18

siruppiddy

பிப்ரவரி 27, 2018

இனம் தெரியாதோரால் தம்பலகாமத்தில் பஸ் வண்டி தீக்கிரை!!

திருகோணமலை – தம்பலகாமம், கிண்ணியா பிரதான வீதியின் பட்டிமேடு சந்தியில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்பலகாம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த பஸ் வண்டி முள்ளிப்பொத்தானை 97ஆம் கட்டையை சேர்ந்த சமிந்த என்பவருக்கு சொந்தமானது எனவும் தெரியவருகிறது.
பஸ் வண்டி முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாம பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக