18

siruppiddy

அக்டோபர் 11, 2017

வித்தியா வழக்கில் மரண தண்டனை விதித வர்களுக்கு விடுதலை கிடைக்குமா


மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா வழக்கு!! மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமா??

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும் குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஏழு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக போகம்பரை சிறைச்சாலையின் அத்தியட்சகர் பதிவுத்தபாலில் மேன்முறையீட்டு மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

படுகொலையின் பிரதான குற்றவாளியான மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) மற்றும் நான்காம் இலக்க குற்றவாளியான மகாலிங்கம் சசிதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மேன்முறையீடு செய்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக