18

siruppiddy

பிப்ரவரி 16, 2015

ஆணைக்குழுவின் நிபுணர்களுக்கு 400 மில்லியன் செலவு!!!

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவிற்கு மகிந்தவினால் நியமிக்கப்பட்ட நான்கு நிபுணர்களுக்காக, 400 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் சிறிலங்காவில் எந்த பணிகளையும் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழு யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் என்று சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காக, மகிந்தராஜபக்ஷவினால் அதற்கு நான்கு வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டார்கள். 
அவர்களுக்கு வேதனம் மற்றும் உள்நாட்டில் சுற்றுலா செல்வதற்கான செலவினங்களுக்காக 400 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் இதனால் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக