18

siruppiddy

ஆகஸ்ட் 05, 2015

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்குஆதராவாக பாதயாத்திரை!

மிருசுவிலில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு நியாயம் வேண்டி கடற்படை வீரர் ஒருவர் பாதயாத்திரையொன்றை ஆரம்பித்துள்ளார். மிருசுவிலில் வீடகளைப் பார்க்கச் சென்ற பொதுமக்கள் 
எட்டுப்பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தி குறித்த இராணுவ அதிகாரிக்கு அண்மையில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த இராணுவ அதிகாரிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி,
 ஊனமுற்ற கடற்படை வீரர் ஒருவர் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளார். அனுராதபுரத்தைச் சேர்ந்த என்.டி. வசந்த குமார என்ற நபரே இவ்வாறு பாத
 யாத்திரையை ஆரம்பித்துள்ளார். கடந்த மூன்றாம் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதியின் முன்னிலையிலிருந்து இந்த பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. விதிக்கப்பட்ட மரண தண்டனை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி இந்த குறித்த கடற்படைவீரர் பாத யாத்திரை மேற்கொள்கின்றார்.
இந்த கடற்படை வீரர் அனுராதபுரத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் பாத யாத்திரையாக சென்று மகஜர் ஒன்றை ஒப்படைக்கவுள்ளார். இந்த மகஜரில் தனது எட்டு சுய கோரிக்கைகளையும்
 உள்ளடக்கியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக