18

siruppiddy

நவம்பர் 30, 2019

காவலரணில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரணில் நேற்றிரவு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பொலிஸ் உத்தியோகத்தரின்
 உயிரிழப்புத் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழும்நிலையில், 
அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.யாழ்ப்பாணம் பொலிஸ் 
நிலையத்தில் கடமையாற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய காமினி என்ற 
உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணுக்கு 29.11.19. (வெள்ளிக்கிழமை) மாலை இரவு நேரக் கடமைக்காக பொலிஸ் உத்தியோகத்தர் சென்றிருந்தார்.எனினும், இன்று காலை 
அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
 முன்னெடுத்துள்ளனர்.

மாணவி ஒருவருக்கு கோயில் மடப்பள்ளியில் வைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த அதிர்ச்சிச் சம்பவம் யாழ் வல்வெட்டித்துறையில் நடைபெற்றுள்ளது.
தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில், விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் மேலதிக புலன் விசாரணை மேற்கொண்டதையடுத்து, வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தனர். மாணவியிடம் கைப்பற்றிய தொலைபேசியை சான்றுப் பொருளாக ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அம்மன் கோவில் பூசகர் அந்த தொலைபேசியை தந்ததாக குறிப்பிட்டார். அத்துடன், பூசகர் காசு 
மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சிறுமியை நயவஞ்சகமாக கோயில் மடப்பள்ளிக்குள் அழைத்து, தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக
 குற்றம் சுமத்தப்படுகிறது.
பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மாணவியின் சித்தப்பாவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்து உள்ளனர். பூசகரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு, அவரும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிடப்படுகின்றதுபூசகர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் சிறுமிக்கு தொடர்ச்சியாக 
பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்து நேற்று முன்தினம் (28) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவப் பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு 
பிறப்பித்துள்ளது.

நவம்பர் 13, 2019

யாழ் நகரில் ஊடகவிலாளர்களுக்கு நீதி கோரும் நடை பயணம் முன்னெடுப்பு

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த விழிப்புணர்வு பயணம் இன்று இறுதி நாளாகவும் நடைபெற்றது.நவம்பவர் மாதம் 2 ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து 
விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும், சர்வதேச தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு பயணம்
 இன்று.13.11.2019. புதன்கிழமை யாழ் நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.   இதன் போது கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட
 வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களை பொது மக்களிடம் கையளித்திருந்தனர்.மின்சார நிலைய வீதி, 
ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகியவற்றில் நடை பயணமாக சென்றும் யாழ்.பிரதான பஸ்நிலையம், சந்தை, வியாபார நிலையங்களுக்கும் சென்ற ஊடகவியலாளர்கள் தமது
 கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்ககளிடம் கையளித்திருந்தனர்.இவ் விழிப்புணர்வு பயணத்தின் போது தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





ஜூன் 04, 2019

எப்போதும் ஆண் என்பவன் வாழ்க்கையில்…

என்ன தான் தோழி, காதலி, மனைவி, அம்மா என அனைவரையும் கிண்டல், கேலி செய்து விளையாடினாலும். அவர்களுக்கு பாதுகாவலனாக இருந்து எப்போதும் காப்பது ஆண் தான். இதை கொஞ்சம் காலரை தூக்கிவிட்டபடி காவலன் என்று சொல்லிக் கொள்ளலாம்.உடல் ரீதியாக
 இருந்தாலும் சரி, மனம் ரீதியாக இருந்தாலும் சரி, ஓர் பெண்ணை முழுவதுமாக மகிழ்விப்பது ஆண் தான். இதை பெண்களால் கூட மறுக்க முடியாது. காதலனாக மட்டுமின்றி, தோழனாக 
கூட ஒரு பெண்ணின் முழு புன்னகைக்கு பின் மறைந்திருப்பவன் ஆண் தான்.ஷாப்பிங் செய்ய பெண்களுக்கு இருக்கும் 
மகிழ்ச்சியை விட, தான் சம்பாதித்த பணத்தில், தன் தங்கை, காதலி, அம்மா போன்றவர்களுக்கு பொருட்கள் வாங்கி தருவதில் ஆண் மகனே அதிக மகிழ்ச்சி அடைகிறான். ஆண் மற்றவரை 
மகிழ்விக்க தன் வலியையும் மறைத்து வாழ்பவன் என்பதே நிதர்சனம். ஓர் பெண்ணின் வாழ்க்கை ஆண் இன்றி முழுமை அடைவதில்லை. அதே போல தான் பெண்ணின்றி ஆணும் முழுமை
 பெறுவதில்லை
. பெண்களின் கனவுகளை வளர்க்க ஆண் வியர்வை சிந்துகிறான், தகப்பனாக தொடங்கி கணவனாக முடிவு வரை.
தோள் கொடுக்கும் தோழன்: பெண்கள் துவண்டு போகும் ஒவ்வொரு தருணத்திலும் அவளை மீட்டெடுப்பவன் ஆண் தான். தகப்பனாக, சகோதரனாக, தோழனாக, காதலனாக ஓர் ஆண்
 பெண்ணுக்கு எப்போதுமே உறுதுணையாக தான் இருக்கிறான்.எத்தனை பணம் கொடுத்தாலும் பெண்ணுக்கு ஓர் நல்ல தோழன் கிடைப்பது என்பது வரம் போன்றது. எந்த ஒரு பெண்ணும் தனக்கு
 அமைந்த அந்த தோழமையை இழக்க விரும்புவதில்லை. அந்த சூழலை எந்த உண்மையான தோழனும் ஏற்படுத்துவதில்லை.ஒரு பெண் வலுவிழந்து காணப்படும் போது, அவளை பற்றி அவளுக்கே
 எடுத்துக் காட்டி, அவளை நல்வழி படுத்தும் ஓர் நல்ல வழிகாட்டியாக இருப்பது பெரும்பாலும் ஓர் ஆண்மகன் தான். அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு உறவின் பரிமாணத்தில் 
ஆண் துணையாக வந்து செல்கிறான்.பெருமிதம் கொள்வோம்… ஆண் மகனாக பிறந்தமைக்கு மகிழ்ச்சியாக வாழ்க்கை. 
வாழ்வோம் நட்பூக்களே.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மே 18, 2019

ஒரே நாளில் வரலாற்றில் முதன்முறையாக 762 பேருக்கு விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைகைதிகளை விடுதலைசெய்ய தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி
 மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிகடை சிறைசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 
வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையில்
 55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் 50கைதிகள்,பல்லன் சேன சிறைச்சாலையில் 53 கைதிகள் என்ற அடிப்படையில் 
சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக
 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிறைச்சாலை வரலாற்றிலே இம்முறை தான் அதிகமான சிறைகைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மே 13, 2019

ஊரடங்குச் சட்டம் வடமேல் மாகாணம் முழுவதும் அமுலில்

மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வகையில் வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் 
குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
 பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டே இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஏப்ரல் 30, 2019

யாழில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு

யாழ்.சாவகச்சோிப் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவா்கள் மீது சரமாாியாக தாக்குதல் நடாத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 போ் காயமடைந்துள்ளனா்.
சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை (29.04.19) உட்புகுந்த நால்வர் கொண்ட குழுவொன்று வீட்டில் இருந்தவர்கள் மீது கொட்டன்களால் தாக்கி வாளினால் வெட்டி காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்
. குறித்த தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 27வயதுடைய கனகரத்தினம் கௌதமன் மற்றும் 28 வயதுடை
ய பரராசசிங்கம் கோபிநாத் ஆகிய இருவரே காயமடைந்துள்ளனர். அதில், கௌதமன் வாள் வெட்டுக்கு இலக்காகி கை விரல் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த இருவரும் அயலவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையிலும், யாழில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>