18

siruppiddy

மே 12, 2016

முன்னாள் பத்து விடுதலைப் பு11லி உறுப்பினர்கள் விடுதலை!!!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை
புனர்வாழ்வு பெற்ற 10 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி கர்னல்.எம்.ஏ.ஆர்.எம்டோன் தலைமையில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 
இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்று வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், புனர்வாழ்வு பெற்று வந்தவர்களே இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 29 விடுதலைப் புலி உறுப்பினர்கள் அங்கு புனர்வாழ்வு பெற்று வருவதாக குறித்த புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக