18

siruppiddy

டிசம்பர் 11, 2014

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்து தொடர்பில் அதிருப்தி

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது அதிருப்தியைவெளியிட்டுள்ளார் அண்மையில் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரிஹியானொன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். இது  தொடர்பில் டொன் ரண்டல் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
போரின்போது பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தொடர்பில் அவர் தமது கருத்துக்களை வெளியிட்டார்.
அவர்களின் தாக்குதல் காரணமாக, இலங்கையில் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
 ஒரு ஜனாதிபதி வேட்பாளர், 10 அரசியல் .
கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்மன் கதிர்காமர் ஆகியோர் கொல்லப்பட்டமையை டொன் ரண்டல் சுட்டிக்காட்டினார்எனவே கிறீன் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் ரண்டல் கோரிக்கை விடுத்தார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக