18

siruppiddy

அக்டோபர் 22, 2020

விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு 21-10-20.புதன்கிழமை
 அன்று வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், நாடு கடந்த தமிழீழ அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த கோரிக்கையினை தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு (Proscribed Organisations Appeal Commission) பரிசீலித்ததன் அடிப்படையில் குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.நாடுகடந்த
 தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.இந்த வழக்கானதுதிறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து 
மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.
இரகசிய விசாரணை போது இங்கிலாந்து 
மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை
 எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த 
தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.இதனை 
பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை 
முன்னெடுத்திருந்தது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



அக்டோபர் 21, 2020

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம்

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனவும் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியும் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு 
வழங்கியுள்ளது.
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விடுக்கப்பட்டிருந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018இல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இந்த வழக்கில், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என ஈழத்தமிழரசு சார்பில் 
வாதிடப்பட்டது.
அந்தவகையில், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தவறானது என இன்று(21) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>