18

siruppiddy

ஜனவரி 29, 2019

போராட்டத்தினால் ஏ-9 வீதியூடான போக்குவரத்துக்கள் திடீர் முடக்கம்…

வவுனியா நகரப் பகுதியில் அகற்றிய கழிவுகளை கொட்ட முடியாமல் வாகனங்களுடன் காத்திருந்த சுகாதார ஊழியர்கள்
 மற்றும் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ9 வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வவுனியா பிரதேச குப்பைகள் பம்பைமடுவில் கொட்டப்படுவதால் பல இன்னல்களை
 சந்தித்து வருவதாக சாளம்பைக்குளத்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பம்பைமடுவில் குப்பைகளைக் கொட்டச் சென்ற வாகனங்களை மக்கள் இடைமறித்துத் திருப்பி அனுப்பியுள்ளனர்.  மேலும், நீண்ட நேரமாக கழிவுகளை கொட்ட 
முடியாமல் காத்திருந்த சுகாததார ஊழியர்கள் தற்போது வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  குறித்த அசாதாரண நிலை காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக