18

siruppiddy

ஏப்ரல் 24, 2016

நான் மகிந்தவால் பழிவாங்கப்பட்டேன் புதிய பொலிஸ் மா அதிபர்?

பொலிஸ் சேவைக்குள் அர­சியல் தலை­யீ­டுகள் கடந்த காலங்­களில் இருந்­தி­ருக்­கலாம். ஆனால், இதன்­பின்னர் பொலிஸில் அர­சியல்தலை­யீ­டு­க­ளுக்கு இட­மில்லை.
அத்­த­கைய அர­சியல் விளை­யாட்­டுக்­க­ளுக்கு இட­ம­ளிக் கப் போவ­தில்லை என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர தெரி­வித்தார்.
அத்­துடன் யுத்த காலப்­ப­குதி முதல் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை பொலிஸ் சேவை­ யா­னது தற்­போ­தைய சமா­தான காலப்­ப­கு­தியில் அவ­சி­ய­மற்­றது.
தற்­போது மக்­க­ளோடு மக்­க­ளாக இருந்து அவர்­க­ளது தேவை­களை நிறை­வேற்ற வேண்­டிய சிவில் பொலிஸ் சேவை­யொன்­றையே மக்கள் கோரு­கின்­றனர். பொது­மக்­களின் அத்­த­கைய கோரிக்­கையை ஏற்று அவர்கள் கோரும் சேவை­யினை வழங்கத் தயார் எனவும் அவர் மேலும்
 தெரி­வித்தார்.
இலங்­கையின் 34 ஆவது பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யேற்­றுள்ள பூஜித ஜய­சுந்­தர, நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தமது கட­மை­ களை பொலிஸ் தலை­மை­ய­கத்தில் பொறுப்­ பேற்றபின்னர் நடத்­திய விஷேட ஊட­க­வி ­ய­லாளர் சந்­திப்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே இதனைத் 
தெரி­வித்தார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர மேலும் குறிப்­பி­டு­கையில், 150 வருட பழை­மை­யான வர­லாற்றைக் கொண்­டுள்ள இலங்கை பொலிஸ் சேவையின் 34 ஆவது பொலிஸ் மா அதி­ப­ராக நான் தெரிவு செய்­யப்­பட்­ட­மை­யை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.
என் மீது நம்­பிக்கை வைத்து இந்த பாரிய பொறுப்பை என்­னிடம் ஒப்­ப­டைத்த ஜனா­தி­பதி, பிர­தமர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், சபா­நா­யகர் உள்­ளிட்ட அர­சி­ய­ல­மைப்பு சபை­யினர், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செய­லாளர் உள்­ளிட்ட அனை­வ­ருக்கும் நன்றி தெரி­விக்­கின்றேன்.
என்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கையை காப்­பாற்றி தாய் நாட்­டுக்கு என்­னா­லான அத்­தனை சேவை­யையும் செய்ய நான் எதிர்ப்­பர்க்­கின்றேன்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விட்டுச் சென்ற இடத்­தி­லி­ருந்து ஆரம்பம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனை இந்த இடத்தில் ஞாப­கப்­ப­டுத்த வேண்டும்.
அவர் எனது குரு. அவர் விட்டுச் சென்ற இடத்­தி­லி­ருந்து நான் அதி­ர­டி­யாக செயற்­ப­ட­வேண்டும் என எதிர்ப்­பார்க்­கின்றேன். அதன்­படி அவர் விட்டுச் சென்ற இடத்­தி­லி­ருந்து கட­மை­களை ஆரம்­பித்து இலங்கை பொலிஸ் சேவையின் நம்­பகத் தன்மை மற்றும் நம்­பிக்­கையை வெல்லும் வித­மாக பொது மக்கள் பாது­காப்பு உள்­ளிட்ட பொறுப்­புக்­களை நிறை­வேற்­ற­வுள்ளேன். குற்ற விச­ரணை தொடர்­பி­லான பிர­தி­பலன்
தற்­போது நாம் குற்ற விசா­ரணை மற்றும் குற்றப் பரி­காரம் தொடர்பில் நல்ல நிலையில் உள்ளோம். இது குறித்த எமது சத­வீதம் 60 ஆகும். இதனை எனது சேவைக் காலத்தில் மேலும் அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்ளேன்.
அப்­ப­டி­யாயின் குற்­றங்கள் தொடர்பில் கைது செய்­யப்­ப­டு­வோரின்
 வீதம் அதி­க­ரிக்கும். 
