18

siruppiddy

ஜூன் 17, 2013

விபத்தில் 5 வயது மகளுடன் பலியான தந்தை

 
3 வயது மகள் உயிருக்கு போராட்டம் கனடாவின் பிரம்டன் நகரில் நடைபெற்ற வாகன விபத்தில் 40 வயதுடைய கோபிநாத் தங்கவேலு என்பவரும் அவரது 5 வயதான மகளான ஆரணியும் பலியானர்கள்.
காரில் இவர்களோடு பயணித்த தாயும், மூன்று வயது மகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் மூன்று வயதான மகளின் நிலைமையும் ஆபத்தாகவுள்ளதுடன், தாயார் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இரண்டு பையன்களும், மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர்.
இந்த குடும்பத்தின் மூத்த மகனான 17 வயதுடைய கீர்த்திக் கோபிநாத் இந்த விபத்து குறித்து கூறுகையில், நான் எனது மற்றைய சகோதரிகள் மற்றும் எனது குடும்பத்தின் வாழ்க்கையை இனி எடுத்துச் செல்வதற்காக உறுதியான மனப்பாண்மையுடன் இருக்க வேண்டியதை உணர்ந்து அதற்கான திடத்துடன் இருக்கிறேன் என்றார்.
தனது தந்தை தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் “தந்தையர் தினத்தை” கொண்டாடுவதற்கு முதல்நாள் அவர் இறந்தது மிகவும் வருத்தமானது என்றும் இறந்த தனது சகோதரி தன்னோடு எப்போதும் விளையாடுபவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக