18

siruppiddy

ஜனவரி 13, 2020

செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தேசிய தைப்பொங்கல் தின விழா இரத்து

நாடு­த­ழு­விய ரீதியில் அனைத்து மாவட்­டங்­க­ளையும் ஒன்­று­ப­டுத்தி கடந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்த தேசிய பொங்கல் தின விழா இம்­முறை இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. தேவை­யற்ற
 செல­வு­களை 
குறைக்கும் பட்­சத்தில் மூன்று மாவட்­டங்­களில் உள்ள தமிழ் இளைஞர், யுவ­தி­களை உள்­ள­டக்­கிய விதத்தில் பொங்கல் தின நிகழ்­வினை நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என இளைஞர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்தார்.இது தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் 
குறிப்­பிடும் போது;
தேசிய நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்டு கடந்த அர­சாங்கம் மூன்று இனத்­த­வர்­களின் பிர­தான பண்­டி­கை­க­ளுக்கு 25 மாவட்­டங்­க­ளிலும் உள்ள இளைஞர், யுவ­தி­களை ஒன்­றி­ணைத்து தேசிய நிகழ்­வாக அந்த பண்­டி­கை­யினை கொண்­டா­டி­யது. இதனால் எவ்­வித 
பயனும், மாற்­றங்­களும் ஏற்­ப­ட­வில்லை மாறாக
 வீண் செல­வுகள் மாத்­தி­ரமே மிகு­தி­யா­கின. உல­கவாழ் இந்­துக்கள் நாளை மறு­தினம் தைப்­பொங்கல் பண்­டி­கை­யினை கொண்­டா­ட­வுள்­ளார்கள். இதனை தேசிய நிகழ்­வாக கடந்த அர­சாங்கம் மேற்­கொண்ட விதத்தில் கொண்­டாட அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதா
 என்ற கேள்வி எழு­கின்­றது.
25 மாவட்ட இளை­ஞர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தைப்­பொங்கல் பண்­டி­கை­யினை கொண்­டாட தீர்­மா­னிக்­க­வில்லை. இதனால் பாரிய செல­வுகள் ஏற்­ப­டு­கின்­றன. அதனால், வடக்கு மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளிலும் உள்ள 
இளை­ஞர்­களை
 ஒன்­று­ப­டுத்தி பொங்கல் தின நிகழ்­வினை கொண்­டாட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.இந்­நி­கழ்­விற்கு செல­வாகும் நிதியினை ஒவ்­வொரு இளைஞர் கழக அபிவிருத்திக்கும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இனி 
இடம்பெறவுள்ள அனைத்து பண்டிகைகளிலும் இம்முறைமையினைக் கையாள்வோம் எனவும் இளைஞர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க மேலும் தெரிவித்துள்ளார் .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெடிகுண்டால் ஜேர்மனியில் 14,000 பொதுமக்கள் அவசர வெளியேற்றம்

ஜெர்மன் நாட்டில் உலகின் இடம்பெற்ற இரண்டாம் உலக போரின் பொழுது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளினால் பாவிக்கபட்ட சுமார் இரண்டு பெரும் குண்டுகள் மீட்கப்பட்டன.
ஒவ்வொரு குண்டினது நிறை சுமார் 250 கிலோ ஆகும் ,இந்த குண்டு கண்டு பிடிக்க பட்டத்தை அடுத்து அந்த குண்டு மீட்க பட்ட பகுதியில் இருந்து சுமார் 14.000 மக்க அவசரமாக வெளியேயற்றபட்டனர்
 .இதனால் அங்கு பெரும் கலவரமும் ,பதட்டமும் ஏற்பட்டது 
.குண்டூ செயல் இழக்க வைக்க படையினர் குண்டை செயல் இழக்க செய்தனர்.75 ஆண்டுகளின் பின் இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளனவாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




ஜனவரி 08, 2020

சேனரத்புரத்தில் மருத்துவ சான்றிதழ் பெறச் சென்ற மாணவிகளுடன் பாலியல் சில்மிஷம் செய்த மருத்துவர்

அம்பாறை மாவட்டம் உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர், நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த
 குற்றச்சாட்டில் உஹன பொலிசாரால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள் நால்வர் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெறவிருந்த ஒரு போட்டியில் கலந்து
கொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர்.
விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கச் சென்ற நான்கு சிறுமிகளே இவ்வாறு மருத்துவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் சக மாணவர்களிடம் தெரிவித்த பின்னர் வகுப்பாசிரியரின் கவனத்திற்கு 
கொண்டு சென்றனர். இதனை அடுத்து மருத்துவச் சான்றிதழ் வழங்குவது எனும் போர்வையில், துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நடந்துகொண்ட வைத்தியர் கைது செய்யப்பட்டதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட 18, 17, 14 வயதுடைய 04 சிறுமிகள் முறைப்பாடு வழங்கியதை அடுத்து பொலிசார் உடனடியாக மருத்துவரை கைது செய்து தடுப்பு காவலில் வைத்து விசாரித்த 
நிலையில், குறித்த மருத்துவரை அம்பாறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், கைது
 செய்யப்பட்ட மருத்துவரை எதிர்த்து அப்பகுதியில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் ஒன்று கூடியமையினால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, வைத்திய பரிசோதனைகளுக்காக பாதிக்கப்பட்ட மாணவிகள் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜனவரி 05, 2020

மர்ம நபர் பாரிஸ் மாநகரில் மேற்கொண்ட வெறியாட்டம் இருவர் ஆபத்தான நிலையில்

பாரிஸ் நகரில் வெடிக்கும் ஆடை அணிந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் நான்கு பேர் இரையாகியுள்ளனர்.குறித்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,
 இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு, தலைநகரின் மத்திய பகுதியிலிருந்து ஏழு மைல் தொலைவில் உள்ள Villejuif புறநகரில் இந்த இரத்த வெறியாட்டம் நடந்துள்ளது.
குறித்த பூங்காவில் கத்திக் குத்து மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதேவேளை கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளாகி சுமார் நான்கு
 பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரான்ஸ் தலைநகரிலிருந்து தெற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வில்லேஜுஃப் நகரில் உள்ள பூங்காவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு , சந்தேக நபரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>