எனினும் அண்­மைய நாட்­களில் குற்­றங்கள் தொடர்பில் கைது செய்­யப்­ப­டுவோர் அதி­க­மாக இருந்த போதும் அவர்­களில் குற்­ற­வா­ளி­க­ளாக நீதி­மன்­றங்­களால் தீர்ப்­ப­ளிக்­கப்ப்­டு­வோரில் வீழ்ச்­சியைக் காண்­கிறோம். அப்­ப­டி­யானால் பிர­தி­வா­தி­களைக் குற்­ற­வா­ளி­க­ளாக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யுள்­ளது.
இதற்­காக விசா­ரணை முறை­களில் மாற்றம் செய்து, விசா­ர­ணை­களை மேலும் பலப்ப்­டுத்த வேண்­டி­யுள்­ளது. விசா­ரணை 
அதி­கா­ரி­க­ளுக்கு 
இது குறித்த மேல­திக அறிவை வழங்கி நீதிவான் நீதி­மன்­ரங்­களில் வழக்கை வழி நடாத்தும் விதத்தை தொழில் தரத்­துக்கு ஏற்ப விருத்தி செய்ய வேண்­டி­யுள்­ளது.
போதைப் பொருள், விபத்­துக்­களைக் கட்­டுப்­ப­டுத்த திட்டம் இன்று நாட்டில் அனை­வ­ரி­னதும் பேசு­பொ­ரு­ளாக உள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் வீதி விபத்­துக்­களைக் கட்­டுப்­ப­டுத்த விஷேட திட்­டங்­களை அமுல் செய்­ய­வுள்ளோம்.
நாளுக்கு நாள் வீதி விபத்­துக்­களின் எண்­ணிக்­கையில் அதி­க­ரிப்பைக் காணும் நாம், முடி­யு­மான வரை நவீன தொழில் நுட்­பத்தை பயன்­ப­டுத்தி விபத்­துக்­களைக் கட்­டுப்­ப­டுத்த பயன்­ப­டுத்­த­வுள்ளோம்.
சார­திகள், பாத­சா­ரிகள் உள்­ளிட்டோர் பாதை விதி­களை உரிய முறையில் கடை பிடிக்கும் போது விபத்­துக்­களைக் குறைக்க முடியும் என்­பது விஷேட நிபு­ணர்­களின் கருத்­தாகும். அது தொடர்­பிலும் நம் தெளிவு படுத்­தல்­களை மேற்­கொள்­ள­வுள்ளோம்.
இதே­வேளை போதைப் பொரு­ளினை ஒழிக்க ஜனா­தி­பதி செய­லணி ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எம்­மா­லான அத்­தனை ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் நாம் வழங்­குவோம். நான் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் 
பொலிஸ் மா அதி­ப­ராக
 கட­மை­யாற்­றிய காலப்­ப­கு­தி­களில் போதைப் பொருளை ஒழிக்க முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­களை தொடர்ந்தும் முன்­னெ­டுப்பேன்.
இந்த நட­வ­டிக்­கை­களி முன்­னெ­டுக்க எனக்கு பொலிஸ் சார­திகள் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள் வரை­யி­லான அத்­தனை பேரின் ஒத்­து­ழைப்பும் அவ­சி­ய­மாகும்.
புல­னாய்வுத் தக­வல்­களை மையப்­ப­டுத்­திய பொலிஸ் சேவை பொலி­ஸா­ருக்கும் பொது மக்­க­ளுக்கும் இடையே காணப்­படும் தொடர்பு பல சந்­தர்ப்­பங்­களில் இடை­வெ­ளி­யாக காணப்­ப­டு­வதை நான் அவ­தா­னிக்­கின்றேன். பொலி­ஸா­ரையும் பொது மக்­க­ளையும் வேறு படுத்த முடி­யாது. பொது மக்கள் இன்றி பொலிஸார் இல்லை. அதே போது பொலிஸார் இன்றி பொது மக்­களும் இல்லை.
அதனால் பொது மக்­களை பொலி­ஸா­ருடன் தொடர்பு படுத்தி நாட­ளா­விய ரீதியில் பிரஜா பொலிஸ் சேவையை நடை­மு­றைப்­ப­டுத்த நான் எதிர்ப்­பார்க்­கின்றேன். இலங்கை பொலி­ஸாரின் அடிப்­படை குறிக்கோள், குற்றம் மற்றும் வன்­முறை குறித்த பய­மற்ற நம்­பிக்­கை­யுடன் கூடிய வாழக் கூடிய சூழலை உரு­வாக்­கு­வ­தாகும்.
இந்த குறிக்­கோளை அடைய புல­னாய்வுத் தக­வல்­களை மையப்­ப­டுத்­திய தொழில் சார் பொலிஸ் தேவை­யாகும். இந் நிலையில் யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­குதி முதல் நாம் பயன்­ப­டுத்தும் நட­வ­டிக்கை சார் பொலிஸ் சேவையில் இருந்து மனித நேய முகத்தைக் கொண்ட புல­னாய்வுத் தக­வல்­களை மையப்­ப­டுத்­திய தொழில் சார் பொலிஸ் சேவையை நோக்கி நாம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.
சிவில் பாது­காப்புக் குழுக்­களை பயன்­ப­டுத்தும் திட்டம் மீள­மைப்பு இந்த பய­ணத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய வாகனம் சிவில் பாது­காப்புக் குழுக்­க­ளாகும். இலங்­கையில் உள்ள ஒவ்­வொரு கிராம சேவகர் பிரி­வி­னையும் மையப்ப்­டுத்தி அமைக்­கப்­பட்­டி­ருக்கும் சிவில் பாது­கப்பு குழுக்கள், பிரஜா பொலிஸ் சேவை அல்­லது மக்­களை நோக்­கிய பொலிஸ் சேவைக்கு அடித்­தா­ள­மிடும் மிக முக்­கிய கட்­ட­மைப்­பாகும்.
தற்­போது பல இடங்­களில் இந்த சிவில் பாது­கப்பு குழுக்கள் செய­ழி­ழந்­துள்ள நிலையில் அதனை மீள­மைக்கும் பாரிய பொருப்பு என்­னிடம் இருக்­கி­றது. இதனை மேற்­கொள்ள நான் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­க­ளுடன் இனைந்து திட்டம் வகுக்­க­வுள்ளேன். 5 விட­யங்­களை 
உள்­ள­டக்கி
நட­மாடும் பொலிஸ் சேவை பொலிஸ் பொது மக்கள் உறவை மேலும் வலுப்­ப­டுத்த நட­மாடும் பொலிஸ் சேவை­களை நான் ஆரம்­பிக்­க­வுள்ளேன். தற்­போதும் இதற்­கான திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.
ஒவ்­வொரு பொலிஸ் பிராந்­தி­யங்­க­ளிலும் ஒரு மாதத்­துக்கு ஒரு பொலிஸ் நிலை­யத்­தினை இந்த நட­மாடும் சேவை பணியில் ஈடு­ப­டுத்த திட்டம் வகுக்­கப்ப்ட்­டுள்­ளது. ஆன்­மீகம், கலா­சாரம், கல்வி, சுக­தாரம், 
விளை­யாட்டு 
மற்றும் சிர­ம­தானம் ஆகிய ஐந்து அம்­சங்­களை மையப்ப்­டுத்தி இந்த நட­மாடும் சேவை இடம்­பெறும். இதில் சிவில் பாது­காப்புக் குழு­வி­னரும் பொலி­ஸரும் பொது மக்­களும் இணைந்து செயற்­ப­டுவர்.
பொலிஸ் திணைக்­களம் இலங்கை பொலிஸ் என அறி­முகம் மிக முக்­கி­ய­மான ஒரு விட­யத்தை நான் சொல்ல வேண்டும். இலங்கை பொலிஸ் திணைக்­களம் என தற்­போது அழைக்­கப்­படும் எமது நிறு­வனம் இனிமேல் இலங்கி பொலிஸ் என்றே அழைக்­கப்­படும். அவ்­வாறே அழைக்­கு­மாறு நான் உங்­க­ளையும் கோரு­கிறேன். திணைக்­க­ளங்­களில் உள்ள 
பிரி­வி­னைகள் 
எமக்கு வேண்டாம். நான் அனை­வரும் ஒரே இலக்­குடன் பய­ணிப்­பவர்க்ள். அதனால் எமது நிறு­வனம் இலங்கை பொலிஸ் மட்­டுமே.
பொலி­ஸாரின் ஒழுக்கம் தொடர்பில் கண்­டிப்­பான நட­வ­டிக்கை
பல சந்­தர்ப்­பங்­களில் பொலி­ஸா­ருக்கு எதி­ரான குற்றச் சாட்­டுக்கள் முன்­வைக்­கப்ப்­டு­கின்­றன. பெரும்­பாலும் ஊட­கங்­களால் இவை முன் வைக்­கப்­ப­டு­கின்­றன. சாதா­ரண விமர்­ச­னங்­க­ளையும் , குற்றச் சாட்­டுக்­க­ளையும் ஆதா­ரத்­துடன் முன் வையுங்கள்.
துஷ்­பி­ர­யோ­கங்­களை கட்­டுப்­ப­டுத்தும் நாம் முதலில் ஊழல் மோச­டிகள், துஷ்­பி­ர­யோ­கங்­களில் ஈடு­ப­டா­த­வர்­க­ளாக இருக்க வேண்டும். அதனால் பொலி­ஸாரின் ஒழுக்கம் தொடர்பில் நான் கண்­டிப்­பான நட­வ­டிக்­கைக்ளை முன்­னெ­டுப்பேன். அது குறித்து யாருக்கும் மன்­னிப்­பில்லை.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களை உள்­ள­டக்­கிய உயர் சபை
பொலிஸ் மா அதி­ப­ராக நான் கட­மை­யேற்­றுள்ள நிலையில் சிறந்த பொலிஸ் சேவை­யையும் மக்கள் கோரு­கின்ற சேவை­யையும் வழங்க பல திட்­டங்கள் தயார் செய்­யப்ப்ட்டு வரு­கின்­றன. இவை­ய­னைத்தும் 
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களைக் கொண்ட உயர் சபை­யினால் ஆரா­யப்­பட்டே அமுல் செய்­யப்­படும். திட்­டங்கள் அ
னைத்தும்
 இந்த உயர் சபை­யினால் ஆர­யப்ப்ட்டே செயற்­ப­டுத்­தப்­படும். எனவே எமது திட்­டங்கள் மிகவும் ஆரோக்­கி­ய­மா­ன­தக இருக்கும் என நம்­பலாம். என்றார்
கேள்வி பொலிஸ் சேவையில் அர­சியல் தலை­யீ­டு­களை எப்­படி உணர்­கிறீர்?
பதில் கடந்த காலங்­களில் அர­சியல் வாதிகள் பொலி­ஸாரின் கட­மை­களில் தலை­யீடு செய்­த­தாக நான் அறிந்தேன். இனி மேல் அது சாத்­தி­ய­மில்லை. அர­சியல் விளை­யாட்­டுக்கள் பொலிஸ் சேவையில் கலக்க இனி இட­மே­யில்லை.
பதில் கடந்த காலங்­களில் பழி வாங்­கப்­பட்­டீரா?
பதில் கடந்த அரசின் காலத்தில் நான் பல்­வேறு வடி­வங்­களில் பழி வாங்­கப்­பட்­ட­தாக உணர்­கிரேன். என்னை பல இடங்­க­ளுக்கு மாற்­றினர்.
 கைது செய்ய 
முயற்­சித்­தனர். எதுவும் சாத்­தி­யப்­ப­ட­வில்லை. ஒரு முறை என்னை கைது செய்­யவும் முயற்­சித்­தனர். எல்­லா­வற்­றையும் தாண்­டியே நான் இன்று பொலிஸ் ம அதி­ப­ராக தெரிவு செய்­யப்ப்ட்­டுள்ளேன். பொலிஸ் மா அதிபர் தேர்வு எனக்கு 10 ஆவது சவா­லாக இருந்­தது.
கேள்வி பொலிஸ் மாஅ­திபர் பதவி உங்­க­ளுக்கு கனவா?
இல்லை. சிறு­வ­யது முதல் இலக்கே இன்றி நான் இருந்தேன். பல்­க­லை­கக்­ழக வாழ்வின் பின்­ன­ரேயே எனது வாழ்வு மாறி­யது. எனது மாமா ஒருவர் கொண்டு வந்த கெஷட் அறி­விப்பை பார்த்­து­விட்டே நான் பொலிஸ் சேவையில் இணைந்தேன்.
கேள்வி பொலிஸ் மா அதி­ப­ராக முகப் புத்­த­கத்தில் பிரச்சாரம் செய்தமை உண்மையா?
பதில் ஆம். நான் 8 வருடங்களக முகப் புத்தகத்தில் இருக்கின்றேன். நான் முன்னெடுத்த நடவடிக்கைகள் மக்களுக்கு தெரியும். அதனால் எனக்கு முகப் புத்தகத்திலேயே அதிகளவான மக்கள் உள்ளனர். அவர்கள் உள்ளிட்ட பலரும் நான் பொலிஸ் மா அதிபராக வேண்டும் என எதிர்ப்பார்த்தனர்.
பதில் பொலிஸ் மா அதிபராக தெரிவானது சட்ட 
விரோதமானது
 என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூருகிறாரே?
பதில் அது அவரது கருத்து. அதற்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை.
கேள்வி சம்பிக்க ரணவக்க தொடர்பிலான விசாரணைகளின் அடுத்த கட்டம், நீங்கள் பொலிஸ் மா அதிபராக இருக்கும் இப்போது 
எப்படி உள்ளது?
பதில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான விசாரணைகள் வெலிக்கடை பொலிஸரினால் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நீதிமன்றின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணை நடவடிக்கைகள் 
இடம்பெறுகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக