18

siruppiddy

டிசம்பர் 12, 2013

ராஜபக்ச அரசு குறுகிய காலத்தில் 4.8 ட்ரில்லியன் ரூபாவை கடனாக ..

இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அரசுகள் இலவச கல்வி, சுகாதார சேவை உட்பட மக்களின் நலன்புரி பணிகளுக்காக 1.8 ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆனால் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான குறுகிய காலத்தில் 4.8 ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதனடிப்படையில் நாட்டின் மொத்த கடன் 6.6 ட்ரில்லியன் ரூபாவாகும். இந்த கடன் பணத்தில் பெருந் தொகையான ராஜபக்ஷ அரசாங்கம் பெற்றுக்கொள்வதுடன் அதன் மூலம் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை.
வெளிநாடுகளில் பெறப்பட்டுள்ள இந்த பெருந் தொகை கடனில் அதிகளவான கடன் சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து பெற்ற கடனில் பெருந் தொகை கமிஷனாக பெறப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது.
இதன்படி ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடன் தொகையில் பெருந் தொகை பணம் ராஜபக்ஷ குடுமபத்தினரின் சட்டை பைகளுக்குள் சென்றுள்ளமை தெளிவாகியுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக