18

siruppiddy

ஜனவரி 28, 2021

கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு - கிழக்கில்

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடித்து கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு 
தவிர்ப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதிவரை நடத்த போவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் 
அறிவித்துள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>


சிறீலங்காக்கு காத்திருக்கும் ஆபத்து மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெனிவாவில் 
ஆரம்பமாகவுள்ளது
இதன்போது  சிறீலங்கா தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை 27-012021.நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய
 அறிக்கையில்
 முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு  சிறீலங்கா தவறும் பட்சத்தில், ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து மிச்சேல் பச்லெட்டினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா
 எச்சரித்துள்ளது.
.இந்நிலையில்,  ஐ.நாவின் அறிக்கையை மேற்கோள்காட்டி, வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய 
அமெரிக்காவின் பிரதிநிதிகள் குழுவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் 
அந்தக் குழு,
குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு  சிறீலங்கா அரசாங்கம் தவறும் பட்சத்தில், ஐக்கிய அமெரிக்காவும் ஏனைய உறுப்பு நாடுகளும் இணைந்து ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் ஏனைய மாற்றுவழிகளை நடைமுறைப்படுத்த முற்படவேண்டும் என்றும் 
வலியுறுத்தியிருக்கிறது,

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>><<



ஜனவரி 24, 2021

தமிழ்த் தலைமைகள் வடக்கில் ஒன்றுக்கூடினார்கள்

தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று.24.01-2021. இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
 மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும்.
 வடக்கு - கிழக்கில் தமிழரின் பாரம்பரிய
 இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 
 நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை
  குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஜனவரி 18, 2021

இலங்கை நாடாளுமன்ற பீதி தீர்ந்தபாடாகவில்லை?

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம், நாடாளுமன்ற பணியாள் தொகுதி, பாதுகாப்புப் பிரிவு, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே 
இருக்குமு் பாதுகாப்பு வலயம், இணைந்த சேவையில் இருப்போர் என 
ஒன்பது கொவிட்-19 நோய் தொற்றியிருப்பது உறுதியானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் அடங்கலாக 943 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன
 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக

வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரிய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து.
சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று திங்கட்கிழமை(18) முற்பகல்-10 மணி முதல் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தனர்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஆசிரியர்கள் அங்கிருந்து  பேரணியாகச் சென்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் ஆளுநரைச் சந்தித்து மகஜர் கையளிக்கவும் முயற்சித்தனர்.
எனினும், வடமாகாண ஆளுநர் தற்போது யாழ்.இந்தியத் துணைத் தூதுவரைச்  சந்தித்துக்  கலந்துரையாடிக் கொண்டிருப்பதால் குறித்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஆளுநரை ஆசிரியர் பிரதிநிதிகள் சந்திக்க முடியும் எனப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த 
ஆசிரியர்களுக்கு  ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்களால் பதில் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் ஆசிரியர்கள் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக வெயிலுக்கு மத்தியில் காக்க வைக்கப்பட்ட பின்னரும் வடமாகாண 
ஆளுநரைச் சந்திப்பதற்கு ஆசிரியர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இதனால்,ஆசிரியர்கள் பொறுமையிழந்தனர். சில ஆசிரியர் பிரதிநிதிகள் ஆளுநர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலின் 
கதவினைத் தட்டினர்.
இதன்போதும் வடமாகாண ஆளுநரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படாமல் நீண்டநேரம் காக்க வைக்கப்பட்ட நிலையில் பொறுமையிழந்த ஆசிரியர்கள் அங்கிருந்து வெளியேறி.
வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஏ-9 வீதியைத் திடீரென இடைமறித்து இன்று நண்பகல்-12 மணி முதல் வீதி மறியல் போராட்டம் முன்னெடுத்தனர்.
ஆசிரியர்களின் இந்த திடீர் நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.    
வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அண்மையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதற்கு சம்மதிக்காமையால் பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை வீதியின் கரையால் செல்வதற்கு அனுமதிக்க முயற்சித்தனர்.
இதனால், கோபமடைந்த போராட்டத்தை முன்னின்று நடாத்திய ஆசிரியர்கள் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களில் ஒருவர் திடீரென வாகனமொன்றிற்கு முன்னாள் படுத்து முடிந்தால் என் மேல் ஏத்துங்கள் எனக் கூறினார்.
இதனால்,அப்பகுதியில் பரபரப்பு அதிகமானது.
இதன்பின்னரும் பல நிமிடங்கள் பொலிஸாருக்கும், மேற்படி போராட்டத்தை முன்னின்று நடாத்திய ஆசிரியர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதனையடுத்துப் பெண் ஆசிரியர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் தமது கைகளைக் கோர்த்து வீதியைச் சுற்றி நின்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதனால், வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டமையால் ஏ- 9 பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள்
 தரித்து நின்றன.  
இதன்பின்னர் வடமாகாண ஆளுநரைச் சந்திப்பதற்குப் பத்து ஆசிரியர் பிரதிநிதிகளைத் தம்முடன் வருகை தருமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கமைய ஆசிரியர்களின் வீதிமறியல் போராட்டம் 
கைவிடப்பட்டது.
இந்தநிலையில் பின்னர் ஐந்து ஆசிரியர் பிரதிநிதிகளுக்கு மாத்திரம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
எனினும்,ஆளுநருடன் சந்திப்பு இடம்பெறவில்லை.
இதன்போது வடமாகாண ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட 
அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களின்  பிரதிநிதிகளுக்குமிடையில் சுமார் அரை மணித்தியாலங்கள் வரை பேச்சுவார்த்தை 
இடம்பெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையில் எழுத்துமூலமான சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் பெ. சிறீகந்தநேசன் தெரிவித்தார். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>