18

siruppiddy

ஆகஸ்ட் 31, 2014

ஜனவரி மாதம் 3ம் திகதி சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தல்


ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் நிச்சயமான திகதிகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தை ஆதாரம் காட்டி சிங்களப் பத்திரிகையொன்றே இவ்வாறு எதிர்வரும் ஜனவரி 3 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற எனத் தெரிவித்திருந்தது. அந்த பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது - ஜனாதிபதி தேர்தலை நடாத்த உச்ச நீதிமன்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கான விஜயம் ஒன்றை ஜனவரி மாத நடுப்பகுதியில் செய்யவுள்ளதால் அதற்கு முன்னதாக தேர்தலை நடாத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஆகஸ்ட் 11, 2014

கணவரை ஒரு முறையாவது காட்டுங்கள் ; ஜானின் மனைவி

மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி ஜானின் மனைவி உருக்கமாக வேண்டுகோள்
எனக்கு அரிசி வேண்டாம் பருப்பு வேண்டாம், வீடு வேண்டாம் எனக்கு எனது கணவர் தான்  வேணும். பொது மன்னிப்பு வழங்குவதாக கூறிதான்  இராணுவம் எனது கணவரை சரணடைய வைத்தது. முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பாதிரியார் ஜோசெப் மைக்கல் உட்பட 40 பேருடன் தான் எனது கணவரும் சரணடைந்தார் எனக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் அவரை ஒரு முறையாவது காட்டுங்கள்  என கோரி ஆணைக்குழு முன்னால் விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி ஜானின் மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப்பதிவின் இறுதிநாள்  பதிவு தற்போது மடு பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்போதே அவரது மனைவி ஆணைக்குழு முன் மேற்கண்டவாறு கூறி கதறி அழுதார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஆகஸ்ட் 03, 2014

ஆரம்பமாகியுள்ள ஜெனீவாவில் இலங்கைமீதான சர்வதேச

இலங்கை குறித்த சர்வதேச விசாரணை ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது முறைப்பாடுகள்குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

சர்வதேச விசாரணை குழுவினர் தற்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு முறைப்பாடுகளை ஆராய்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த மாத இறுதிக்குள் முறைப்படியான விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் குற்றச்சாட்டுகளை வகைப்படுத்துவதே இதன் நோக்கம்.

மேலும் தங்களிடம் உள்ள தகவல்கள் தொடர்பாக ஸ்கைப் மூலமாக இலங்கையில் உள்ள சிலரிடம் விசாரணைக்குழுவினர் தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைக்குழுவினர் ஸ்கைப் மூலம் இலங்கையில் சிலரிடம் தொடர்பு –
 
மற்றைய செய்திகள்