18

siruppiddy

அக்டோபர் 21, 2020

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம்

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனவும் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியும் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு 
வழங்கியுள்ளது.
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விடுக்கப்பட்டிருந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018இல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இந்த வழக்கில், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என ஈழத்தமிழரசு சார்பில் 
வாதிடப்பட்டது.
அந்தவகையில், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தவறானது என இன்று(21) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>










0 கருத்துகள்:

கருத்துரையிடுக