18

siruppiddy

டிசம்பர் 24, 2019

சுவிஸ் அரசாங்கத்தின் முக்கிய முடிவு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரத்தில்

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விடயத்தை முடிவுக்கு கொண்டு வர சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விரும்புகிறது.எனினும், இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை தொடர்ந்தும் சட்டரீதியில் முன்னெடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் குறித்த பெண் பணியாளரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக 
ஆங்கில இதழ் ஒன்று கூறுகிறது.
குறித்த பெண் பணியாளர் தாம் கடத்தப்பட்டதாக கூறிய விடயம் தொடர்பில் முரண்பட்ட தகவல்கள் வெளியான நிலையிலேயே இதனை முடிவுக்கு கொண்டு வர சுவிஸ் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.எனினும், இது அரசாங்கத்துக்கு பாரிய பங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்ற அடிப்படையில் அரசாங்கம் விடயத்தை முன்னெடுத்து செல்வதாக குறித்த செய்தித்தாளில் குறிப்பிட்டுள்ளது.


இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

டிசம்பர் 19, 2019

யாழ் ஆவரங்காலில் வாள்வெட்டு இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

யாழ் ஆவரங்கால் பிரதேசத்தில் சற்று முன்னர் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் 
எதிர்பார்க்கப்படுகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


டிசம்பர் 16, 2019

சுவிஸ் தூதரக ஊழியர் பொய் சாட்சியம் வழங்கிய குற்ச்சாட்டில் பொலிஸாரால் கைது

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் (16.12.19) சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கைது செய்யப்பட்ட குறித்த ஊழியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 
அறிய முடிகின்றது.
கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியரை கைதுசெய்யுமாறு சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா 
அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக
 அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரியுமான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நவம்பர் 30, 2019

காவலரணில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரணில் நேற்றிரவு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பொலிஸ் உத்தியோகத்தரின்
 உயிரிழப்புத் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழும்நிலையில், 
அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.யாழ்ப்பாணம் பொலிஸ் 
நிலையத்தில் கடமையாற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய காமினி என்ற 
உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணுக்கு 29.11.19. (வெள்ளிக்கிழமை) மாலை இரவு நேரக் கடமைக்காக பொலிஸ் உத்தியோகத்தர் சென்றிருந்தார்.எனினும், இன்று காலை 
அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
 முன்னெடுத்துள்ளனர்.

மாணவி ஒருவருக்கு கோயில் மடப்பள்ளியில் வைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த அதிர்ச்சிச் சம்பவம் யாழ் வல்வெட்டித்துறையில் நடைபெற்றுள்ளது.
தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில், விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் மேலதிக புலன் விசாரணை மேற்கொண்டதையடுத்து, வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தனர். மாணவியிடம் கைப்பற்றிய தொலைபேசியை சான்றுப் பொருளாக ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அம்மன் கோவில் பூசகர் அந்த தொலைபேசியை தந்ததாக குறிப்பிட்டார். அத்துடன், பூசகர் காசு 
மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சிறுமியை நயவஞ்சகமாக கோயில் மடப்பள்ளிக்குள் அழைத்து, தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக
 குற்றம் சுமத்தப்படுகிறது.
பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மாணவியின் சித்தப்பாவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்து உள்ளனர். பூசகரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு, அவரும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிடப்படுகின்றதுபூசகர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் சிறுமிக்கு தொடர்ச்சியாக 
பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்து நேற்று முன்தினம் (28) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவப் பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு 
பிறப்பித்துள்ளது.

நவம்பர் 13, 2019

யாழ் நகரில் ஊடகவிலாளர்களுக்கு நீதி கோரும் நடை பயணம் முன்னெடுப்பு

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த விழிப்புணர்வு பயணம் இன்று இறுதி நாளாகவும் நடைபெற்றது.நவம்பவர் மாதம் 2 ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து 
விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும், சர்வதேச தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு பயணம்
 இன்று.13.11.2019. புதன்கிழமை யாழ் நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.   இதன் போது கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட
 வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களை பொது மக்களிடம் கையளித்திருந்தனர்.மின்சார நிலைய வீதி, 
ஆஸ்பத்திரி வீதி, கஸ்தூரியார் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகியவற்றில் நடை பயணமாக சென்றும் யாழ்.பிரதான பஸ்நிலையம், சந்தை, வியாபார நிலையங்களுக்கும் சென்ற ஊடகவியலாளர்கள் தமது
 கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்ககளிடம் கையளித்திருந்தனர்.இவ் விழிப்புணர்வு பயணத்தின் போது தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





ஜூன் 04, 2019

எப்போதும் ஆண் என்பவன் வாழ்க்கையில்…

என்ன தான் தோழி, காதலி, மனைவி, அம்மா என அனைவரையும் கிண்டல், கேலி செய்து விளையாடினாலும். அவர்களுக்கு பாதுகாவலனாக இருந்து எப்போதும் காப்பது ஆண் தான். இதை கொஞ்சம் காலரை தூக்கிவிட்டபடி காவலன் என்று சொல்லிக் கொள்ளலாம்.உடல் ரீதியாக
 இருந்தாலும் சரி, மனம் ரீதியாக இருந்தாலும் சரி, ஓர் பெண்ணை முழுவதுமாக மகிழ்விப்பது ஆண் தான். இதை பெண்களால் கூட மறுக்க முடியாது. காதலனாக மட்டுமின்றி, தோழனாக 
கூட ஒரு பெண்ணின் முழு புன்னகைக்கு பின் மறைந்திருப்பவன் ஆண் தான்.ஷாப்பிங் செய்ய பெண்களுக்கு இருக்கும் 
மகிழ்ச்சியை விட, தான் சம்பாதித்த பணத்தில், தன் தங்கை, காதலி, அம்மா போன்றவர்களுக்கு பொருட்கள் வாங்கி தருவதில் ஆண் மகனே அதிக மகிழ்ச்சி அடைகிறான். ஆண் மற்றவரை 
மகிழ்விக்க தன் வலியையும் மறைத்து வாழ்பவன் என்பதே நிதர்சனம். ஓர் பெண்ணின் வாழ்க்கை ஆண் இன்றி முழுமை அடைவதில்லை. அதே போல தான் பெண்ணின்றி ஆணும் முழுமை
 பெறுவதில்லை
. பெண்களின் கனவுகளை வளர்க்க ஆண் வியர்வை சிந்துகிறான், தகப்பனாக தொடங்கி கணவனாக முடிவு வரை.
தோள் கொடுக்கும் தோழன்: பெண்கள் துவண்டு போகும் ஒவ்வொரு தருணத்திலும் அவளை மீட்டெடுப்பவன் ஆண் தான். தகப்பனாக, சகோதரனாக, தோழனாக, காதலனாக ஓர் ஆண்
 பெண்ணுக்கு எப்போதுமே உறுதுணையாக தான் இருக்கிறான்.எத்தனை பணம் கொடுத்தாலும் பெண்ணுக்கு ஓர் நல்ல தோழன் கிடைப்பது என்பது வரம் போன்றது. எந்த ஒரு பெண்ணும் தனக்கு
 அமைந்த அந்த தோழமையை இழக்க விரும்புவதில்லை. அந்த சூழலை எந்த உண்மையான தோழனும் ஏற்படுத்துவதில்லை.ஒரு பெண் வலுவிழந்து காணப்படும் போது, அவளை பற்றி அவளுக்கே
 எடுத்துக் காட்டி, அவளை நல்வழி படுத்தும் ஓர் நல்ல வழிகாட்டியாக இருப்பது பெரும்பாலும் ஓர் ஆண்மகன் தான். அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு உறவின் பரிமாணத்தில் 
ஆண் துணையாக வந்து செல்கிறான்.பெருமிதம் கொள்வோம்… ஆண் மகனாக பிறந்தமைக்கு மகிழ்ச்சியாக வாழ்க்கை. 
வாழ்வோம் நட்பூக்களே.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மே 18, 2019

ஒரே நாளில் வரலாற்றில் முதன்முறையாக 762 பேருக்கு விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைகைதிகளை விடுதலைசெய்ய தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி
 மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிகடை சிறைசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 
வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையில்
 55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் 50கைதிகள்,பல்லன் சேன சிறைச்சாலையில் 53 கைதிகள் என்ற அடிப்படையில் 
சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக
 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிறைச்சாலை வரலாற்றிலே இம்முறை தான் அதிகமான சிறைகைதிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மே 13, 2019

ஊரடங்குச் சட்டம் வடமேல் மாகாணம் முழுவதும் அமுலில்

மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வகையில் வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் 
குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
 பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டே இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஏப்ரல் 30, 2019

யாழில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு

யாழ்.சாவகச்சோிப் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவா்கள் மீது சரமாாியாக தாக்குதல் நடாத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 போ் காயமடைந்துள்ளனா்.
சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை (29.04.19) உட்புகுந்த நால்வர் கொண்ட குழுவொன்று வீட்டில் இருந்தவர்கள் மீது கொட்டன்களால் தாக்கி வாளினால் வெட்டி காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்
. குறித்த தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 27வயதுடைய கனகரத்தினம் கௌதமன் மற்றும் 28 வயதுடை
ய பரராசசிங்கம் கோபிநாத் ஆகிய இருவரே காயமடைந்துள்ளனர். அதில், கௌதமன் வாள் வெட்டுக்கு இலக்காகி கை விரல் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த இருவரும் அயலவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையிலும், யாழில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


விடத்தல்தீவில் பாரிய தேடுதல்…!! வீடு வீடாகச் சோதனை

அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் முப்படையினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை 
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.விடத்தல் தீவு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை டெட்டனேட்டர்களுடன் 4பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையிலேயே முப்படையினர் இணைந்து குறித்த 
சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.வீடுகளுக்குச் சென்ற படையினர் வீடுகளை முழுமையாக 
சோதனையிட்டதோடு, வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பெற்றுக்கொண்
டனர். மன்னார் பிரதான பாலத்தினூடாக உள்வரும், வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு, 
மக்களின் அடையாள அட்டைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.மன்னார் நகரில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை வீடு வீடாகச் சென்று கடும் சோதனைகளையும், தேடுதல்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட விடத்தல் தீவைச் சேர்ந்த 4 பேர் இராணுவத்தினரினால், அடம்பன் பொலிஸாரிடம் மேலதிக விசாரனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஏப்ரல் 08, 2019

பயங்கர மோதல் ஓமந்தையில் இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இரு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஓமந்தை, சின்னப்புதுக்குள வீதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையில் மோதல் 
ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அனுமதிக்கப்பட்டவரில் ஒருவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  
இம்மோதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் எரியூட்டப்பட்டு, முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மோதலில் ஈடுபட்டோர் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிஸார் 
கைப்பற்றியுள்ளனர்
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ,இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மார்ச் 23, 2019

நள்ளிரவில் நடந்த தேடுதலில் வடக்கின் முக்கிய பிரதேசத்தில் பெரும் புதையல்

வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவிலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையலுடன் சந்தேகநபர்கள் நால்வர் 
கைதாகியுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் சென்ற சந்தேகநபர்களே நேற்று இரவு புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சந்தேகநபர்கள் நால்வரும்
 காஞ்சிராமோட்டை காட்டு பகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் 
தோண்டியுள்ளனர்.அவற்றை சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் கடத்தி செல்ல முற்பட்டுள்ளனர். இந்த சமயத்தில் 
இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குளம் பொலிஸார் 
அவர்களை கைது செய்து, புதையல் பொருட்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் 35, 35, 40, 42 வயதுகளை உடைய தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேணி போன்ற இடங்களை சேர்ந்த 
நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது புராதன கால புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு மற்றும்
 மலையாள மாந்திரிக புத்தகங்கள் என்பன கிடைத்துள்ளன.  சந்தேகநபர்கள் விசாரணைகளின்
 பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  அத்துடன் புதையல் பொருட்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மார்ச் 21, 2019

இலங்கை உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 130 ஆவது இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் பிரான்ஸ் 24 வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு நேற்யை தினம் இந்த பட்டியல் 
வௌியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன.
நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த பட்டியல் 
தயாரிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிப்ரவரி 27, 2019

நாட்டில் மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடத்தில் நடைபெறும் சாத்தியம்

இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நடாத்தப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரத் தகவல்கள்
 தெரிவிக்கின்றன.நாட்டிலுள்ள பல மாகனாணங்களின் சபையின் ஆட்சிக் காலம் முடிவடைந்து தேர்தல்கள் நடாத்தப்பட இருக்கின்றன. அதே நேரம் இன்னும் சில மாகாண சபைகளின் ஆட்சிக் காலமும் முடிவடைய இருக்கின்றன.
இந் நிலையில் மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துமாறு பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.குறிப்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அரச மற்றும் எதிர்த் தரப்பினர்கள் என பலரும் தேர்தலை நடாத்த வேண்டுமென கோரி வருகின்ற போதும், தேர்தல் நடாத்தப்படாமல் இழுபட்டுக் 
கொண்டே செல்கின்றது.
இவ்வாறானதொரு நிலைமையிலையே அரசியலமைப்பின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட மாகாண சனபை முறைமையின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடாத்தாவிட்டால்  மாகாண சபை முறைமை எதற்காக என்றும் அதற்கான தேர்தலை தொடர்ந்தும் நடாத்தாவிட்டால் அந்த முறைமையையே நீக்கலாமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு மாகாண சபைக்கான தோர்தல் நடாத்தப்படாமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலைமையில் இந்த ஆண்டுக்குள் மாகாண சனபைக்கான தேர்தல் நடாத்தப்படாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை என்றும், இந்தப் பதவியில் இருந்தே தான் விலத்தப் போவதாகவும் ஆணைக்குழுவின் தவிசாளரான மகிந்த தேசப்பிரிய அண்மையில்
 தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிய வருகின்றது. ஆனால், அவ்வாறு உடனடியாக தேர்தலை நடாத்துவதற்குரிய சாத்தியங்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. ஏனெனில், தேர்தலை நடாத்துவதாயின் ஆகக் குறைந்தது 70 நாட்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு 
தேவையாக உள்ளது.
ஆதனால், இத் தேர்தல் மே 31 ஆம் திகதியளவனில் வைப்பதற்கான சாத்தியங்களே இல்லை. இவ்வாறானதொரு நிலையிலையே மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியளவில் நடாத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், மாகாணங்களுக்கான இத் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடாத்தப்பட வேண்டியது அவசியமானது. ஆனால், தேர்தல் நடாத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது.
இதே வேளை தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென்றும் தேர்தலை நடாத்த தயார் என்றும், தேர்தலை சந்திக்க தயார் என்றும் பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்ளை வெளியிட்டு வந்தாலும், தேர்தல் என்பது நடக்காமலே உள்ளது. ஆகவே, இத் தேர்தலை நடாத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவைப் பொறுத்தவரையில் உறங்குபவர்களை எழுப்ப முடியும், ஆனால், உறங்குபவர் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாதென்பது போலவே கருதுவதாக தெரியவருகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிப்ரவரி 26, 2019

படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ட

வடக்கில் படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமும், கவனவீர்ப்பு வாகன ஊர்வலமும் கேப்பாபுலவில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
727 ஆவது நாளாக தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்ககோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து இவற்றை
 முன்னெடுத்தன.
கேப்பாபுலவு வீதியால் சென்ற வாகன ஊர்வலம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான மனு மாவட்ட உதவி செயலாளர் ஆ.லதுமீராவிடம்
 கையளிக்கப்பட்டது.
கையெழுத்து போராட்டம் முல்லைத்தீவில் ஆரம்பமாகி பரந்தன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், பூநகரி, மன்னார், வவுனியா, நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்குச் சென்று கொழும்புடன் நிறைவடையும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










பிப்ரவரி 24, 2019

யாழில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் தமிழ் இதழியல் மாநாடு

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு இடம்பெறவுள்ளது.இதன்படி, நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக இடம்பெற உள்ளது.பன்னாட்டு தமிழ் இதழியல் இயக்கமும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறையும் உதயன் பத்திரிகையோடு இணைந்து இந்த மாநாட்டை
 ஒழுங்கு செய்துள்ளன.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறைத் தலைவர் பேராசிரியர் கோ.இரவீந்திரன் தலைமையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் இடம்பெற்று வந்த இந்த மாநாடு முதற்தடவையாக இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பன்னாட்டு தமிழ் இதழியல் இயக்கத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் தே.
தேவானந்த் தெரிவித்தார்.
இதழியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்வுகளை உள்ளடக்கியதாக மாநாடு இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழ் இதழியல்துறை சார்ந்து இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளிலும் இயங்கக்கூடிய ஆய்வாளர்கள், புலமையாளர்கள், இதழியல்துறை மாணவர்கள், செயற்பட்டாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தமது ஆய்வுகள், அவதானிப்புக்களை முன்வைக்கவுள்ளனர்.
மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க விரும்புபவர்கள் எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் journalismmovement@gmail.com என்கிற மின்னஞ்சல் ஊடாகத் தமது ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பி வைக்க முடியும் என்று பன்னாட்டு தமிழ் இதழியல் இயக்கம் 
அறிவித்துள்ளது.
பன்னாட்டு இதழியல், அபிவிருத்திக்கான இதழியல், தமிழ் வானொலி, சமூக ஊடகங்கள், தமிழ்த் தொலைக்காட்சி, இதழியல் கல்வி, தொடரறா ஊடகங்கள், தமிழ் வழிக்கல்வி, ஊடகமும் சுற்றுலாத்துறை, தமிழ் இதழியல் வரலாறு ஆகிய விடயப் பரப்புக்களில் கட்டுரைகள்
 முன்வைக்கப்படலாம்.
ஆய்வுச் சுருங்கங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்படும் ஆய்வுகள் மட்டுமே மாநாட்டில் அனுமதிக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் தே.தேவானந்த் தெரிவித்தார்.மாநாடு தொடர்பில் மேலதிக விவரங்களை 0773112692 இலக்கத் தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிப்ரவரி 18, 2019

அநு­ரா­த­பு­ரடத்தில் விடு­தலைப் புலி­க­ளின் சின்­னம் பொறிக்­கப்­பட்ட தொப்பி, துப்­பாக்கி


அநு­ரா­த­பு­ரம் தக­யா­கம பகு­தி­யில் விடு­தலைப் புலி­க­ளின் சின்­னம் பொறிக்­கப்­பட்ட தொப்பி, துப்­பாக்கி ரவை­கள் போன்­றன மீட்­கப்­பட்­டுள்­ள­தாகப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
அநு­ரா­த­பு­ரம் தக­யா­கம, ஜெய­சிங்க பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் மாலை 4மணி­ய­ள­வில் மாந­க­ர­ச­பை­யி­ன­ரால் வீதி­யோ­ரங்­களை
 துப்­ப­ரவு செய்­த­போது, வீதி­யோ­ரத்­தி­லுள்ள வடி­கா­னில் பை ஒன்­றில் வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் 46 துப்­பாக்கி ரவை­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.
துப்­ப­ரவு செய்த மாந­க­ர­ச­பை­யி­னர் இது குறித்து பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கி­ய­தை­ய­டுத்து அநு­ரா­த­பு­ரம் பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்று உட­மை­களை மீட்­ட­னர்.
இவ்­வாறு மீட்­கப்­பட்ட துப்­பாக்கி ரவை­கள் எம்.பி.எம்.ஜி துப்­பாக்­கி­யி­னு­டை­ய­தெ­ன­வும், விடு­த­லைப் புலி­க­ளின் சின்­ன­து­ட­னான தொப்பி ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­த­னர். மீட்­கப்­பட்ட ரவை­க­ளும், தொப்­பி­யும் புதி­தாக இருப்­ப­தாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.


பிப்ரவரி 15, 2019

யாழில் நுண்கடனால் அவதியுறும் .பெண்களுக்கு தீர்வு:

நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நுண்கடன் திட்டத்தினால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும். ஆனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட நுண்கடன் திட்டத்தினால் வறுமையான குடும்பத்திலுள்ள பெண்களே அதிகளவு 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகையால், வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பதற்காகவே இப்புதிய நுண்கடன் சட்டத்தனை அறிமுகம் செய்யவுள்ளோம்.
மேலும், நுண்கடன் திட்டத்துக்குப் பதிலாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரச சலுகை வட்டி கடன் திட்டத்தில் மக்கள் இணைந்துக் 
கொள்வது சிறந்ததாகும்.
இந்த திட்டத்தில் மக்களுக்கென விசேட சலுகைகள் காணப்படுவதுடன் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட வங்கிகளுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளோம்.
இதனால் எந்ததொரு வங்கியாவது சலுகையை வழங்க மறுத்தால், 1925 என்னும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு எமக்கு தெரிவிக்க முடியும் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிப்ரவரி 13, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு நோக்கி திருப்பிய பார்வை

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் . வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது . இதன் போதே ஜனாதிபதி 
இவற்றை கூறினார் , “
விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட வடக்கு மக்களுக்கு அவர்களது விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் உரியவாறு பெற்றுக்கொடுக்கப்படின் வட மாகாணத்தில் நிலவும் ஏனைய அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் .
சுற்றாடல் பாதிப்புகளின்றி நடைமுறைப்படுத்தப்படும் இந்த செயற்திட்டத்தினூடாக துரித மற்றும் வெற்றிகரமான பெறுபேறுகளை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்வார்கள் “ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார் .
வட மாகாண நீர்ப்பாசன மற்றும் குடிதண்ணீர் தேவைகளை நிறைவு செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது . முன்மொழியப்பட்டுள்ள வடமத்திய கால்வாய்த்திட்டம் , நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள . ‚ யாழ்ப்பாணத்திற்கு நீர் ‚ செயற்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .
அத்தோடு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஜயிக்கா நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் ‚ எல்லங்கா ‚ குளக் கட்டமைப்பு அபிவிருத்தி – செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் “ இதன்போது கலந்துரையாடப்பட்டது .
மேலும் இந்த கலந்துரையாடலில் மகாவலி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும் மற்றும் அவ் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க , வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிப்ரவரி 11, 2019

பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக வடக்கில் நடத்த ஏற்பாடுகள்

வடக்கு மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி இந்தமாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் 
தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள சிறி போதிதக்‌ஷணாராமய விகாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு
 வருகின்றன
வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், விகாராதிபதியுமான சியம்பலாகஸ்வௌ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின் கீழும் பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவகம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டு கொள்வதே இந்த மாநாடு நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் என்று வட மாகாண
 ஆளுநர் கூறியுள்ளார்.
அத்துடன், வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.வட மாகாணத்திலும் பார்வை பட தொடங்குகிறது. நம் உரிமைகளை பற்றிப்பிடிப்போம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மானிப்பாயில் கூடடத்தில் விஜயகலா மகேஸ்வரன் சொன்னதின் நோக்கம்

மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் என்றோ அல்லது தனிநாடு ஒன்றையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ, ஆதரித்துப் பேச வேண்டிய உள்நோக்கம் எனக்கு இருக்கவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மானிப்பாயில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டிருந்தன. எனினும் யுத்தத்திற்குப் பின்னர் இப்பிரதேசம் கல்வியில் பின்தங்கியுள்ளது.
இந்நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டது
இதனால் வன்முறை கலாசாரம் கட்டவிழுத்துவிடப்பட்டது. தமிழ் இளைஞர், யுவதிகளின் உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையிலேயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய வன்முறைக் கலாசாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதை தடுக்கும் வகையிலேயே அன்றைய நிர்வாகம் குறித்து நான் பேசியிருந்தேன். யுத்தத்தில் பேரிழப்புக்களைச் சந்தித்த மக்கள் இனியும் பாதிக்கப்படுவதை அனுமதிக்கமுடியாது
நான் ஒரு தாயாக, இந்த நாட்டின் பிரஜையாக, பாராளுமன்ற உறுப்பினராக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குற்றங்களற்ற சூழலையும், சமாதானத்தையும், இன ஒற்றுமையையும் உருவாக்குவதற்கு உறுதியுடன் செயற்படகிறேன்.
வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேணடும்.இதுதொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதிருப்பது பற்றி நான் மிகவும்
 கவலையடைகிறேன்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்களே அன்று 02.07.2018 நான் அவ்வாறு உரையாற்ற மூலகாரணமாகியது. றெஜினா என்ற 
ஆறு வயது சிறுமியை கடத்திச்சென்று, சித்திரவதைப்படுத்தி, வன்புணர்வுக்கு ஆளாக்கினர். எனது உரைநிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன், இரண்டு பேர் வீட்டின் கூரைவழியே உட்சென்று பெண்ஒருவரை அவரது கணவன் முன்னிலையில் வன்புணர்வு செய்தனர்.
மானிப்பாய் எனுமிடத்தில் வயோதிபப்பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். தென்மராட்சி – சாவகச்சேரிப் பகுதியில் வாழ்ந்த பெண்ணின் வீட்டினுள் பலர் உட்புகுந்து கொள்ளையடித்தனர். இவ்வாறான சம்பவங்களால் நான் உணர்ச்சி 
வசப்பட்டிருந்தேன்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான தாக்குதல்கள் எனது மன அமைதியை இல்லாமற் செய்துவிட்டன. எனவே, அதிகரித்துவரும் குற்றச்செயல்களை இல்லாதொழிக்க பயனுறுதிமிக்க கடும் நடவடி
க்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். குற்றம் புரிந்தோருக்கு எதிராக புலிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். இதுபற்றியே அன்று எனது உரையில் குறிப்பிட்டிருந்தேன்.
மேலும், நான் எப்போதும் சமூகங்களுக்கிடையே சமாதானம் மற்றும் ஒற்றுமையை ஆதரித்துவருகிறேன்.எனது உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டமை க்கும், புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென ஆதரித்து பேசியதாக தவறான பிரச்சாரம் செய்யப்பட்டமைக்கும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.” என்றும் அவர்
 தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிப்ரவரி 09, 2019

இந்தியாவும் துணை நின்றது! விடுதலைப் புலிகளை அழிக்க மஹிந்த பரிந்துரை

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது என மஹிந்த ராஜபக்ச இந்தியாவில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் 
அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களுரில் இந்து நாளிதழின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
“இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை பொறுத்தவரை சிறப்பான காலங்களும் காணப்பட்டுள்ளன மோசமான காலங்களும் காணப்பட்டுள்ளன.
ஆனால் இரு நாடுகளையும் பாதிக்கும் போக்குகள் குறித்து புரிந்துகொள்வதும் எங்கள் பரஸ்பர நன்மைகளிற்காக அவற்றை 
பயன்படுத்துவதும் அவசியம்.
தங்கள் சுயலநலன்களிற்காக செயற்பட்ட சிலரால் இந்தியாவும் இலங்கையும் அச்சுறுத்தலையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது.
1980களில் இந்தியாவில் பாதுகாப்பு பெற்ற விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தியின் உயிரை பறித்ததுடன் 1500 படையினரை
 கொலை சய்தனர்.
அது எங்கள் உறவுகளில் பிரச்சினைக்குரிய காலம் நாங்கள் இழைத்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்வதுடன் அதே தவறுகள் மீண்டும் இழைக்கப்படாத எதிர்காலத்தை நோக்கி
 முன்னேறவேண்டும்.
1980 மற்றும் 2014 இல் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முறிவடைந்தன.
உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை போரிட்டுக்கொண்டிருந்தபோது கூட இந்தியாவுடன் சினேகபூர்வமான உறவுகள் காணப்பட்டன பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது.
2014 இல் மீண்டும் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய முறிவு ஏற்பட்டது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அரசாங்கங்களிற்கு இடையிலான உறவுகள் மாற்றமடைந்தன. அரசாங்கங்கள் மத்தியில் போதிய தொடர்பாடல் இல்லாததே இதற்கு காரணம். இந்திய இலங்கை உறவுகளிற்கான எனது
 பரிந்துரை இதுதான்.
ஆட்சியிலிருந்து விலகும் தரப்பு இலங்கையுடனான உறவுகளிற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது என்றால் புதிதாக ஆட்சிக்கு வரும் தரப்பும் அதே அங்கீகாரத்தைவழங்கவேண்டும்.” என்றார் மஹிந்த.

இதேவேளை பெங்களூரு சென்ற மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தமை கு
றிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>