18

siruppiddy

செப்டம்பர் 22, 2020

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் ஒளி பிரிவு

 

யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புற்றுநோய் ஒளி கதிர் பிரிவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் (ஆர்பாட்ட ம் ) போராட்டத்தால் ஒளி கதிர் சிகிச்சை பெறமுடியாத அபயா  நிலை உள்ளதாக 
புற்றுநோயாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கும்   நிலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒளி கதிர் பிரிவு  சிறந்தது   இயங்க  உதவி அரசாங்கசபைபனிமனை  (பிரதச சபை)  கிராமசேவகர் பிரிவும்
 இணைத்து இதற்க்கு ஓர் 
நடவடிக்கைஎடுக்குமாறு மிகத்தாழ்மையுடன்
 வேண்டிநிற்கின்றோம்  நன்றி 
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


செப்டம்பர் 20, 2020

நார்வே முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெம் .ராஜீவ் கொலை வழக்குபற்றி கூறியுள்ளார்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நார்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி வந்திருந்ததாகவும்
 அவர் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எவரும் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்களோ, இந்தியாவோ, அமெரிக்காவோ, சீனாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ 
அல்லது வேறு எவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இலங்கைக்கு கூட்டாட்சி தீர்வு தருவதே அமைதி நடைமுறையின் நோக்கமாக இருந்தது. பெரும்பான்மை தமிழர்கள், அதனால் மகிழ்ந்திருப்பார்கள் என்று எரிக் சொல்ஹெம் கூறியிருந்தார்.
 
நிலாவரை.கொம் செய்திகள் >>>