18

siruppiddy

ஏப்ரல் 26, 2013

வாரணி ராணுவ முகாமில் கோட்டபாய??

இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணத்தில் விரைவில் வரவுள்ள மாகாணசபை தேர்தலில் ஜனாதிபதி ராஜபஷேவின் ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக, விடுதலைப் புலிகளின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரியவருகிறது.
 இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே, இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டரை சந்தித்து பேசியுள்ளார். வாரணி ராணுவ முகாமில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரியவருகிறது.இதற்கிடையில் அரசுடன் கூட்டணியில் இணைந்து ஆட்சியில் பங்குகொள்ளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. அந்தக் கட்சியின் சார்பிலும் முதல்வர் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா, அல்லது தயா மாஸ்டர் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று தெளிவாக தெரியவில்லை.
 எப்படி இருந்தாலும், தயா மாஸ்டர் இந்த முறை தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என்பது, தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக