18

siruppiddy

மே 21, 2018

வவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எரிபொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மக்களை பசியில் தள்ளும் அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும்,
 மக்கள் அதிகாரங்களை நிலை நிறுத்த அனைத்து மக்களையும் இன, மத, பேதமின்றி இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணையுமாறு சமூக வழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக