18

siruppiddy

மே 08, 2014

இராணுவ ஆட்சேர்ப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது :அதிபர்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் இராணுவ ஆட்சேர்ப்பு குறித்து தான் இதுவரை அறிந்து கொள்ளவில்லையென்று தெரிவித்த அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அரசாங்க வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடி செய்து விட்டனர் என்று இதுவரை யாரும் முறையிடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறு யாரும் முறைப்பாடுகளைச்செய்தால் அது குறித்து விரிவாக ஆராய்ந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் 12 பேர் யாழ்ப்பாணத்தில்நேற்று காலை வருகைதந்தனர். இவர்களுடனான சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அரச அதிபரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்க வேலைவாய்ப்பை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் மாவட்ட செயலகங்களோ, அல்லது மாகாணசபைகள் ஊடாகவோ வழங்கப்படமுடியும் ஆனால் அநாமதேய துண்டுப்பிரசுரம் வெளியிட்டோ, ஒலிபெருக்கிகளில் அறிவித்தோ அரசாங்க வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாது.
யாழ்.மாவட்டத்தில் அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. ஆனால் இதுவரை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை அதேவேளை இந்த விடையம் குறித்து எவரும் எம்மை அணுகவுமில்லை.

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டது தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்காத நிலையில் அது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையினையும் நாம் எடுக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக