18

siruppiddy

அக்டோபர் 31, 2018

காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் சிப்பாயின் சடலம்

யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் 
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய நுழைவாசலுக்கு அருகில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த 19 வயதுடைய அபயரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்ந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் 
ஒப்படைக்கப்பட்டுள்ள
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


அக்டோபர் 27, 2018

நாளைபுதிய அமைச்சரவை பதவியேற்கலாம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர்களாக
 நியமிக்கப்படுவோரின் 
பட்டியலை குறித்து ஜனாதிபதியும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கலந்துரையாடி தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
நாளைய தினம் பதவியேற்கும் அமைச்சரவை 30 அமைச்சர்களை கொண்டிருக்கும் எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


அக்டோபர் 08, 2018

தலைவரின் தாயாரினை இறுதி வரை பராமரித்த வைத்திய அதிகாரி இயற்கை எய்தியுள்ளார்

விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயாரை இறுதி வரை பராமரித்து வந்த வைத்திய அதிகாரி மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் இயற்கை எய்தியுள்ளார்.வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் (ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி) இன்று காலை இயற்கையெய்தியிருந்தார்.
சிறந்த வைத்திய நிபுணரான, அவர் இலங்கை இந்திய இராணுவ காலப்பகுதியில் வடமராட்சி பிரதேச மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய சேவையாளராவார்.விடுதலைப்புலிகளின் தலைவரின் நன்மதிப்பினை பெறறிருந்த மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நேசித்து ஆத்மாக்களில் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது.
அமரர் வேலுப்பிள்ளை இலங்கை இராணுவ தடுப்பு முகாமில் மரணமடைந்திருந்த நிலையில் அநாதரவாகியிருந்த பார்வதியம்மாளை அழைத்து வந்து தனது வைத்தியசாலையில் மரணம் வரை மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் பராமரித்து மருத்துவ சேவைகளையும் வழங்கியிமிருந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>