18

siruppiddy

ஜூலை 31, 2013

காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது:


காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படாத காரணத்தினால் வடக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் பிரச்சினை கிடையாது.
நாட்டுக்கு பாதகம் ஏற்படக் கூடிய எந்த விடயத்தையும் நான் செய்ய மாட்டேன். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நாடாத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பை கூட்ட முடியும்.
30 ஆண்டு போரின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மலர்ச்சியை உலக சமூகத்திற்கு எடுத்துக்காட்ட சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
தயா மாஸ்டரை வேட்பாளராக இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். வேட்பாளர் தெரிவுப் பணிகளை நான் மேற்கொள்ளவில்லை. அவற்றை அமைச்சர் டலஸ் அழப்பெருமவே மேற்கொண்டார்.
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஜூலை 29, 2013

தமிழரசுக் கட்சி வேட்புமனுத்தாக்கல்""


 
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசுக் கட்சி இன்று மதியம் 12 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யும் மூன்றாவது கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. -

ஜூலை 28, 2013

பு ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு கோதபாய


தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தள்ளார்.
தனிப்பட்ட நலன்களுக்காகவும் அச்சம் காரணமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிலர் உதவிகளை வழங்கி வந்தததாகத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வெளிநாட்டு சில சக்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வன்னி யுத்த களத்தில் சிக்கியிருந்த அப்பாவி பொதுமக்களை இந்தப் பிரச்சாரங்களின் மூலம் ஏமாற்றிவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட தருணத்தில் எந்தவொரு தரப்பினரும் குரல் கொடுக்கவில்லை எனவும் தற்போது முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலி ஆதரவாளர்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதே தமது முதன்மைக் கடமை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்காக எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கவில்லை எனவும் அவ்வாறு குரல் கொடுத்தமைக்கான ஓரு ஆதாரத்தையேனும் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமான தீர்மானங்களை எடுத்திருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள் தோற்கடிக்கப்படும் வரையில் காணி காவல்துறை அதிகாரங்களை வழங்குமாறு எவரும் குரல் கொடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறுவர் போராளி பிரச்சினைகளை எழுப்ப உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஒரு சிறுவர் கடத்தல் சம்பவமேனும் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜூலை 27, 2013

தமிழ் மக்கள் சொத்து தனியார் மயமாவதா?



கனடிய  தமிழ் மக்கள் கொதிப்பு தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தங்கள் குருதி சிந்தி, வியர்வை சிந்தி மக்கள் குழுமமாக தங்கள் பலமாக கனடிய தமிழ் மக்கள் தமிழ் ஊடகங்களை உருவாக்கினர்.

அந்தவகையில் உருவாக்கப்பட்டவையே கனடிய தமிழ் வானொலி (CTR), தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR). இவற்றை நிர்வகிப்பதற்கு நம்பிக்கையானவர்கள் எனக்கருதியவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தனர்.
அந்தவகையில் பொறுப்பில் இருந்தவர்;, இருப்பவர் தான் பிரபா செல்லத்துரை மற்றும் ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி ஆகியோர். அவர்கள் வகித்த பொறுப்புக்களுக்காக கணிசமான (ஒரு லட்சத்திற்கு மேற்ப்பட்ட) ஊதியத்தையும் இவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்வூடகங்களை முழுமையாக நிர்வகிக்க நம்பிக்கையானவர்களைக் கொண்ட நிர்வாகிகள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
தமிழர் சொத்தான இவ் ஊடகங்களை தமிழ் மக்கள் நலனுக்காகவே நல்ல முறையில் பேணுவார்கள், இதனை தமிழ் மக்கள் சொத்தாகவே தொடர்ந்தும் பேணுவார்கள், வரும் வருவாயை தமிழ் மக்கள் நலன்களுக்கு பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை அனைத்துத் தமிழ் மக்களிடமும் இருந்தது.
அதேவேளை இவ் மக்கள் சொத்தை மக்கள் பிரிதிநிதிகளைக் கொண்ட அறங்காவல் குழு ஒன்றின் கீழ் கொண்டுவருவதன் மூலம் இதனை யாரும் கையகப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்த முயற்சிகள் தொடர்ந்தும் மேற் கொள்ளப்பட்டன.
இந்நிலையிலேயே உரிமை கோரி பிரபா செல்லத்துரை வழக்கொன்றைத் தொடுத்தார். இந்த வழக்கே தற்போது தமிழர் சொத்தான ஊடகங்களின் உரிமையாளர் யார் என்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. கனடிய பல்கலாச்சார வானொலியின் (CMR) முழுமையான உரிமையாளர் நான் தான் என சொல்கிறார் ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி. இல்லை தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI) இல் இருந்து தான் கனடிய பல்கலாச்சார வானொலி வந்தது எனவே நான் தான் உரிமையாளர் என்கிறார் பிரபா செல்லத்துரை.
இது மக்கள் சொத்து என்ற ஒரே காரணத்துக்காக தங்கள் நேரம், பணம், அனைத்தையும் ஒதுக்கி இவ்வூடகங்களினூடாக எந்தவொரு வருவாயையும் எதிர்பார்க்காமல் மக்கள் பணி செய்ய பல நூற்றுக்கணக்கானோர் இன்று ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் சொத்து என நம்பித் தோள் கொடுத்த பல வர்த்தகர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை நிர்வாக குழுவில் இருக்கும் பலர் தொடர்ந்தும் மக்கள் பக்கமே உறுதியாக உள்ளனர். மக்கள் வழங்கிய பொறுப்பிற்கு பாத்திரமாகவும் உள்ளனர். பொறுப்பில் இருந்த இருக்கும் சிலர் தமது உறவினர்களை (முழுமையாக விபரம் விரைவில் வெளியிடப்படும்) இவ் நிர்வாக குழுவில் நியமித்துவிட்டு அவர்களை தம் பக்கம் வைத்துக் கொண்டே இன்று இவ் தமிழ் மக்கள் ஊடகங்களை தம் சொத்துரிமையாக்க முயல்கின்றனர். படித்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று நம்பியவர்களே இவ்வாறு சோரம் போவதே தமிழ் மக்கள் பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.
மக்கள் சொத்தில் ஏன் இந்த வெறி என்று சிலர் கேட்பது புரிகிறது. குறிப்பாக ஒரு பண்பலை வானொலி (FM) தற்போது பல மில்லியன் டொலர்கள் பெறுமதியானது என்பதே இதன் பின் உள்ள சூத்திரமாகும். மக்கள் நலனுக்கு பயன்பட வேண்டிய பணத்தை தங்கள் தனிப்பட்ட எதிர்காலத்தை வளப்படுத்தவும், தங்கள் குடும்பம் மட்டும் நல்லாக இருந்தால் போதும் என்று சிலர் நினைப்பதுவும் தான் முள்ளிவாய்கால் பேரவலம் போல் இங்கும் விரிகிறது.
அதிலும் வேதனையான விடயம் நம்பிக்கைக்கு துரோகமாக பண விடயத்திலும் பல மோசடிகள் நடந்துள்ளதாக தொடர்ந்தும் ஆதாரங்களுடன் வெளிவரும் செய்திகளே. அதுவும் பல லட்சம் டொலர்கள் பெறுமதியான மோசடிகள் என்கிறது தகவல்கள். இதில் வேதனையான விடயம் என்னவென்றால் சுருட்டியது போதாது என்று முழுமையாக கையகப்படுத்தவும் சிலர் முனைவது தான்.
ஒன்றுக்கு ஒன்று தம்மை வலுப்படுத்தி நிற்கும் என்று கருதப்பட்ட மூன்று ஊடகங்களும் இன்று தனியாக்கப்பட்டுள்ளன. இதில் கனடியத் தமிழ் வானொலி மட்டும் முழுமையான மக்கள் சொத்தாக்கும் நிலையில் உள்ளது. ஏனைய இரண்டும் தமிழ் விசன் இங்க் தொலைக்காட்சி (TVI), கனடிய பல்கலாச்சார வானொலி (CMR) என்பவற்றை தம் தனிப்பட்ட சொத்தாக்க முயற்சிகள் தொடர்கின்றன.
இதில் மாற்றத்தை ஏற்படுத்த பல்தரப்பாலும் எடுக்கப்பட்ட பல முயற்சிகளும் எந்தவித நல்ல பெறுபேறையும் எட்டவில்லை. அலைக்கழிப்பும், ஏமாற்றலுமாகவே இம்முயறிசகள் முள்ளிவாய்காலுக்கு பின்னரான நான்கு வருடமும் கழிந்துள்ளது. இந்நிலையிலேயே பொறுத்தது போதும் என்ற வகையில் கனடிய தமிழ் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். கனடிய வானொலி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடிதங்கள் அனுப்ப முனைந்துள்ளனர்.
கனடிய பல்கலாச்சார வானொலி (CMR) மீண்டும் தன் உரிமத்தை புதுப்பிக்க முனைந்துள்ள நிலையில் அதில் தான் தான் முழுமையான உரிமையாளர் என்று ஸ்ரெயின்ஸ்லெஸ் அன்ரனி கோருவதை முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறியுமாறு கோருகின்றனர்.
மக்கள் சொத்தான ஊடகத்தை மக்கள் சொத்தை உறுதிப்படுத்துமாறு வேண்டுகின்றனர். மக்களின் இப்பேரெழுச்சி மக்கள் சொத்தை காக்கும் எனத்திடமாக நம்புவோம். மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து வாழும் ஈனப்பிறப்பை கைவிடுவோம். மேலும் விபரமான விபரங்கள் விரைவில்

ஜூலை 26, 2013

வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்


கூட்டமைப்பின் தலையாய கடமை  சர்வதேசத்தினால் உற்று நோக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் பழுத்த பழங்களுக்கே முன்னுரிமை அளிப்பதை விடுத்து மாறாத கொள்கையும் உறுதியான வெற்றிவாய்ப்பும் படைத்த பல்கலைக்கழகத்தின் இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமை என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசத்திடமிருந்து விஸ்வரூபம் எடுத்துள்ள அழுத்தங்களினால் இலங்கை அரசாங்கமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களினை நடத்துவதற்கு முன்வந்ததன் தொடர்ச்சியாக இழுபறி நிலையிலிருந்த வடமாகாண சபைக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்றதும் மிக நம்பிக்கைக்கிரியதுமான ஒரு பெரும் கட்சியானது தனது வேட்பாளர் தெரிவு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலையிலேயே சென்று கொண்டிருக்கின்றது.
இதன் தொடக்கமாக பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர் தொடங்கி யாழ். மாவட்டத்திற்கான வேட்பாளர் தெரிவு வரை இந்நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
தமிழ்த் தேசியத்திற்கான குரலாக மக்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பெரும் கட்சியானது தனது கொள்கை நிலைபாடு என்ன? என்பதையும் கடந்து செயல்படுகின்றதா? என ஐயுறவைக்கின்றது இம்முறை வேட்பாளர் தெரிவு.
கடந்த காலங்களில் தமிழ் தேசியத்தை தூற்றித் திரிந்தவர்களுக்கு இடமளித்தும் தொடர்ந்தம் தமிழ் தேசியத்திற்காய் குரல் கொடுபோரை பாராமுகப்படுத்துவதும் இக் கட்சியின் தற்போதைய பாரம்பரியமாக மாறியுள்ள மையானது வருத்தப்பட வைக்கின்றது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழ் தேசிய நீராட்டப் பாதையில் தனது பங்களிப்பினை எவ்வாறெல்லாம் ஆற்றியிருந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை
தேசியப் பிரச்சினையில் மாறாத கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஸ்திரத்தன்மையினை இன்றுவரை மாறாப் பண்போடு காணலாம். தமிழ் பேசும் மக்களது தீர்வுத் திட்டங்களோடு யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பினை யாரும் இலகுவில் மறந்து விட முடியாது.
போரிற்குப் பின்னரான இன்றைய சூழ்நிலையில் இக்கட்சியானது சகல தமிழ்க் காட்சிகளினையும் இனைத்துக் கொண்டமையானது ஒரு பக்கம் பாராட்டுக்குரிய விடயமாகும். அதே நேரம் இந்த ஒற்றுமையானது தொடர்வதோடு இக்கட்சிக்கென உண்டான கொள்கை நிலைப்பாடுகளை தொடர்ந்தும் தக்கவைத்தக் கொள்வது இந்த ஒன்றினைவின் வெற்றியும் எமது எதிர்பார்ப்புமாகும்.
தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகமானது அன்றிலிருந்து இன்று வரை மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கையில் தமிழ் மக்களால் நேசிக்கப்படும் ஒரு பெரிய கட்சியானது யார் தேசியத்திற்குரியவர்கள் என்ற தெரிவு பல இன்னல்களிற்கு மத்தியிலும் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் யாழ். பல்கலைக்கழக கல்விச் சமூகத்தின் இளையோர்களை தனது தெரிவிற்கு உள்ளடக்க வேண்டியது அக் கட்சியின் தலையாய கடமையாகும்.
ஏனெனில் தமிழ் மக்களின் பிரதான குரல்களாக இருக்கும் ஒரு பெரும் அமைப்புகளில் இக்கட்சியும் யாழ் பல்கலைக்கழக சமூகமுமேயாகும்.
இந்த வகையில் சர்வதேசத்தினாலேயே உற்று நோக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் பழுத்த பழங்களுக்கே முன்னுரிமை அளிப்பதை விடுத்து மாறாத கொள்கையும் உறுதியான வெற்றிவாய்ப்பும் படைத்த பல்கலைக்கழகத்தின் இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க வேண்டியது இக்கட்சியினருக்கு நாம் விடுக்கும் அவசர வேண்டுகோளாகும்.
இதை கருத்திலெடுக்காத பட்சத்தில் வடமாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் மக்களும் யாழ்.பல்கலைக்கழ்க சமூகமும் மீள்பரிசீலனை செய்யவேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

லட்சம் உறவுகளின் உயிராயுதம்


 
குமாரபுரம் படுகொலைகள் தொடர்பான 4 சாட்சிகளை விசாரிக்க இருப்பதாகக் கூறி, சென்ற வாரம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது - இலங்கையின் அனுராதபுரம் உயர்நீதிமன்றம். குமாரபுரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் 1996ல் நடந்த படுகொலைகளுக்கு, 2013 வரை விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
குமாரபுரம் கிராமம் தான் என்றாலும், மூதூர் - கிளிவெட்டி பிரதான சாலை அதன் வழியாகச் செல்கிறது. அனேகமாக விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராமம். பெரும்பாலும் ஓலைக் குடிசைகள், ஒரு சில கல் வீடுகள். சற்றுத் தொலைவில், கிளிவெட்டித் துறைமுகம்.  மிக அருகிலேயே அல்லைக்குளம். குளத்தைச் சுற்றிலும் அடர்த்தியான மரங்கள். அனைத்து இனமக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்த ஊர். அப்படி வாழ விடுமா சிங்கள ராணுவம்?
1996 பிப்ரவரி 11ம் தேதி மாலை, கிளிவெட்டி ராணுவ முகாமைச் சேர்ந்த சிங்கள மிருகங்கள் குமாரபுரத்துக்குள் நுழைந்தன. முதல் துப்பாக்கிச் சத்தம், மாலை 4 மணிக்குக் கேட்டது. வெடிச்சத்தம் கேட்டதும், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரே ஓடி ஒளிந்தது. பலரும் ஊரின் பின்பக்கமாக ஓடிப் போய், அல்லைக்குளத்தை ஒட்டியுள்ள அடர்ந்த மரங்களின் கீழ் ஒளிந்துகொண்டனர். வீட்டிலிருந்து வெளியேறாதிருந்த கிராமவாசிகள்தான் ஆபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களில்  பலரும், ஏன் எதற்கு என்கிற கேள்விமுறையெல்லாம் இல்லாமல்  கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுமார் 2 மணி நேரம் தொடர்ந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 3 பேர். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3 பேர். 11 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் 8 பேர். படுகொலைகள் மட்டும் செய்தால் போதுமா... பாலியல் வன்முறையில் ஈடுபடாமல், சாந்தி... சாந்தி... சாந்தி... என்று 'புத்தம் சரணம் கச்சாமி'க்கு முடிவுரை எழுத முடியுமா பௌத்த மிருகங்களால்? 2 சிறுமிகளை 'கேங் ரேப்' செய்து சிறுகச் சிறுகச் சிதைத்தபிறகுதான் சாந்தி அடைந்தார்கள், புத்தனின் புத்திரர்கள்.
இரு சிறுமிகளில் ஒரு சிறுமிக்கு நடந்த கொடுமை,  நினைக்கும்போதே ஈரக்குலையை உலுக்குவது. அந்தக் குழந்தையின் பெயர் அருமைத்துரை தனலட்சுமி. 16 வயது நிரம்பாத பள்ளி மாணவி. 8 வயது தம்பி அன்ரனி ஜோசப்புடன் சைக்கிளில் வந்துகொண்டிருந்த தனலட்சுமி, துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய்  அருகிலிருந்த கடை ஒன்றுக்குள் ஒளிந்துகொண்டாள். கடைக்குள்ளிருந்து அவளை இழுத்துவந்த ராணுவ மிருகங்கள், எதிரிலிருந்த பால் சேகரிப்பு மையத்தின் கட்டடத்துக்குள் அவளைக் கொண்டு சென்றன. அடுத்த 2 மணிநேரம் அந்தக் குழந்தையின் அழுகுரலும் கதறலும் குமாரபுரத்தின் காற்றுவெளிகளைக் கலங்க வைத்தன.
அந்தச் சின்னஞ்சிறு மலரின் ஒவ்வொரு இதழையும் பிய்த்து எறிந்தது அந்தக் காட்டுமிராண்டிகளின் கூட்டம். கடைசியாக அந்தக் குழந்தையைச் சுட்டுக் கொன்றவன் குமார என்கிற சிப்பாய். நீதிமன்றத்தில், 'அவளை ஏன் கொன்றேன்' என்பதை அந்த மிருகம் சிங்கள மொழியில் விவரித்தது. "என்னுடைய முறை வந்தபோது தான் அவளைப் பார்த்தேன். அவளது நிலை பரிதாபகரமாக இருந்தது. அணிந்திருந்த உடை துண்டுதுண்டாகக் கிழிக்கப்பட்டிருந்தது. உடல் முழுக்க பல்லால் கடித்த காயங்கள், நகத்தால் கிழித்த காயங்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். அதைப் பார்க்கச் சகிக்கவில்லை எனக்கு. பரிதாபப்பட்டுத்தான் அவளைச் சுட்டேன்" என்றது அந்த மிருகம்.
ச்சீ... இவர்களெல்லாம் மனித ஜாதியில்தான் பிறந்தார்களா... அல்லது மகாவம்சக் கதைமாதிரி மிருகத்துக்கே பிறந்தார்களா? அந்த பதினாறு வயதுக் குழந்தை என்ன தவறிழைத்தது? இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு அந்தக் குழந்தையால் என்ன ஆபத்து வந்து தொலைத்தது? காட்டு மிருகங்களைக் காட்டிலும் கேவலமான அந்தச் சிங்கள மிருகங்களுக்கு, மகள் வயதிலான அந்தக் குழந்தையைச் சிதைக்கும் வக்கிரபுத்தி எப்படி வந்தது? தாய், மகள் என்றெல்லாம் பாராமல் புணரும் காட்டுமிருகங்களா அவை!
எங்கள் குழந்தை தனலட்சுமி - பாதிக்கப்பட்ட பல்லாயிரம் குழந்தைகளின் அடையாளம். அவளுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. வீடு கட்டிக் கொடுப்பதாக விளம்பரம் செய்துகொண்டிருக்கும் கூச்ச நாச்சமில்லாத  நாச்சிகள், முதலில் - அந்தக் குழந்தையைச் சிதைத்த மிருகங்களுக்கு ஏன் தண்டனை கொடுக்கவில்லை - என்று நண்பன் மகிந்தனிடம் கேட்கட்டும். அப்படிக் கேட்க முடியாவிட்டால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு மகிந்த மிருகத்தைக் கூப்பிட்டு பரிவட்டம் கட்டியதைப் போல், குமாரபுரம் மிருகங்களை அழைத்துவந்து - எந்த இடத்தில் பரிவட்டம் கட்டினால் பொருத்தமாக இருக்குமோ அந்த இடத்தில்  கட்டட்டும்.
என்னுடைய வாசக நண்பர்களுக்காக இதை எழுதவில்லை... நாசமாய்ப் போன இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றியே தீர்வது என்கிற வெறியோடு திரியும் நாச்சியப்பன்களுக்காகவும் ரங்கராஜன்களுக்காகவும் சுஷ்மா ஸ்வராஜ்களுக்காகவும் எழுதுகிறேன்..!
17 ஆண்டுகள் ஆகிறது குமாரபுரம் சம்பவம் நடந்து. 24 பேர் கொல்லப்பட்டு, 2 குழந்தைகள் கற்பழிக்கப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 மிருகங்களும் ஜாமீனில் வெளிவந்து சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. கிருஷாந்தி முதல் புனிதவதி வரை, ஆயிரக்கணக்கான குழந்தைகளைச் சிதைத்த மிருகங்கள் சுதந்திரமாக உலவுகின்றன. ருசி பார்த்த அந்த மிருகங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு மூலையில் முடங்கிவிடும் என்றா நினைக்கிறீர்கள்?
நாச்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர்களும், ரங்கராஜன்களுக்கு கம்யூனிஸ்டு தலைவர்களும், சுஷ்மாக்களுக்கு பாரதீய ஜனதா தலைவர்களும்  தான் எஜமானர்கள் என்று நம்பும் நாம் ஏமாந்த சோணகிரிகள். அந்த ரத்த பூமியில் சுற்றுலா நடத்தியபோது, இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவரைக் கூட சந்திக்க முடியாத அவர்களால், 'எங்களுக்கு சோறும் தண்ணியும் கிடைத்தால் போதும்' என்று சொன்னவர்களை மட்டும் சந்திக்க முடிந்ததென்றால், அவர்களது நிஜமான எஜமானர்கள் யார்?
அங்கே மறுசீரமைப்புப் பணிகளும் மேம்பாட்டுப் பணிகளும் வேகவேகமாக நடப்பதாகத் தானே விளம்பரம் செய்கிறது நாச்சி வகையறா! வீடு, ரோடு, தண்ணீர் - என்றெல்லாம் இவர்கள் காட்டும் கேரட்டைப் பார்த்தும், இங்கிருந்து யாரும் அசைவதாகத் தெரியவில்லையே! இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் ஏறக்குறைய 300 அகதிகள்தானே தமிழகத்திலிருந்து  தாயகத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்... ஏன்?  இவ்வளவுதூரம் விளம்பரம் செய்தும் - தாயகத்துக்குத் திரும்ப இலங்கை உறவுகள் ஏன்  விரும்பவில்லை என்று இவர்கள் யோசிக்கிறார்களா இல்லையா?
தமிழ்நாடே சொர்க்கம் - என்று அகதிகள் நினைக்கிறார்கள், அதனால்தான் தாய்மண்ணுக்குத் திரும்பாமல் இங்கேயே இருந்துவிட நினைக்கிறார்கள் - என்பது உண்மைக்கு நேர்மாறான  வாதம். சொர்க்கமாகவா இருக்கிறது தமிழ்நாடு அவர்களுக்கு!
ஒரு ஓட்டைப்படகில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு 8000 மைல் கடந்து சென்று ஆஸ்திரேலியா போய்விட முயல்கிற  அந்த உறவுகள், இருபத்தாறாவது மைலில் இருக்கிற தாய்மண்ணுக்குப் போக முயலவில்லையே, ஏன்?  இனப்படுகொலை செய்த மிருகங்களும் கற்பழிப்புக் குற்றங்களில் ஈடுபட்ட காமக் கொடூரர்களும் சுதந்திரமாக நடமாடும் ஒரு மண்ணில், சுயகௌரவத்துடன் எப்படி வாழ முடியும் - என்கிற அச்சம்தான் அவர்கள் தாய்மண்ணுக்குத் திரும்புவதைத் தடுக்கிறது.
குமாரபுரம் சம்பவத்தில், இவ்வளவு ஆண்டுகள் கழித்து 4 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதே கூட, 'நாங்களே விசாரிக்கிறோமாக்கும்' என்று சர்வதேசத்திடம்  காட்டிக்கொள்வதற்கான  கண்துடைப்பு நடவடிக்கையாகத்தான் இருக்கும். சம்மனை வெளிப்படையாக அனுப்பிவிட்டு, 'கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லிப்பாரு' என்று மறைமுகமாக மிரட்டுவதெல்லாம் சிங்கள இனவெறியர்களுக்கும், கோதபாயவின் கூலிப்படைகளுக்கும் கைவந்த கலை. ஒன்றரை லட்சம் பேரை சாட்சியமேயில்லாமல் கொன்றிருக்கும் சிங்களக் கொடூரர்களைப் பற்றியெல்லாம் பயப்படாமல், யாராவது வந்து சாட்சி சொல்லிவிடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்!
குமாரபுரம் இருக்கிற திருகோணமலை நீதிமன்றத்துக்கு சாட்சிகளை அழைக்காமல், சிங்கள மாவட்டமான அனுராதபுரம் உயர்நீதி மன்றத்துக்கு சாட்சிகளை வரச் சொல்வதே ஒரு மறைமுக அச்சுறுத்தல்தான்!
போர்க்களத்தில் இதுமாதிரி பாலியல் வன்முறைகள் சகஜம் - என்று மனசாட்சியே இல்லாமல் பேசியவர்கள், பேசுபவர்கள் ஆயிரமாயிரம் தனலட்சுமிகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால், தமிழீழ நீதிமன்றத்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாளில், இப்படியெல்லாம் திசை திருப்பப் பார்த்தவர்களும் சேர்த்துத் தண்டிக்கப்படுவார்கள்.
தமிழீழம் அமையாது, தமிழீழ நீதிமன்றம் மீண்டும் நடைமுறைக்கு வராது - என்றெல்லாம் பகல் கனவு கண்டு  கொண்டிருக்கிறார்களா அவர்கள்? தமிழீழம் நிச்சயமாக அமையும், தமிழீழ நீதிமன்றம் மீண்டும் முறைப்படி இயங்கும். இதுபோன்ற கொடிய குற்றவாளிகளை சிங்களப் பகுதியிலிருந்து எப்படி வெளியே கொண்டுவந்து கூண்டில் நிறுத்துவது - என்பதை அறிந்தவர்கள் தான் தமிழீழ காவல்துறையில் பொறுப்பில் இருப்பார்கள். அது என்ன, சிங்களக் காவல் படையைப் போன்றோ, பாதுகாப்புப் படைகள் போன்றோ பொறுக்கிகளைக் கொண்ட படையாகவா இருக்கும்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் மட்டுமல்ல எங்கள் இனத்தின் அடையாளம். தங்கள் இனச் சகோதரிகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த அவர்களது அர்ப்பணிப்பு உணர்வு, எதிர்த்த இனத்தின் பெண்களைக் கூட சகோதரிகளாகக் கருதிய பேராண்மை, அவர்களது நேர்மை, அப்பழுக்கற்ற ஒழுக்கம் - அனைத்தையும் அறிந்திருக்கிறது அகிலம். அவர்கள், அடுத்தவன் வீட்டில் கன்னம் வைக்கவும் மாட்டார்கள், தன் வீட்டுக்குக் கன்னம் வைத்தவனைத் தண்டிக்காமல் விடவும் மாட்டார்கள். அந்த நாள் நிச்சயம் வரும். அன்றுதான், சிங்கள மிருகங்களை டெட்டால் போட்டுக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் இந்திய நயவஞ்சகர்களுக்குப் புத்திவரும்.
இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான், தன்மானத்தோடும் தம் இனம் குறித்த பெருமிதத்தோடும் வாழ்ந்த எங்கள் ஈழத் தமிழ் உறவுகளை, இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகக் கொத்தடிமையாக வாழச் சொல்வீர்கள்? வானிலிருந்து குண்டு வீசிக் கொன்றாலும், கற்பழித்தே கொன்றாலும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போ - என்று போதிப்பீர்கள்? கொலைகாரர்களையும் காமக் கொடூரர்களையும் தண்டிக்காமல், 'நல்லிணக்கத்துடன் வாழுங்கள்' என்று புத்தி சொல்வீர்கள்? சிங்களக் காம வெறியர்களுக்கு நீங்கள் செய்கிற வேலைக்கு என்ன 'பெயர்' என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா?
கொன்றுகுவித்துவிட்டு, கற்பழித்துவிட்டு, ஒரு ஓட்டை வீட்டைக் காட்டி ஏமாற்றி - 'குற்றவாளிகளை விட்டுவிடுங்கள், பிழைத்துவிட்டுப் போகட்டும்' என்று பேரம் பேசுவீர்கள் என்றால்   உங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? கோதபாயவால் கொல்லப்படுவோம் என்பது தெரிந்தும் மனசாட்சியுடன் பேசினானே - லசந்த விக்கிரமதுங்க என்கிற சிங்களப் பத்திரிகையாளன்.... அவன் என்ன பேசினான் என்பது தெரியுமா உங்களுக்கு?
"இலங்கையின் வடகிழக்கில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் காரணமாக தமிழ்மக்கள் தங்களது சுயமரியாதையை இழந்து நிரந்தரமாக இரண்டாம் தர குடிமக்களாகவே  வாழவேண்டிய நிலை நீடிக்கிறது. போர் முடிந்தபிறகு, மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதன்மூலம் அந்த மக்களின் சீற்றத்தைத் தணித்துவிடமுடியும் என்று யாரும் கனவு காணக்கூடாது. போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். அதன் விளைவாக தமிழ் மக்களிடம் கசப்புணர்வும் வெறுப்புணர்வும் மேலும் அதிகரித்திருக்கும். அதைச் சமாளிப்பது எளிதல்ல! அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சினை, அனைத்துத் தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். எனது நாட்டின் பெரும்பான்மை சமூகமும் அரசும் இந்த பகிரங்கமான உண்மையை உணரவில்லையே என்கிற கோபமும் சலிப்பும் எனக்கு இருக்கிறது"........
2009 ஜனவரி 8ம் தேதி கொழும்பு வீதியில் கோதபாயவின் கூலிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட லசந்த, ஒருநாள் முன்னதாக,  ஏழாம் தேதியன்று எழுதிய மரண சாசனத்தின் ஒரு பகுதி இது. எந்த நேரத்திலும் தான் கொல்லப்படலாம் என்று எதிர்பார்த்து, மரணத்தை வரவேற்கக் காத்திருந்தவன் அந்த மனிதன். அந்த எதிர்பார்ப்புடன் தான் இந்த மரணசாசனத்தை எழுதினான். இந்த மரணசாசனம் மட்டும் இல்லையெனில், லசந்தவைப் புலிகள்தான் சுட்டுக்கொன்றார்கள் - என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்திருக்க மாட்டார்களா, இங்கேயிருக்கிற சிங்களத் தூதரகத்தின் எடுபிடிகளும் ஏஜென்டுகளும்! 
(2009 ஜனவரி 16ம் தேதி, சென்னையில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சிக்காக, லசந்தவின் மரணசாசனத்தை  ஒரே இரவில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரராஜன். அஞ்சலி நிகழ்ச்சியில் இந்தத் தமிழாக்கத்தைத் துல்லியமான தமிழ் உச்சரிப்போடு தெளிவாகப் படித்தவர், சத்யராஜ்.)
லசந்த 4 விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
1. இரண்டாம்தர குடிமக்களாகத் தமிழர்களை ஆக்குவதற்காகவே வடகிழக்கில் ராணுவக் குவிப்பு.
2. போர் ஏற்படுத்திய ரணங்களால், அவை ஏற்படுத்திய வடுக்களால் தமிழர்களின் வெறுப்பு பலமடங்கு அதிகரிக்கும்.
3. வீடு கட்டிக் கொடுத்து அந்த மக்களின் சீற்றத்தைத் தணித்துவிட முடியவே முடியாது.
4. மிக எளிதான அரசியல்தீர்வை எட்டியிருக்க வேண்டியவர்கள்,  சீழ்பிடித்த கொடுங் காயமாக அதை மாற்றிவிட்டனர்.
குவியல் குவியலாகக் கொல்லப்பட்டு, கொடூரமாகக்  கற்பழிக்கப்பட்டபின், சீழ்பிடித்த அந்த ரணத்துக்கு 'அறுவை சிகிச்சை' தான் ஒரே வழி என்பதைத்தான் லசந்தவின் தொலைநோக்குப் பார்வை சுட்டிக்காட்டுகிறது. அதனாலேயே, கோதபாயவின் கொலைநோக்குப் பார்வைக்கு அவர் இலக்காக நேர்ந்தது. நிலைமையை இப்படியெல்லாம் சிக்கலாக்கியதை  சிங்கள அரசும், சிங்கள மக்களும் புரிந்துகொள்ளவில்லையே - என்று கவலைப்படுகிறார் லசந்த. இந்தியா மட்டும் இதைப் புரிந்துகொண்டதா என்ன?
4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது லசந்த இதை எழுதி. இன்றைக்கும் அவர் சொன்னதைப்போல், வடகிழக்கில் ராணுவம் குவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது, தமிழர்கள் சுயமரியாதையை இழந்து கொண்டே இருக்கின்றனர். மறுசீரமைப்பு, மேம்பாட்டுப்பணி - என்கிற வெற்று  வார்த்தையை  லசந்தவும் நம்பவில்லை, வடகிழக்கு தமிழர்களும் நம்பவில்லை, தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிற தமிழ்ச் சொந்தங்களும் நம்பவில்லை.
திட்டமிட்டு நடந்த இனப்படுகொலையின் ஒரு பகுதிதான், வடகிழக்கில் நடந்த கற்பழிப்புகள். பாலியல் வன்முறைக்குப் பின், எங்கள் சகோதரிகளின் உடல்களை நடுவீதியிலேயே வீசிவிட்டுச் சென்றதுகூட, சிப்பாய்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடமாகத்தான் இருக்கவேண்டும். இதற்கெல்லாம் பதில் சொல்வதிலிருந்து சிங்கள அரசைக் காப்பாற்றுவதற்காகவே, பத்து பதிமூன்று என்று புதிய புதிய விவாதங்களை இலங்கையுடன் சேர்ந்து கிளப்பிவிடும் இந்தியா. கவனம் சிதைந்துவிடாமல், இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தும் வேலையை மட்டுமே நாம் தொடர்ந்து செய்தால் போதும். கற்பழிப்பு உள்ளிட்ட கொடிய ஆயுதங்களால் நிகழ்த்தப்பட்ட ஒரு  இனப்படுகொலையையே, தமிழீழம் அடைவதற்கான ஆயுதமாக மாற்றிவிட முடியும். ஒன்றரை லட்சம் உறவுகள் தங்கள் உயிரைக் கொடுத்து உருவாக்கிய ஆயுதம் அது. அதற்கு நிகரான ஆயுதம் வேறு எது?
'அப்பாவித் தமிழர்களின் உரிமைகளை நசுக்குவதையும் ஈவிரக்கமின்றி அவர்களைக் கொன்றுகுவிப்பதையும் வெறும் குற்றச் செயலாக மட்டுமே கருதமுடியாது, அது ஒட்டுமொத்த சிங்களச் சமூகத்துக்கும் பெருத்த அவமானம்' - என்றான் லசந்த. ஈழத் தமிழ் உறவுகளின் உரிமைகள் நசுக்கப்படுவதையும், ஈவிரக்கமின்றி அவர்கள் கொன்று குவிக்கப்படுவதையும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கே அவமானம் என்பதை நாம் உணரவேண்டும்.
வடகிழக்கில் மட்டுமே 90 ஆயிரம் விதவைகள்... அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளம் விதவைகள்.... என்கிற செய்தியைப் பார்க்கிற போதெல்லாம், மனசு பதைபதைக்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பாய் இருப்பதற்காகவாவது, நடந்த கற்பழிப்புகளுக்கு நியாயம் கேட்டாகவேண்டும். அவர்களைக் கூண்டில் நிறுத்த வேண்டும். (அவர்களைத் தூக்கில் போட வேண்டும் - என்றா நாம் கேட்கிறோம்... சட்டத்தின் முன்தானே நிறுத்தச் சொல்கிறோம்!)
நடந்த கொடுமைகளுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டால்தான், அடுத்தடுத்து கொடுமைகள் நடப்பதைத் தடுக்க முடியும். கொலையிலும் கற்பழிப்பிலும் தொடர்ந்து ஈடுபடுகிற ஒரு தெருப்பொறுக்கியைக் கைது செய்து கூண்டிலேற்றச் சொல்வதுதானே நியாயம்... அவனுக்குப் பயந்து, 'நடந்தது நடந்துவிட்டது, எங்கள் உயிரையாவது காப்பாற்றுங்கள்' என்றா  மகஜர் கொடுப்பீர்கள்? தனலட்சுமியைப் போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நியாயம் வழங்கக்கூட முடியாதென்றால்,  மற்றவர்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்கிவிட முடியும்?

ஜூலை 24, 2013

என்னிடமே கூடிய வேட்பாளர்கள் வடக்கு முதலமைச்சரை

 
 வடக்கு தேர்தலில்  என்னிடமே கூடிய வேட்பாளர்கள் இருக்கப் போகின்றார்கள். வடக்கு தேர்தலில் ஈபிடிபி சார்பில் போட்டியிட 20 பேருக்கு இடமொதுக்கப்பட்டு உள்ளது. அவ்வகையில் வடக்கிற்கான முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் என்னிடமே இருக்கும்.

ஜனாதிபதியுடன் பேசி நானே முதலமைச்சரை தெரிவு செய்வேன் என டக்ளஸ் தெரிவித்தார். யாழ்.பொதுசன நூலகத்தல் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் வடக்கு தேர்தலில் தாங்களும் போட்டியிடுவீர்களா என எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் ஆம் அல்லது இல்லை என பதிலளிக்கவில்லை. இது பற்றி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் வேளை அறிவிப்பேன். அது அதிர வைக்கக்கூடிய முடிவாக இருக்கும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜூலை 23, 2013

இரத்தக் கறைபடிந்த நாள் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்


1983 ஆம் ஆண்டு ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புத்தினம் இரத்தக் கறைபடிந்த நாள். பேரின வாதிகள் மிருகங்களாக மாறித் தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகுநாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொலையுண்ட 30 ஆவது ஆண்டு. 
இந்த இனப்படுகொலை அரங்கேறி 30 ஆவது ஆண்டை எட்டியதை முன்னிட்டு பிரிட்டனில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களிலும் பல்வேறு அனுஷ்டிப்பு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி முதல் சுமார் ஒருவார காலத்துக்கு நாடு முழுவதும், குறிப்பாகத் தலைநகரில் தமிழர்கள் உயிருடன் எரியூட்டப்பட்ட, கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, வீடுகள், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட, எரியூட்டப்பட்ட கொடூரமிக்க நிகழ்வுகள் அரங்கேறிய நாள். 
இந்தக் கொடூரங்களினால் 3 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 25 ஆயிரம் பேர் அங்கவீனர்களாயினர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் வீடுகள், வர்த்தக நிலையங்கள் இழந்து நிர்க்கதியாகினர். இந்த அவலங்களைச் சுமந்து 30 ஆவது ஆண்டு முன்னிட்டு பிரிட்டன் தமிழர் பேரவையினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இன்று மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரை, பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் முன்பாக இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 22, 2013

தேர்தலை முன்னிட்டு சிறீலங்கா காவல்துறை சோதனை!!



 தேர்தலை முன்னிட்டு சிறீலங்கா காவல்துறை சோதனை
யாழ். மாவட்ட செயலகத்தில் காவல்துறை சோதனை சாவடி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபைத் தேர்தல் காலங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்ற காரணங்களுக்காக யாழ். மாவட்ட செயலகத்தில் காவல்துறை சோதனைச் சாவடி அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் வடமாகாண சபை தேர்தல் வேட்பாளர்களுக்கான நியமனப் பத்திரங்கள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்படவுள்ளது.
இவ்வாறு கையளிக்கும் காலங்களில் அசம்பாவிதங்கள் எதுவுதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்க அதிபருக்கும் யாழ். மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் இந்து கருணாரட்ன இடையே யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி வேட்பாளர் நியமனங்கள் கையளிக்கும் முதல் நாளிலிருந்து செப்டெம்பர் மாதம் வரை காவல்துறை சாவடி தொடர்ந்தும்அமைந்திருக்கும் என இந்து கருணாரட்ண உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இந்த மாத இறுதியில்நவநீதம் பிள்ளை கொழும்புக்கு விஜயம் :


ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இந்த மாத இறுதியில் கொழும்புக்கு விஜயம் செய்வார் என கூறப்படுகின்றது. அவருடைய வருகை ஒக்டோபர் மாதம் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் முன்கூட்டியே வரக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அவருடைய வருகை தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை என எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்

ஜூலை 21, 2013

சிட்னியில் கறுப்பு யூலையும் கரும்புலி நினைவு நாளும்!


இல் அமைந்துள்ள மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடர் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழதேசியகொடி அவுஸ்திரேலியா கொடி ஏற்றப்பட்டதுடன் அகவணக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்கள் அணைவரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அடுத்ததாக இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் அஐந்தன் இளங்கோவன் அவர்கள் கரும்புலிகளின் தியாகத்தையும் அவர்களின் சாதனைகள் பற்றியும் இளையோர்களை உள்வாங்கக்கூடிய வகையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அவரை தொடர்ந்து திரு மயில்வாகனம் தனபாலசிங்கம் அவர்கள் கறுப்பு யூலை மற்றும் கரும்புலிகளின் நினைவுகளை சுமந்து சிறிய உரையாற்றினார்.
அடுத்ததாக ஆனா பரராஐசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலை நோக்கிய போராட்டத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரை தொடரும் அரசியல் செயற்பாடுகளை மிகவும் விரிவாக இளம் சமூகத்தினருக்கு விளங்கக்கூடிய வகையில் எடுத்துக்கூறினார். தொடர்ந்து இன்றய அரசியல் வேலைகளில் ஈடுபடுகின்ற இளையோர்களின் செயற்பாடுகள் மற்றும் செயற் திட்டங்கள் பற்றி திரு.சேரன் சிறிபாலன்இ திரு.கார்த்திபன் அருள் அவர்களும் விளக்கமாக விரிவுரையாற்றினார்கள்.
கொடியிறக்கலுடனும் உறுதிமொழி எடுக்கப்பட்டு இன் நிகழ்வு நிறைவு பெற்றது

படையினருக்கே அதிகளவான காணிகள் ஓதுக்கீடு-இடம் பெயர்ந்த ?


 
 மன்னார் மாவட்டத்தில் உள்ள பல காணிகள் படையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை அடையாளப்படுத்தும் வகையில் 'இது இராணுவத்தினருக்கு உரிய காணி ' என தமிழ் இஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பெயர் பலகை குறித்த காணிகளினுள் நாட்டப்பட்டுள்ளது.
-குறித்த காணிகள் மன்னார் -தலைமன்னார் பிரதான வீதி மன்னார் சௌத்பார் பிரதான வீதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.குறித்த காணிகள் பனை மரக்காடுகள் மற்றும் அடர்ந்த காடுகளிலேயே ஒதுக்கீடுகள் இடம் பெற்றுள்ளது. அதிகளவான தனியார் காணிகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கடந்த யுத்த காலத்தில் அதுவும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல ஆயிரக்கணக்காண தமிழ் முஸ்ஸிம் குடும்பங்கள் அகதிகளாக இந்தியாவிற்கும் ஏனைய இடங்களுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
-இடம் பெயர்ந்து சென்றவர்கள் தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.இடம் பெயர்ந்து சென்றவர்களை விட அதிகரித்த எண்ணிக்கையுடையவர்களாக அவர்கள் மீண்டும் சொந்த மண்ணுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள்.அவர்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு காணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரச காணிகள் படையினருக்கு ஒதுக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும் நகர பிரதேச அரசியல் வாதிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்

ஜூலை 20, 2013

இழுபறி கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் !


வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு இன்று 4 ஆவது நாளகவும் இழுபறி நிலையிலேயே முடிவடைந்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய இரண்டு மாவட்டங்களான மன்னார்,வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர் தெரிவு மற்றும் கட்சிகளுக்கான ஆசனப்பகிர்வுகள் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் தீர்மானிக்கப்படும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவு மற்றும், கட்சிகளிற்கு பகிரப்படும் ஆசனங்கள் தொடர்பிலாக 4 ஆவது நாளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு யாழ்.மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தனர்.
இக் கலந்துரையாடலினை முடித்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற கலந்துரையாடிலின் படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்காக கட்சிகளின் ஆசனப் பகிர்வு மற்றும் வேட்பாளர் தெரிவுகளும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கான கட்சிகளின் ஆசனப் பகிர்வு மற்றும் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் திடகாத்திடமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. நாளையும் நாங்கள் கூடிப் பேச உள்ளோம் என்று தெரிவித்திருந்தார்

ஜூலை 19, 2013

சிறுமி மீது வல்லுறவு தந்தை கைது



பதினொரு வயது நிரம்பிய சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தந்தையை அப்புத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனிமையில் சிறுமி வீட்டிலிருந்தபோது மது போதையில் வீடு வந்த தந்தை தன் மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக அப்புத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி, தியத்தலாவை

ஒன்றும் இல்லாத கழுததைகள் அமைச்சர்கள் ஆகிறார்கள்


 மாகாண சபைத் தேர்தல்களில் சில அமைச்சர்களின் சோற்று பொதிகளுக்காக வாக்குகளை கவரும், கபடத்தனமாக அரசியலை தோற்கடிக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மாத்தளை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். தாய் நாட்டுக்கு அழுத்தங்கள் வரும் போது, குரல் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை.  சிலர் வேலைவாய்ப்புகளை பெற எந்த தகுதியும் இல்லாத நிலையிலேயே அரசியலுக்கு வருகின்றனர்.
சில அமைச்சர்கள் அரசாங்க பணிகளுக்கு விண்ணப்பித்தல், அவர்களுக்கு கூலி தொழிலாளி பணியே கிடைக்கும். காரணம் அவர்களுக்கு எந்த கல்வி தகுதியுமில்லை. இவர்கள் அரசியலுக்கு வந்து வார்த்தை ஜாலங்களால் மக்களை கவர்கின்றனர்.
உண்மையான அரசியல்வாதிகள், தமது அறிவைப் பயன்படுத்தியே வாக்காளர்களுடன் பேசுவார்கள். உடலில் முக்கியமான உறுப்பு தலை பகுதி என்பது இந்த அரசியல்வாதிகளுக்கு தெரியாது. இதனை அவர்கள் பயன்படுத்துவதில்லை.  எந்த கழுதைக்காவது வாக்களித்து அரசியலை விமர்சிக்கின்றனர். இன்றும் அரசியல் விமர்சிக்கப்படுகிறது. கழுதைகள் இன்றும் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்குகளை வழங்கும் முன்னர் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

படத்தை தடை செய்க தமிழர் கட்சி அமைப்புகள் மாணவர்கள் கோரிக்கை!


 மெட்ராஸ் கபே என்ற இந்திப் படத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரி இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாகவும்தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாகவும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாகவும் மனு ஒன்று கையளிக்கப்பட்டது.
அப்போது நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகள் காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு பெரும்திரளாக நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளியாகவிருக்கும் மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தமிழர் பண்பாட்டு நடுவம் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர் முன்னரே பார்க்க வலியுறுத்தியும் அப்படத்தை தடை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கு கீழ்கண்ட மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாகவிருக்கும் 'மெட்ராஸ் கபே' என்ற திரைப்படம் ஈழ விடுதலையை ஆதரிக்கும் 'விடுதலை புலிகள்' அமைப்பை தீவிரவாதிகளாகவும் அதிலுள்ள தமிழர்களும் தீவிரவாதிகளாகவும் கேடயமாகவும் சித்தரித்திருப்பதாக அவர்கள் வெளியிட்ட முன்னோட்ட காட்சி மூலம் சந்தேகிக்கிறோம். தமிழர்களை தீவிரவாதிகளாக வெளி உலகிற்கு காட்ட முயலுவதை நாம் தமிழர் கட்சியோ தமிழ் மக்களோ தமிழர்களுக்காக இயங்கும் அமைப்புகளோ ஒரு போதும் ஏற்று கொள்ளாது.
ஏற்கனவே 'டேம் 999' திரைப்படத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை பரப்பியபோது சர்ச்சை ஏற்பட்டு அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது அறிந்ததே. அதே போல் 'விஸ்பரூபம்' என்ற படமும் தடை செய்யப்பட்டு சர்ச்சைகுரிய காட்சிகள் நீக்கப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது. அதே போல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்று இருக்குமேயாயின் தமிழர்கள் நலன் சார்ந்து அப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும். அப்படம் வெளியாவதற்கு முன் தமிழ் அமைப்பு நிர்வாகிகளுக்கு படம் திரையிட்டு காட்டப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் மேற்கொண்டு படத்தை தடை செய்ய நீதி மன்றத்தை அணுகலாம் என்றும் ஆலோசனை வழங்கினார். தமிழக முதல்வர் இந்த விடயத்தில் உடனே நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன. இப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் திரை அரங்கத்தில் உள்ள திரைகள் கிழிக்கப் படும் என்றும் மாணவர் அமைப்புகள் தெரிவித்தன. எனவே இப்படம் தமிழகத்தில் திரையிடா வண்ணம் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என தமிழ் அமைப்புகள் அறிவுறுத்தின

ஆணையாளரின் அனுமதியை வெளிநாட்டு தூதுவர்கள் பெறவேண்டும்


வெளிநாட்டு தூதுவர்கள் வடமாகாணத்திற்கு செல்வதானால் தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் பலர் தேர்தலை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு செல்வதற்கு முடிவு செய்துள்ளனர். அவர்கள் அவ்வாறு செல்வார்களாயின் தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர்கள் தூதுவர்களிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தூதுவர்களுடன் தொடர்பு கொண்டு தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியை பெற்று செல்லுமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   வடமாகாணத்தின் தற்போதைய உண்மை நிலைமைகளை தூதுவர்கள் அறிந்து விடக்கூடாது என்ற நோக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக் குழு ஒன்று  கொழும்புக்கு சென்று தற்போது யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஜூலை 18, 2013

பாதிப்புற்றோருக்கு 50 இலட்சம் ரூபா இழப்பீடு


மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியாக மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டது.
வவுணதீவு பிரதேச செயலகத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற வைபவத்தின்போது தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் 50 பேருக்கு இப்புனர்வாழ்வு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பதிகாரி கே.ஜீவா தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த கால போர்ச் சூழலிலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசம் வவுணதீவு என்பதும் குறிப்பிடத்தக்கது

ஜூலை 17, 2013

சிறுமி மரணம்: சோகத்தில் இணைய உலகம்

 
யுடியூப்பை கலக்கி வந்த அமெரிக்க சிறுமியான டாலியா ஜோய் கெஸ்டலானோ புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் உயிரிழந்த சம்பவமானது இணைய உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 6 வருடங்களாக புற்று நோயுடன் போராடி வந்த 13 வயதான டாலியா ஜோய் கெஸ்டலானோ, ஒப்பனை மற்றும் அலங்காரங்கள் தொடர்பாக யுடியூப்பில் காணொளிகளை வெளியிட்டு வந்தார்.{காணொளி}
அதன் மூலம் இணைய உலகில் பலராலும் விரும்பப்படும் ஒருவராக திகழ்ந்த அவரது யுடியூப் பக்கமானது 8 இலட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளது. மேலும் அவரது ஒவ்வொரு காணொளியும் இலட்சக்கணக்கான தடவை பார்வையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டாலியா காலமானதாக அவரது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டது.
இச்செய்தி வெளியாகியதும் அவரது ரசிகர்கள் டுவிட்டர் உட்பட சமூகவலையமைப்புகளில் தங்களது அஞ்சலி செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். இதுதவிர பிரபலங்களான எலன் டிஜெனிரஸ், மிலி சைரஸ், கெண்டால் ஜெனர், ஜஸ்டின் பைபர் ஆகியோரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்

ஜூலை 16, 2013

முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்! சம்பந்தன் அறிவிப்பு


 வட தமிழீழத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தது. இதில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டன.

மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் நீக்கப்படாத நிலையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பு தீவிரமடையக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் அவ்வாறான நிலையில் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக வட தமிழீழத்தில் நடத்தப்படவுள்ள தேர்தல் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்படுவதைத் தடுப்பதாயின் விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிளவை ஏற்படுத்த சரவணபவன்- வித்தியாதரன் கூட்டாளிகள் கடும்


சுய இலாபங்களுக்ககவும் அரசியல் சலுகைகளுக்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவினையும் விரிசல்களையும் ஏற்படுத்தும் தீவிர முயற்சிகளில் சரவணபவன்- வித்தியாதரன் கூட்டாளிகள் ஈடுபட்டிருப்பதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரத்தியேக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைகளுக்கு கிஞ்சித்தும் வளைந்து கொடுக்காதவரும் ஆளுமையும் மிக்கவரான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி வி விக்னேஸ்வரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளராக நியமிக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அரசாங்கம் பெரிதும் கலக்கம் அடைந்திருக்கும் அதேவளை, யாழ்ப்பாணத்தில் ஒரு குட்டி சர்வதிகார இராச்சியத்தை  ஏற்படுத்துவதற்கு துடித்துவரும் சரவணபவன்- வித்தியாதரன் கூட்டாளிகளுக்கும் இவரது  நியமன முயற்சிகள் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக, தனது முதலமைச்சர் கனவு பலிக்காத நிலையில், மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்கி, வட மாகாண சபை அரசாங்கத்தில் தமது கையை பலப்படுத்தும் தீவிர பிரயத்தனங்களை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன் ஒரு நடவடிக்கையாகவே, விக்னேஸ்வரனினது நியமனத்தை தடுக்கும் நோக்கில்இ தமது ஊடக பலத்தை பயன்படுத்திஇ கடந்த சில நாட்களாக விக்னேஸ்வரன் மீது சேறடிக்கும் தீவிர பிரசாரம் ஒன்றை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஸ்வரனினது பலமான யாழ்ப்பாண தொடர்புகளை மறைத்துஇ அவர் கொழும்பை சேர்ந்தவர் என்று ஒரு பிரதேசவாத கருத்தை கிளப்பி விட்டிருப்பதுடன், யாழ்ப்பாண தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்களை வைத்து , தமிழரசு கட்சிக்குள்ளும் தமிழ் தேசிய கட்சிக்குள்ளும் பிளவை  ஏற்படுத்தும் முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இது தவிர, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த சரவணபவன் மற்றும் வித்தியாதரன் ஆகியோர் , யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகைக்கெதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்திருக்கும் மானநஷ்ட வழக்கினை வாபஸ் பெறுவதற்கு உதவுமாறு கூறியதாகவும், இதற்கு மஹிந்த ராஜபக்ஸ முன்வைத்த நிபந்தனைகளை இவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை, திரு.சரவணபவன் மற்றும் திரு.வித்தியாதரன் ஆகியோர் தமது தரப்பு நியாயங்களை தெரியப்படுத்துமிடத்து, அதனை பிரசுரிப்பதற்கு பரிஸ்தமிழ்.கொம் தளம் அமைத்துக்கொடுக்கும்.

ஜூலை 15, 2013

காணாமல் போனவர்களது உறவினர்கள் அமைதி ஊர்வலம்!



 வவுனியா மேல் நீதிமன்றத்தில் காணமல் போனவர்கள் தொடர்பாக இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற வழக்கு விசாரனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாணத்தில் காணமல் போனவர்களது சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது.
குறித்த அமைதி ஊர்வலத்தில் மன்னார் வவுனியா கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் காணமல் போனவர்களது உறவினர்கள் சுமார் நூற்றுக்கணக்காணவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு முன் ஒன்று திரண்டு குறித்த அமைதி ஊர்வலத்தை மேற்கொண்டனர்.
இருதியாக ஊர்வலம் வவுனியா நகர சபை மண்டபத்தை சென்றடைந்தது.
-இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான சிவசக்தி ஆனந்தன் எஸ்.வினோ நோகராதலிங்கம்இவவுனியா நகர சபையின் உப தலைவர் ரதன் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார் மன்னார் பிரஜைகள் குழுவின் உப செயலாளர் புன்னியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
 
 
 
 
 
 
 
 
 

மீனவர் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சக்தியே?


தமிழக மீனவர் பிரச்சனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச சக்தியே காரணம் என்று ஸ்ரீலங்காவின் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
எல்லை தாண்டிவந்து மீன்பிடிக்குமாறு தமிழக மீனவர்களைத் தூண்டிவிடுவது மட்டுமன்றி, ஸ்ரீலங்காக் கடற்படையினர் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களையும் சுமத்தி வருவதாக ஸ்ரீலங்காவின் மீன்பிடித்துறை நீரியல் வள பிரதி அமைச்சரான சரத்குமார குணரத்ன குறிப்பிட்டார்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஸ்ரீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்

பேரவலத்தின் போது தமிழீழத்தில் வேவு பார்த்த றோ ?


ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பில் இந்தியாவுக்கும் தொடர்பிருந்தது என்பது பல்வேறு தரப்பினரதும் வாதம். அதனை, இந்தியாவும் வெளிப்படையாகவும் நேரடியாகவும் அல்லது உறுதியாக மறுக்கவில்லை.
இந்த நிலையில் 'மட்ராஸ் கபே' என்ற சர்ச்சைக்குரிய திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது. அதனை மகிந்த ராஜபக்சவுடன் தனிப்பட்ட உறவை பேணும் ஹிந்தி நடிகரான ஜோன் ஏப்ரகீம் தயாரித்துள்ளார்.

இந்தியாவில் ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடையத் தொடங்கியுள்ள இத்தருணத்தில், சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் இந்த திரைப்படம் வெளிவரவுள்ளதாக முதற்கட்ட செய்திகள் ஊடாக அறியமுடிகிறது.

முள்ளிவாய்க்கால் போர் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில தங்கியிருந்த றோ அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலுக்கு இணங்கவே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன
 

ஜூலை 14, 2013

முதலமைச்சருக்கான வேட்பாளரும் -

 
வடமாகாண சபைக்கான கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் யார் என்பது பற்றிய முடிவுகள் வெளிவராத ஒரு நிலையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
கிடைக்கப்பெறும் செய்திகளின் படி, மாவை சேனாதிராசாவிற்கும், ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் கூட்டமைப்பு இரண்டு பட்டிருப்பதாகத் தெரிகிறது.
தமிழரசுக் கட்சியும் உட்பட கூட்டமைப்பில் உள்ள ஏனைய எல்லாக் கட்சிகளும் மாவை சேனாதிராசாவையே முன்மொழிவதாகத் தெரிகிறது.
ஆனால், கட்சித் தலைமையும் சுமந்திரனும் ஓய்வு பெற்ற நீதியரசரை முன்மொழிவதாகத் தெரிகிறது. இருப்பினும், பெரும்பாலும் கதைத்துப்பேசி ஒரு சமரச முடிவுக்கே வரக்கூடும் என்று ஒரு தகவல் உண்டு. 
மாவையை ஆதரிப்பவர்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகின்றார்கள். முதலாவது அவர் கட்சிக்குள் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், ஏறக்குறைய கட்சியின் இரண்டாம் நிலையிலும் இருப்பவர்.
இரண்டாவது, அவர் கட்சியின் எழுச்சி, வீழ்ச்சிகளின் போது கட்சியோடு நின்றவர்.
மூன்றாவது, அவர் எளிதில் அணுகப்படக்கூடியவர். அதோடு மற்றவர்களோடு கூடிய பட்சம் அனுசரித்துப்போகக்கூடியவர்.
நாலாவது, கட்சிக்குள் அவருக்கே ஆதரவு அதிகமாயிருக்கிறது. எனவே, அவரை தெரிந்தெடுப்பதே ஜனநாயகமான ஒரு முடிவாயிருக்கும்.
ஐந்தாவது, அவரைக் கூட்டமைப்புக்குள் உள்ள எல்லாக் கட்சிகளும் முன்மொழிவதால் அவரைத் தெரிவு செய்வதன் மூலம் கட்சியின் ஐக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.
இவையெல்லாம் மாவையை முன்மொழிபவர்கள் கூறும் நியாயங்கள். இவை தவிர வேறொரு காரணமும் உண்டு. அதாவது,  மாவைக்கு மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் இருந்தபோதிலும் அவருக்குத் தலைமைத்துவப் பண்பு குறைவு என்றொரு பரவலான கருத்து உண்டு. அவ்விதம் தலைமைத்துவப் பண்பு குறைந்த ஒருவரை கட்சியின் இரண்டாம் இடத்தில் வைத்துப் பலப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில்  அவரைக் கையாள்வது இலகுவாயிருக்கும் என்று தமிழரசுக் கட்சியல்லாத ஏனைய கட்சிகள் சிந்திக்க இடமுண்டு. பதிலாக, கட்சிக்கு வெளியில் உள்ள ஒருவரை உள்ளே கொண்டு வந்து அவரை கட்சியின் இரண்டாம் இடத்தில் பலப்படுத்தினால் சிலசமயம் எதிர்காலத்தில் தமது இருப்பு கேள்விக்கிடமாக்கப்படலாம் என்றொரு அச்சமும் அவர்கள் மத்தியில் தோன்ற இடமுண்டு.
அதாவது, மாவையின் ஆளுமைக் குறுக்கு வெட்டு முகத்தோற்றம் அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், வெளியிலிருந்து வரக்கூடிய ஓராளுமையானது எதிர்காலத்தில் பதவியில் தன்னைப் பலப்படுத்திக்கொண்ட பின்னர் கையாளக் கடினமான வளர்ச்சிகளைப் பெறக்கூடும் அல்லது இவர்களிற்குச் சவாலாகவும் எழுச்சி பெறக்கூடும். எனவே, மாவையைத் தெரிவு செய்வதன் மூலம் தமது இருப்பைப் பலப்படுத்த வேண்டிய ஒரு தேவை மேற்படி கட்சிகளுக்கு உண்டு.
ஆனால், கூட்டமைப்பின் தலைமை வேறுவிதமாகச் சிந்திப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பான உரையாடல் ஒன்றின்போது சம்பந்தர் High Profile    ஐ உடைய ஒருவரே நியமிக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார். High Profile   என்று அவர் கருதியது மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி மிக்க உயர் தோற்றப் பொலிவுதான். சம்பந்தரும், சுமந்திரனும், அவர்களுடைய ஆதரவாளர்களும், குறிப்பாக, கொழும்பு வாழ் படித்த தமிழ் உயர் குழாத்தினரும் அப்படியொரு உயர் தோற்றப் பொலிவுடைய ஆளுமையே நியமிக்கப்பட வேண்டும் என்று வாதிடுவதாகத் தெரிகிறது. ஓய்வுபெற்ற நீதியரசருக்கு அத்தகைய தோற்றப் பொலிவொன்று உண்டு என்றும், அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. ஒரு முதலமைச்சரை வெளிநாட்டுத் தலைவர்களும், பிரதிநிதிகளும் சந்திக்கும்போது அவர் உயர் தோற்றப்பொலிவுடையவராக இருக்குமிடத்து அதற்கென்று ஒரு தனிப்பெறுமதி உண்டு என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். அண்மையில் மன்னார் ஆயர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த கருத்துக்களிலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது. அதாவது ராஜீய உறவுகளைக் கையாளவல்ல, வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஈடுகொடுக்கவல்ல ஓராளுமையே முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று.
இத்தகைய ஒரு பின்னணியில் இன்று இக்கட்டுரையானது யாருக்கு மேற்படி உயர் தோற்றப் பொலிவு அதிகமுண்டு என்ற விவாதத்தில் இறக்கப்போவதில்லை. மாறாக, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு அரசியல் சூழலில் கூட்டுக் காயங்களிலும், கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்குமொரு சமுகத்தைப் பொறுத்தவரை எது உயர் தோற்றப் பொலிவாக இருக்க முடியும்? என்பது பற்றியும் அத்தகைய உயர் தோற்றப் பொலிவைக் கட்டியெழுப்பும் தகைமைகள் எவையென்பது பற்றியும் பார்ப்பதே இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் ஒரு விசயத்தில் தெளிவாயிருக்க வேண்டும். மாகாணக் கட்டமைப்பு எனப்படுவது அப்படியொன்றும் சமஷ்டிக் கட்டமைப்பு அல்ல. வெளிநாட்டுத் தலைவர்கள், ராஜதந்திரிகளுடன் கலந்துபேசி முடிவுகளை எடுக்குமளவுக்கு அது ஒரு தன்னாட்சிக் கட்டமைப்பும் அல்ல. அது ஒரு நொண்டிக்குதிரை.  யார் ஏறி அமர்ந்தாலும் அது நொண்டி நொண்டித்தான் நடக்கும். மேலும் அதன் கடிவாளம் முதலமைச்சரிடம் மட்டும் இருக்கப்போவதில்லை. ஆளுநரிடமும் இருக்கும். இத்தகைய பொருள்படக் கூறிக் முதலமைச்சர் ஒரு அரைச்சாரதி தான். இப்படிப்பார்த்தால், உள்ளதோ ஒரு நொண்டிக் குதிரை அதற்கும் இரண்டு சாரதிகள் இந்த லட்சணத்தில் குதிரையோட்டி உயர் தோற்றப் பொலிவுடன் இருந்து எதைச் சாதிக்கப்போகிறார்;?
முதலில் அவர்  ஆளுநருடன் முட்டுப்படவேண்டியிருக்கும். முதலமைச்சர் ஓர் உயர் தோற்றப் பொலிவுடையவராக இருக்குமிடத்து அவர் ஆளுநருக்குச் சவாலாக விளங்க முடியும் என்பது ஒரு மிகை மதிப்பீடே.  ஏனெனில், எனது கட்டுரைகளில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல், ஆளுநர் ஒரு கருவி மட்டுமே. கர்த்தா அல்ல. பிரச்சினையாகவிருப்பது கட்டமைப்புத்தான். மாகாணக் கட்டமைப்பு மட்டுமல்ல. முழு இலங்கைத்தீவிலுடையதும் அதிகாரப் படிநிலைக் கட்டமைப்பே (Bureaucratic Structure)  முழுக்க முழுக்க இனச்சாய்வுடையதுதான்.
அந்த அதிகாரப் படி நிலைக் கட்டமைப்பின் பிரதிநிதிதான் ஆளுநர். எனவே, மிகப் பலவீனமான ஒரு அதிகாரப் பகிர்வு அலகை நிர்வகிப்பதற்கு எத்தனை பெரிய மகா ஆளுமை வந்தாலும் ஓர் எல்லைக்கு மேல் எதையும் சாதித்துவிட முடியாது. வேண்டுமானால், சிவில் சமூகம் கோரியிருப்பது போல வடமாகாண சபையை ஒரு பரிசோதனைக் களமாக மாற்றலாம். அதன் மூலம் மாகாண கட்டமைப்பின் போதாமைகளை வெளியுலகிற்கு நிருபித்துக்காட்டலாம். இந்த அடிப்படையில் வேண்டுமானால், ஓர் உயர் தோற்ற பொலிவுடைய முதலமைச்சர் தேவை என்று எடுத்துக்கொள்ளலாம்.
உலகில் உள்ள அதிகாரப் பகிர்வுக்குரிய கட்டமைப்புகளில் குறிப்பாக, அமெரிக்க, ஐரோப்பியக் கண்டங்களில் உள்ளவற்றுடன் ஓப்பிடுகையில், மாகாண சபையானது வரிசையில் மிகக் கீழ் மட்டத்தில்; தான் காணப்படுகிறது. அதிகம் போவான் ஏன்? இந்தியாவின் மாநிலக் கட்டமைப்பை எடுத்துக் கொள்வோம். அது மாகாண சபைகளை விட உயர்வானது. அது ஓர் அரைச் சமஷ்டிக் கட்டமைப்பாகும். அங்கெல்லாம் முதலமைச்சர்கள் உயர் தோற்றப் பொலிவுடன் காணப்படுகின்றார்களா? அல்லது அத்தகைய உயர் தோற்றப் பொலிவுடைய முதலமைச்சர்கள் தமது மாநிலத்திற்கும் - மைய அரசிற்கும்,  மாநிலத்திற்கும் - வெளிநாடுகளுக்கும் இடையிலான உறவில் எத்தகைய புதிய வழிகளைத் திறந்துவிட்டிருக்கிறார்கள்?
இந்திய மாநிலங்களின் நிலைமையும் வடமாகாண சபையின் நிலைமையும் ஒன்றல்ல என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஏனெனில், வடக்கிலிருப்பது பூரணமான ஒரு இயல்பு வாழ்க்கை அல்ல. அது ஒரு ''இயல்பற்ற இயல்புதான்'. அதாவது, ஆயுத மோதல்கள் முடிந்துவிட்டன. ஆனால், யுத்தத்திற்குக் காரணமான முலகாரணங்கள் அப்படியே கூர்கெடாது காணப்படுகின்றன. எனவே, இயல்பற்ற இயல்பினுள் வாழும் ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் எத்தகைய உயர் தோற்றப் பொலிவுடையவராக இருக்கவேண்டும்?
மாகாண கட்டமைப்பை ஏதோ பெரிய தன்னாட்சிக் கட்டமைப்பாக உருவகித்து, அதன் முதலமைச்சருக்கு இருக்க வேண்டிய உயர் தோற்றப் பொலிவைப் பற்றி விவாதி;க்கப்படுகிறது. இதை கவித்துவமாகக் கூறின்... பட்டு வேட்டிக்காகப் போராடிப் போய், கோவணத்துடன் நிற்கும் ஒரு கால கட்டத்தில் அந்தக் கோவணத்துக்குச் செய்யக்கூடிய சரிகை வேலைப்பாடுகள் குறித்து விவாதிப்பதைப் போன்றதே இது எனலாம்.
எனவே, ஒரு நொண்டிக் குதிரையை ஓட்டப்போகும் அரைச் சராதிக்கு இருக்க வேண்டிய தகைமைகளைக் குறித்தே இப்பொழுது விவாதிக்கப்படுகிறது. தனக்கென்று சுயாதீனமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடியாத ஒரு மாகாண சபையானது சுயாதீனமான ராஜிய உறவுகளை எதையும் பேண முடியாது. வெறுமனே சம்பிரதாய பூர்வமான சந்திப்புகளுக்கு மட்டுமே அங்கு இடமுண்டு. எனவே, நொண்டிக் குதிரையை ஓட்டப்போகும் அரைச் சாரதி யானையேற்றம் பயின்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் மொழிப்புலமையும், கல்வித் தகைமையும், சமூக அந்தஸ்தும் மட்டும் தலைமைத்துவத்தை உருவாக்கிவிடுவதில்லை. அண்மை நூற்றாண்டுகளில் மேற்கத்தேய ஜனநாயக பரப்புகளில் தோன்றிய பெரும்பாலான தலைவர்கள் கல்வித் தகைமைகளை உடையவர்கள் என்பதை இககட்டுரை ஏற்றுக்கொள்கிறது. கல்வித் தகைமையும் ஆங்கிலப் புலமையும் ஓரளவுக்குத் தொடர்புடையவைதான். அதேசமயம் கெடுபிடிப் போர் காலத்தில் சீன, ரஷ்ய போன்ற ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டிராத நாட்டின் தலைவர்கள் பலர் அவர்களுக்கு ஆங்கிலப் புலமை இருந்தபோதும் கூட உத்தியோகபூர்வ சந்திப்புகளின்போது மொழிபெயர்ப்பாளர்களுடன் வந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மேலும், தகவல் புரட்சியின் வேக வளர்ச்சியோடு ஆங்கிலமானது ஓர் தொடுப்பு மொழியாக (Link Language) வளர்ச்சி பெற்றுவரும் ஒரு பின்னணியில் உலகின் பெரும்பாலான தலைவர்கள் பிறமொழிப்புலமையுடன் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.
இயல்பான வாழ்க்கையை உடைய ஒரு ஜனநாயக அரசியல் சூழலில், உலகப் பொதுவான நியமங்கள் வழமைகளைப் பற்றி உரையாடலாம். ஆனால், ''இயல்பற்ற இயல்பினுள்' வாழும் ஒரு மக்கள் திரளைப் பொறுத்து அவ்வாறு எதிர்பார்க்கலாமா? இங்கு இயல்பற்ற இயல்பு எனப்படுவது அதிகம் அழுத்திக் கூறப்படவேண்டிய ஓர் அம்சமாகும். எல்லாம் இயல்பிற்குத் திரும்பிவிட்டதாக நம்பும் போதே உயர் தோற்றப் பொலிவைக் குறித்த உயர் குழாத்து அளவுகோலை பிரயோகிக்கும் ஒரு நிலையும் உருவாகியது. மாறாக இயல்பற்ற இயல்பினுள் வாழும் ஒரு மாகாண சபைக்கு தலைமை தாங்கப் போகும் ஒருவருக்கு எத்தகைய தகைமைகள் இருக்க வேண்டும்?.
நிச்சயமாக அது மேலிருந்து கீழ் நோக்கி நியமிக்கப்படும் ஒரு ரெடிமேட் தலைமையாக இருக்க முடியாது. மாறாக, அது கீழிருந்து மேல் நோக்கித் தானாக உருவாக வேண்டும். படிப்படியான உருவாக்கம் என்பது இங்கு மிக முக்கியமான ஒரு பண்பாகும். உலகின் செழிப்பு மிக்க எல்லா ஜனநாயகப் பரப்புகளிலும் இதைக் காண முடியும். அங்கெல்லாம் தலைமைகள் தொழில் சார் தகைமைகளோடு படிப்படியாக உருவாக்கப்படுகின்றன. மிக அடிமட்டத்திலிருந்து அர்ப்பணிப்பு, விசுவாசம், பற்றுறுதி போன்றவற்றுக்கூடாகவே தலைமைத்துவம் உருவாக்கம் பெறுகிறது. ஜனநாயக நாடுகளில் மட்டுமல்ல, சீனாவைப் போன்ற ஒரு கட்சி ஆட்சி முறைமைக்குள்ளும் தலைமைத்துவம் எனப்படுவது படிப்படியாக வார்த்து எடுக்கப்படுவதுதான்.
தனது பெரும் செயல்களின் மூலமும், தனது மக்களின் நலன்களைப் பொறுத்த வரை விட்டுக்கொடுப்பற்ற அதேசமயம் நடைமுறைச் சாத்தியமான முடிவுகளை எடுப்பதன் மூலமும்,  அந்த முடிவுகளின் பொருட்டு எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதன் மூலமும் இறந்த காலத்திலிருந்து படிப்பினைகளைப் பெறுவதன் மூலமும்தான் ஒரு தலைமைத்துவம் கீழிருந்து மேல் எழுகிறது. தனது ஜனங்களின் வலியை உணரவும், பகிரவும் கூடிய இயத்தைப் பெற்றிருப்பதால் அது ஒரு ஜனவசியம் மிக்க தலைமைத்துவமாக இருக்கும். தனது ஜனங்கள் மத்தியில் ஜனவசியம் மிக்க தலைமைதான் வெளியாரின் மத்தியிலும் உயர் தோற்றப் பொலிவுடன் மிளிர முடியும். அதாவது, உள்ளுரில் ஜனவசியமாக இருப்பது வெளியரங்கில் உயர் தோற்றப் பொலிவாக அதன் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பெறுகிறது.
ஆனால், கூட்டமைப்பின் தலைமைத்துவமானது அப்படிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. அப்படிச் சிந்திக்க விரும்பவில்லையா? அல்லது சிந்திக்க முடியவில்லையா? என்பதே இப்போதுள்ள கேள்வி. சிந்திக்க முடியவில்லை என்பது ஒரு யதார்த்தம் என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஏனெனில், கூட்டமைப்பானது முழு அளவில் சுயாதீனமாகச் செயற்படத் தொடங்கி நான்கு ஆண்டுகளே ஆகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை அது கிளிநொச்சியிலிருந்து கிடைத்த உத்தரவுகளை நிறைவேற்றும் ஒரு கட்சியாகவே தோற்றமளித்தது. ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பின் நிழலாக அது காணப்பட்டது. ஆனால், அந்த அமைப்பின் வீழ்ச்சிப் பின் அந்த நிழலே மையமாக செயற்பட வேண்டிய ஒரு அரசியல் சூழல் உருவாகியது.
எனவே,; கூட்டமைப்பானது கடந்த நான்காண்டுகளாகத் தான் தனது சொந்தக் காலில், சொந்தப் பலத்தில் நின்று சுயமுடிவுகளை எடுத்து வருகிறது. அந்த முடிவுகள் ஆகக்கூடிய பட்சம் ஜனநாயகமானவைகளாக இல்லாமலும் இருக்கலாம். இப்பொழுதும் கூட முதலமைச்சருக்கான ஒரு வேட்பாளரைக் குறித்த சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள்  உட்சுற்று வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்லத் தயாரில்லை. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகக் கட்டமைப்பானது மேலும் பலப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் தலைவர்கள் கீழிலிருந்து மேலுருவாகும் ஒரு பாரம்பரியமும் வளர்த்தெடுக்கப்படும். இல்லையெனில் மேலிருந்து நியமிக்கப்படும் தலைமைத்துவங்களையே தேடவேண்டியேற்படும்.
பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, இத்தகவல்கள் சரியாக இருந்தால் விக்னேஸ்வரனுக்கு இரண்டு ஆண்டுகளும், மாவைக்கு இரண்டு ஆண்டுகளும் தருவது என்று ஆலோசிக்கப்படுவதாகக் கூற்ப்படுகிறது. கீழிருந்து மேலெழுந்த ஒருவரும், மேலிருந்து கீழ் நோக்கி நியமிக்கப்பட்ட ஒருவரும்.
இது எதைக் காட்டுகிறது என்றால், கூட்டமைப்பின் ஜனநாயகக் கட்டுமானம் மேலும் பலப்படுத்தப்பத்தப்பட வேண்டும் என்பதைத்தான். அப்படிச் செய்தால்தான் கூட்டமைப்பு காலாவதியாவதையும் தடுக்கலாம். அதோடு கீழிலிருந்து மேல் நோக்கி எழும் தலைவர்களையும் உருவாக்கலாம்.
ஈழத்தமிழர்கள் சமயம் பார்த்தோ சாதி பார்த்தோ பிரதேசம் பார்த்தோ தமது தலைமைகளைத் தெரிந்தெடுப்பது இல்லை என்பதை ஏற்கனவே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். .  பெருமளவுக்கு இந்துக்களாகவுள்ள ஈழத்தமிழ் வாக்காளர்கள் அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவராகிய செல்வநாயத்தை ஈழத்துக் காந்தி என்று அழைத்து தலைவராக ஏற்றுக்கொண்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். மேலும் தமிழ் நாட்டைப் போலன்றி ஈழத் தமிழர்கள் மத்தியில் வாரிசு அரசியல் பாரம்பரியம் கிடையாது என்பதையும், மேற்படி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்;டியிருக்கிறார்கள். செயல்தான் ஈழத்தமிழர்களுக்கு முக்கியம். சாதியோ, மதமோ, பிரதேசமோ, சமுக அந்தஸ்தோ, கல்வித் தகைமையே அல்ல.  அர்ப்பணிப்புமிக்க பெருச்செயல்களை யார் செய்தாலும் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் செழிப்பான இதயம் ஈழத்தமிழர்களிற்கு உண்டு. அத்தகைய அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களே ஜனவசியம் மிக்க தலைவர்களாக மேலெழுகிறார்கள்.
அவர்களுக்கு அவர்களுடைய மக்களால் வழங்கபபட்ட ஆணையே  பிரதான பலம். உலகின் செழிப்பான  ஜனநாயகப் பாரம்பரியங்கள் எல்லாவற்றிலும்  இதுதான் நடைமுறை. அதாவது மக்கள் ஆணையே தலைமைத்துவத்திற்குள்ள பிரதான பலம்.
கூட்டமைப்புக்கும் தமிழர்கள் அப்படியொரு ஆணையை வழங்கியிருந்தார்கள். ஒரு முறையல்ல. மூன்று முறை வழங்கியிரு;க்கிறார்கள்.. அந்த மக்கள் ஆணையே கூட்டமைப்பிற்கு அனைத்துலக அரங்கில் அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது. போருக்குப் பின்னரான கூட்டுக்காயங்களிலும்,  கூட்டு மன வடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு மக்கள் கூட்டம் வழங்கிய ஆணையது. கூட்டமைப்பானது அந்த மக்கள் ஆணையின் பெறுமதியுணர்ந்து முடிவுகளை எடுக்குமா?

அதிகாரம் குறித்த விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது*


 13ம் திருத்தச் சட்டத்தின் காவல்துறை அதிகாரம் குறித்த விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த விடயத்தில் எவ்வித இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரங்களை பகிர்வதனால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படாது எனவும் மாறாக அது பிரச்சினைகளையே ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஜூலை 13, 2013

தேர்தலுக்கா சாவகச்சேரியில் சு.க. அலுவலகம்

 
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சாவகச்சேரி பிரதேசத்திற்கான அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா இந்த அலுவகத்திற்கச் சென்று அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.
வடக்கில் தமிழ்மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க இந்த சுதந்திர கட்சியின் அலுவலகம் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஜூலை 12, 2013

இடம்பெற்ற பேருந்து விபத்தில் 3 பேர் பலி 18 பேர் காயம்!


மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பொலனறுவை மன்னம்பிட்டிய பகுதியில் விபத்திற்கு உள்ளானதில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து சமுர்த்தி உத்தியோகத்தர்களை பயிற்சிக்காக கொழும்பிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பேருந்தே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று அதிகாலை பேருந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிக்கொண்டதில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காவல்துறையினர் அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்!-

-
சிறீலங்கா காவல்துறையினர் அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிறீலங்காவில் ஊழல் மோசடிகள் தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறீலங்காவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக 64 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.நாட்டின் மிக மோசமாக ஊழல் மோசடிகள் இடம்பெறும் நிறுவனமாக பொலிஸ் திணைக்களத்தை மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க முடியும் என 72 வீதமான மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு சர்வதேச ரீதியில் பொதுமக்களிடம் ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்களை திரட்டி அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

சிறுமிகள் துஷ்பிரயோகம்-சாரதி கைது!


சிறீலங்காவின் தென் மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லத்தின் சாரதியை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அந்த இல்லத்தைச்சேர்ந்த சிறுமிகள் நால்வரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவர் இல்லத்தின் முச்சக்கரவண்டியின் சாரதியான 46 வயதான நபர் மதுபாவனை மற்றும் புகைத்தல் பயன்படுத்துவது தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே குறித்த நபர் சிறுவர் இல்லத்தைச்சேர்ந்த நான்கு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள தகவல்கள் வெளியாகின என்று காவல்துறை தெரிவித்தனர்

முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் இழுபறி இன்றும்


வடமாகாண சபைத்தேர்தலுக்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவுசெய்வது இழுபறியில் முடிந்தமையினால் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படாமல் நேற்றையக்கூட்டம் நிறைவடைந்தது.
இன்றும் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் கடும் பிளவுகள் இடம்பெற்று வருவதாக ஆளும் கட்சியின் நாடாள மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்

காந்திகொலை மறுவிசாரணை கோரும் மனு ஒத்திவைப்பு!


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மறு விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞர் சாந்தகுமரேசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இந்திய மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் 27-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

85 ஆயிரம் மக்கள் வாக்களிக்க முடியாத நிலையில்


வடமாகாணத்தில் 85 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க முடியாது. தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர்களிடத்தில் இல்லை என்று கபே அமைப்பின் அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
மனித உரிமைகள் நிலையமும் கபே அமைப்பும் இணைந்து நேற்று வியாழக்கிழமை நடத்திய தேர்தல் தொடர்பான பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய போதே இவ்வாறு கூறினார்.
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளது.
வடமாகாண சபை தேர்தல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரமாட்டார்கள். அவர்கள் வராத பட்சத்தில் அந்த பணியினை கபே அமைப்பு நிறைவேற்றும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெறுவதற்காக இந்த பகுதியில் தேர்தல் கண்காணிப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண மக்கள் எதிர்நோக்கம் பிரச்சினை என்னவென்றால் வடமாகாண சபை தேர்தல் நடத்துவதுதான் சுயாதீனமான தேர்தலை நடத்துவதற்கு ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் கபே அமைப்பு வலியுறுத்தி வந்துள்ளது.
வடக்கு மக்களின் குரலை கேட்பதற்கு சர்தோஷம். வடமாகாண தேர்தல் நடத்தக்கூடாது என்று தெற்கிலும் போராட்டங்கள் நடாத்தப்பட்டன. வடக்கில் இருக்கும் மக்களில் வாக்களிக்க முடியாதவர்களும் வாக்களிப்பதற்கு கபே பல்வேறு அழுத்தங்களை செய்து வந்துள்ளது.
வடமாகாண சபை தேர்தலின் பிரதான சவால் என்னவென மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். வடக்கிலுள்ள 85 ஆயிரம் பேரிடம் தகுதியான அடையாள அட்டைகளோ வாக்களிக்கும் ஆவணங்களோ இல்லை. இந்நிலையில் அவர்கள் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளார்கள்.
தேர்தல் என்பது யாருக்கு? தேர்தல் என்பது வாக்களிப்பது என்பது மட்டுமல்ல. தேர்தல் ஏற்பட்ட சூழல் எவ்வாறு இருக்கின்றது என்பது தான் முக்கியமானதாகும். ஏனைய பிரதேசங்களில் எவ்வாறு மக்கள் சுதந்திரமாக வாக்களித்தார்களோ அவ்வாறான சூழல் வடக்கிலும் ஏற்படுத்தவேண்டும்.
யாழ். மக்கள் யுத்தத்தினால் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்கள். அந்த அனுபவங்கள் நிறுத்தப்படவேண்டும். தேர்தல் என்பது மக்கள் தமது தெரிவை சுதந்திரமாக எடுத்துச் சொல்வதேயாகும். இந்நிலையில் தேர்தலில் சம்பந்தப்பட்டவர்கள் போட்டியிடுபவர்கள் என்ன நோக்கத்துடன் தேர்தலில் குதிக்கின்றார்கள் என்பது பற்றிய சவால்கள் மக்களுக்கு தெரியவில்லை என்றார்.
சர்தேச கண்காணிப்பின்றி நல்ல முறையில் தேர்தல் நடைபெறுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கையில் தேர்தல்களின் போது பல்வேறு தரப்பினர் பல்வேறு பிரச்சினைகளை முகம்கொடுத்துவருகின்றனர்.
இந்த பிரச்சினைகளிற்கு முகம் கொடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும். சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு மக்கள் தமது குரலை வெளிப்படுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.
இதன் போது தேர்தல் காலங்களில் முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அந்த முறைகேட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் அச்சுறுத்தல்களில் இருந்தும் மக்கள் பாதுகாக்கப்படுவார்களா? அவ்வாறான முறைப்பாடுகளின் போது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
பல்வேறு தேர்தல்களின் போது அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கபே அமைப்பினால் எமது செயற்பாட்டினை திருப்தியாக முன்னெடுத்து வந்துள்ளோம்.
சமூகத்திற்கு சுயாதீன ஊடகம் தேவைப்படுகின்றது. வடக்கில் தேர்தல் ஒரு தூர நோக்கு என அரசியல் வாதிகள் நினைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் கூட கபே அமைப்பு வடக்கில் தோதலை நடாத்த வேண்டுமென்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. மக்களுக்கு சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு யார் எந்த நோக்கத்திற்கு தேர்தலை குழப்புகின்றார்கள் என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளைதெற்கில் எவ்வாறு மக்கள் சுதந்திரமாக வாக்களித்தார்களோ அந்த நிலையில் யாழ். மற்றும் வடக்கு மாகாணத்திற்கு அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றதாகவும் அவர் கூறினார்

நாடாளுமன்றத்தின் மற்றுமொரு குழு சிறீலங்கா செல்ல !


 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றொரு குழு, விரைவில் ஸ்ரீலங்கா செல்லுமென தெரிவிக்கப்படுகிறது.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு இரண்டு வாரங்களில் இலங்கை வருமென ஸ்ரீலங்கா தொழிலாளர் கொங்கிரஸை சேர்ந்த அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
சோனியா காந்தியுடன் அண்மையில் தாம் நடத்திய சந்திப்பின்போது, மலையக பகுதியில் இடம்பெறவுள்ள வீடமைப்புத் திட்டம் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை செல்வார்களென தீர்மானிக்கப்பட்டதென அவர் கூறினார்.அந்தக் குழுவில் யார் செல்வார்களென அறிவிக்கப்படவில்லை

திருமலை நிலக்கரி மின் நிலையத்தால் மக்கள் சுமை ஏற்படும்!


திருகோணமலை சம்பூரில் அமைக்கப்படவுள்ள நிலக்கரி மின் நிலையம், காரணமாக நாட்டிற்கும், மக்களுக்கும் பெரும் பொருளாதார சுமை ஏற்படுமென ஸ்ரீலங்காவின் வட மத்திய மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவரான சந்திம கமகே தெரிவித்தார்.
அந்த நிலையம், 33 சதவீத வினைத்திறனுடன் செயற்படுமென ஆய்வொன்று காட்டுவதாகவும், நிலக்கரி மின் நிலையங்கள் குறைந்தது 40 சதவீத வினைத்திறனை கொண்டிருக்கவேண்டுமெனவும் அவர் கூறினார்.
அந்த அனல் மின் நிலையம் கட்டப்பட்டால், ஸ்ரீலங்கா மின்சாரசபைக்கு, ஆண்டுதோறும் 7.63 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுமெனவும், மின் பாவனையாளர்கள் ஒவ்வொருவரும், ஆண்டுதொறும் ஆயிரத்து ஐந்நூற்று இருபத்தைந்து ரூபாவை மேலதிகமாக செலுத்தவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
மின் நிலையத்திற்கு பத்தாயிரம் ஏக்கர் காணிகள் தேவைப்படுமெனவும், அதற்காக, ஆயிரத்து ஐந்நூறு குடும்பங்கள் இடம்பெயர்க்கப்படவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.இந்தியச் செய்திகள்

ஜூலை 11, 2013

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கும் செல்ல நேரிடலாம் - ?


13வது அரசியல் அமைப்புத் திருத்தம் - சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கும் செல்ல நேரிடலாம் - கெஹெலிய
 3வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டால்,  சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கும் செல்ல நேரிடலாம் என  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனநாயக முறையின் அடிப்படை சந்தர்ப்பமான தெரிவுக்குழுவில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் தெரிவுக்குழு முதல் முறையாக கடந்த 09 ஆம் திகதி கூடியது ஆனாலும் அதில் சர்வஜன வாக்கெடுப்பு குறித்து கருத்துக்கள் இன்னும் முன்வைக்கப்படவில்லை.
13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக பொது இணக்கப்பாட்டு வருவதற்கு, நாடாளுமன்ற தெரிவுக்குழு மிகவும் சிறந்த மேடை என ஜனாதிபதி இந்திய பாதுகாப்புச் செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பின் போது கூறியுள்ளார்.
அதற்கு இந்தியாவின் வரவேற்பும் கிடைத்துள்ளது. தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்ள வேண்டும் என இந்திய அழைப்பு விடுத்துள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்

அரச வழங்களை பயன்படுத்தி தேர்தல் மோசடியில்


வடமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா அரசாங்கம் முப்படைகள் மற்றும் அரச வழங்கள் அனைத்தினையும் பயன்படுத்தி தேர்தல் மோசடியில் ஈடுபடத்திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
புணர்வாழ்வு முகாங்களில் இருந்து வெளியேறி சமூகத்துடன் இணைந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்றவர்களை மிரட்டியும் வாக்கு மோசடி செய்ய சிறிலங்கா இராணுவத்தினர் முனைந்து வருகின்றனர்.
சிவில் பாதுகாப்புக் குழுவில் உள்ள 3 ஆயிரம் பேரையும் இணைத்துக் கொண்டு சிறிலங்கா இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுடைய விபரங்களை திரட்டி வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வடபுலத்தில் நிலைகொண்டுள்ள சிறிங்கா இராணுவத்தினர் முகாங்களுக்குள் முடக்கப்பட வேண்டும்.
வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்றல் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறக் கூடாது, தமிழர்களுடைய ஆளுகைக்குள் வடமாகாணம் சென்றுவிடக்கூடாது என்று பயத்திலேயே சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்துடன் இணைந்து இவ்வாறான செயற்பாடுகளை செய்து வருகின்றது.
மேலும் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒருக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபா வடமாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களுக்காக அதிகாரிகளால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 15000 துவிச்சரக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல செயற்பாடுகள் வடமாகாணத்தில் தற்போ நடைபெற்று வருகின்றது.
ஆனாலும் ஜனநாயக ரீதியில் நடைபெறுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சையமாக வெற்றி பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடற்றொழிளார் உண்ணா விரதப்போராட்டம்


முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களை வெளியேற்ற வலியுறுத்தி மாவட்டக் கடற்றொழிலாளர் சமாசத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட உண்ணா விரதப்போராட்டம் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றது.
மாவட்டத்தின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் வெளி மாவட்ட மீனவர்களை வெளியேற்றவேண்டும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளைக் கட்டுப்படுத்தப்படவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த திங்கள் கிழமை உண்ணா விரதப் போராட்டம் ஆரம்பிக் கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட வர்த்தகர் சங்கத்தை கூட்டிய உண்ணா விரதப்போராட்டத்திற்கான ஏற்பாட்டாளர்கள் தமக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்று காலை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதற்கு விளக்கமளிக்கவேண்டும் என புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திய சிலர் பரவலாக வர்த்தகர்களை அச்சுறுத்தி யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ,தற்கிடையில் நேற்றய தினம் உண்ணா விரதத்தில் ஈடுபட்டி ருந்தவர்கள் மற்றும் மக்களுக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது திங்கள் கிழமை திருகோணமலைக்கு வருகை தரும் கடற்றொழில் அமைச்சர் றாஜி தசேனாரத்ன செவ்வாய் கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தருவார் என குறிப்பிடப் படுகின்றது. எனவே அவர் வரும் நேரத்தில் உண்ணா விரதம் நடத்துவது பற்றியே சிந்தித்தோம் என உண்ணா விரதத்தில் ஈடுபட்டவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அமைச்சருக்காகவும், உங்கள் நலன்களுக்குமாகவா போராட்ட ங்களை நடத்தினீர்கள் என கொதித்துப் போயினர். ,தனையடுத்து விடயம் ஒருவாறாக சமாளிக் கப்பட்டு விட்டது. எனினும் மக்கள் ஆத்திரத்துடன் வெளியேறி விட்டனர். உண்ணா விரதப்போர hட்டக் காரர்கள் இதனையடுத்து அரசாங்க அதிபரைச் சந்தித்துப் பேசினர்.
இதன்போது அமைச்சர் றாஜிதசேனாரத்ன, ஓட்டுக்குழுத் தலைவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தம்முடன் பேசியதாக கூறியதுடன், கோரிக்கைகளை எழுத்து மூலமாக தமக்கு வழங்குமாறும் கேட்டுக்கொ ண்டார். இதனையடுத்து உன்மைகள் வெளிவந்து போராட்டம் பிசு பிசுத்துப்போன நிலையில் 2.30 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், மற்றும் வினோ ஆகியோர் ஆர்ப்பாட்டக் காரர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்