18

siruppiddy

மே 29, 2016

நாட்டில் போரின் கொடூரத்தினால் கண்களை இழந்த 282 போ்!!!

கிளிநொச்சியில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவால் தமிழ் மக்கள் அதிகளவுக்கு பல இழப்புக்களைச் சந்தித்துள்ள நிலையில் 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்ளமை  பதிவாகியுள்ளது. யுத்தம் பலரை பலியெடுத்துள்ள நிலையில் மிஞ்சியிருப்பவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அங்கத்தை இழந்தவா்களாவும் காணப்படுகின்றனா். அத்தோடு பெரும்பாலானவா்கள் இரும்புத் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் வாழ்ந்து  வருகின்றனா். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில்...

மே 25, 2016

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை.உள்நாட்டு விசாரணையில் சர்வதேச நீதிபதிகள்!?

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொண்டால் மட்டுமே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்துள்ளதாக, சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வந்த ஜீ.எஸ்.பி. சலுகையை கடந்த 2006ம் ஆண்டில் இடைநிறுத்தியது. இதன் காரணமாக இலங்கையின் ஆடைத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதித் தொழில் துறை பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டிருந்தது. அத்துடன்...

மே 15, 2016

தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்!

தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு தாம் நகர்ந்துவிட்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை விலகிவிட்டதாக வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட தினமான நேற்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று...

மே 12, 2016

முன்னாள் பத்து விடுதலைப் பு11லி உறுப்பினர்கள் விடுதலை!!!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை புனர்வாழ்வு பெற்ற 10 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி கர்னல்.எம்.ஏ.ஆர்.எம்டோன் தலைமையில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு  இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு இன்று வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. வவுனியா...

மே 02, 2016

யாழில் சம்பந்தன், மாவை தலைமையில் தமிழ்த் தேசிய மேதின கூட்டம்!

தமிழ்தேசிய மே நாள் ஊர்வலம் இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இணுவில்கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக ஆரம்பமாகி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிவளாகத்தை  அடைந்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்,தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரை தாங்கிய ஊர்திகளுடன்,உழைப்பாளர்களை கெளரவிக்கும் ஊர்திகளுடன் தமிழ்த் தேசிய மே நாள் ஊர்வலம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தை அடைந்து மே நாள் எழுச்சி கூட்டம்  இடம்பெறவுள்ளது. ...