18

siruppiddy

ஏப்ரல் 22, 2016

மீண்டும் மஹிந்தவிக்கு புலி­களின் உதவி தேவைப்­ப­டு­கின்­றது

புலி­களின் கதை­களை கூறியும் இன­வாத கருத்­து­களை முன்­வைத்தும் மக்­களின் சாதா­ரண வாழ்­கையை அழித்­து­வி­டக்­கூ­டாது. அர­சியல் சுய­ந­லத்­திற்­காக பிரி­வி­னை­வா­தத்தை கையி­லெ­டுக்க வேண்டாம் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.
மஹிந்த ராஜபக்ஷவிற்கே மீண்டும் புலி­களின் உதவி தேவைப்­ப­டு­கின்­றது.
அத­னா­லேயே கொல்­லப்­பட்ட புலி­க­ளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்­சிக்­கின்றார் எனவும் ஜே.வி.பி குற்றம் சுமத்­தி­யது.
நாட்டில் பிரி­வி­னை­வாதம் தலை­தூக்கி நாட்டை பிரி­வி­னையின் பக்கம் கொண்டு செல்­வ­தாக மஹிந்த தரப்பு குற்றம் சுமத்­தி­வரும் நிலையில் அது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­விய போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
வடக்கில் பிரி­வி­னை­வாதம் தலை­தூக்க ஆரம்­பிக்­கின்­றது என்றால் இந்த அர­சாங்­கமும் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என்­பதே அர்த்­த­மாகும். தமிழ் மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுக்­கவும் அவர்­க­ளுக்­கான வாழ்­வா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கொடுப்­ப­தா­கவும்
 கூறி 
அவர்­களின் மனங்­களை வென்­றெ­டுத்­தனர். ஆனால் இன்று தமிழ் மக்­களும் அர­சாங்­கத்தை நம்பத் தயா­ராக இல்லை. எனினும் வடக்கின் அர­சியல் கட்­சிகள் தமது நோக்­கங்­களை நிறை­வு­செய்யும் நோக்­கத்­திலும் புலம்­பெயர் தேவை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லுமே செயற்­பட்டு வரு­கின்­றன. அதற்­கா­கவே பிரி­வி­னை­வாத கருத்­து­களை முன்­வைத்து அர­சியல் செய்யும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.
எனினும் விடு­தலைப் புலிகள் மீண்டும் நாட்டில் உரு­வாகும் நிலை­மையோ அல்­லது நாட்டை பிரிக்கும் சந்­தர்ப்­பமோ இனி ஏற்­படப் போவ­தில்லை. மக்­களும் அதற்கு இட­ம­ளிக்க மாட்­டார்கள். இன்று அர­சி­யலில்
 அனா­தை­க­ளா­கி­யுள்ள மஹிந்த தரப்­பினர் தமது அர­சியல் பய­ணத்தை பல­மாக முன்­னெ­டுக்­கவே மீண்டும் புலிக்­க­தை­களை கூறி இன­வா­தத்தை கையில் எடுக்­கின்­றனர். அன்றும் மஹிந்­தவின் அர­சியல் பய­ணத்தில் புலி­களின் பங்கு அதி­க­மாக இருந்­தது. புலி­களை வைத்தே அவ­ரது பிர­சா­ரங்கள் 
அமைந்­தது.
இன்றும் புலிகள் கொல்­லப்­பட்­டாலும் அவர்­களின் செயற்­பா­டு­களை வைத்தே அர­சி­யலை முன்­னெ­டுக்க பார்க்­கின்றார். இறுதி யுத்­தத்தில் புலி­களை கொன்று வெற்­றியை கொண்­டா­டிய மஹிந்த மற்றும் அவ­ரது அணி­யினர் இன்று மீண்டும் கொல்­லப்­பட்ட புலி­க­ளுக்கு உயிர் கொடுத்து அதன்­மூலம்
 தமது இன­வாத 
அர­சி­யலை முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றனர். அதற்­கா­
கவே இன்று பல்­வேறு கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வருகின்றன. ஆனால் இவர்களின் கருத்துகளை கேட்டு மக்கள் குழப்பத்தில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும். அதற்கான சரியான தலைமையை இனிமேல் மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் 
என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக