18

siruppiddy

பிப்ரவரி 27, 2018

இரு புதிய உறுப்பினர்கள் வட மாகாண சபையில் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களான எஸ்.எம்.எ. நியாஸ் மற்றும் சபாரட்ணம் குகதாஸ் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து முன்முதலாக இன்று அவைக்கு 
வருகைதந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று 117ஆவது அமர்வு ஆரம்பமாகியது.அதன்போது இரு உறுப்பினர்களும் அவைத் தலைவரினால் சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்
.வடமாகாண 
சபையின் உறுப்பினரான இம்மானுவேல் ஆர்னோல்டிற்குப் பதிலாக ரெலோ கட்சியின் உறுப்பினர் சபாரட்ணம் குகதாஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் றயிஸ் இராஜினாமா செய்து
 கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து இருவரும் தமது கன்னியுரையினை 
சபையில் ஆற்றினார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக