18

siruppiddy

டிசம்பர் 03, 2016

தமிழீழ தேசிய தலைவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் ..!

உண்மை தகவல் : இறந்து போன சிங்கள ராணுவ வீரனின் உடலை தலைவர் பிரபாகரன் உடல் என்று ஏமாற்றிய இந்திய மற்றும் இலங்கை அரசுகள், அண்ணனது இருப்பை மறுக்கப் படாத பாடுபடும் சிங்கள அடிவருடிகளிடம் ஒரு கேள்வி? முள்ளிவாய்க்காலில் யாரோ ஒரு வீரனின் உடலைக்காட்டி தலைவன் என்றீர்கள்??
தலைவரின் உடலை புகைப்படம் எடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி தராமல் ராணுவ வீரர்கள் எடுத்த புகைப்படத்தை மட்டும் வெளியிட்டது ஏன் ? அவசர அவசரமாக அந்த உடலை எரித்தது ஏன் ?
தலைவர் இறந்துவிட்டார் என்றால் விடுதலைபுலிகள் மீதான தடையை இதுவரை நீக்காதது ஏன் ?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து இந்திய நீக்காதது ஏன் ?தகட்டு எண்ணையும் (0.001) போட்டுக்காட்டினீர்கள். அருகில் அவரது கைத்துப்பாக்கி இருந்தது என (CZ-100)வகை கைத்துப்பாக்கியையும் காட்டினீர்கள். முட்டாள்களே…. பொய் புனைவது என்றாலும் ஓரளவு ஆராய்ந்து கூறவேண்டும் .
 கருணாவை வைத்து நிறுவினால் அனைத்தும் சரியாக இருக்குமென பொய்க் கணக்கு போட்ட சிங்களமே. தலைவன் அருகே குறைந்தது ஓரிரு மணித்துளிகள் தான் கருணா இருந்திருப்பான் வருடக்கணக்கில் அவரருகே இருந்தவர்களை வைத்து நிறுவ முற்ப்பட்டிருந்தால் முகத்தில் ஈ ஆடியிருக்காது உங்களிற்கு.
0.0001 என்ற இலக்கத்திற்கு உடையவார் தற்ப்போது பாதுகாப்பாக இருப்பதனால் தான் இந்த பதிவை நிறுவுகின்றேன். ஜெகன் மாஸ்ரரின் தட்டு இலக்கம் தான் 0.0001 இவர் தான் தலைவரது பாதுகாப்பு அணிக்கான சாரதிகளை உருவாக்குபவர். தலைவர் தகடு அணிவதில்லை என்பது கூட துரோகி கருணாவிற்கு தெரியவில்லை அந்தளவிற்கு தலைவனை நெருங்க வாய்ப்பில்லை அவனுக்கு.
CZ-100 வகை கைத்துப்பாக்கிகளை மெய்ப்பாதுகாவலர் அணியினர்கூட பயன்படுத்துவதில்லை. 2000 ஆண்டிற்கு பின்னர் சிறப்புத்தளபதிகள் கூட பயன்படுத்துவதில்லை. துறைசார் பொறுப்பாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் தான் பயன்படுத்தினார்கள்.
ஏன் கருணாகூட அதைத்தான் பயன்படுத்தியிருந்தான் (எத்தனை தடவை அதனை வாங்கி வைத்த பின்னரே தலைவனை சந்திக்க அனுமதித்திருப்போம்) இன்றுவரைக்கும் நம்பத்தகுந்த சாட்சியங்களை முன்வைக்க தடுமாறும் சிங்களமே, கூடவே துதிபாடும் அடிவருடிகளே… தலைவன் நிழலை கூடவே தொட இயலாத நீங்களா தலைவனது இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்திருப்பீர்கள்.“ கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏறோபிளேன் ஓடு்ம் என்பானாம்” என்ற கதையாய் இருக்கு. சிங்கள ராணுவமே!!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







நவம்பர் 30, 2016

வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கும் இனி பென்சன்!

வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு தை மாதம் முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள
 தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு தை மாதம் முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதேவேளை பயிற்றப்பட்டவர்களை வெளிநாட்டு தொழிலுக்கும் அனுப்பும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவிருக்கின்றோம் .
முன்னதாக வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலின்போது
 தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி முதல் ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த திட்மிட்டுள்ளோம்.
பங்களிப்பு முறையிலான இந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களிடம் இருந்து 2வருடங்களுக்கு 50ஆயிரம் ரூபா பங்களிப்பாக பெற்றுக்கொள்ளப்படும் என்றும் 
அவர்குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



நவம்பர் 27, 2016

லண்டனே நடுங்கிய மாபெரும் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு - (காணொளி)

லண்டனில் உள்ள நகரில் எக்ஸெல் மண்டபத்திற்கு அருகாமையில், உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒலிம்பிக் பார்க்கில் மாவீரர் தின நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. கடும் குளிரையும்
 பொருட்படுத்தாது மக்கள் இதில் கலந்துகொண்டு தமது வீர வணக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மும்முறை கடல் புலிகளை நினைவுகூரும் வண்ணம் , அருகில் உள்ள ஆற்றில் படகில் கடல் புலிகளின் கப்பல் போல ஒரு படகு வடிவமைக்கப்பட்டு , அதிலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.
சுமார் 30,000 ஆயிரத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இங்கே புடைசூழ்ந்துள்ளார்கள். லண்டன் மத்திய நகரமே அதிர்ந்துகொண்டு இருக்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


............................................... 

நவம்பர் 26, 2016

பிரான்ஸ் லாச்சப்பலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்தநாள்

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆம் ஆண்டு பிறந்தநாள் 
 26-11-2016. இன்று சனிக்கிழமை, மாலை நடைபெற்றது  .
பிரான்சில் தமிழர்களின் வர்த்தக மையமாகத் திகழும் லாச்சப்பலில் மிகக் கோலாகலமாக   Rue Cail, Rue Perdonnet, Rue Fbg St.denis என்ற வீதிகள் சந்திக்கும் மையப்பகுதியில் இக்கொண்டாட்டம்
 நடைபெற்றது 


நவம்பர் 11, 2016

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தொடரும் கைதுகள்: திண்டாடும் உறவினர்கள்!

யாழ்.பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிரூசன் என்ற இளைஞர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை(10) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து யாழ். மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களில் மாத்திரம் யாழ்.குடாநாட்டில் மாத்திரம் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள், பொலிஸாருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் யாழ்.குடாநாட்டில் அடுத்தடுத்து தொடர்ச்சியான கைதுகள் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பிலிருந்து வருகை தந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் என அடையாளப்படுத்துவோரால் கடந்த 05ஆம் திகதி மூன்று இளைஞர்களும், 06ஆம் திகதி மூன்று இளைஞர்களும், 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கைதுகளுக்கான சரியான காரணங்கள் இதுவரை தெரியப்படுத்தப்படாமையால் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் உறவுகள் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



நவம்பர் 06, 2016

அம்பாந்தோட்டை ஒரு குட்டி சீனாவாக மாற்றப்படப்போகிறதாம! .

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கைக்குச் செல்லப் போகிறது. இந்த மாத நடுப்பகுதியில் சீனா நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளவுள்ள உடன்பாட்டுக்கமைய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்கு சீன நிறுவனத்திற்கு
 விற்கப்படவுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் மாத்திரமின்றி மத்தள விமான நிலையமும் கூட அவ்வாறுதான் சீன நிறுவனத்திற்கு கைமாற்றப்படவுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உரிமையை சீன நிறுவனத்திற்கு கைமாற்றுவதன்மூலம் கிடைக்கும் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை கொண்டு ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட கடனை அடைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சீனாவிடம் பெறப்பட்டுள்ள இத்தகைய கடன்களை அடைப்பதற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்று எட்டு பாரிய திட்டங்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் சீனாவிடம் பெற்றுள்ள மொத்தக் கடன் தொலை 8 பில்லியன் டொலராகும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமான நிலையத்தையும் கையில் வைத்திருப்பதால் எந்த இலாபமும் கிடைக்காது. கடனையும் செலுத்த முடியாது என்பதை உணர்ந்தே அரசாங்கம் சீனாவுடன் இத்தகைய இணக்கப்பாடு ஒன்றுக்குச் சென்றுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களையும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியில் இருந்தபோது வெள்ளை யானைத்திட்டங்கள் என்றே 
கூறி வந்தார்.
பொருளாதார ரீதியாக பயனற்ற திட்டங்களாகவே இவை இரண்டும் இருக்கும் என்ற கடந்த கால கணிப்பீடுகள் சரியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் தான், எப்படியாவது இதனைச் சீனாவின் தலையில் கட்டிவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, அதற்கான காய்நகர்த்தல்களில் இறங்கியிருக்கிறார் ரணில் 
விக்ரமசிங்க.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சினாவிற்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தின் அடிப்படை நோக்கமே இந்த திட்டங்களை வைத்து சீனாவின் கடன்களில் ஒருபகுதியை அடைப்பது குறித்து பேச்சு நடத்துவதுதான்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே சீனாவின் கடனை அடைப்பதே பிரதான பிரச்சினையாக இருந்தது.அதனால் அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட நிதிக்காக அறவிடும் வட்டியை குறைக்குமாறு சீனாவிடம் கேட்டிருந்தார் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமல் ரணில் விக்ரமசிங்கவும் இது தொடர்பாக சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை.
இரண்டு நாடுகளுக்கும்ட நன்மையளிக்கக் கூடியவகையில், நியாயமான வட்டியுடன் தான் கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூறி சீனா அந்த கோரிக்கையை தட்டிக்கழித்து விட்டது.
அதற்குப் பின்னர் தான் கடந்த ஏப்ரல் மாதம் கடன்களை அடைப்பதற்குப் பதிலாக சீனாவின் திட்டங்களை அதனிடமே ஒப்படைத்துவிடும் திட்டத்துடன் பீஜிங் சென்றிருந்தார் ரணில்.
உடனடியாக சீனா அந்தத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆராய்ந்து பார்க்கிறோம் என்று கூறி அனுப்பி விட்டது. அது பற்றி ஆராய குழுக்களை அனுப்பியது. பேச்சுவார்த்தை நடாத்தியது.
இந்தப் பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே இரண்டு பிரதான திட்டங்களின் உரிமையின் 80 வீதத்தினை சீனாவுக்கு வழங்கும் உடன்பாடு செய்து கொள்ளப்படும்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த மாத நடுப்பகுதியில் இது பற்றிய உடன்பாடு கையெடுத்திடப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இந்த இரண்டு திட்டங்களின் உரிமையையும் பெற்றுக் கொள்ளப்போகும் நிறுவனத்தின் பெயரை 
வெளியிடவில்லை.
ஆனாலும் சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமே இதனை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் எதற்காக அரசாங்கம் இதனை மறைக்கிறது- மறைக்கப்படுகின்றது என தெரியவில்லை.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்த இரண்டு திட்டங்களையும் சீனாவின் உதவியுடள் முன்னெடுத்தபோது அம்பாந்தோட்டையில் சீனா காலூன்றப்போவதாக துள்ளிக் குதித்த எவருமே இப்போது மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்ரமசிங்க கூட்டு அரசாங்கம் இந்த திட்டங்களை சீனாவுக்கு விற்கும் நடவடிக்கையை பகிரங்கமாகச் செய்யும்போது வாய் திறக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்.
முன்னர் அம்பாந்தோட்டையில் சீனத்திட்டங்களை எதிர்ந்த இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது எவுதுமே பேசாமல் 
இருக்கின்றன.
இந்தியாவின் எதிர்ப்பைப்பொருட்படுத்தாமல், மகிந்த ராஜபக்ச அம்பாந்தோட்டையில் சீனாவின் உதவியுடள் திட்டங்களை முன்னெடுத்தபோது அங்கு ஒரு துணைத்தூதரகத்தை நிறுவி கண்காணிப்பதில் திருப்திப்பட்டுக் கொண்டது
 இந்தியா.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்ல் வரப்போகும் விடயத்தை இந்தியா அவ்வளவு இலகுவான விடயமாக எடுத்துக் கொள்ளாது.
ஏனெ்னறால் இந்தத்திட்டம் சீனா பற்றிய சந்தேகங்களையும் அச்சங்களையும் அதிகரிக்கச் செய்யும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் வணிக ரீதியாக வெற்றிபெறமுயாது என்பதை இந்தியா ஏற்கனவே அறியும்.
ஏனென்றால் இந்தத்திட்டத்தை மகிந்த ராஜபக்ச இந்தியாவிடம் தான் முதலில் முன் வைத்திருந்தார்.
இதுபற்றிய இரகசியமான சாத்திய ஆய்வை மேற்கொண்ட இந்திய வர்த்தக ரீதியான அனுகூலங்களைப் பெறமுயாது என்பதால் அதில் முதலீடு செய்வதற்கு முன்வரவில்லை. அதற்குப்பின்னர் தான் சீனாவின் கைக்கு இந்தத்திட்டம் சென்றது.
இந்தத்திட்டத்தில் மில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்யும்போதே இதனால் பயன்கிடைக்காது என்று சீனாவுக்குத் தெரியும்.
சீனாவைப் பொறுத்தவரையில் அப்போதே ஒரே கல்லில் பல காய்களை விழுத்த திட்டம் போட்டுவிட்டது.
அதனால்தான் மில்லியன் கணக்கான டொலர்களை கொடுத்து அம்பாந்தோட்டையில் துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் அமைப்பதற்கு கஊக்குவித்தது.
எந்தக் கேள்வியும் கேட்காமல் கடன்கொடுக்கிறது சீனா என்று மகிந்த ராஜபக்ச பல சமயங்களில் குறிப்பிட்ருந்தார்.
எதற்காக சீனா அவ்வாறு கொடுத்தது என்றால், அற்தக் கடன் எப்பிடியாவது திரும்பி தனது கைக்கு வரும் என்ற நம்பிக்கை அதற்கு இருந்தது.
நிதியை முதலீடு செய்த சீனா தனது நிறுவனங்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதன்மூல் சீனாவுக்கு இரண்டு வாய்ப்புக்கள் கிடத்தது. ஒன்று வழங்கப்பட்ட கடன் வட்டியுடன் சேர்த்து வரும். அதேவேளை சின நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தொழில் வாய்ப்புக் கிடைத்தது.

அம்பாந்தோட்டை துறைமுகம் விமான நிலையம் போன்ற திட்டங்களினால் இலங்கைக்க ஆதாயம் கிடைக்காது என்று தெரிந்துகொண்டே அதில் முதலீடு செய்வதற்கு நீனா முன்வந்தது.
அப்போது மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விழுந்த பொறியில் இருந்து தப்பிக் கொள்ள முடியாமல் தற்போதைய அரசாங்கம் தவிக்கிறது.
இந்த நிலைமை இலங்கைக்கு வரும் என்பது சீனாவுக்கு முன்னரே தெரியும். இந்த இரண்டு திட்டங்களையும் செயற்படுத்த முடியாத நிலை இலங்கைக்கு ஏற்படும்போது தன்னைத் தேடிவருவதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதை சீனா அறிந்தேயிருந்தது.
ஏனெ்னறால் இந்தத்திட்டங்களில் வேறு நாடுகள் ஒருபோதும் முதலீடு செய்ய முன்வரப்போவதில்லை. சீனா எதிர்பார்த்த மாதிரியே இலங்கை அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலயங்களை வைத்துக்கொண்டு கடனை அடைக்குமாறு ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.இப்போது அதற்கான உடன்பாடுதான் கையெழுத்திடப்படவுள்ளது.
இப்போது பயனளிக்காத அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் வைத்து சீனா என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.
நிச்சயமாக சீனா இவற்றை இராணுவத்தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியாது. அத்தகைய நோக்கில் பயன்படுத்துவதைத்தடுக்கும் வகையில் தான் சீனாவுடனான உடன்பாடு அமையும் என்பதில் 
சந்தேகமில்லை.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்டால், அல்லது இராணுவத்தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்ற விடயம் உடன்பாட்டில் சேர்க்கப்படாது போனால் இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்ப்பைத் தெரிவிக்கும்.
சீனாவுக்கு இப்போது அம்பாந்தோட்டையில் தேவைப்படுவது இராணுவத் தளம் இல்லை. அத்தகைய தளத்தை அமைப்பதற்காக அது இன்னும் பல ஆண்டுக்ள காத்திருக்கவும் தயார்.
அதற்கு முன்னதாக அம்பாந்தோட்டையில் ஏதோ ஒரு வழியில் கால் வைக்க வேண்டும். அதுான் சீனாவின் தேவை.
இலங்கையில் பொருளாதார நிலை காரணமாக வேறு வழியன்றி சீனாவிடம் சரணடைந்திருக்கின்ற அரசாங்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எப்படியாவது அம்பாந்தோட்டை ஒரு குட்டி சீனாவாக மாற்றப்படப்போகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் என்பன மாத்திரமின்றி இதனைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலமும் சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது.
இங்கு பாரிய கைத்தொழில் முதலீட்டு வலயம் அமையவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம்திகதி இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் சீனா பெரியளவில் முதலீடுகளை மேற்கொண்டு உற்பத்திகளைத் தொடங்கினால், துறைமுகமும், விமான நிலையமும் சுறுசுறுப்பான இயங்கத்தொடங்கும். இல்லாவிட்டால் சீன நிறுவனமும் இதேபோன்றுான் காகம் கலைக்க வேண்டி இருக்கும்.
ஆனாலும் சீனா அதையிட்டு கவலைப்படப்போவதில்லை. ஏனென்றால் இலங்கையில் தளம்ட அமைக்கவே சீனா ஆசைப்பட்டது.
அதற்காக ஒரு வாய்ப்பை இதன்மூலம் சீனா பெற்றுவிடும். இராணுவத்தளமாக இல்லாவிட்டாலும், இந்தியப் பெருங்கடலில் ஒரு துறைமுகம் தனது கட்டுப்பாட்டில் இருப்பது சீனாவுக்கும் பெரிய பலத்தைக் கொடுக்கும்.
இன்னொரு பக்கத்தில் சீனாவின் பட்டுப் பாதைத்திட்டத்தை தொடர்வதற்கு இது உதவும்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பட்டுப்பாதைத்திட்டத்தைத் தொடர்வதில் சிக்கல்களை எதிர்கொண்ட சீனாவுக்கு இது புதிய நம்பிக்கையைக் கொடுக்கும்.
ஆக மகிந்தவின் காலத்தில் வீசிய கல்லுக்கு இப்போது காய்கள் விழுந்து கொண்டிருக்கின்றன.
சரியான இலக்கை நோக்கித்தான் சீனா கல்லை வீசியிருக்கிறது என்பது இப்போது தெரிகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



அக்டோபர் 27, 2016

பிரபாகரன்கள் தமிழீழத்தில் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்!!!

தமிழீழத்தில் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்… ” தனி நாடு கிடைக்கும் வரை ”?
தகப்பனார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை , தாயார் பார்வதியம்மாள் , அண்னன் மனோகரன் , அக்கா ஜெகதீஸ்வரி , மற்றும் அக்கா வினோதினி ஆகியோரோடு வல்வெட்டித்துறை வீட்டில் இருந்த துரைக்கு அந்தச் செய்தி கோபத்தை உண்டுபண்ணியது , கண்கள் சிவந்து கைகள் துடித்து கோபத்தின் உச்சத்திற்கே சென்று தனது குரலை உயர்த்திக் கத்தினான் அந்த துறை என்கிற சிறுவன் …. கண்கள் சிவக்க அந்தச் சிறுவன் துரை கேட்டது 
என்ன தெரியுமா ???? …..
அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை ???? …… என்று கண்கள் சிவக்கக் கத்தினான் அந்தச் சிறுவன் துரை …..
அந்தச் சிறுவன் துரை யார் என்று தெரியுமா ???
பிரபாகரன் ( வீட்டில் அனைவரும் செல்லமாக துரை என்றுதான் அழைப்பார்கள் 
தமிழர்களைத் தேடித் தேடிக் கொன்றனர் வெறி பிடித்த சிங்களக் காடைகள் ….. அப்போது பணதூர என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு இந்து அர்ச்சகரின் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய சிங்களர்களை பற்றிக் கேள்விப்பட்ட அந்த சிறுவன் பிரபாகரன் கேட்டதுதான் …..
” அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை ” என்று ………
கேட்டதோடு நிற்க வில்லை அந்தச் சிறுவன் பிரபாகரன் …. செயலிலும் காட்டினான் …. தமிழ் இன எதிரிகளை பந்தாடினான் … புலியாய்ப் பாய்தான் …. முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்குப் பிறகு …. புலிகளின் ஆயுதங்கள் தற்காலிகமாக மௌனித்திருக்கும் வேளையில் ….. ,,
சென்றவாரம் ….
தமிழ் மாணவர்களுக்கும் , சிங்கள மாணவர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் …. இத்துணை அடக்கு முறைகளையும் மீறி …. சிங்களக் காடைகளின் கை ஓங்கியிருக்கும் இன்றைய நாளிலும் …. பொங்கி எழுந்த எமது தமிழ் மாணவர்களின் தான் மான உணர்ச்சியை நினைக்கும் போது …. ஈழம் மலரும் காலம் மிக விரைவில் என்றே தோன்றுகிறது ….. தமிழ் மாணவன் கையில் கம்புடன் நிற்கும் காட்ச்சி மூன்று விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது ….
1. சிங்களன் அடக்கு முறை இன்னும் தொடர்கிறது
2. என்னதான் அடக்க நினைத்தாலும் தமிழன் பொங்கி எழுவான்
3. தமிழீழமே தீர்வு
தமிழ் மாணவர்களும் , சிங்கள மாணவர்களும் மோதிக்கொண்ட அந்த சம்பவம் …. மேர்ச் சொன்ன மூன்று விஷயங்களையும் நமக்கு மட்டுமல்ல …. சர்வதேசத்திற்கும் உணர்த்துகிறது ….. தமிழ் மாணவன் ஒருவன் …. கையில் கம்புடன் ஆக்ரோஷமாக நிற்கும் அந்தக் காட்ச்சியை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் …. அந்தத் தமிழ் மாணவன் கையில் கம்புடன் எச்சரிக்கை விடுப்பது சிங்களனுக்கு மட்டுமல்ல …. 
சர்வதேசத்திற்கும்தான் 
தமிழீழத்தில் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள் ….. .. ” தனி நாடு கிடைக்கும் வரை ” ஆமா  அந்தத் தமிழ் மாணவன் கையில் இருப்பது …. கம்புதானா ?? எனக்கென்னவோ துப்பாக்கி போல தெரிகிறது !!!!! எங்கே ….. இப்போது மீண்டும் ஒருமுறை நன்றாகப் பாருங்கள் …….. ,, இப்போது சொல்லுங்கள் ….. அந்தத் தமிழ் மாணவன் கையில் இருப்பது …… கம்பா ???? …………. துப்பாக்கியா ????? …
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


அக்டோபர் 20, 2016

இணையதளங்களை கண்டித்து யாழில் சட்டதரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு¨!

யாழ், நீதி மன்றத்தின் முன்பாக நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட இணையதளங்களை கண்டித்து சட்டதரணிகள்பணிப்பகிஸ்கரிப்பில்
 ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு சற்று முன்னர் யாழ், மாவட்ட சட்டதரணிகள் குழுவின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மை காலமாக நீதிபதிகள் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் இது நீதிபதிகளை அவமதிக்கும் செயற்பாடுகள் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் கூறியுள்ளனர்.
மேலும், இன்றைய தினம் யாழ் நீதி மன்றிற்கு வருகை தந்த பொது மக்கள் மீண்டும் வீடு திரும்பி வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



அக்டோபர் 17, 2016

அதிர்ச்சி தகவல்! இலங்கையின் விஷ ஊசி முகாம் சிக்கியது?

முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு மேற்குப் புறமாக ஒன்றரைக் கிலோமீற்றர் துாரத்தில் இலங்கை விமானப்படையினரின் அதி நவீன விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விமான தளத்திற்கு இரவில் விமானங்கள் வந்து போவதாகவும் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த விமானதளம் உள்ள காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்குச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த வயதான சிலர் அங்கு விடுதலைப்புலி உறுப்பினர்கள் நிர்வாண நிலையில் சங்கிலிகளில் கட்டி வேலை வாங்கப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்களைத்
 தெரிவித்துள்ளனர்.
புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரையும் யோகி மற்றும் பாலகுமாரன் ஆகியோரையும் தாம் மிகக் கேவலமான நிலையில் கண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அப்பகுதிக்கு தேன் எடுப்பதற்குச் சென்ற சில தனி நபர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வயல் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் பாதை
 மாறி குறித்த 
இராணுவ மர்மப் பிரதேசத்திற்குள் சென்ற போது அவற்றை இராணுவம் சுட்டுக் கொன்றதுடன் மாட்டு உரிமையாளர் இராணுவத்தால் முகாமுக்கு அழைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவமும் 
இடம் பெற்றுள்ளது.
இது குறித்த யாருக்காவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக குறித்த உரிமையாளர் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த மாட்டு உரிமையாளர் தனது அடி காயங்களுக்கு நாட்டு மருத்துவரை அணுகிய பின்னரே அவரது மாடுகள் பல இராணுவத்தால் சுடப்பட்டு இறந்த விடயம் வெளியாகியுள்ளது.
இராணுவத்தின் 59வது கட்டளைப் பீடம் அமைந்துள்ள குறித்த பகுதி சுமார் 25 சதுர கிலோ மீற்றர்கள் உள்ளடக்கியதாகவும் அடர்ந்த காட்டுப்பகுதியுடன் கூடியதாகவும் காணப்படுகின்றது.
இக் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவி தேன் எடுப்பதற்குச் செல்லும் சிலர் இராணுவத்தால் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரணைமடுக் குளத்திறு அருகில் 1.3 கி.லோ மீற்றர் நீளமான விமானதளம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதை விட அந்தத் தளத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் துாரத்தில் குறித்த நவீன விமான நிலையம் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் 
மர்மமாகவே உள்ளது.
குறித்த விமான தளத்திற்கு நள்ளிரவு வேளைகளில் பல விமானங்கள் வந்து செல்வதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை குறித்த முகாம்களில்தான் பல முன்னாள் புலி உறுப்பினர் விச ஊசி போட்டு கொல்லப்படுவதாகவும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

அக்டோபர் 03, 2016

தலைவர் பிரபாகரன் எதிர் வரும் ஜனவரியில் வெளி வருவாராம் ?

  ஆனந்த அதிர்ச்சி செய்தி..!   இது கனவா, நிஜமா..! உண்மையா..வந்துடுவாரா தலைவர்..அப்போ எல்லோரும் சொன்ன மாதிரி அவர் போரில் இறக்கவே இல்லையா, பொட்டு அம்மான் எங்கே இருக்கிறார்..? அண்ணி  மதிவதனி எங்கே இருக்கிறார்? கடந்த இரண்டு நாட்களாக இதுதான் 
எங்கு பார்த்தாலும் பேச்சு.
ஆமாம் லண்டனிலில்   இருந்து புலிகள் அமைப்பு இந்த ஆனந்த அதிர்ச்சியை வெளியிட்டார்கள். உலகில் நிறைந்திருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள்.
எமது தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறாரா..?இது ஒன்றே போதும் என்று கதறி இருக்கிறார்கள்.
லண்டன் செய்தி சொல்வது போல் தலைவர் இருப்பது உண்மை என்றால் ஈழக்கனவு எட்டும்தூரத்தில் என்பதில் சந்தேகமே இல்லை…??!!வா தலைவா வா…!வா தலைவா வா…!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செப்டம்பர் 25, 2016

விடுதலைப் புலிகள் அமைப்பு,பாலஸ்தீன விடுதலை இயக்கம்ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து விடுதலை

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரியொருவர் 
தீர்மானித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உரிய காரணங்களை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதாகத் தெரிவித்து 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடையை நீக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
எனினும் இந்தத் தடை நீக்க உத்தரவை மேன்முறையீடு செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீடிப்பதற்கு முன்வைத்த காரணங்கள் திருப்திகரமாக அமையாததால் மேன்முறையீட்டை இரத்துச் செய்ய ஐரோப்பிய நீதிமன்றத்தின் உயர்நிலை ஆலோசகரான எலோனோ சாக்ஸ்டன் தீர்மானித்துள்ளார்
இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கும் அவர் தீர்மானித்துள்ளார். எனினும் இதனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற 
கட்டாயம் இல்லை. அந்தந்த நாடுகள் தனித்து இந்தத் தடை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளலாம். எவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதன் உயர் நீதிமன்றத்தில் வழங்கும் தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதே இதுவரை வழமையான நடைமுறையாக இருந்து வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்படன் பாலஸ்தீனத்தின் விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கம் மீதான தடையும்
 நீக்கப்படவுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செப்டம்பர் 19, 2016

முற்றைவெளியில் அவலம் தீர்க்க மக்கள் சக்தியாய் எழுந்து ஒன்றுகூடுவோம்?

எழுக தமிழா இது இருக்கைக்கான நேரமல்ல எழுக்கைக்கான நேரம் எம் அவலம் தீர்க்க மக்கள் சக்தியாய் எழுந்து ஒன்றுகூடுவோம் முற்றைவெளியில் ""
மண்ணில் விழுந்த பொருட்கள் எல்லாமே உக்கி மண்ணோடு மண்ணாகி 
அழிந்தொழிந்து போனாலும் போராடி வெல்லும் விதைகள் மட்டுமே முளைத்தெழுந்த விருட்சங்கள் ஆகின்றன.
போராடும் மனிதர்களே வெற்றி 
காண்கிறார்கள்.
எமது போராட்டத்தை சூழ் நிலைகள் கூட தடுத்து நிறுத்த முடியாது மனதில் நம்பிக்கை என்ற விதை விழுந்து விட்டால்.
விதை போல இருப்போம்.. முளைத்தால் பயிராகியும் பிழைத்தால் உரமாகியும் பயனை தரும் வாழ்வை 
நமதாக்குவோம்!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஆகஸ்ட் 21, 2016

ஜனாதிபதி மைத்திரி தேசியத்தலைவர் உயிருடன் இருக்கும் இரகசியத்தைவெளியிடத்தயார்!!!

அந்த இரகசியம் வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில் ஶ்ரீலங்கா ஆட்சி அரசியல் பீடங்களில் பெரும்பூகம்பம் நிகழும் போர் வெற்றி நாயகர்களாக வலம்வரும் சிங்களத்தின் முகமூடி கிழியும்
இறுதி யுத்தத்தில் ஶ்ரீலங்கா அரசால் இறந்தாக கூறப்பட்ட தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றி மஹிந்த அரசினால் நிருபிக்கப்பட்ட சான்றுகள் இன்று வரை வெளியிடப்பட வில்லை.
இதன் காரணமாக தொடர்ந்தும் தேசிய தலைவர் கொல்லப்படவில்லை உயிருடன் இருப்பதாகவே செய்திகள் வெளிவருகின்றன.
ஒருவேளை தலைவர் பிரபாகரனுக்கு இறுதி யுத்தத்தில் என்ன நிகழ்ந்தது? இறுதி யுத்தத்தின் உண்மையான தன்மை என்ன? கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு நிகழ்ந்தது என்ன? என்பதையே ஶ்ரீலங்கா  ஜனாதிபதி வெளியிடப்போகின்றாரா? என்பதே கேள்வியாக உள்ளது.
தற்போது வரை மஹிந்தவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அவர் நாட்டில் யுத்தத்தை நிறுத்தினார் என்ற காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் எடுபடாமல் செல்கின்றது.
இங்கு சிங்கள மக்களால் மன்னனாக வர்ணிக்கப்பட்டு வரும் மஹிந்தவிற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு போர்க் குற்றம் மற்றும் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மைகளை வெளியிடப்படும் போது மஹிந்தவிற்கு உள்நாட்டில் வாழும் சாத்தியம் குறைந்து விடும் என்பதும் உண்மையே.
மஹிந்தவை அடக்க ரணில் மற்றும் ஶ்ரீலங்கா ஜனாதிபதி வைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தலைவர் பற்றிய உண்மையே எனவும் தற்போது சந்தேகங்கள் வழுப்பெற்று வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் இறுதியுத்தம் தொடர்பில் உண்மைகள் வெளிவரும் போது நாட்டு மக்களாலும் மஹிந்தவின் ஆதரவாளர்களினாலும் மஹிந்த தண்டிக்கப்படுவார்.
மாறாக மஹிந்தவினால் தற்போதைய ஆட்சிக்கு இடையூறுகளும், புதிய கட்சி எண்ணங்களும் உருவாகாமல் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்படும் போது நாட்டில் குழப்பம் ஏற்படும் அது சிலவேளை இனக்கலவரமாகவும் மாறிவிடலாம். அவ்வாறு ஏற்பட்டு விட்டால் அதற்கு நல்லாட்சி மட்டுமே பதில் கூறவேண்டும்.
அதன் காரணமாகவே தகுந்த நேரம் வரும் வரை இரகசியம் காப்பாற்றப்பட்டு வருகின்றது எனவும் எவ்வாறாயினும் தற்போது நாடு செல்லும் போக்கில் இறுதியுத்தம் தொடர்பில் மெது மெதுவாக உண்மைகள் புலப்படுத்தப்படும் எனவும் அரசியல் தரப்பு அவதானிகள் தெரிவித்து
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>



ஆகஸ்ட் 15, 2016

மேலும் 500 ஏக்கர் காணியை இராணுவம் விடுவிக்கும் சாத்தியம்!

வலி.வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு பகுதியில் மீதியாக உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சினால் விடுவிக்கக் கோரிய 1528 ஏக்கர் காணிகளில் 500 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரியவருகிறது.
மீதியாக 5043 ஏக்கர் காணி இன்னமும் இராணுவத்தினர் வசம் உள்ளது.
அந்த வகையில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 1528 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அண்மையில் மீள் குடியேற்ற அமைச்சினால் அமைச்சரவைப்பத்திரம் தாக்கல் செய்யப்
 பட்டிருந்தது.
பாதுகாப்புபடை பிரிவில் இருந்து அதற்கான பரிந்துரை அறிக்கை கிடைக்காத காரணத்தினால் அமைச்சரவை அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு கோரிய 1528 ஏக்கர் காணியில் அண்ணளவாக 500 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்படும் என இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று வலி.வடக்கு பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அப்போது பாதுகாப்பு படைத்தரப்பு மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் பளை, வீமன்காமம் பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தையும் பார்வையிட்டார்.
மேலதிகமாக நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை விரைவாக மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக செயற்படுவது தொடர்பிலும் இதன்போது 
கலந்துரையாடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஆகஸ்ட் 08, 2016

இலங்கைசிங்கப்பூரை நோக்கி நகர்கின்றது !

இந்தியாவின் அழுத்தங்களால் தான், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டியேற்பட்டது என்ற உண்மையை, தற்போதைய அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில், இடைநிறுத்தப்பட்ட
 கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை, மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ள போதிலும், இதுவரை அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்த துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தான், அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இந்தியாவின் அழுத்தங்களால் தான் இந்தத் திட்டத்தை இடைநிறுத்த நேரிட்டது என்று கூறியிருக்கிறார்.
சீனாவின் முதலீட்டில் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியா தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.
அந்த எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளாமல் மஹிந்த ராஜபக்ச, இந்தத் திட்டத்தை முன்னெடுத்ததால் தான், இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்தன.
இதனை மனதில் வைத்துக் கொண்டே, இந்தியப் புலனாய்வுத்துறை மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காகப் பணியாற்றியிருந்தது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஒரு பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மூன்று மாதங்களுக்குள்ளாகவே, துறைமுக நகரத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்த உத்தரவிட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மார்ச் இரண்டாவது வாரத்தில் மேற்கொண்ட பயணத்துக்கு ஒருவாரம் முன்னதாகவே துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இந்தியாவின் அழுத்தங்களின் பேரில் அல்லது இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கில் தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்த போதிலும், அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.
சுற்றுச்சூழல் காரணிகளைக் கருத்தில் கொண்டே துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியதாக காரணம் கூறியது அரசாங்கம். அதற்கேற்ப, சுற்றுச்சூழல் அறிக்கையும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டத்தை இடைநிறுத்தியதால், சீனாவின் ஒட்டுமொத்த திட்டங்களும் முடங்கிப் போகும் ஆபத்து ஒன்று ஏற்பட்ட நிலையிலும், இலங்கையின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு சீனாவின் தயவு தேவை என்று உணரப்பட்ட நிலையிலும் தான், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகால மௌனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சீனாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை.
துறைமுக நகரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய பீஜிங் பயணத்தின் போது முடிவு செய்யப்பட்டது.
அதைவிட, சீனாவின் முதலீட்டில், அம்பாந்தோட்டையில் பொருளாதார முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இப்போது இந்த இரண்டு திட்டங்களையும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து சீனாவும் இலங்கையும் பேச்சுக்களை நடத்தி வருகின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தப் பேச்சுக்களில் நேரடியாகவும் தனது நேரடிக் கண்காணிப்பிலும் மேற்கொண்டு
 வருகிறார்.
எப்படியாவது சீனாவைப் பயன்படுத்தி, பொருளாதார நிலையை முன்னேற்றி விட வேண்டும் என்பது, அரசாங்கத்தின் திட்டமாக இருந்தாலும், இந்தியாவின் கரிசனையோ தனது பாதுகாப்புக்கு சீனாவினால் அச்சுறுத்தல் வந்து விடலாம் என்பதாக இருக்கிறது.
சீனா பற்றிய இந்தியாவின் கரிசனைகள், அச்சம் என்பனவற்றுக்கு அப்பால், இலங்கையில் சீனாவின் முதலீடுகளைப் பெறுவது தான் இலங்கைக்கான முதல் சவாலாக இருந்து வந்திருக்கிறது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமான நிலை இருக்கவில்லை. ஆனால் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவுக்கு கண்டபடி அனுமதிகள் அளிக்கப்பட்டன.
இது தனது பாதுகாப்புக் குறித்து இந்தியா அதிக அச்சமும் கவலையும் கொள்வதற்குக் காரணமாகியது.எனினும், தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறது.
சீனாவின் திட்டங்களின் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறது.இதனால் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாத வகையில், சீனாவுடன் நெருக்கத்தையும், அதன் முதலீடுகளையும் பெற்றுக்கொள்ள முனைகிறது தற்போதைய அரசாங்கம்.
சீனாவின் திட்டங்கள் தொடர்பாக இந்தியா அழுத்தங்களைக் கொடுப்பது குறித்து இதுவரையில் இலங்கை அரசாங்கம் வாய் திறந்ததில்லை.
ஆனால், மஹிந்த ராஜபக்ச ஆட்சியிழந்த பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சீனா விவகாரத்தில் இந்தியாவின் அழுத்தங்கள் இருந்தன என்று கடந்த ஆண்டு 
கூறியிருந்தார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுமாறு புதுடில்லியில் வைத்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தனக்கு அழுத்தங்களைக் கொடுத்ததாக கோத்தபாய ராஜபக்ச
 தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி, இந்தியாவின் அழுத்தங்களினால் தான் துறைமுக நகரத் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தியிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரான மஹேஷினி கொலன்னே, அந்தக் கருத்தை நிராகரித்திருந்தார்.ஆனால், இப்போது, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இந்தியாவின் அழுத்தங்களே காரணம் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இது பற்றிய இந்தியாவின் கருத்துக்கள் எதுவும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் வெளியாகவில்லை.ஆனாலும், இந்தியா இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க முனையுமா என்பது சந்தேகம் தான்.
அவ்வாறு கருத்து வெளியிட முனைந்தாலும் தனது தேசிய பாதுகாப்புக் குறித்த கரிசனைகளையே வெளிப்படுத்தும்.தற்போது, இந்தியாவின் அழுத்தங்களின் பேரில் இடைநிறுத்தப்பட்ட துறைமுக நகரத் திட்டம் மீளத் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்பாந்தோட்டையில், 55 சதுர கி.மீ பரப்பளவுடைய காணிகள், சீனாவுக்கு சிறப்பு பொருளாதார வலயம் அமைப்பதற்காக
 வழங்கப்படவுள்ளன.
இவ்வாறு, சீனாவின் முதலீடுகளுக்கான கதவுகளை மீண்டும் இலங்கை அரசாங்கம் திறந்து விட்டுள்ள நிலையில், இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருக்கிறது,இந்தியாவின் இந்த மௌனம், இலங்கைக்குச் சாதகமானதா? என்ற கேள்வி எழுகிறது.
இலங்கையில் சீனாவின் திட்டங்கள் தொடரப்பட்டால் தான், அதன் முதலீடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் தான், பொருளாதார ரீதியாகத் தலையெடுக்க முடியும்.இதனை இந்தியா உணர்ந்திருக்க 
வேண்டும்.
இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது போனால், அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற நிலையும் ஏற்படும். அத்தகைய குழப்பமும், உறுதியின்மையும், இந்தியாவின் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கொழும்பின் தற்போதைய அரசியல் உறுதிப்பாட்டை பாதுகாக்க வேண்டுமானால், பொருளாதார ரீதியான சீனாவின் தலையீடுகளுக்கு மௌனமாக தலையாட்டிக் கொள்வது தான் இந்தியாவுக்கு உள்ள ஒரே வழியாகும்.
அந்த முடிவைத் தான் இந்தியா இப்போது எடுத்திருப்பதாகத் தெரிகிறது. விரும்பியோ விரும்பாமலோ சீனாவுக்கு அனுமதி கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது.
எனினும் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களை இலங்கை அரசாங்கத்தின் மூலம், தவிர்க்கவும் முனைந்திருக்கிறது.
துறைமுக நகரத் திட்டத்தில் 20 ஹெக்ரெயர் நிலம் சீனாவுக்கு உரிமையாகும் என்று முன்னைய உடன்பாட்டில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் திருத்தப்படவுள்ள புதிய உடன்பாட்டில் சீனாவுக்கு நில உரிமை வழங்கப்படாது. 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் தான் நிலம் வழங்கப்படும்.
இது போன்ற திருத்தங்களின் ஊடாக இந்தியாவை முழுமையாக இல்லாவிடினும், ஓரளவுக்குத் திருப்திப்படுத்தியிருக்கிறது இலங்கை அரசாங்கம்.
அதுபோலவே, அம்பாந்தோட்டையில் பாரிய முதலீட்டு வலயம் ஒன்றுக்கு பெரியளவில் காணிகளை வழங்கி சீனாவையும் திருப்திப்படுத்த முனைந்திருக்கிறது.
பிராந்திய, சர்வதேச அரசியல், அதிகாரப் போட்டிகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல், முதலீடுகளைக் கவரும், வர்த்தகத்தை மேம்படுத்தும் புதிய உத்தியைக் கையாள தற்போதைய அரசாங்கம்
 முயற்சிக்கிறது.
சிங்கப்பூரை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது இலங்கை அரசு. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் உறவுகளைச் சமநிலையில் பேணுகின்றமை முக்கிய காரணமாகும்.அதனைத் தான் இலங்கை பின்பற்ற முனைகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர்களும் சிங்கப்பூரை நோக்கி அடிக்கடி பயணங்களை மேற்கொள்வதன் இரகசியமும் இது தான். சிங்கப்பூரின் அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு, இலங்கை அரசாங்கம் அதற்கேற்றவாறு தனது நகர்வுகளை முன்னெடுக்கப்
 பார்க்கிறது.
சீனாவின் முதலீடுகள் மீள ஆரம்பிக்கப்படுவது குறித்து, இதுவரையில் இந்தியாவிடம் இருந்து பகிரங்கமான எந்தக் கருத்தும் வெளிவராதமை, சிங்கப்பூரின் நிலையை நோக்கிய இலங்கையின் பயணம் சாதகமான ஒன்றாகத் தான் தெரிகிறது.
அதேவேளை, இந்தியாவின் ஒப்புதலைப் பெறாமல் இலங்கையில் எதுவும் நடந்து விட முடியாது என்பதைத் தான் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கருத்து உறுதிப்படுத்தியிருக்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஜூலை 21, 2016

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.2016

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.16.  
யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட    
அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின். பத்ஒன்பதாவது ஆண்டு நினைவஞ்சலி
.19.07.2016.இன்று அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவிகின்றோம் 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஜூலை 11, 2016

இராணுவத்துடன் கூடவே விகாரைகளும் வெளியேறட்டும்!

வடபகுதியில் 2018 இல் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கிறார். அது நடக்குமானால் விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டமானது பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர்க்காலப்பகுதிக்கு முன்பு எந்தவொரு இடத்திலும் சிங்கள பௌத்த அடையாளங்கள் இருந்ததில்லை. தற்போது இராணுவத்தினரால் ஒன்பது விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் இது இன்னமும் அதிகரிக்கலாம். நல்லிணக்கம் என்று சத்தமாக கூவிக் கொண்டு மதத்திணிப்புகள் செய்வது பொருத்தமற்றது. கொக்கிளாயில் பௌத்தர்கள் இல்லை. சிறீ சம்போதி மகா விகாரை தனியார் காணியில் முளைத்துள்ளது.
நாயாறு நீராவி ஏற்றத்தில் பிள்ளையாரை தூக்கி விட்டு விகாரையுடன் புத்தரைஅமர்த்தியுள்ளனர். மாங்குளத்தில் விகாரை, மண்ணாகண்டலில் விகாரை, ஏன்? தனிச் சைவக் கிராமம் வட்டுவாகலில் விகாரை, ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத்திணைக்களக் காணியில் விகாரை இதனால் நீர்ப்பாசனத்திணைக்களமும் அகதியாகி
 இருக்கின்றது.
இப்படியாக எம்மவர்களின் காணிகளில் அடாத்தான முறையில் விகாரைகளை அமைத்துக்கொண்டு நல்லிணக்கம் பேசுகிறார்கள். 2018 இல் வடபகுதியில் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கின்றார்.
இன நல்லிணக்கத்திற்கு அல்லது ஐ.நாவுக்கு பயந்து இது நடக்குமானால் விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும் தமிழ்ப் பகுதிகளில் விகாரைகள் இருக்க முடியாது என்றும் 
அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஜூலை 07, 2016

தலைநிமிர வைக்கத் தலைவர் ஒருவரால்தான் முடியும்!

புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு யாழ் மாவட்டத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத நீதிபதி ஒருவர் குறிப்பிட்டார். இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கடந்த வருடம்  கருத்துத் தெரிவித்துள்ளார்.
இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.
வன்னியில் சிங்களப்படைகள் முன்னெடுத்த இராணுவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழீழ நடைமுறை அரசினை சிறப்புடன் முன்னெடுத்த விதமும் காவல்துறை நீதித்துறையினை கையாண்ட திறணும் வியக்க வைப்பதாக தெரிவித்த அவர் தற்போதைய யாழ்ப்பாணத்தை எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை எனும் போதுதான் வன்னியில் போர் சூழல் இறுக்கமாக நிலவிவந்த காலகட்டங்களில் எல்லாம் காவல் மற்றும் நீதித் துறைகளை சிறப்பாக கையாண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அரசாண்டவிதம் பிரமிப்பூட்டுவதாக இருப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய கலாச்சார சீர்கேடுகள் சமூகச்சிதைவுகள் கொலைக் கலாச்சாரங்கள் என்பன மிக வேகமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதியில் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை தற்போது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களாலோ சிறிலங்கா அரச நிர்வாகத்தினாலோ தடுத்துநிறுத்த முடியாது எனவும் மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வந்தால்தான் சீர்படுத்த முடியும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
வன்னியில் இருந்து கொண்டு தமிழீழ நடைமுறை அரசை முன்னெடுத்து வந்திருந்தாலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதிகள் அனைத்திலும் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய ஆளுகையின் வீச்சு இருந்தது. ஆனால் முன்னர் அது யாராலும் இனம்காணப்படாது இருந்துவந்தது. தற்போதுதான் தெரிகிறது தலைவர் பிரபாகரன் அவர்களது ஆற்றலின் வலிமை.
இவ்வாறு நீதியினை வழங்கும் உயர்பீடத்தில் இருப்பவர்கள் முதல் சாதாரண குடிசைவாசிகள் வரை தலைவர் பிரபாகரன் அவர்களது வரவினை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அடிபட்டு நொந்துபோய் எல்லாவற்றையும் இழந்த பின்பும் தேசத்தின் இன்றைய இழிநிலை கண்டு மனம்பொறுக்காத மானம் உணர்வுள்ளவர்களது புலம்பல் இதுவாகத்தான் இருக்கின்றது.
“என்னதான் இருந்தாலும் பெடியள்(புலிகள்) இருக்கேக்கை உந்தச் சேட்டையள் எல்லாம் இல்லாமல் தான் இருந்தது. செல்லடிச்சாலும் கிபிரடிச்சாலும் எங்கட மண்ணிலை சுதந்திரமா நாங்கள் இருந்த வாழ்க்கை சொர்க்கம் தான்..
திரும்பவும் பெடியள்(புலிகள்) வந்தால்தான் எல்லாத்திற்கும் ஒரு முடிவுகிடைக்கும்.. இந்த அக்கிரமங்களை எல்லாம் போக்கி தமிழனை தலைநிமிர வைக்க தலைவர் ஒருவரால்தான் 
முடியும்.”
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஜூலை 05, 2016

உடுப்பிட்டியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

யாழ் வல்லை- உடுப்பிட்டி வீ தியில் தோட்ட காணி ஒன்றின் கிணற் றில் இருந்து ஒரு தொகைவெடி பொருட்களை பொலிஸ் வி சேட அதிரடிப்படையினர் இன்றைய தினம் மாலைமீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மே லும் 
தெரியவருவதாவது,
வல்லை, உடுப்பிட்டிவீதியில் உள்ள தோட் டக் காணியில் இருந்த கிணற்றை தோட்டத்தின. உரிமையாளர்துப்பு ரவு செய்ய முற்பட்ட போது கிணற்றில் வெடிபொருட்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு$
 தகவல்கொடுக்கப்பட் டு 
நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் மாலை பொலுஸார் குறித்தகிணற்றை சோதனையிட் டபோது அதில் 11 மோட்டார் எறிகணைகள், 25 மோட்டார் பரா எறிகணைகள் மற்றும் 69 கைக் குண்டுகளை மீட்டுள்ளனர்..
மீட்கப்பட்ட வெடி பொருட் கள்நாளை அழிக்கப்படவுள்ளதா க விசேட அதிரடிப்படையினர் கூ றியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஜூன் 28, 2016

முதல்வர் சீ.வியின் அதிரடி உத்தரவு வடக்கு ஆசிரியர்களுக்கு?

ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது.
அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
 தெரிவித்துள்ளார்.
வடமராட்சி புலோலி புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவும் , பரிசளிப்பு விழாவும் இன்று காலை நடைபெற்றது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஊக்கம் அற்ற மாணவர்கள் தாம் நிற்கின்ற இடத்திலேயே ஒரு கோட்டைக் கீறிவிட்டு அதன் மீது ஏறி நின்று கொண்டு தமது இலக்கைத் தாம் அடைந்துவிட்டதாகத் தம்மையும் ஏமாற்றி தமது குடும்பத்தவரையும் ஏமாற்றுகின்ற ஒரு நிலையை நாம் அவதானிக்கலாம். அந்த நிலை மாற வேண்டும்.
தமிழ்ச் சமூகம் பொதுவாகக் கல்வியில் உயர்ந்தவர்களாக, ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக, நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக, கடும் உழைப்பாளிகளாக இனம் காணப்பட்ட சமூகம்.
இன்றோ அவர்கள் கல்வி கேள்வி அறிவின்றி, ஒழுக்க நெறியில் நின்றும் பிறழ்வடைந்து, ஒழுக்கச் சீர்கேடுகளுடன் எதுவித தொழில் முயற்சியோ, வருமானம் ஈட்டும் நோக்கமோ, குடும்ப கௌரவத்தைப் பாதுகாக்கும் எண்ணமோ அற்றவர்களாகக் காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் கொலை, களவு போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதும் எம்மை மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகின்றன.
உலகலாவிய ரீதியில் இலங்கைத் தமிழர்கள் பொதுவாகக் கற்றவர்கள், பண்பட்டவர்கள், பண்புடையவர்கள் என்ற நற்பெயரை இதுவரை நிலைநாட்டி வந்துள்ளனர்.
எனினும் எவ்வளவு தீய பழக்கங்களையும் செயல்களையும் புரிய முடியுமோ அவற்றையெல்லாம் புரிந்து கொண்டு பூமிக்கு பாரமாக இருக்கக் கூடிய இளைஞர்களை நாம் இன்று எம்மிடையே பார்க்கின்றோம். இவர்களைத் திருத்தி சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய தலையாய பணி இப்போது புதிதாக உருப் பெற்றிருக்கின்றது.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள், உறவுகளை இழந்தவர்கள், உடல் அங்கங்களை இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள், வீடு வாசல்களை இழந்தவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள் எனப் பல்லாயிரக் கணக்கானவர்கள் வறுமையால் வாடிக் கொண்டிருக்கும் போது 
அவர்களை 
எவ்வாறு கரையேற்றுவது என்று திக்குத் தெரியாமல் நாம் தடுமாறிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் மாணவ மாணவியரைக் கரை சேர்க்கும் பிரச்சனை எம்மை மேலும் திணர வைத்துக்
 கொண்டிருக்கின்றது.
எளிமையிலும் செழிப்புடனும் வாழ்ந்த எம்மவர்கள் இன்று வெட்கித் தலைகுனிகின்றார்கள். பிரச்சனைகள் மாணவ மட்டத்தில் மட்டுமே என்று கூறமுடியாது. நாம் சிறுவர்களாக பாடசாலைகளில் 
கல்வி கற்ற 
காலத்தில் எமது ஆசான்களாக எமக்குக் கல்வி புகட்டிய ஆசிரியப் பெருந்தகைகளை ஒரு கணம் எண்ணிப் பார்த்தோமானால் அவர்கள் ஆசார சீலர்களாக, ஒழுக்கம் நிறைந்தவர்களாக, கண்ணியம் மிக்கவர்களாக, எமது முன்னேற்றத்தின் முன்னோடிகளாக வாழ்ந்ததை நாங்கள் அடையாளம் காணுவோம்
அவர்களின் தோற்றங்கள் இப்போதும் எமது மனக் கண்ணில் பசுமரத்தாணியாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இன்றைய தினசரிப் பத்திரிகைகளில் வருகின்ற செய்திகள் எம்மை கதி கலங்க வைக்கின்றன.
பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் குறிப்பாகப் பத்துப் பன்னிரண்டு வயது பெண் பிள்ளைகளுடைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எவ்வாறு பாடசாலைக்கு அனுப்புவது என ஏங்குகின்றார்கள்.
ஆரம்பத்தில் இச் செய்திகள் பொய்யானவையா அல்லது புனையப்பட்டவையா என்ற ஒரு சந்தேகம் எழுந்தது. ஆனால் தினமும் வரக்கூடிய செய்திகளைப் பார்க்கின்ற போது ஆண் பெண் என்ற வேறுபாடின்றி ஆசிரியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என எனக்குத் தெரியவில்லை. ஆசிரிய குலத்திற்கே அபகீர்த்தி வந்துள்ளதை நாம் உணர வேண்டும்.
குருவைக் கண்ட இடமெல்லாம் வணங்கு என்ற ஒளவைப் பிராட்டியின் கூற்றுக்கு இன்று என்னாகி விட்டது? தகுதியற்றவர்கள் தகைமையற்றவர்கள் தரங்குறைந்தவர்கள் புனிதமான ஆசிரியத் தொழிலினுள் உள்ளிட நாம் இடமளித்து விட்டோம். இதற்குக் காரணம் அரசியல் என்பதிலும் பார்க்கச் சுயநலமே என்பது எனது கருத்து.
தூர நோக்கின்றி தருணத்திற்குப் பொருத்தமாக தன்நல காரணங்களுக்காக நாங்கள் தவறான பாதையில் சென்று விட்டோம் என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். எனவே கல்வி நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் செயற்பாடுகள் பற்றி இறுக்கமான சில தீர்மானங்களை கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் மூலம் அனுப்ப வேண்டிய கால கட்டாயத்திற்கு நாம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம் என்று நான் 
நம்புகின்றேன்.
உதாரணத்திற்குத் தனி ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல்
 வேண்டும்.
மேலும் ஒரு ஆசிரியர் ஒழுக்க நெறி பிறழ்வில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் அதனை உடனடியாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் மறைப்பதுங் கூட தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றை நடைமுறைப்படுத்த நாம் முன்வர வேண்டும்.
ஓர் இரு ஆசிரியர்களின் தவறான பழக்க வழக்கங்கள் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் தலைகுனிய வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நண்பர்கள், பழகியவர்கள் எனப் பிழை செய்பவர்களுக்கு உதவப் போய் நீங்களும் சேர்ந்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் 
கொள்ளுங்கள்
பெரும்பான்மை ஆசிரியர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள முடிவெடுத்தால் குற்றமிழைக்கும் ஆசிரியர்களை எளிதில் திருத்தி விடலாம். உங்கள் பெரும்பான்மையினரின் அழுத்தம் தவறு செய்பவரைக் கட்டுப்படுத்திவிடும். ஆனால் அதற்கென்ன என்று பெரும்பான்மையோர் சிந்திக்கத் தொடங்கினால் ஆசிரிய சமூகத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படும்
கணணி மூலமாக எங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவோம். ஆசிரியர்களுடன் நேரடித் தொடர்பின்றி கல்வி புகட்டுவோம் என்று பெற்றோர்கள் கூறத் தலைப்படுவார்கள்.
ஆகவே ஆசிரியர் சமூகம் மீண்டும் ஒரு உன்னதமான சமூகமாக மாற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என இச் சந்தரப்பத்தில் கூறி வைக்கின்றேன்.
ஒவ்வொரு பாடசாலையும் ஏனைய பாடசாலைகளுக்கும் மக்களுக்கும் முன்மாதிரியாக விளங்க இனிப் பாடுபடவேண்டும். அவை பாடசாலைகளாக இல்லாது கோவில்களாக மாற நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவில்களாகத் தினமும் பூஜிக்கத்தக்க வகையில் பாடசாலைகள் மாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அதற்கு நாம் அனைவரும் சிந்தித்து நடவடிக்கைகளை எடுப்போம். எமது பாடசாலைகள் ஆத்மார்த்த கோவில்களாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என மேலும் தெரிவித்தார்.…
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஜூன் 19, 2016

ராணுவம் வடக்கிலிருந்து படிப்படியாக நீக்கப்படுமாம்!

இலங்கை அரசாங்கத்தினது உயர்மட்ட அரசியல்வாதிகளால் அடிக்கடி திருவாய் மலர்ந்த அறிக்கைகளுக்கு நேர்விரோதமாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவாசம் திருவாய் மலர்ந்திருப்பது அரசினது வார்த்தை ஜாலங்களில் ஒன்று என அமெரிக்க அதிகாரிகளுக்கு எங்கே விளங்கப்போகிறது.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மேலும் கூறுகையில் வடக்கு கிழக்கிலிருக்கும் ராணுவத்தை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பட்டமான பொய்யை அமெரிக்காவுக்கு கூறியிருக்கிறார்.அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே வடக்கு கிழக்கில் ராணுவ பிரசன்னம் அகற்றப்படுவதுபற்றி உங்களது நிலைப்பாடு எவ்வாறு அமைந்திருக்கின்றது என்னும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கெட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு உரைத்தார். அத்துடன் சிறீலங்கா அரசு வழங்கிய உறுதிமொழிகளை படிப்படியாக நிறைவேற்றும் எனவும் அக் கூட்டத்தில் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அடுத்த வருடத்துக்குள் அனைத்து ராணுவத்தினரும் அகற்றப்பட்டு
தேவைக்கேற்ப மாத்திரமே ராணுவத்தினர் வடகிழக்கில் நிறுத்தப்பட்டிருப்பர் எனவும் பிரசாத் காரியவாசம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



ஜூன் 15, 2016

தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகாதெரிவிப்பு !!!

தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகா
கரும்புலிகளுக்கு படகுவாங்க காசு கொடுத்தார் பசில் மலையகத் தலைவர்களிடம் ஒப்படைத்தார் பிரபாகரன் பாகிஸ்தானிடம் இருந்தே ரவைகள் பெற்றோம் நானிருக்கும் போதே 200 கிலோகிராம் தங்கம் மீட்டோம் என் ஜாதகத்தை திருடிப் பார்த்தனர் படைவிட்டோடி இன்று புத்தகம் எழுதுகிறார் வெள்ளைக் கொடியைக் கிளறுங்கள் 
பதவி கிடைத்தால், 
பீல்ட் மார்ஷலைப் பறிப்பர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியன்று மரணிக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தம் முழுமையாக முடிவதற்கு முன்னரே மஹிந்த ராஜபக்ஷ மண்ணை முத்தமிட்டுவிட்டார் என்றும் தெரிவித்தார்.
‘பயங்கரவாதிகளுக்குப் பணம் கொடுத்தனர். அதனைக் கூறுவதற்கு நான் எப்போதும் தயங்கமாட்டேன். இவ்வாறு தேசத்துரோகம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதியுச்ச தண்டனை, தூக்குத் தண்டனையாகும். அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் மஹிந்த ராஜபக்ஷவை கைதுசெய்து தூக்கிலிட வேண்டும்’ என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (10) நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய 
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ‘வெளிநாட்டிலிருந்து மே மாதம் 16ஆம் திகதியன்று நாட்டுக்குத் திரும்பிய மஹிந்த ராஜபக்ஷ, மண்ணுக்கு முத்தமிட்டார். அன்றும் யுத்தம் முடியவில்லை. அலரிமாளிகைக்கு என்னை அழைத்து, 18ஆம் திகதியன்று பதவியுயர்வு வழங்கினர். அன்றும் யுத்தம் முடியவில்லை. 19ஆம் திகதியன்று நாடாளுமன்றத்திலிருந்து யுத்தம் நிறைவடைந்து விட்டதாக நாட்டுக்கும் மக்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார். அன்றைய தினமும் யுத்தம், முழுமையாக நிறைவடையவில்லை.
அவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்ட 19ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்திலிருந்து இரவு வேளையில், காரில் நான் சென்று கொண்டிருந்தபோதே,வேலுப்பிள்ளை பிரபாகரனின்… சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எனக்கு அறிவித்தனர். யுத்தத்தின்
 கௌரவத்தைத் தான் பெற்றுக்கொள்ள பதாதைகளை அமைத்தனர் எனினும், நான் அமைதியாகவே இருந்தேன். „விளையாட்டுப் போட்டியில் அணி தோற்றுவிட்டால் அதன் சுமையை அணிமீதும், வென்றுவிட்டால் விளையாட்டுத்துறை அமைச்சருக்குமா கொடுப்போம்… என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எனினும், யுத்த வெற்றிக்குப் பின்னர் அவ்வாறு இடம்பெறவில்லை. பெயருக்கும் புகழுக்காகவும் என்னை ஒதுக்கிவிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலிப் படைப்பிரிவுக்குப் படகுகளை வாங்குவதற்கு, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இரண்டு மில்லியன் 
டொலர்களை வழங்கினார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது தெற்கில், தெற்கு தமிழர்களின் வாக்கை தடுக்க வேண்டும்… என்று மலையகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் தலைவர்களிடம் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
பணத்தைக் கையளிப்பதற்காக, பசில் ராஜபக்ஷவுடன் சென்றிருந்த இரண்டு தலைவர்களிடமே பிரபாகரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்’ என்றும் அமைச்சர் சரத்பொன்சேகா மேலும் கூறினார். ‘யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தின் போது ரவைகள்; இருக்கவில்லை. நான் பாகிஸ்தானுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றைப் பெற்றுக்கொண்டேன். அதன் பெறுமதி, 60 மில்லியன் டொலர்களாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தானும் உதவியது’
 என்றார்.
‘யுத்தத்தின் பின்னரான விசாரணைகளின் போது, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் நீதிபதிகளை அனுமதிக்க வேண்டும். இராணுவத்தினர் மீது முழுமையாக குற்றம் சாட்டக்கூடாது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை
 எடுக்க வேண்டும். யுத்தத்தின் இறுதிக் காலத்தின் போது, சாதாரண படையினர் களத்தில் இருந்தனர். எனினும், முன்னோக்கிய நகர்வுகளில், முக்கியஸ்தர்களும் படைத்தரப்பில் உயர்பதவி நிலைகளில் இருந்தவர்களுமே விடுதலைப் புலிகளுடன் போரிட்டனர் என்பதையும் இவ்விடத்தில் நினைவுறுத்த விரும்புகின்றேன்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது, என்னை அனுப்பிவிட்டு எல்லாவற்றையும் குழப்பி விட்டு விட்டனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஜனநாயக அம்சங்களின் அடிப்படையிலேயே யுத்தத்தை நான் முன்னெடுத்தேன். எனினும், குழப்பிவிட்டமையால் விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியதாய் உள்ளது. ‘வெள்ளைக்கொடி’
 விவகாரத்தில் 
எனக்கு சிறை வாசம் விதித்தனர். வெள்ளைக்கொடி விவகாரத்தை மீண்டும் கிளறி எடுக்க வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்திடம் கோருகின்றேன். குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். முப்படைகளின் மீதும் குற்றஞ்சாட்டக்கூடாது.
குண்டு வெடிப்புக்களும் தற்கொலைத் தாக்குதல்களும் தீவிரமடைந்திருந்த போது தேசப்பற்றாளர்கள் வாய்திறக்கவில்லை. அன்று வாய்திறந்திருந்தால், பிரபாகரன் பாடம் கற்பித்துக் கொடுத்திருப்பார். அநுராதபுரம், பொலன்னறுவைக்கு அப்பால் தேசப்பற்றாளர்கள் செல்லவே இல்லை. பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு பின்னால், நான் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் என்மீது குற்றம் சாட்டுகின்றார். அது தொடர்பில் 
விசாரிக்கவும்.
குற்றமிழைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும். உடுவே தம்மாலோக்க தேரரைக் கைது செய்ததைப் போல, கோட்டாவையும் கைது செய்ய வேண்டும். ராஜபக்ஷ குடும்பங்களுக்காக இரண்டு முறை சிந்திக்க கூடாது. படையை விட்டோடிய கோட்டாபய ராஜபக்ஷ, யுத்தம் தொடர்பில் புத்தகம் எழுதுகின்றார். என்னை மட்டுமே ராஜபக்ஷ குடும்பம் பழிவாங்கியதாக, பசில் ராஜபக்ஷ ஒத்துக்கொண்டுள்ளார். எப்படித்தான் மறைத்து 
வைத்திருக்க முயன்றாலும் நாக்கு, பொய் சொல்லாது. யுத்தம் நிறைவடைந்து, பொறுப்பற்ற பதவிகளை கொடுத்ததன் பின்னர், தேர்தலில், அதுவும் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடுவதாக அறிந்து கொண்டதன் பின்னர் எனது ஜாதகத்தையே திருடியெடுத்துப் பார்த்தனர். அன்று முறையாக தேர்தல் நடந்திருந்தால், நான் வெற்றி பெற்றிருப்பேன்…
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இருந்தமையால் தான், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டி, ஜனாதிபதியாக ஆகியுள்ளார். அவர் மட்டும் அன்று தோற்றிருந்தால் நான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பெருந்தொகையானோர் சிறைச்சாலைக்குச் சென்றிருப்போம். மஹிந்த ராஜபக்ஷ 
குடும்பங்களின் செயற்பாடுகள் காரணமாகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். பதவிகளும் கிடைத்தன அமைச்சராகவும் இருக்கின்றோம். நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாட்சி கிடைத்தது. இவ்வாட்சியை முன்னகர்த்தி செல்வது எமது கையிலேயே இருக்கின்றது.
நான் பதவியில் இருக்கும் போதே 200 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டது. எனினும், 110 கிலோகிராம் தங்கமே மீட்கப்பட்டதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துவிட்டார். அதற்குப் பின்னர் 400 அல்லது 500 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டிருக்கலாம். எனது உரையை, மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. எங்காவது இருந்து கேட்டுக்கொண்டிருக்கலாம். பீல்ட் மார்ஷல் பட்டமும் அமைச்சர் பதவியும் அவரின் செயற்பாட்டினாலே எனக்குக் கிடைத்தது. மஹிந்தவுக்கு பதவி மீண்டும் கிடைக்குமாயின் என் பதவியைப் பறித்தெடுப்பார்’ என்றார்.
நற்பெயரை பாதுகாத்தேன்
‘நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். எனது பெற்றோர் ஆசிரியர்களாக சேவையாற்றினர். இராணுவத்தில் நான், இணைந்ததன் பின்னர் பதவி நிலைகளை ஆணவத்தில் பெறுவதற்கு முயற்சித்திருக்கவில்லை. படிப்படியாக உயர்வு பெற்று சென்றதுடன், இராணுத்தின் நற்பெயரையும் பாதுகாக்க செயற்பட்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இராணுவத்தில், கஷ்ட காலமிருந்தது. அந்த காலத்தில் இராணுவத்தை விட்டு தப்பிச் சென்று அமெரிக்காவில் சுகபோகமாக வாழ்ந்து, சம்பாதித்து விட்டு. யுத்தம் முடிந்ததும் ஆசையில் அந்த கௌரவத்தை பறித்துக் கொள்வதற்காக அலைந்து
 திரியவுமில்லை.
இராணுவத்தின் கௌவரத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் நாம் செயற்பட்டிருந்தோம். அதன் விளைவாக எமக்கு பதவியுர்வுகள் கிடைத்தன. அந்த பதவியுயர்வுகளின் அடிப்படிடையில் நிலையொன்று கிடைத்தது. எனது இராணுவத் தளபதி பதவி மற்றும் அந்தப் பதவிக்கு நான் வந்த முறைமை தொடர்பாக முன்னைய ஆட்சியாளரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
ராஜபக்ஷ குடும்பத்தின் புண்ணியமல்ல
நேர்மையான வழியிலேயே அந்த பதவிக்கு நான் வந்திருந்தேன். அதைவிடுத்து ராஜபக்ஷ குடும்பத்தின் புண்ணியத்திலோ அல்லது அவர்களது தேவைகளுக்காவோ அந்த பதவிக்கு வந்திருக்கவில்லை. இதேநேரம், நான் ஓய்வுபெற இருந்த அதிகாரி என்ற போதிலும் இராணுவ தளபதி பதவியை எனக்கு வழங்கியிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டிருந்தார். அது முழுமையான பொய்.
ஹன்சார்ட் அறிக்கையில் பதியப்படவேண்டும் என்பதற்காகவே இதனை நான் கூறுகிறேன். இராணுவத்தில் நான் தலைமை அதிகாரியாக இருந்தபோது, ஓய்வபெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் என்னை அழைத்து பேசிய அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு அடுத்ததாக இராணுவத் தளபதி பதவி கிடைக்கும் என்றும்
 ஓய்வுபெறும் வயது 58 ஆக அதிகரிக்கப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆகவே, எனக்கு முன்பிருந்த இராணுவ தளபதி ஓய்வுபெறும் போது எனக்கு ஐம்பத்து ஆறாரை வயதாக இருந்தது. இராணுவ தளபதி பதவியில் எனக்கு 3 வருடங்கள் இருக்க முடியும் என்று சந்திரிகா குமாரதுங்க என்னிடம் கூறியிருந்தார்.
எனக்கு 60 வயதாவதற்கு முன்னதாக என்னால் இராணுவத்தில் 3 வருடங்கள் இருக்கக்கூடிய சூழலிலேயே நானிருந்தேன். இராணுவ தளபதி பதவிக்கு நான், 2005 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டபோது, ஓய்வு பெறுவதற்கு 3 வருடங்கள் எனக்கு இருந்தன. அவ்வாறான நிலையில்தான் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டேன்.
ஜாதகங்ளை திருடிச்செல்வர்
இராணுவ தளபதியானதும் மிகவும் சாதாரணமாக எதிர்பார்ப்பே என்னிடம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதன் நிமித்தம் சூழ்ச்சி செய்யும் நோக்கம் இருந்திருக்கவில்லை. எனினும், அப்போதிருந்த நாட்டின் ஆட்சியாளர்கள், அவர்களது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் எமது ஜாதகங்ளை திருடிச் சென்று ஜோதிடம் பார்ப்பார்கள். அந்த ஜாதகம் சிறப்பானதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் குரோதங்ளை ஏற்படுத்திக் கொள்வார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சூழ்ச்சி செய்வதாகவும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பார்கள் என்றும் நினைத்துக் கொள்வார்கள். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலிவாங்க
 செயற்படுவார்கள்.
எனக்கு எதிர்பார்ப்பொன்று தான் இருந்தது. பொதுவாக எந்தவொரு இராணுவ தளபதியிடமும் அந்த அப்பாவியான எதிர்பார்ப்பு இருக்கும் என்றே நான் கருதுகிறேன். இராணுவ தளபதியொருவருக்கு இந்த நாட்டின் சார்பான தூதுவராக பதவி வகிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன.
எதிர்ப்பார்ப்பு எனக்கிருந்தது
சில இராணுவத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளராக பதவி வகிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அவ்வாறான எதிர்பார்ப்பு தான் எனக்கும் இருந்தது. அதற்கு அப்பால் செல்ல எதிர்ப்பார்திருக்கவில்லை. 2009ஆம் ஆண்டில் நாம் யுத்தத்தை நிறைவு செய்தோம். நாம் யுத்தத்தை செய்யும் காலத்தில் யுத்தத்துக்கு மேலதிக பணம் செலவாகவில்லை. இராணுவத்தை 2005 ஆம் ஆண்டில் நான் பொறுப்பேற்கும் போது இராணுவத்தின் செலவினங்களுக்காக வருடமொன்றுக்கு 82 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
3 வருடங்களும் 7 மாதங்களும் இராணுவ தளபதியாக நான் செயற்பட்டிருந்தேன். ஒரு இலட்சத்து 16 ஆயிரமாக இருந்த இராணுவத்தின் எண்ணிக்கையை 2 இலட்சமாக அதிகரித்தேன். அப்போதும் எனக்கு 82 மில்லியன் ரூபாய் தான் கிடைத்தது. எனினும், இராணுவத்தை பராமரிப்பதற்காக மேலதிகமாக நான் பணம் 
கேட்டிருக்கவில்லை.
2012 இல் இருந்தே செலுத்த ஆரம்பிக்கப்பட்டது
இதேநேரம், அதற்கு முன்னரும் நான் யுத்தத்துக்கு கட்டளையிட்ட சந்தர்ப்பத்திலும் யுத்தத்துக்கான ஆயுதங்களை வாங்கும் நடவடிக்கைகள் இந்த 82 பில்லியனுக்கு வெளியிலேயே நடைபெற்றன. அது சீனாவில் இருந்த நடைபெற்றிருந்தது. நான் யுத்தம் செய்தபோது வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான கட்டணங்கள் 2012 ஆம் ஆண்டிலேயே செலுத்த ஆரம்பிக்கப்பட்டன. அவை 2020 வரை செலுத்தப்படும்.
யுத்தத்துக்கான செலவுகள் 2012 ஆம் ஆண்டிலிருந்தே செலுத்த ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு யுத்தத்தை காட்டி மக்களை ஏமாற்றி யுத்தத்துக்கென கூறி அந்த பணத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் கொள்ளையடித்திருந்தனர். உதாரணமாக 130 மில்லிமீற்றர் தோட்டாக்களை குறிப்பிட முடியும். அவற்றை நாம் கப்பல் கணக்கிலேயே
 கொண்டு வருவோம். யுத்தம் ஆரம்பிக்கும் போது அந்த தோட்டவொன்றின் விலை 250 டொலராக காணப்பட்டது. 15 வருடங்களில் அதன் விலை 50 டொலரினால் மட்டுமே அதிகரித்திருந்தது. யுத்தம் நடபெற்ற காலத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் அந்தத் தோட்டவொன்றுக்கு 650 டொலர் கணக்கில் செலுத்த ஆரம்பித்திருந்தார். இது 400 டொலர் அதிகமாகும்.
யுத்தம் செய்யமுடியவில்லை
இவ்வாறு செலவிட்டு இறுதியில் எனக்கு தோட்டா வாங்குவதற்கு நிதி இல்லாமல் போய்விட்டது. தோட்டகள் இல்லாம் என்னால் 4 மாதங்கள் யுத்தம் செய்ய முடியாமல் போய்விட்டது. 2008 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எம்மிடம் போதிய தோட்டக்கள் இல்லாமையினால் நாளொன்றுக்கு ஒரு மல்டி பரல் தாக்குதலை தான் மேற்கொண்டிருந்தோம். அதன் பின்னர், பாகிஸ்தான் இராணுவ தளபதியிடம் நான் தனிப்பட்ட ரீதியில் பேசி 60 மில்லியன் டொலர் பெறுமதியான தோட்டக்களை பெற்றுக்கொண்டோம்.
ஆயுதங்கள் இல்லாத யுத்தம்
பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்புச் செயலாளரும் ஒன்றும் செய்யாமல் மேலே பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பசில் ராஜபக்ஷவுடனும் பேசி 60 மில்லியன் டொலரை பெற்று பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் எனக்கிருந்த நட்பை பயன்படுத்திதான் தோட்டாக்களை வரவழைத்து போதிய ஆயுதங்கள் இல்லாத ஆறு மாதகால யுத்தத்தை நாம் நடத்தியிருந்தோம். அந்தவகையில் தற்போது யுத்தவெற்றிக்கான கௌரவத்தை உரிமைக் கோருபவர்களுக்கு இந்த விடயங்களெல்லாம் மறந்து
 போய்விட்டன.
2005ஆம் ஆண்டு மற்றும் 2010, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களைப் பொருத்தவரையில், 2005 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களானது மிகவும் மோசடிமிக்கதாகவே நடைபெற்றிருந்தன.
பிரபாகரனுக்கு கப்பம்
தமிழ் மக்கள் வாக்களிப்பை தடுப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவினால் பிரபாகரனுக்கு 2 மில்லியன் டொலர் கப்பம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில் பசில் ராஜபக்ஷவுக்கு இருந்த அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இது பற்றி என்னிடம் கூறியிருக்கிறார். அத்துடன் கடற்புலிகளுக்குத் தேவையான படகுகளை மலேசியாவிலிருந்து வாங்குவதற்கு 2 மில்லியன் டொலர்களை தருவதாக பிரபாரகனுக்கு கூறியிருந்ததாகவும் அதன் பசில் ராஜபக்ஷவே மலேசியாசென்று வழங்கிருந்தார் என்றும் அமைச்சர் பொன்சேகா
 தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, அச் சந்தர்ப்பத்தில் மலையக அரசியல்வாதிகள் இருவர் அங்கிருந்ததாகவும், மலையக மக்களை வாக்களிப்பதற்கு இடமளிக்கவேண்டாமென, பிரபாகரன் அவ்விருவரிடமும் கேட்டுக்கொண்டதாக பசில் ராஜபக்ஷ என்னிடம் கூறினார். ஆகவே, கூறுபவற்றை பார்த்தால் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்க செயற்பட்டிருந்தால் அது மரணதண்டனைக்குரிய குற்றமாகும். அந்தவகையில் இவ்வாறான செயற்பாடுகளிலேயே அப்போதிருந்த பிரபல அரசியல் வாதிகள் ஈடுபட்டிருந்தனர். அது பற்றி தேடிப்பார்ப்பதற்கு காலங்கள் கடந்துவிடவில்லை.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலும் மிகவும் மோசடிமிக்கதாகும். வாக்கெண்ணும் ஆறு நிலையங்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. தேர்தல் பெறுபேறுகள் திருத்தி எழுதப்பட்டு வெளியிடுமாறு கூறப்பட்டது. இதனால் அப்போதிருந்து தேர்தல் ஆணையாளருக்கு பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது.
கடைக்கு கூட வருவதில்லை
அவர் எங்கு சென்றார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆகவே, 2005 ஆம் மற்றும் 2010 ஆம் ஆண்டு தேர்தல்கள் நீதியான முறையில் நடைபெற்றிருந்தால் மஹிந்த ராஜபக்ஷ இரு 
தேர்தல்களிலும் தோல்விகண்டிருப்பார். இறுதியில் 2015 ஆம் ஆண்டிலும் ஆசையில் போட்டியிட்டார். எனினும், அதில் மோசடிகளை மேற்கொள்ள முடியாமல்போய்விட்டது. வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் இருந்தபடியால் வாக்கெண்ணும் நிலையங்கள்மீது தாக்குதல்களை நடத்த முடியாமல்போனது. இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களும் 
போரை நான் வழிநடத்தியிருந்தேன். யுத்தம் நிறைவடைய இரண்டு மாதங்கள் இருக்கையில் என்னை அழைத்துப் பேசிய அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீண்டகாலமாக 24 மணிநேரம் யுத்தம்செய்து நீங்கள் களைப்படைந்து
 இருப்பீர்கள்.
ஆகையால், அடுத்தநிலையிலுள்ள இராணுவ அதிகாரிக்கு எஞ்சியிருக்கும் நடவடிக்கைகளை ஒப்படைக்குமாறு கூறினார். அந்த இராணுவ அதிகாரி அப்போது வவுனியாவில் பதுங்கு குழிகளின் நிலைகளுக்கு பொறுப்பாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில், உண்மையில் யுத்தத்தை கொண்டுநடத்துவதற்கு பெரிதாக ஒன்றும் எஞ்ஞியிருக்கவில்லை. என்னை அகற்றிவிட்டு யுத்தத்தை கொண்டுநடத்தி, தான்தான் யுத்தத்தை வெற்றிக்கொண்டேன் என்ற கௌரவத்தை சம்பாதித்துக்கொள்வதற்காக இதை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
பிரபாகரன் உயிருடன் இருந்தார்
மே 19 ஆம் திகதி யுத்தம் முடிந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்தனர். அப்போதும்கூட யுத்தம் முடிவடைந்திருக்கவில்லை. பிரபாகரன் உயிருடன் இருந்தார். எனினும், நாடாளுமன்ற நிகழ்வு முடிவடைந்து நான் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
 யுத்த வெற்றக்கான கௌரவத்தை பெறுவதற்கு முயற்சிக்கும் இவர்கள் யுத்தம் முடிவடைந்த திகதியைகூட அறிந்துவைத்திருக்கவில்லை. வெளிநாடு செல்வதற்கான பயணத்தை ஐந்துதடவைகள் பிற்போட்டு, ஆறாவது தடவையாகவே சென்றிருந்தேன். இவ்வாறான நிலையில், கடைசிவாரத்தில் இராணுவத்தளபதி நாட்டில் இருக்கவில்லை என்றும், தாங்கள் யுத்தத்தை வழிநடத்தினர் என்றும் கூச்சலிடுகின்றனர்.
கீழ்த்தரமான நடவடிக்கை
கடைசி ஒருவார காலப்பகுதியினுள் இவர்கள் செய்த கீழ்தரமான நடவடிக்கைகளினால்தான் வெள்ளைக்கொடி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அவ்வளவுகாலமும் மிகவும் தூய்மையாக மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்த நடவடிக்கைகள் இவர்களது ஒருவார கால நடத்தைகளினால் பாலில் ஒருதுளி விஷம் விழுந்ததுபோல் இருந்து. இறுதி காலத்தில் நற்பெயரை களங்கம் 
ஏற்படுத்திவிட்டனர்.
ஆகவே, இவ்வாறு யுத்தநிறைவின் இறுதிநாட்கள்கூட தெரியாமல் புத்தம் எழுதினர். எவ்வாறிருப்பினும் யுத்தத்தின் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தொடர்பில் கூடியவிரைவில் நாம் மக்களுக்கு 
வெளிப்படுத்துவோம். சிலர் நல்லாட்சிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்கில் ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் விசாரணை நடந்தால் அது நாட்டின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு என்றும் பிரச்சினை கிளப்பிவருகின்றனர். எனினும், யுத்தத்தை வழிநடத்தியவன் என்ற வகையில் கட்டாயம் வெளிப்படையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை வெளிப்படையாக நடத்தப்படுவதற்கும், அதை எமக்கும் பலமாக்கிக்கொள்வதற்கும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களையும், ஆலோசகர்களையும் ஈடுபடுத்திக்கொள்ள
 வேண்டும்.
ஏனெனில், யுத்தத்தை வழிநடத்தியன் என்ற வகையில் ஜெனிவா சாசனங்களையும், மனித உரிமைகளையும் மதித்தே யுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அவற்றை யாரும் ஒருசிலர் மீறியிருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கப்படவேண்டும். இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இதேநேரம், வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியும் பேசப்பட்டது. அது தொடர்பில் எனக்கும்கூட மூன்றுவருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்த விடயம் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில், இது பற்றி உண்மை. மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட 
வேண்டும்.
இதேநேரம், கடந்த காலங்களில் பேசப்பட்ட பல்வேறு கொலைச் சம்பவங்களும் இருக்கின்றன. தாஜுடீன், ரவிராஜ், எக்னெலிகொட, லசந்த விக்கிரமதுங்க போன்றை கொலைகள் தொடர்பில் கட்டாயம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அந்த அனைத்து கொலைகளையும் செய்தது ஒரு நபர், ஒரு குழு தான். அவ்வற்றின் பின்னணியில் இருந்ததும் ஒரு அணியினர் தான். அந்த காலப்பகுதியில் அதிகாரத்தில் இருந்த தரப்பினர் தான் அவற்றின் பின்னணியில் இருந்தனர். தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது’ என்று
 தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>