் அகற்றிய கழிவுகளை கொட்ட முடியாமல் வாகனங்களுடன் காத்திருந்த சுகாதார ஊழியர்கள்
 மற்றும் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ9 வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வவுனியா பிரதேச குப்பைகள் பம்பைமடுவில் கொட்டப்படுவதால் பல இன்னல்களை
 சந்தித்து வருவதாக சாளம்பைக்குளத்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பம்பைமடுவில் குப்பைகளைக் கொட்டச் சென்ற வாகனங்களை மக்கள் இடைமறித்துத் திருப்பி அனுப்பியுள்ளனர்.  மேலும், நீண்ட நேரமாக கழிவுகளை கொட்ட 
முடியாமல் காத்திருந்த சுகாததார ஊழியர்கள் தற்போது வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  குறித்த அசாதாரண நிலை காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



விடுதலைப் புலிகள்! வடக்கில் தாக்குதல்களை நடத்தவும் திட்டமாம்

$
சிங்கள ஊடகத்தின் செய்தி தென் இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் வடக்கில் மீளவும் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெற்கிலிருந்து பிரசுரமாகும் வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது$
.அந்த செய்தியில் மேலும், தென் இந்தியாவின் பயிற்சி முகாம்களில் 25 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த 
$புலிப் போராளிகள் இந்த ஆண்டில் இலங்கைக்கு திரும்பி வடக்கை மையமாகக் கொண்டு நான்கு பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தென் இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் வடக்கில் மீளவும் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெற்கிலிருந்து பிரசுரமாகும் வார இறுதிப் பத்திரிகையொன்று 
செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும், தென் இந்தியாவின் பயிற்சி முகாம்களில் 25 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புலிப் போராளிகள் இந்த ஆண்டில் இலங்கைக்கு திரும்பி வடக்கை மையமாகக் கொண்டு நான்கு பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் நோக்கிலான பிரச்சார உத்தியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் வவுனியா – புளியங்குளம் பிரதேசத்தில் வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்றை கைவிட்டு தப்பிச் சென்ற கந்தையா ஆனந்தராசா தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது பல்வேறு உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
$இந்த சம்பவம் தொடர்பில் கைதான ஆறு சந்தேகநபர்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.மேலும், தெல்லிப்பளை, கிளிநொச்சி, வட்டுக்கோட்டை, நெடுங்கேணி, போன்ற பல்வேறு இடங்களை சேர்ந்த 17 முதல் 25 வயது வரையிலான பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் சிங்கள மக்களை இலக்கு வைத்து தாக்குதல் ஒன்றை நடத்தவும், மடு இராணுவ முகாமின் படையினர் மீது தாக்குதல் நடத்தவும், புலம்பெயர் சமூகத்தின் தேவைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும், வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தென் இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் புலி உறுப்பினர்களை, ரங்கன் மற்றும் இன்பன் ஆகிய இரண்டு முன்னாள் புலித் தலைவர்கள் வழிநடத்தி வருவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இருவரும் இறுதிக் கட்ட போரின் போது இந்தியாவிற்கு தப்பி சென்று அங்கு தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி இந்தியாவிலிருந்து படகு மூலம் வந்த நான்கு இளைஞர்களை கைது செய்த கடற்படையினர் அவர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இந்த இளைஞர்கள் வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது
 குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இராணுவம், கடற்படை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பன விசாரணை செய்ய வேண்டிய போதிலும் அந்தந்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை நடத்தி வருவதனால், பல்வேறு உண்மைகளை கண்டறிய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சோ, இலங்கை இராணுவமோ எவ்வித தகவல்களையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது 
$குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜனவரி 22, 2019

வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரி முன்பாக உறுதி மொழி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21 முதல் 28 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது
.ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதையில் இருந்து விடுபட்ட நாடு மற்றும் 
போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
 இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழியினை எடுத்துள்ளனர்.நிகழ்வில் 
வடமாகண ஆளுநர் சுரேஷ் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ தலைமை அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து 
கொண்டிருந்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





அமெரிக்காவின் அதிரடி அறிவிப்புதிருகோணமலை தொடர்பில்

திருகோணமலையில் இராணுவத்தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாரள் நான்சி வான் ஹோர்ன் தெரிவித்துள்ளார்.திருகோணமலையில் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு
 இலங்கை அரசாங்கம்
அனுமதியளிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது .இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் , “இலங்கையில் இராணுவத்தளத்தை நிறுவுவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை 
என கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்க – இலங்கை இராணுவ ஒத்துழைப்பானது, அனர்த்த தயார் நிலை, நிவாரணம், கடல் பாதுகாப்பு பயிற்சி, மற்றும் பயிற்சிகளை வலுப்படுத்தல் ஆகியவற்றை
 உள்ளடக்கியதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.அதல்லாமல் , அமெரிக்காவின் தளம் ஒன்றை அமைப்பது, அதன் ஒரு அங்கமாக இருந்ததில்லை என்றும், இதனை நிறுவுவது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மைத்திரியின் பாதுகாப்பு வாகனத் தொடரணி விபத்தில் இருவர் ஸ்தலத்தில் பலி

முல்லைத்தீவு தட்டாமலைப்பகுதியில் 21.01.2019 மதியம் 1 மணியளவில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்களானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற
 இராணுவ கோமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்து, வவுனியா பகுதி நோக்கி வருகைதந்தவேளை இவ்விபத்தில் சிக்கியுள்ளது.    தட்டாலை பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே இந்த வாகனம் விபத்துக்காகியுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
எனினும், விபத்தில் காயம் இருயமடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் 
தெரிவிக்கின்றன
இங்கு அழுத்தவும் நில5வரை கொம் செய்தி >>>