18

siruppiddy

பிப்ரவரி 27, 2018

இனம் தெரியாதோரால் தம்பலகாமத்தில் பஸ் வண்டி தீக்கிரை!!

திருகோணமலை – தம்பலகாமம், கிண்ணியா பிரதான வீதியின் பட்டிமேடு சந்தியில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்பலகாம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த பஸ் வண்டி முள்ளிப்பொத்தானை 97ஆம் கட்டையை சேர்ந்த சமிந்த என்பவருக்கு சொந்தமானது எனவும் தெரியவருகிறது.
பஸ் வண்டி முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாம பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





இரு புதிய உறுப்பினர்கள் வட மாகாண சபையில் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களான எஸ்.எம்.எ. நியாஸ் மற்றும் சபாரட்ணம் குகதாஸ் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து முன்முதலாக இன்று அவைக்கு 
வருகைதந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று 117ஆவது அமர்வு ஆரம்பமாகியது.அதன்போது இரு உறுப்பினர்களும் அவைத் தலைவரினால் சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்
.வடமாகாண 
சபையின் உறுப்பினரான இம்மானுவேல் ஆர்னோல்டிற்குப் பதிலாக ரெலோ கட்சியின் உறுப்பினர் சபாரட்ணம் குகதாஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் றயிஸ் இராஜினாமா செய்து
 கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து இருவரும் தமது கன்னியுரையினை 
சபையில் ஆற்றினார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிப்ரவரி 13, 2018

வெடித்த குண்டு முல்லைத்தீவு பிரதேசத்தில்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்குப் பிரதேச நபர் ஒருவர் தீ வைத்தபோது அதற்குள் இருந்த ஆர்.பி.ஜி ரக வெடிபொருள் வெடித்ததால் குப்பை மேட்டிலிருந்த சில கழிவுப் பொருள்கள் அருகிலுள்ள வீடுகள் மீது சிதறி வீழ்ந்திருக்கின்றன.
சில வீடுகளுக்கு சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
போருக்குப் பின்னர் முல்லைத்தீவுப் பகுதி.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>