18

siruppiddy

ஏப்ரல் 19, 2021

யாழில் இலங்கை படைகளில் கூலியாட்களாக தமிழர்கள்

இலங்கை இராணுவத்தில் கூலி வேலைகளிற்கு ஆட்சேர்ப்பதில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இணைந்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா
 தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகளை உரையாற்றும் போது அவர் இதை வெளிப்படுத்தினார்.
"பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை
 வெளிப்படுத்துவதை நாங்கள் இன்னும் காண்கிறோம். இத்தகைய சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும் எனவும் அவர்
 தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டில் அதே போன்று இலங்கை இராணுவத்தில் மேசன்,வெல்டர் மற்றும் கூலி தொழிலாளர்களாக தமிழ் இளைஞர்கள் படையினரால் இணைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக