18

siruppiddy

நவம்பர் 15, 2018

அதிரடிப் படையினரால் யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழ். குருநகர், இறங்குதுறையில் இருந்து ரி.என்.ரி மற்றும் சி4 வகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால்
 மீட்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப் படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு குருநகர் இறங்குதுறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த வலைக்குள் இருந்து ரி.என்.ரி. மற்றும் சி4 வகை 2 கிலோ 196 கிராம் நிறையுடைய வெடிமருந்துகள் 
கைப்பற்றப்பட்டுள்ளன.
வெடிமருந்துகள் தொடர்பாக விசேட அதிரடிப் படையினர் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றதுடன், மீட்கப்பட்ட வெடிமருந்தினை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் குறித்த வெடிமருந்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ். நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக