18

siruppiddy

ஜூலை 11, 2016

இராணுவத்துடன் கூடவே விகாரைகளும் வெளியேறட்டும்!

வடபகுதியில் 2018 இல் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கிறார். அது நடக்குமானால் விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டமானது பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர்க்காலப்பகுதிக்கு முன்பு எந்தவொரு இடத்திலும் சிங்கள பௌத்த அடையாளங்கள் இருந்ததில்லை. தற்போது இராணுவத்தினரால் ஒன்பது விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் இது இன்னமும் அதிகரிக்கலாம். நல்லிணக்கம் என்று சத்தமாக கூவிக் கொண்டு மதத்திணிப்புகள் செய்வது பொருத்தமற்றது. கொக்கிளாயில் பௌத்தர்கள் இல்லை. சிறீ சம்போதி மகா விகாரை தனியார் காணியில் முளைத்துள்ளது.
நாயாறு நீராவி ஏற்றத்தில் பிள்ளையாரை தூக்கி விட்டு விகாரையுடன் புத்தரைஅமர்த்தியுள்ளனர். மாங்குளத்தில் விகாரை, மண்ணாகண்டலில் விகாரை, ஏன்? தனிச் சைவக் கிராமம் வட்டுவாகலில் விகாரை, ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத்திணைக்களக் காணியில் விகாரை இதனால் நீர்ப்பாசனத்திணைக்களமும் அகதியாகி
 இருக்கின்றது.
இப்படியாக எம்மவர்களின் காணிகளில் அடாத்தான முறையில் விகாரைகளை அமைத்துக்கொண்டு நல்லிணக்கம் பேசுகிறார்கள். 2018 இல் வடபகுதியில் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கின்றார்.
இன நல்லிணக்கத்திற்கு அல்லது ஐ.நாவுக்கு பயந்து இது நடக்குமானால் விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும் தமிழ்ப் பகுதிகளில் விகாரைகள் இருக்க முடியாது என்றும் 
அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக