18

siruppiddy

ஆகஸ்ட் 31, 2021

நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு நீண்ட வரிசையில் மக்கள்

இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.இந்நிலையில் சதொசயில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் லசந்த அழகியவண்ண வெளியிட்ட தகவலை அடுத்து சதொசயில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அதற்கமைய நேற்றைய தினம் முதல் 10 ரூபாவினால் சீனியின் விலையை அதிகரிக்க சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ஒரு குடுபத்திற்கு ஒரு கிலோ சீனி மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனை பெற்றுக் கொள்வதற்கு சதொச நிறுவனங்களுக்க முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக சில சதொச நிறுவனங்களில் சீனி நிறைவடைந்துள்ளமையினால் மக்களால் கொள்வனவு செய்ய முடியாமல் வீடு திரும்ப நேரிட்டுள்ளதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




மே 25, 2021

கடைகளை கிளிநொச்சியில் மூடிய சிறிலங்கா காவல் துறை

 

கிளிநொச்சி நகரில், 25-05-2021.இன்றைய தினம் திறக்கப்பட்ட வியாபார நிலையங்களில், அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை காவல் துறை  உடனடியாக 
மூடியுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை, பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், கிளிநொச்சி நகரில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களும் வழமை போன்று நகருக்கு வருகை தந்திருந்தனர். ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களைத் தவிர ஏனையவற்றை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்மைக்கு அமைவாக கிளிநொச்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

சர்வதேச அரங்கில் தமிழர்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுத்தால் அது பயங்கரவாதமாம்

 தமிழ் மக்களின் நீதி மறுப்பு, தமிழர்களின் உரிமை தொடர்பாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்தால் அது பயங்கரவாதம், ஆனால் முதலீடு என்ற பெயரில் சர்வதேச நாடுகள் இலங்கையை 
துண்டாடுவது தேசியவாதம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் 
தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய துறைமுகங்கள் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது சீனாவின் ஆதிக்கத்தில் கொடுக்கப்படவுள்ள துறைமுக அபிவிருத்தி என்பது இலங்கையின் ஆட்சியாளர்களுடைய விருப்பம் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் அப்படி சீனாவுக்கு வழங்குவது முறையான செயல் இல்லை என்பதால் அந்த சட்டமூலத்தை பகிரங்கமாக எதிர்த்தோம்.
இன்னொரு நாட்டினால் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படலாம் அது இப்போது புரியாது காலம் கடந்தபின் இலங்கை மக்கள் ஒட்டுமொத்தமாக இதனை எதிர்க்கும் காலம் உருவாகும்.
பொல்லை கொடுத்து அடி வாங்கும் நிலைக்கு இந்த செயல் மாறலாம். அப்போது இதனை ஆதரித்து வாக்களித்தவர்களும் இரட்டை வேடம் போட்ட கட்சி உறுப்பினர்களும் புரிந்து கொள்வார்கள்.
வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய அரசியல் பிரச்சினை இன்று சர்வதேச அரசியலுடன் கலந்துள்ளது. எமது ஒருமித்த நாட்டுக்குள் 
சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்ற 
கோட்பாட்டு தத்துவத்துடன்
 இலங்கையை ஆட்சி செய்த சிங்கள தலைவர்களுடன் நடந்த பேச்சுக்கள் ஒப்பந்தங்கள் போராட்டங்கள் எல்லாம் மௌனிக்கபலபட்ட நிலையில் தேசிய ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை இன்று சர்வதேச அரங்கிற்கு சென்றுள்ளது.
சர்வதேசம் தலையிட வேண்டும் என தமிழ் தலைமைகள் சர்வதேசத்தை நோக்கி கேட்பது தவறு என கூறும் ஆட்சியாளர்கள் சர்வதேசத்திற்கு நாட்டில் ஒரு பகுதியை கையளிப்பது சரி என எந்த வகையில் நியாயம் 
கற்பிக்க முடியும்.
உங்களுக்கு அது பொருளாதார பிரச்சினை என்றால் எங்களுக்கு அது உரிமை பிரச்சனை என்பதை அனைவரும் புரிந்து
 கொள்ள வேண்டும்.
சிலர் கேட்கலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தை நோக்கி தமது அரசியல் செயல்பாடுகளை முன் எடுக்கும் போது ஒரு சர்வதேச நாடான சீனாவுக்கு இலங்கை அரசு தமது ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியை கையளிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்.
எமது உரிமை பிரச்சினை என்பது சீனாவுடன் சம்பந்தப்பட்ட விடயமில்லை.
இன்னும் சொல்வதானால் ஈழவிடுதலை ஆயுதப் போரை இலங்கையில் ஆரம்பித்து அதேபோரை முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற வைத்த நாடுகளில் இந்தியாவின் பெரும் பங்கு உண்டு.
ஆனால் வடக்கு, கிழக்கில் சர்வதேச அழுத்தங்கள் மூலம் ஒரு நிரந்தர தீர்வு வருமானால் அதில் இந்தியாவை வெறுத்தோ ஒதுக்கியோ இந்தியாவுக்கு தெரியாமலோ நிச்சயம் வராது வருவதற்கு இந்தியா 
விடவும் மாட்டாது.
எனவே இந்தியாவின் ஆதரவு தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று இந்தியாவிற்கு பகைமை நாடாக உள்ள சீனாவுக்கு இலங்கையில் முதலீட்டு வாய்ப்பளிப்பது தமிழ்தேசிய அரசியல் தலைமை எதிர்ப்பதே சரியான அரசியல் ராஜதந்திரம் அதனால்தான் எதிர்த்து வாக்களிக்க வேண்டிய முடிவு எடுக்கப்பட்டது.
சிலவேளை துறைமுகங்கள் அபிவிருத்தி இந்தியாவிற்கு கையளிப்பது தொடர்பாக இலங்கை முடிவுகளை எடுத்திருப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

ஏப்ரல் 24, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எம்.பி.யின் கைது குறித்து மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.24-04-2021. இன்று கைதானமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
‘நாடாளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் நண்பர் ரிஷாத் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் ‘அதிகாலை 3 மணி’ க்கு
 வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக் கேடியை இழுத்துச் செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ‘ஆவேசம்’ என்ன? ராஜபக்ஷ அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?’ 
எனப் பதிவிட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்தும் சகோதரரும் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சிஐடியினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பவுத்தலோக மாவத்தை வெள்ளவத்தையில் உள்ள வீடுகளி;ல் வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைகுண்டுதாரிகளிற்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களிற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை சிஐடியினர் பெற்றுக்ககொண்டுள்ளனர் அதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஏப்ரல் 19, 2021

யாழில் இலங்கை படைகளில் கூலியாட்களாக தமிழர்கள்

இலங்கை இராணுவத்தில் கூலி வேலைகளிற்கு ஆட்சேர்ப்பதில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இணைந்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா
 தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகளை உரையாற்றும் போது அவர் இதை வெளிப்படுத்தினார்.
"பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை
 வெளிப்படுத்துவதை நாங்கள் இன்னும் காண்கிறோம். இத்தகைய சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும் எனவும் அவர்
 தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டில் அதே போன்று இலங்கை இராணுவத்தில் மேசன்,வெல்டர் மற்றும் கூலி தொழிலாளர்களாக தமிழ் இளைஞர்கள் படையினரால் இணைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஏப்ரல் 18, 2021

யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி


வவுனியா வடக்கு கல்வி வலய மோசடியை தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நடந்தேறிய மோசடியை மூடி மறைக்க சுகாதார துறை மும்முரமாகியுள்ளது.
புற்றுநோயுடன் உயிருக்காக போராடும் நோயாளிகளிற்கான கதிர்வீச்சு சிகிச்சையினை உரிய காலத்தில் வழங்காது அவ்வாறு வழங்கியதாக பொய் கணக்கு காண்பித்து மில்லியன் கணக்கில் மோசடி
 அரங்கேறியுள்ளது.
உரிய சிகிச்சையின்றி நோயாளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்த போதும் அதனை கண்டு கொள்ளாது கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நேரகாலமின்றி விடுமுறை நாளிலும் பணியாற்றியதாக கணக்கு காண்பித்து மில்லியன்களில் சுருட்டிக்கொண்டமை கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
எனினும் அப்பட்டமாக மோசடி கண்டுபிடிக்கப்பட்டபோதும் அதனை கண்டுகொள்ளாது சுருட்டிய பணத்தை மீள செலுத்துமாறு கதிரியக்க அதிகாரிகளிடம் சுகாதாரத்திணைக்கள அதிகாரிகள் கெஞ்சிவருவதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு கிடைப்பதாக வடமாகாண அளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்
 தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடும் திணைக்களங்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து 
வருகின்றோம்.
அந்தவகையில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே கிடைக்கின்றது என்பதை 
குறிப்பிட முடியும்.
உண்மையில் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் புரிந்துணர்வுடன் 
செயற்படுகின்றனர்.
மக்களுக்கான செயற்திட்டங்களில் அவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
கிழக்கில் அவ்வாறான நிலை காணப்படவில்லயென்றும் அவர் தெரிவித்துள்ளார்;.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>