18

siruppiddy

மார்ச் 20, 2020

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய வர்களை யாழில் தேடுதல் ஆரம்பிக்கப்படலாமாம்

கொரோனா பேரிடரை ஒட்டிய நடவடிக்கையாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் எந்த நேரத்திலும் இலங்கை படையினர் தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் 
பேசப்பட்டுள்ளதாக  தெரிவிப்பு 
அத்துடன், புத்தளம், நீர்கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கை அறிவித்துப் படையினர் தேடுதல் நடவடிக்கையில்
 ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய சிலர் அந்த பகுதியில் இலங்கை படையினர் நடத்திய தேடுதலில் இருந்து தப்பித்து யாழ்ப்பாணத்தை ஒட்டிய பிரதேசத்தில் தங்கியிருப்பதாக அதிகாரிகள் தரப்பிற்கு சந்தேகம் உள்ளதாக தெரியவருகிறது.
அதையொட்டி யாழ்ப்பாணத்தில் சில சமயத்தில் எந்நேரத்திலும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடக்கலாம் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுப்படுத்தும் நோக்கில்   இன்று .20,03,2020,வெள்ளிக்கிழமை ஆறு மணியில்  இருந்து ,23,03.2020,திங்கள்கிழமை ,காலை ஆறுமணி வரை 
இலங்கை முழுவதும்  ஊரடங்குச் சட்டம் .
இதேவேளை, இன்று காலை வரை அமுலில் இருந்த சில பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் 9 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>