18

siruppiddy

ஜூலை 12, 2013

காந்திகொலை மறுவிசாரணை கோரும் மனு ஒத்திவைப்பு!


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மறு விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞர் சாந்தகுமரேசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இந்திய மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் 27-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக