18

siruppiddy

ஏப்ரல் 30, 2013

சிறிலங்காவுக்கு எதிராக மற்றுமொரு தடை!

ஐரோப்பிய நாடுகளுக்கு சிறிலங்கா மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   சிறிலங்கா மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், முறைகேடான வகையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
சிறிலங்கா மீனவர்கள், சர்வதேச கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், இவ்வாறான ஓர் பின்னணியில் சிறிலங்கா மீன்வகைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனை அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
   சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் சிறிலங்கா ஈடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டே எச்சரிக்கை விடுத்திருந்தது.
  ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடாந்தம் 2.2 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக