18

siruppiddy

ஏப்ரல் 24, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எம்.பி.யின் கைது குறித்து மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.24-04-2021. இன்று கைதானமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
‘நாடாளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் நண்பர் ரிஷாத் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் ‘அதிகாலை 3 மணி’ க்கு
 வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக் கேடியை இழுத்துச் செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ‘ஆவேசம்’ என்ன? ராஜபக்ஷ அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?’ 
எனப் பதிவிட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்தும் சகோதரரும் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சிஐடியினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பவுத்தலோக மாவத்தை வெள்ளவத்தையில் உள்ள வீடுகளி;ல் வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைகுண்டுதாரிகளிற்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களிற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை சிஐடியினர் பெற்றுக்ககொண்டுள்ளனர் அதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஏப்ரல் 19, 2021

யாழில் இலங்கை படைகளில் கூலியாட்களாக தமிழர்கள்

இலங்கை இராணுவத்தில் கூலி வேலைகளிற்கு ஆட்சேர்ப்பதில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இணைந்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா
 தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகளை உரையாற்றும் போது அவர் இதை வெளிப்படுத்தினார்.
"பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை
 வெளிப்படுத்துவதை நாங்கள் இன்னும் காண்கிறோம். இத்தகைய சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும் எனவும் அவர்
 தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டில் அதே போன்று இலங்கை இராணுவத்தில் மேசன்,வெல்டர் மற்றும் கூலி தொழிலாளர்களாக தமிழ் இளைஞர்கள் படையினரால் இணைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஏப்ரல் 18, 2021

யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி


வவுனியா வடக்கு கல்வி வலய மோசடியை தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நடந்தேறிய மோசடியை மூடி மறைக்க சுகாதார துறை மும்முரமாகியுள்ளது.
புற்றுநோயுடன் உயிருக்காக போராடும் நோயாளிகளிற்கான கதிர்வீச்சு சிகிச்சையினை உரிய காலத்தில் வழங்காது அவ்வாறு வழங்கியதாக பொய் கணக்கு காண்பித்து மில்லியன் கணக்கில் மோசடி
 அரங்கேறியுள்ளது.
உரிய சிகிச்சையின்றி நோயாளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்த போதும் அதனை கண்டு கொள்ளாது கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நேரகாலமின்றி விடுமுறை நாளிலும் பணியாற்றியதாக கணக்கு காண்பித்து மில்லியன்களில் சுருட்டிக்கொண்டமை கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
எனினும் அப்பட்டமாக மோசடி கண்டுபிடிக்கப்பட்டபோதும் அதனை கண்டுகொள்ளாது சுருட்டிய பணத்தை மீள செலுத்துமாறு கதிரியக்க அதிகாரிகளிடம் சுகாதாரத்திணைக்கள அதிகாரிகள் கெஞ்சிவருவதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு கிடைப்பதாக வடமாகாண அளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்
 தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடும் திணைக்களங்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து 
வருகின்றோம்.
அந்தவகையில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே கிடைக்கின்றது என்பதை 
குறிப்பிட முடியும்.
உண்மையில் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் புரிந்துணர்வுடன் 
செயற்படுகின்றனர்.
மக்களுக்கான செயற்திட்டங்களில் அவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
கிழக்கில் அவ்வாறான நிலை காணப்படவில்லயென்றும் அவர் தெரிவித்துள்ளார்;.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

 




 

ஏப்ரல் 11, 2021

வாழைச்சேனையில் மணல் ஏற்றி வந்த 25 சந்தேக நபர்கள் கைது

வாழைச்சேனை காவற்துறை பிரிவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இருபத்தைந்து (25) சந்தேக நபர்களும், இருபத்தைந்து (25); வாகனங்களும்.11-04-2021. இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பொத்தானை, புலிபாய்ந்தகல், ஒமடியாமடு, ஊத்துச்சேனை, வெள்ளாமைச்சேனை, மற்றும் புணாணை ஆகிய பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை காவற்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை காவற்துறையினர் மற்றும் வாழைச்சேனை அதிரடிப்படையினருடன் இணைந்து இரண்டு நாட்கள் விஷேட 
நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது உழவு இயந்திரம் பதினாறு (16), டிப்பர் வாகனம் ஏழு (07) லொறி இரண்டு (02) ஆகிய இருபத்தைந்து வாகனங்களும் கைப்பற்றப்பட்டதுடன் அதனுடன் இருபத்தைந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை காவற்துறை பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை காவல்நிலையத்தில் விஷேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் காவல்நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன
 மேலும் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>