18

siruppiddy

செப்டம்பர் 05, 2018

மக்களின் பேருந்தும் மீது மஹிந்தவுக்காக படையெடுத்து வந்து தாக்குதல்!!

மக்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதுளை பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலக்கத்
 தகடுகள் அற்ற கனரக வாகனம் ஒன்றில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த பேருந்தில் நாடாளுமன்ற 
உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பு – கடவத்தை பிரதேசத்தில் 
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிரணி இன்று கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை
 நடத்த உள்ளனர்.
கொழும்புக்கு வரும் அனைத்து வீதிகளையும் முடக்கும் வகையில், கொழும்பை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 04, 2018

மண்கும்பாண் பகுதியில் நான்கு மோட்டார் குண்டுகள் மண்ணுக்குள் மீட்பு

யாழ்ப்பாணம் மண்கும்பாண் பகுதியில் அரச காணி ஒன்றில் நான்கு மோட்டார் குண்டுகள் மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மக்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து அடுத்து சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கை இடம்பெற்று
 வருகின்றது
நிலாவரை.கொம் செய்திகள் >>>