18

siruppiddy

ஜனவரி 25, 2022

கிளிநொச்சி புதிய கருவிகளுடன் வந்த தென்னிலங்கையர்கள் கைது

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்டும் முயற்சிக்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அவர்களிடம் இருந்து புதையல் தேடுவதற்குப் 
பயன்படுத்தப்படும் ஸ்கானர்
ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்று தெரியவந்துள்ளது. இராமநாதபுரம், சம்புக்குளம்
 பகுதியில் புதையல் அகழ்வதற்காக வந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் புதையல் தோண்டும் முயற்சி தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதுகள் இடம்பெற்றிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>